பத்தம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்க்கொள்ளும் ஐசிஎஸ்சி மாணவர்களுக்காக மற்றும் பலருக்காக

முன்னுரை:
தேடல்கள் பலவும் ஒரே இடத்தில் கிடைத்தால் மகிழ்ச்சிக்கு எல்லை தான் ஏது? அதுவும் பொதுத்தேர்வை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு இது ஒரு அரிய வரப்பிரசாதம்.
இதில் ஐ.சி.எஸ்.சி பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பத்தாம் வகுப்புத் தமிழ் மாணவர்களுக்கான முதல் பகுதி ஆவிற்கு உரிய பல செய்திகள் என் சுய முயற்சியாலும் மற்றும் பல்வகைத் தேடல்களில் கிடைத்த செய்திகளின் தொகுப்பாலும் தயாரிக்கப்பட்ட ஒரு அரிய தொகுப்பு. மாணவர்கள் யாவரும் வெற்றிக்கனியை இனிதே எட்டுவதற்கான எனது சிறிய முயற்சி.
இந்நூலை மாணவர்கள் யாவரும் படித்துப் பயன் பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் பல.
இவண்,
தமிழாசிரியை திருமதி ஸ்ரீ.விஜயலஷ்மி
கோவை-22

இந்நூலை என் பெற்றோரின் பாத கமலங்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்.


இனிய தமிழ் மொழியில் மாணவர்களுக்குப் பெரும்பாலும் ஏற்படும் ஐயங்களும், அவற்றினைப் போக்கும் வழிமுறைகள் சிலவும்.
வழங்குபவர் திருமதி ஜீ.எஸ்.விஜயலக்ஷ்மி
தமிழாசிரியை
கோவை 22.
கைப்பேசி எண் 98432 97197
முதலாவதாக குறில் நெடிலில் ஏற்படும் ஐயங்களைப் பற்றிப் பார்க்கலாம்.
 சுழிகளில்(குறியீடுகளில்) ஏற்படும் ஐயங்கள்:
முதற்கண் தமிழ் மொழியில் எத்தனை சுழிகள் உள்ளன, அவற்றை எவ்வாறு கூறவேண்டும் என்பதனைக் காணலாம்.
 கெ – இதில் ‘க’ என்ற எழுத்திற்கு முன்பாக உள்ள சுழி ஒற்றைக் கொம்பு என அழைக்கப் படும்.
 கே - இதில் ‘க’ என்ற எழுத்திற்கு முன்பாக உள்ள சுழி இரட்டைக் கொம்பு என அழைக்கப் படும்.
 கை - இதில் ‘க’ என்ற எழுத்திற்கு முன்பாக உள்ள சுழி இணைக் கொம்பு என அழைக்கப் படும்.
 கா - இதில் ‘க’ என்ற எழுத்திற்கு பின்பாக உள்ள சுழி துணைக்கால் என அழைக்கப்படும்.
 கி – இதில் ‘க’ என்ற எழுத்திற்கு மேலே இடப்பட்டுள்ள சுழி குறில் ‘இ’ ஓசையைக் குறிப்பதாகும்.
 கீ - இதில் ‘க’ என்ற எழுத்திற்கு மேலே இடப்பட்டுள்ள சுழி நெடில் ‘ஈ’ ஓசையைக் குறிப்பதாகும்.
 பு - இதில் ‘ப’ என்ற எழுத்திற்கு கீழே இடப்பட்டுள்ள சுழி குறில் ‘உ’ ஓசையைக் குறிப்பதாகும்.
 பூ - இதில் ‘ப’ என்ற எழுத்திற்கு கீழே இடப்பட்டுள்ள சுழி நெடில் ‘ஊ’ ஓசையைக் குறிப்பதாகும்.
அடுத்து எந்தெந்த சுழிகளை எங்கெங்கு எவ்வாறு கையாள வேண்டும் என்பதனைக் காணலாம்.
முன்னதாகக் குறில், நெடில்களை அடையாளம் காணும் வழிமுறைகளைப் பற்றிக் காண்போம்.
 உயிர் எழுத்துகள் பன்னிரண்டனுள் அ, இ, உ, எ, ஒ ஆகிய ஐந்தும் குறில் என்று அழைக்கப் படும். அதனுடன் இணைந்து வரும் மெய் எழுத்துகளும் குறில் என்றே அழைக்கப்படும். எடுத்துக்காட்டு (க்+அ=க.......முதல் ன்+ஒ= னொ வரை )

 அடுத்து உயிர் எழுத்துகள் பன்னிரண்டனுள் ஆ, ஈ, ஊ, ஈ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகிய ஏழும் நெடில் என்று அழைக்கப் படும். அதனுடன் இணைந்து வரும் மெய் எழுத்துகளும் நெடில் என்றே அழைக்கப்படும். எடுத்துக்காட்டு (க்+ஆ=கா.......முதல் ன்+ஔ= னௌ வரை )

இத்தகைய குறில் நெடில் வேறுபாடுகளிலும், மேற்கூறிய சுழிகளிலுமே பெரும்பான்மையினருக்கு ஐயம் ஏற்படுகின்றன. இனி அவற்றைப் போக்கும் வழிகளைக் காணலாம்.
1. குறில் ‘அ’ உடன் சேர்ந்து வரும் மெய் எழுத்துகள் எந்த மாற்றமும் இன்றி வழங்கப்படும். ( அ ஓசை பெற்று வரும் எழுத்து ) எடுத்துக் காட்டு: க,ங,ச,ஞ,........ முதலியன. எடுத்துக்காட்டுச் சொற்கள் சில: (கப்பல், சக்கரம், மரம், படம்)
2. நெடில் ‘ஆ’ உடன் சேர்ந்து வரும் மெய் எழுத்துகள் (ஆ ஓசை பெற்று வரும் எழுத்துகள்) அதன் அருகில் துணைக்கால் மட்டும் பெற்று எழுதப்படும். (எடு.கா): கா,ஙா,சா,ஞா......முதலியன. எடுத்துக்காட்டுச் சொற்கள் சில: (காவலன், சாதனை, தாமரை, நாமகள்)
3. குறில் ‘இ’ உடன் சேர்ந்து வரும் மெய் எழுத்துக்கள் மேல் சுழி மட்டும் பெற்று வரும். (இ ஓசை பெற்று வரும் எழுத்துக்கள்) (எ.கா) கி, ஙி, சி, ஞி.......முதலியன. எடுத்துக்காட்டுச் சொற்கள் சில: (கிணறு, சிந்தனை, திலகம், நினைவு)
4. நெடில் ‘ஈ’ உடன் சேர்ந்து வரும் மெய் எழுத்துக்கள் மேல் சுழிவட்டம் மட்டும் பெற்று வரும். (ஈ ஓசை பெற்று வரும் எழுத்துக்கள்) (எ.கா) கீ, ஙீ, சீ, ஞீ.......முதலியன. எடுத்துக்காட்டுச் சொற்கள் சில: (கீரி ,சீரகம், தீபம், நீலம்.......முதலியன.)
5. ‘உ’ சுழிகள் அனைத்தும் சில விதிமுறைகளுக்கு உட்பட்டவை. அவை அனைத்தும் மேற்கூறியவை போன்று ஒன்று போல் அமையாதவை. அவற்றைப் பற்றிக் காணலாம்.
• கு, டு, மு, ரு, ழு, ளு ஆகிய எழுத்துகள் மேல் நோக்கிய வளைவுகளையும்,

