பேரன்பே
விழிமூடி தேடும் உனை
விழுங்காதோ எந்தன் மனம்
விதி உன்னைக்கண்டேனடி
விஷக்காதல்கொண்டேனடி
அழகாலே மெல்ல மெல்ல
உயிர்கூடத்துள்ளத்துள்ள
கொலைக்காதல் செய்தாயடி
கொடும்பார்வை எய்தாயடி
நீதந்த பெருங்காதல்
நான்கண்ட அலைமோதல்
கரையேரும் நுரையானேன்
அலையாடும் படகானேன்