• ஙு, சு, பு, யு, வு ஆகிய எழுத்துகள் கீழ் நோக்கிய சிறுகோடுகளையும்,

• ஞு, ணு, து, லு, று, னு ஆகிய எழுத்துகள் கீழ் நோக்கிய சிறுவளைவு மற்றும் மேல் நோக்கிய சிறுகோட்டுடனும் காணப்படும்.

• ஆனால், இவையே நெடில் வடிவம் பெறும் பொழுது, பின்வரும் மாற்றங்களைப் பெற்று அமையும். அவை முறையே,

• கூ, சூ, டூ, மூ, ரூ, ளூ என்ற எழுத்துக்கள் மேற்கூறிய வடிவினையும்,

• ஙூ, வூ, யூ, பூ போன்ற எழுத்துகள் மேற்கூறிய வடிவினையும்,

• ஞூ, ணூ, தூ, நூ, லூ, றூ, னூ போன்ற எழுத்துகள் மேற்கூறிய வடிவினையும் பெற்று அமையும். (உகர வரிசைக்கு மட்டும் இத்தகைய மற்றங்கள்) என்வே இதனை மட்டும் பலமுறை எழுதிப் பழகுதல் நயம் பயக்கும்.

6. குறில் ‘எ’ உடன் இணைந்து வரும் மெய் எழுத்துக்கள் ஒற்றைக்கொம்பு மட்டும் பெற்று வரவேண்டும். (‘எ’ ஓசைப் பெற்று வரும் சொற்கள்.) எடுத்துக்காட்டு: கெ, ஙெ, செ, ஞெ,......... எடுத்துக் காட்டு சொற்கள்: (செவ்வானம், தென்னை, மெத்தை, வெள்ளை முதலியன.)
7. நெடில் ‘ஏ’ உடன் இணைந்து வரும் மெய் எழுத்துக்கள் இரெட்டைக்கொம்பு மட்டும் பெற்று வரவேண்டும். (‘ஏ’ ஓசைப் பெற்று வரும் சொற்கள்.) எடுத்துக்காட்டு: கே, ஙே, சே, ஞே,......... எடுத்துக் காட்டு சொற்கள்: (சேவல், தேனி, தேவதை, நேர்மை முதலியன.)
8. குறில் ‘ஒ’ உடன் இணைந்து வரும் மெய் எழுத்துக்கள் ஒற்றைக்கொம்பு மற்றும் துணைக்கால் பெற்று வரவேண்டும். (‘ஒ’ ஓசைப் பெற்று வரும் சொற்கள்.) எடுத்துக்காட்டு: கொ, ஙொ, சொ, ஞொ, ......... எடுத்துக் காட்டு சொற்கள்: (பொம்மை, கொக்கு, தொப்பி, தொலைக்காட்சி முதலியன.)
9. நெடில் ‘ஓ’ உடன் இணைந்து வரும் மெய் எழுத்துக்கள் இரெட்டைக்கொம்பு மற்றும் துணக்காலும் பெற்று வரவேண்டும். (‘ஓ’ ஓசைப் பெற்று வரும் சொற்கள்.) எடுத்துக்காட்டு: கோ, ஙோ, சோ, ஞோ,......... எடுத்துக் காட்டு சொற்கள்: (கோவில், தோட்டம், சோலை, நோன்பு முதலியன.)
10. நெடில் ‘ஒள’ உடன் இணைந்து வரும் மெய் எழுத்துக்கள் ஒற்றைக்கொம்பு மற்றும் ‘ள’வும் பெற்று வரவேண்டும். (‘ஒள’ ஓசைப் பெற்று வரும் சொற்கள்.) எடுத்துக்காட்டு: கௌ, ஙௌ, சௌ, ஞௌ........ எடுத்துக் காட்டு சொற்கள்: கௌதாரி, பௌர்ணமி, வௌவால், சௌடாம்பிகை முதலியன.
*************************************************************************************

II அடுத்து நாம் காண இருப்பது
‘ல’கர, ‘ள’கர, ‘ழ’கர வேறுபாடுகள்:
 ‘ல’ இதனை நுனி நா லகரம் என்று கூறி பயில வேண்டும்.
 ‘ள’ இதனைப் பொது ளகரம் என்று கூறி பயில வேண்டும்.
 ‘ழ’ இதனைச் சிறப்பு ழகரம் என்று கூறி பயில வேண்டும்.
குறிப்பு:
தமிழ் மொழியில் குறில் எழுத்துகளுடன் கரம் சேர்த்து கூறுவது வழக்கம். சான்றாக: அகரம், இகரம், பகரம், தகரம் என்று.
அதே போன்று நெடில் எழுத்துகளுன் காரம் சேர்த்து கூறுவது வழக்கம். சான்றாக: ஆகாரம், ஈகாரம், ஓகாரம், ஐகாரம் என்று.
இனி மேலே குறிப்பிட்ட அனைத்து ‘ல’கர, ‘ள’கர, ‘ழ’கரங்களும் பயின்று வரும் சில சொற்றொடர்களைச் சான்றுகளாக் காணலாம். (அங்கு லகர, ழகர, ளகரங்கள் அந்தந்த வண்ணங்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.)
1. தொழிலாளர்கள் வேலை செய்தனர்.
2. தமிழ் மொழி பேசுபவர்கள் உலகெங்கும் உள்ளனர்.
3. கயல்விழி கல்வியில் முதல் மதிப்பெண் பெற்றாள்.
4. பலாப்பழம் பள்ளத்தில் விழுந்தது.
5. வாழையிலையில் உணவு சாப்பிட்டாள்.
6. பழங்கால மனிதர்கள் சிறப்பு வாய்ந்தவர்கள்.
7. தொழிலில் லாபம் கண்டாள்.
8. கரிகாலச் சோழன் கல்லணைக் கட்டி விளை நிலம் ஏற்படுத்தினான்.
9. இன்று உலகம் முழுவதும் மகளிர் தினவிழா கொண்டாடப் படுகின்றன.
10. உலகில் உள்ள வளங்கள் அனைத்தும் உயிர் வாழத் தேவை .
11. கலா பவிழம் நகைக் கடைக்குச் சென்றாள்.
12. மாலதி சாந்தியை அதிகாலையில் எழுப்பினாள்.
13. பள்ளி நுழை வாயிலில் மாணவர்கள் நின்றிருந்தனர்.
14. அம்மா குழந்தைக்குப் பாலும் பழமும் கலந்த உணவைக் கொடுத்தாள்.
15. தொழிலின் மூலம் முன்னேற்றம் கண்டாள்.
16. தோழிமலை நாஞ்சில் நாட்டு வேள்வி மலை அம்மே.
17. நாளை எங்கள் பள்ளியில் சுதந்திர தினவிழா.
18. ஷாலினி கொய்யாப் பழம் கீழே விழும் என்று எதிர்பார்த்தாள்.
19. பல்லி பள்ளத்தில் விழவில்லை.
20. மழலைக் கல்வியை மக்கள் அனைவரும் ஆதரித்தனர்.
21. மழலையர்கள் அழகானவர்.
22. வேளாண்மைத் தொழில் பற்றிய கலந்துரையாடல் நேற்று நடந்தது.
23. தமிழ் நாட்டில் மக்கள்த் தொகை அதிகம்.
24. தமிழ் நாட்டில் எண்ணற்ற பல்கலைக் கழகங்கள் உள்ளன்.
25. நாங்கள் அனைவரும் தமிழர் என்பதில் பெருமையடைகின்றோம்.
*****************************************************************************

III அடுத்து நாம் காண இருப்பது ரகர றகர வேறுபாடுகள்:
1. ‘ர’ இதனை இடையின ரகரம் என்று பயிலவேண்டும். (ஏனெனில் இது ‘ய்,ர்,ல்,வ்,ழ்,ள்’ என்ற இடையின மெய் எழுத்துக்களுள் வருவதனால்:).

2. ‘ற’ இதனை ‘வல்லின றகரம்’ என்று பயிலவேண்டும். (ஏனெனில் இது ‘க்,ச்,ட்,த்,ப்,ற்’ என்ற வல்லின மெய் எழுத்துக்களுள் வருவதனால்:).

இனி மேற்கூறிய ரகர, றகர மெய்கள் பயின்று வந்துள்ள சில சொற்றொடர்களைக் காணலாம். அவையாவும் தனித்தனி வண்ணங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.)
1. மலைமேல் மர உருளு உருளுகின்றது.
2. அரம் கூர்மையானது.
3. பயிர் செழிக்க உரம் ஏற்றது.
4. கரிகால் பெருவளத்தான் வல்லரசன்.
5. மாரி ஈகை மற்போர் மலையன்.
6. தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
7. உறுதியான உள்ளத்தை உரம் போன்றதென்பர்.
8. வெற்றி வேற்கை என்ற நூல் அதிவீர்ராம பாண்டியன் என்ற மன்னரால் இயற்றப் பட்டது.
9. பரிசு பெற்றவன் பாராட்டப் பட்டான்
10. இடையறாத முயற்சி வெற்றிபெற உதவும்.
11. உரம் தாவரத்திற்கு நல்லது.
12. கருத்தில் உதிப்பவையே செயலாக்கம் பெறுகின்றது.
13. கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைப் புகினும் கற்கை நன்றே.
14. போரில் சரமாரியாக அம்பு எய்தினான்.
15. பலப்பரிட்சை பரிசிற்கு உகந்த்தல்ல.
16. திருப்புமுனை வேண்டின் திறம்பட செயல்லாற்ற வேண்டும்.
17. கரை புரண்ட கருணை அருளாளற்கே உரியது.
18. இறைவன் தன்னருள் வழங்குவான்.
19. இருள் சேர்ந்த வாழ்வு அருளாளற்கு இல்லை.
20. பறவைகள் சரணாலயத்தைப் பாதுகாத்தல் அவசியம்.
21. திருவருட் செல்வர்கள் உயிர்களிடத்து கருணைக் காட்டுவார்கள்.
22. வாரி வழங்கும் தன்மை வள்ளல்களுக்கே உரியது.
23. ஏற்றப் பாட்டு நாட்டுப் புறப் பாடல்களுள் ஒன்று.
24. கற்பனைக் கனிரசம் மிக்கது கவிதைகள்.
25. சொற்சுவை பொருட்சுவை நிறைந்த்து தமிழ் மொழி
*******************************************************************
Iv அடுத்து நாம் காண இருப்பது நகர, ணகர, னகர வேறுபாடுகள்:
1. ‘ண’ இதனைத் டண்ணகரம் என்று கூறி பயிலவேண்டும். ஏனெனில் இது மெய்யெழுத்து வரிசையில் டகர மெய்யை அடுத்து வருவதால். (ட, ண.. என்று.)

2. ‘ந’ இதனைத் தந்நகரம் என்று கூறி பயிலவேண்டும். ஏனெனில் இது மெய்யெழுத்து வரிசையில் தகர மெய்யை அடுத்து வருவதால். (த, ந.. என்று.)

3. ‘ன’ இதனைத் றன்னகரம் என்று கூறி பயிலவேண்டும். ஏனெனில் இது மெய்யெழுத்து வரிசையில் தகர மெய்யை அடுத்து வருவதால். (ற,ன.. என்று.)

இனி மேற்கூறிய ணகர, நகர, னகர மெய்கள் பயின்று வந்துள்ள சில சொற்றொடர்களைக் காணலாம். அவைத் தனித்தனி வண்ணங்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.)
1. நகம் நீண்டு வளரும்.
2. மனம் கமழ் மணம் பரப்பும் மலர்.
3. நம் நாடு வளம் மிக்கது.
4. உன் எண்ணம் நல்லது.
5. பணம் படைத்தவன் பலவான்.
6. நாதம் செவிக்கு இன்பம் பயக்கும்.
7. நாங்கள் மழையில் நனைந்தோம்.
8. நாட்டியக் கலையில் நடனமாதர்கள் புதுமைப் படைத்தனர்.
9. மல்லிகை மலர் நறுமணம் பரப்பும்.
10. நாகத்தில் சிறந்தது ராஜ நாகம்.
11. நேற்றுபெய்த மழையில் நிலமகள் மனம் குளிர்ந்தாள்.
12. கிணற்றில் கிண்ணம் தவறி விழுந்தது.
13. கணப்பொழுதும் வீணாக்காமல் கடமையாற்ற வேண்டும்.
14. அன்னை அன்பைப் பொழிந்து மனம் மகிழ்வாள்.
15. தந்தை தண்ணளி செய்து உயர்த்துவார்.
16. குமரன் கோட்டையில் நுழைந்து வெளியேறினான்.
17. சித்திரைத் திருநாளில் பேரணியுடன் மனங்கவர் தேரோட்டம் நடந்தது.
18. தவறு செய்தவன் தண்டனை அடைவான்.
19. வீணை இசையில் வாணி மனம் மகிழ்ந்தாள்.
20. வேணுகானம் இசைப்பான் நீல நிறக் கண்ணன்.
21. கிண்ணத்தில் வெண்ணெய் நிரம்பி இருந்தது.
22. பொன்னால் ஆன வளையலை அணிந்த பெண் மனம் மகிழ்ந்தாள்.
23. காணி நிலமாயினும் பேணுதல் வேண்டும்.
24. தனயன் கடமைத் தாய்த் தந்தையைப் பேணுதல்.
25. தமிழன் கடமை தாய் நாட்டைப் பேணுதல்.
**********************************************************************************
மரபுச்சொல்,
முன்னோர் மரபாகப் பயன்படுத்திய முறைப்படி, இப்படித்தான் பயன்படுத்தப்பட வேண்டும், நினைத்தபடி எல்லாம் சொல்லக் கூடாது என்ற வரையறை பெறும் சொற்கள் மரபுச் சொற்கள் ஆகும். குயில்கூவியது என்றுதான் கூற வேண்டும். கூவியது என்பது மரபுச்சொல்,
மயில் அகவியது;
காகம் கரைந்தது;
கோட்டான் குழறியது;
கோழிகொக்கரித்தது;
கிளி கொஞ்சியது என்று சொல்வதே மரபாகும்.
குயில் அகவியது என்றோ காகம் கத்தியது என்றோ கூறக் கூடாது.
யானை பிளிறியது
புலி உறுமியது
சிங்கம் கர்ச்சித்தது
குதிரை கனைத்தது
கழுதை கத்தியது
நாய் குரைத்தது
எருது முக்காரமிட்டது


அரக்கப் பரக்க அவசரம் அவசரமாகஅவசரமும் பதற்றமும்
அள்ளி இறைத்தல் அளவுக்கு மேல் செலவழித்தல்
அள்ளி விடுதல் ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்
அவசரக் குடுக்கை ஒரு செயலை அவசரப்பட்டுச் செய்து செய்துவிடுபவன்

ஆறப் போடுதல் ஒரு காரியத்தைக் காலந்தாழ்த்தி செய்தல்
ஆழம் பார்த்தல் ஒருவருடைய உள்ளக் கருத்தை அறிந்து செயல்படுதல்

எடுப்பார் கைப்பிள்ளை சுயமாகச் சிந்திக்காமல் பிறர் சொல்கிறபடியெல்லாம் நடப்பவர்

ஏட்டுச்சுரைக்காய் அனுபவமில்லாத நூல் படிப்பு
நடைமுறைக்குப் பயன்படாத அறிவு

ஒரு கை பார்த்தல் மோதிப்பார்த்தல்
எதிர்கொள்ளுதல்
ஒற்றைக் காலில் நிற்றல் விடாப்பிடியாக நிற்றல்/பிடிவாதமாக இருத்தல்

ஓட்டை வாய் எல்லாவற்றையும் பிறரிடம் கூறும் தன்மை: இரகசியத்தைக் கட்டிக் காத்தவன்.
எல்லாவற்றையும் எல்லாரிடமும் எளிதாகச் சொல்லிவிடுகின்ற இயல்பு

கங்கணம் கட்டுதல் ஒரு செயலைச் செய்து முடிக்க உறுதி எடுத்துக்
கொள்ளுதல்
கடுக்காய் கொடுத்தல் ஏமாற்றி தப்புதல்
கண்ணும் கருத்தும் முழுக் கவனத்துடன்
கம்பி நீட்டுதல் பிறரின் கவனத்திலிருந்து நழுவுதல்
கரி பூசுதல் அவமானம் ஏற்படுத்துதல்/மதிப்பைக் கெடுத்தல்
கரைத்துக் குடித்தல் ஒரு கவலையை அல்லது துறையைப் பற்றி முழுக்க படித்து அறிதல்
காது குத்துதல் சாமார்த்தியமாகப் பொய் சொல்லுதல்
கிணற்றுத் தவளை தான் வாழும் சூழலுக்கு அப்பால் இருப்பது எதையும் அறியாதவன்
கிள்ளுக்கீரை அற்பமான ஒன்று.
மிகச்சுலபமாகச் சமாளித்து விடலாம் என்ற
நினைப்பு
குரங்குப் பிடி பிடிவாதம்/பற்றிக்கொண்டதைச் சிறிதும் விட்டுக்கொடுக்காத தன்மை
கை கழுவுதல் உதவி செய்வதிலிருந்து அல்லது பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ளுதல்
கை கூடுதல் ஒரு காரியம்/ செயல் நிறைவேறுதல்
கை கொடுத்தல் தக்க நேரத்தில் உதவி செய்தல்
கையும் களவுமாய் குற்றம் அல்லது தவறு இழைக்கும் தருணத்திலேயே

செவி சாய்த்தல் உடன்படுதல்
இணங்குதல்
இசைதல்

தட்டிக் கழித்தல் ஏதாவது காரணம் கூறித் தவிர்த்தல்
தலை எடுத்தல் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வருதல்
தலை குனிதல் அவமானம் அடைதல்


மரபுச் சொல்

• அச்சுறுத்து
• அடுப்பு மூட்டு
• அம்பை எய்தான்
• அவலை மெல்லு
• அழுக்கைத் துடை
• ஆந்தை அலறும்
• உடல் இளைத்தான்
• உணவூட்டு
• உணவைப் பரிமாறு
• உப்பை இடு
• உமியைக் கருக்கு
• உள்ளம் உருகு
• உள்ளம் மருகு
• எண்ணெய் தேய்த்தாள்
• ஏலம் கூறு
• கச்சை கட்டு
• கண்ணைக் கசக்கு
• கதவைச் சாத்து
• கம்பைத் தின்றான்
• கழுதை கத்தும்
• களை கட்டு
• காகம் கரையும்
• காது குத்து
• காலை முடக்கு
• கிட்டியை நெருக்கு
• கிளி கொஞ்சும்
• கிளையை ஒடி
• குடம் வனை
• குதிரை கனைக்கும்
• குயில் கூவும்
• குற்றஞ்சாட்டு
• கூகை குழறும்
• கூத்து ஆடு
• கூந்தலைச் செருகு
• கை கழுவினான்
• கை கொடு
• கை விடு
• கையால் தொடு
• கோலம் இடு
• கோழி கொக்கரிக்கும்
• சந்தனம் பூசினாள்
• சிங்கம் முழங்கும்
• சுள்ளியை ஒடி
• செடி நடு
• செலவிடு
• செவி மடு
• சோற்றை உண்
• சோற்றை வடி
• சோறு சமைத்தாள்
• தண்ணீர் பருகு
• தயிர் கடை
• தலையைச் சொறி
• தளை பூட்டு
• தாலாட்டு
• திருக்காணியைத் திருகு
• தீ மூட்டு
• தொளை செய்
• தோல் உரி
• நகை அணி
• நகைக்கு மெருகிடு
• நரி ஊளையிடும்
• நலம் நாடு
• நாக்கை நீட்டு
• நாய் குரைக்கும்
• நார் உரி
• நாவை மடி
• நிலை நாட்டு
• நினைவுறுத்து
• நீரைச் சொட்டு
• நூலை எழுது
• நூலைப் படி
• நெய்யை உருக்கு
• நெல் அறுத்தான்
• பச்சிலை தின்
• பஞ்சை அடை
• பண்ணைப் பாடு
• பருக்கைகளைப் பொறுக்கு
• பல்லைக் கடி
• பழத்தை அறு
• பறை கொட்டு
• பன்றி உறுமும்
• பாடு படு
• பாய் பின்னு
• பாயசம் குடி
• பாலூட்டு
• பாலைப் பருகு
• புலி உறுமும்
• பூச்சூட்டு
• பொருள் ஈட்டு
• மயில் அகவும்
• மருந்து புகட்டு
• மனங்கலங்கு
• மாவை இடி
• மின்னல் வெட்டு
• முதுகை வளை
• முறம் கட்டு
• மூச்சை அடக்கு
• மை கூட்டு
• யானை பளிறும்
• வலியுறுத்து
• வளத்தைப் பெருக்கு
• வற்புறுத்து
• வானம்பாடி பாடும்
• விதை விதைத்தான்
• விரலைச் சொடுக்கு
• வில்லை வளைத்தான்
• விளக்கை ஏற்று
• விறகைப் பிள
• வீடு கட்டு
• வெற்றிலைத் தின்
• வேப்பிலை பறி
• வேலையை முடி

• மரபுத் தொடர்களை வாக்கியத்தில் அமைத்து எழுதுதல் (மாதிரி விடைகள்)
• 1. கரைத்துக் குடித்தாள் : வரலாற்று ஆய்வாளராக விரும்பிய ராதா வரலாறு தொடர்பான செய்திகளைக் கரைத்துக் குடித்தாள்.
• 2. வாகை சூடினான் : சிங்கப்பூர் அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் முத்து வெற்றி வாகை சூடினான்.
• 3. முனைப்புடன் : சாதாரணநிலைத் தேர்வில் சிங்கப்பூரிலேயே முதல் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டான் மாறன்.
• 4. தணியவேயில்லை : ராமநாதனுக்கு வயது 80 ஆகிய பிறகும் தொடர்ந்து படிக்கவேண்டும் என்ற ஆர்வம் தணியவேயில்லை.
• 5. கைநழுவிப்போனது :எல்லா தகுதிகளும் முத்துவுக்கு இருந்தாலும் நேர்முகத் தேர்வுக்குக் காலதாமதமாகச் சென்றதால் அந்தப் பதவி கைநழுவிப்போனது.
• 6. சாதனையாளர் : நிலவில் கால்பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங் ஒரு சாதனையார் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.
• 7. ஆயத்தமாகிவிட்டார் : போட்டியைப்பற்றி அறிவித்தவுடன் அதில் கலந்துகொள்ள ராமு ஆயத்தமாகிவிட்டார்.
• 8. தடங்கலுமின்றி : எந்தத் தடங்கலுமின்றி ஒரு காரியத்தைச் செய்ய நினைப்பது சாத்தியம் மில்லை
• 9. அகால மறைவுக்கு : ஆந்திர முதல்வரின் அகால மறைவுக்குக் காரணம் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டதே காரணமாகும்.
• 10. அஞ்சலி : கல்பனா சாவ்லாவின் அகால மறைவுக்கு உலக மக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.
• 11. இலட்சியப்பாதை : நமது இலட்சியப்பாதையை நோக்கி நடைபோடும் போது தடைகள் வந்தால் அவற்றை எதிர்கொள்ள வேண்டும்.
• 12. தலைமுறையினர்: இன்றைய தலைமுறையினர் பல வசதி வாய்ப்புகளைப் பயன்படுத்தி தங்களை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
• 13. இலக்கை : நம் இலக்கை அடைய எத்தகைய பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டும்.
• 14. மேகக்கூட்டம் : வானில் கருமேகக்கூட்டம் கான மயில்களை ஆடவைப்பதில் வியப்பில்லை.
• 15. எள்ளி நகையாடி : பிறரை எள்ளி நகையாடி அதில் இன்பம் காணும் சிலரை எனக்குப் பிடிப்பதில்லை.
• 16. நாடுவார்கள் : தங்களுக்கு மக்களின் உதவி தேவைப்படும்போதே சிலர் அவர்களை நாடுவார்கள்.
• 17. நெறியோடு : நேர்மை தவறாது, பொய்யுரைக்காது நெறியோடு வாழ்ந்த மன்னர்கள் பலரின் வாழ்கை வரலாறுகளை நாம் படிக்கின்றோம்.
• 18. கடிந்துரைப்பது : நண்பர்கள் தவறிழைக்கும்போது அவர்களைக் கடிந்துரைப்பது தவறில்லை.
• 19. நயம்பயக்கும் : மற்றவர்களுக்கு நயம்பயக்கும் செயலைச் செய்யாவிட்டாலும் தீங்கு விளைவிக்கும் செயலைச் செய்யாமலிருப்பதே நன்று.
• 20. உய்த்துணர: இலக்கிய இன்பத்தை உய்த்துணர அவ்விலக்கியங்களில் அதிக ஈடுபாடு காட்டவேண்டும்.
• 21. ஒப்பானவை: திருக்குறளின் கருத்துகளுக்கு ஒப்பானவை வேறு எவையும் இல்லையென்பதால் திருக்குறள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
• 22. துன்புறுத்துவது : மற்றவர்களைக் கடுஞ்சொற்களால் துன்புறுத்துவது கொடுமையான செயலாகும்.
• 23. பற்றுதலையும்: இன்றைய இளையர்களுக்கு மொழியின் மீது உள்ள பற்றுதலையும் நாட்டின் மீது உள்ள பற்றுதலையும் கண்டு வியந்துபோனார் அதிபர்.
• 24. தீஞ்சொல் :மாறன்,மற்றவர் விரும்பும் வகையில் தீஞ்சொல் பேசுவதால் அவனை எல்லாருக்கும் பிடிக்கும்.
• 25. புலப்படும் : அந்த வழக்கின் தன்மையை ஆழமாக ஆராய்ந்தால் நிச்சயம் உண்மை புலப்படும்.
• 26. ஆழ்ந்து : ஆழ்ந்து சிந்தித்த பிறகே ஒரு செயலில் ஈடுபட வேண்டும் எனபதை நம் முன்னோர் குறிப்பிட்டுள்ளனர்.
• 27. அருட்செல்வம் : அருட்செல்வம் பெற ஒருவர் எப்போதும் நல்லதையே எண்ணி, பணிவன்புடன் நடந்துகொள்ள வேண்டும்.
• 28. தீச்சொல் : ஒருவர் தீச்சொல் பேசுவதை விடுத்து மற்றவர் விரும்பும் வகையில் இனிக்கப் பேசவேண்டும்.
• 29. தொன்மைக்காலம் : தொன்மைக்காலம் முதல் நம்முன்னோர்கள் பல கலைகளில் சிறந்து விளங்கி வருகின்றனர் என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளன.
• 30. வேரூன்றி: தமிழர்களின் பண்பாடுகள் உலகின் பல நாடுகளில் வேரூன்றி காணப்படுவதற்குக் காரணம் அவர்கள் கடல் கடந்து பயணம் செய்ததேயாகும்.
• 31. திரிபாகும் : தாய்லாந்து புத்தாண்டைக் குறிப்பிடும் ஸோங்கரான் என்னும் சொல் சங்கராந்தி என்னும் சமஸ்கிருதச் சொல்லின் திரிபாகும்.
• 32. விமரிசையாக : நம் நாட்டின் தேசியதின நாள் கொண்டாட்டங்கள் வெகு விமரிசையாக நடைபெற்றன.
• 33. கங்கை முதல் கடாரம் வரை : தமிழர்கள் கங்கை முதல் கடாரம் வரை தங்களின் பண்பாடுகளைப் பரவச்செய்துள்ளனர்.
• 34. வாழையிலையால் : தாய்லாந்து மக்கள் திருவிழாவின் போது வாழையிலையால் செய்யப்பட்ட சிறு மிதவைகளில் மெழுகுவர்த்திகளை ஏற்றி ஆற்றில் விடுவர்.
• 35. பரவியதற்கு : சார்ஸ் நோய் மிக எளிதில் பரவியதற்குப் பலரின் பொறுப்பில்லா செயலே காரணமாகும்.
• 36. செல்வாக்கு : முரளிக்கு அந்த ஊரில் செல்வாக்கு இருந்ததால் அவனால் எதையும் சாதிக்க முடிந்தது.
• 37. சுட்டுகின்றன :உயர்நிலை நான்கில் பயிலும் கலா ஊர் சுற்றுவதும் பாடங்களைச் செய்யாமலிருப்பதும் அவளின் பொறுப்பில்லா செயலைச் சுட்டுகின்றன.
• 38. கூறுகளை : தமிழ் பண்பாட்டுக் கூறுகளைச் சங்க கால இலக்கியங்களில் நிரம்பக் காணலாம்.
• 39. முடையப்பட்ட: கிராம மக்கள் தென்னையோலையால் முடையப்பட்ட கீற்றுகளையே தங்கள் வீட்டுக்குப் பயன்படுத்தினர்.
• 40. இரண்டறக் கலந்துவிட்டது : பழந்தமிழர் வாழ்க்கையில் விருந்தோம்பல் என்னும் பண்பு இரண்டறக் கலந்துவிட்டது.
• 41. சடங்குகளை : பிறப்பு முதல் இறப்பு வரை பல சடங்குகளை நீலகிரியில் வாழும் தோடர் இனமக்கள் பின்பற்றகின்றனர்.
• 42. மிகையாகாது : பாரதியாரின் கவிதைகள் நாட்டுப்பற்றை ஊட்டின என்று கூறினால் அது மிகையாகாது.
• 43. செங்கதிரவனின் : நாட்டு மக்களைச் செங்கதிரவனின் வெட்பத்திலிருந்து காக்க பல இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டன.
• 44. விழைந்தனர் : எல்லாரும் எல்லாமும் பெற்று நல்வாழ்க்கை வாழவேண்டும் என பெரியோர்கள் விழைந்தனர்.
• 45. கலப்பை : இன்றும் கிராமப்புறங்களில் விவசாயிகள் நிலத்தை உழுவதற்குக் கலப்பையைப் பயன்படுத்துகின்றனர்.
• 46. இழுக்கு : நாட்டிற்கும் வீட்டிற்கும் இழுக்கு ஏற்படும் வகையில் நம்முடைய செயல் இருக்கக்கூடாது.
• 47. உன்னதநிலை: சாதாரணநிலைத் தேர்வில் உன்னதநிலை தேர்ச்சியை அடையவே நான் விரும்புகிறேன்.
• 48. சுற்றத்தார்: சீனப்புத்தாண்டின் போது சீனர்கள் தங்கள் சுற்றத்தார் அனைவரோடும் மகிழ்ச்சியாக விருந்துண்டு மகிழ்கிறார்கள்.
• 49. ஆவணங்களும் : நம் நாட்டில் பழைமையான ஆவணங்களும் பொருள்களும் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
• 50. மடல் : இன்று மின் மடல் எழுதும் வழக்கமே அதிகமாகக் காணப்படுகின்றது.
• 51. திரட்டலாம் : ஆதரவற்றவர்களுக்கு நிதி திரட்டலாம் என்ற திட்டத்தை எங்கள் செயற்குழு ஏற்றுக்கொண்டது.
• 52. ஏற்புடையதாக : எங்கள் குழு உறுப்பினர்கள் கூறிய பல நல் திட்டங்கள் நம் நாட்டுச்சூழலுக்கு ஏற்புடையதாக இருந்தன.
• 53. பிணைப்பை : பல இனமக்கள் வாழும் நம் சிங்கையில் மக்களிடையே பிணைப்பை ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
• 54. ஒளிரும் : சீனப்புத்தாண்டு, நோன்புப்பெருநாள், தீபாவளி போன்ற பண்டிகை நாள்களில் முக்கியமான இடங்களில் விளக்குகள் ஒளிரும் அழகான காட்சிகளை நாம் கண்டு மகிழலாம்.
• 55. பாரம்பரியம் : நம் நாட்டில் வாழும் இந்தியர்கள் பாரம்பரியம் மிக்க பல நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
• 56. விவரிக்கவில்லை : அந்த விமான விபத்து எப்படி நடந்தது என்பதை விசாரனை அறிக்கையில் தெளிவாக விவரிக்கவில்லை.
• 57. திவலைகள்: நயாகர அருவி விழும் வேகத்தில் நாற்புறமும் நீர்த் திவலைகள் சிதறித் தெளிக்கும் காட்சி பார்ப்பவரைப் பரவசப்படுத்தும்.
• 58. முகடுகளில் : மலை முகடுகளில் மேகக்கூட்டம் தவழுந்து செல்லும் அழகிய காட்சியை மலேசியாவின் கெமருன் மலையில் காணமுடியும்.
• 59. முத்துக் குளித்தல் : தூத்துக்குடியில் முத்துக் குளித்தல் ஒரு தொழிலாக நடைபெற்று வருகின்றது.
• 60. சில்லிப்பு : குளிர்காலமாக இருந்ததால் நியூசிலாந்து பனி மலையின் சில்லிப்பு என் உடலை நடுங்கச் செய்தது.
• 61. குற்றமென்றாகாது : நான் செய்வது தவறு என்றாலும் அது ஏழை மக்களின் நன்மைக்கே என்பதால் குற்றமென்றாகாது.
• 62. சுவாசிக்காமல் : இந்த எந்திர வாழ்க்கையில் சுவாசிக்காமல் கூட உயிர் வாழ நேரிடுகிறது.
• 63. ஒப்பற்ற : அழகும் கற்பனையும் புத்தாக்கமும் இணைந்து உருவாக்கப்பட்ட ஒப்பற்ற கட்டடமே நம் எஸ்பிளனேட் கட்டடமாகும்.
• 64. மேன்மைக்கும் :தமிழின் உயர்வுக்கும் அதன் மேன்மைக்கும் முக்கிய காரணமாக இருந்தவர்கள் நம் தமிழ் அறிஞர்களாவர்.
• 65. ஈன்றெடுக்கும்: தாய் தன் குழந்தையை ஈன்றெடுக்கும் போது பெரும் மகிழ்ச்சியைவிட அவனை மற்றவர்கள் புகழும்போதே மிக்க மகிழ்ச்சி அடைவாள்.
• 66. நிபுணர்கள் : கட்டடக்கலையில் நிபுணர்கள் ஆகத் திகழ்பவர்களுக்கு உலகில் வேலை வாய்ப்புகள் அதி அளவில் காணப்படுகின்றன.
• 67. தருவித்தான்: மதன் தொழிற்சாலைக்குத் தேவையான பல உதிரிப்பாகங்களை வெளிநாட்டிலிருந்து தருவித்தான்.
• 68. பிரதிபலிப்பதாகவும் : தாஜ்மகால் மும்தாஜின் அழகை அப்படியே பிரதிபலிப்பதாகவும் ஷாஜஹானின் அன்பை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
• 69. ரம்மியமான : செந்தோசாவின் கடற்கரை அதிகாலை வேளையில் மிக ரம்மியான தோற்றத்துடன் காட்சியளித்தது.
• 70. முழங்கிக்கொண்டிருக்கும் : மேள தாளம் முழங்கிக்கொண்டிருக்கும் அந்த இசை நிகழ்ச்சியில் கூட்டம் அலைமோதியது.
• 71. பளிச்சிட்டது : அனுபவம் நிறைந்த அந்தப் பெரியவரின் முகத்தில் அறிவுச்சுடர் பளிச்சிட்டது.
• 72. விடுப்பில் : விடுப்பில் சென்றிருந்த எங்கள் ஆசிரியர் பள்ளிக்கு வந்தவுடன் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைந்தோம்.
• 73. ஈட்டிய :ராமநாதன், தம் வாழ்நாள் முழுவதும் ஈட்டிய பணத்தைக் கொண்டு தம் மகளின் திருமணத்தை மிகச்சிறப்பாக நடத்தினர்.
• 74. பற்றாக்குறையே: கட்டடவேலை செய்ய ஆட்கள் பற்றாக்குறையே வெளிநாட்டிலிருந்து ஆட்களை எடுக்கக் காரணம்.
• 75. சூடுபிடிக்கவே : சாமிநாதன், புதிதாகத் தொடங்கிய வியாபாரம் சூடுபிடிக்கவே தம் கடையை விரிவுபடுத்தினார்.
• 76. அல்லும் பகலும் : அல்லும் பகலும் நாட்டின் முன்னேற்றத்திற்குப் பாடுபடும் தலைவர்களிருப்பதால் நம் நாடு நல்ல வளர்ச்சி கண்டுள்ளது.
• 77. புத்துணர்ச்சியுடன் : தன்முனைப்பு பேச்சாளரின் உரையைக் கேட்ட நாள்முதல் நான் புத்துணர்ச்சியுடன் என் பணிகளைச் செய்துவருகிறேன்.
• 78. உதயமாக : சிங்கப்பூரின் பசுமையையும் தூய்மையையும் கண்ட மாறனின் உள்ளத்தில் இங்கேயே தங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் உதயமாகத் தொடங்கிவிட்டது.
• 79. பஞ்சம் : அந்த நாட்டில் பல வருடங்களாக மழை பெய்யாததால் அங்கு பஞ்சம் தலைவிரித்தாடியது.
• 80. நிதானமானவர் : என் தந்தை மிகவும் நிதானமானவர், எதையும் நன்கு யோசித்த பின்னரே முடிவெடுப்பார்.
• 81. அவகாசம் : ஒப்படைப்பைச் செய்ய பல நாட்கள் அவசாசம் இருந்தும் நான் அதைச் செய்யவில்லை.
• 82. சொந்தபந்தங்களை : சுனாமி பேரிடரில் சொந்தபந்தங்களை இழந்து பலர் கதறியது நெஞ்சைப் பிளப்பதாக இருந்தது.
• 83. தாயகத்தை : பொருளீட்ட வேண்டும் என்ற விருப்பத்தினால் பலர் தம் தாயகத்தைப் பிரிந்து வெளிநாட்டில் வேலை செய்கின்றனர்.
• 84. எதிரும் புதிருமாக: நானும் என் நண்பனும் எதிரும் புதிருமாகச் செயல்பட்டாலும் நல்ல நண்பர்களாக இருந்தோம்.
• 85. நாளடைவில் : உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை மெல்ல தொடர்ந்து செய்ததால் அப்பயிற்சி நாளடைவில் எனக்குப் புத்துணர்ச்சியை அளித்தது.
• 86. வடிவமைத்தார்கள் : இரு நண்பர்கள் ஒன்று சேர்ந்து கூகுல் தேடுதல் தளத்தை வடிவமைத்தார்கள்.
• 87. ஏறுமுகந்தான் : விடாமுயற்சியோடும் கடும் உழைப்போடும் செயல்படுபவர்களின் வாழ்க்கை என்றும் ஏறுமுகந்தான்.
• 88. முழுமையான : முழுமையான ஆர்வமும் ஊக்கமும் இருந்தால் நம் குறிக்கோளை அடைவது எளிது.
• 89. ஊக்கமோ : கல்வியில் ஆர்வமோ ஊக்கமோ இல்லாதவர்கள் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது.
• 90. மெய்ப்பித்துவிட்டார்கள் : ‘முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்‘ என்னும் நம் முன்னோர்களின் வாக்கை இந்த இளையர்கள் மெய்ப்பித்துவிட்டார்கள்.
• 91. பரபரப்பாக : பிரதமர், விழா நடக்கும் இடத்திற்கு வந்துவிட்டார் என்றதும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பரப்பரப்பாக அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள்.
• 92. பின்னணியில்: முத்துவின் வெற்றிக்குப் பின்னணியில் இருந்து செயல்படுவது அவனுடைய பெற்றோர்களே.
• 93. ஆர்ப்பரித்து : ஆர்ப்பரித்து எழுந்த மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் காவலர்கள் திணறினர்.
• 94. பெருமிதம் : சாதாரணநிலைத் தேர்வில் தன் மகள் முதலாவதாக தேர்ச்சி பெற்றிருக்கிறாள் என்பதை அறிந்த பெற்றோர்கள் பெருமிதம் கொண்டனர்.
• 95. சாதகமாக : சாட்சிகள் ராதாவுக்குச் சாதகமாக இருந்ததால் வழக்கில் வெற்றி பெற்றுவிடலாம் என்று அவள் எண்ணினாள்.
• 96. திருப்தியடையவில்லை : திரு. ரவிவர்மா, ஓவியத்தை நன்றாக வரைந்திருந்தாலும் அவர் அதில் திருப்தியடையவில்லை.
• 97. தோற்றுவித்ததற்கு : இந்த நிறுவனத்தைத் தோற்றுவித்ததற்கு,ஏழை மக்கள் பயன்பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கமே காரணமாகும்.
• 98. சரிசமமாய் : அந்தச் செல்வந்தர் தம் சொத்துக்களைத் தன் இரு பிள்ளைகளுக்கும் சரிசமமாய்ப் பிரித்துக்கொடுத்தார்.
• 99. மனோபாவம்: ஏழைகளின் மனோபவத்தை அறிந்து சிலர் அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.
• 100. புத்தகப்பேழை: தாறுமாறாகக் கிடந்த புத்தகங்களை என்னுடைய புத்தகப்பேழையில் அடுக்கி வைத்தேன்.
• 101. மலைப்பாக: என் தாயார் எனக்கிட்ட பணியை நினைத்து மலைப்பாக இருந்தால் நான் மனங்கலங்காது அதைச் செய்யத் தொடங்கினேன்.
• 102. வரையறுத்து: நாம் நம்முடைய நேரத்தை வரையறுத்துக் கொண்டு நம் பணியைச் செய்தால் குறிப்பிட்ட நேரத்தில் சரியாகச் செய்ய முடியும்.
• 103. துளிர்விடும்: நாம் ஒரு பணியை வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் போது நம்மால் முடியும் என்ற நம்பிக்கைத் துளிர்விடும்.
• 104. திண்ணம்: நேரத்தைத் திட்டமிட்டுச் செயல்படுபவர்கள் தம் வாழ்க்கையில் வெற்றி பெறுவது திண்ணம்.
• 105. இன்னா: இன்னா செய்தவருக்கும் நன்மை செய்ய வேண்டும் என்று கூறுகிறது திருக்குறள்.
• 106. கைமாறாக: கைமாறாக எதையும் எதிர்பார்க்காமல் உதவி செய்யக் கூடியவர் என்னுடைய தாயார்.
• 107. பெருந்தன்மைக்கு: அன்னை தெரேசாவின் பெருந்தன்மைக்குச் சான்றாகப் பல சம்பவங்களைக் கூறமுடியும்.
• 108. ஒறுத்தல்: துன்பம் செய்தவரை ஒறுத்தல் என்பது அவர் வெட்கப்படும்படியாக அவருக்கு நன்மை செய்வதாகும்.
• 109. சிதைப்பது: பிள்ளைகள் தீய வழிகளில் செல்வது பெற்றோர்களின் கனவைச் சிதைப்பது போலாகும்.
• 110. வலியுறுத்தி: காந்தியடிகள் தம் ஆசிரமத்திலுள்ள செடி, கொடிகளைச் சிதைப்பது கூடாது என்று வலியுறுத்தி வந்தார்.
• 111. இம்சை: கருவிகொண்டு ஒருவன் மற்றொருவனுக்கு உண்டாக்கும் இன்னல்தான் இம்சை என்று எண்ணிவிடக் கூடாது.
• 112. திளைத்திருந்தனர்: தேசிய தினக் கொண்டாடத்தின்போது நடைபெற்ற நிகழ்ச்சிகளைக் கண்டு மக்கள் மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர்.
• 113. ஒப்பானது: அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படும் என்னுடைய வீணைக்கு ஒப்பானது இவ்வுலகில் வேறெதுவும் இல்லை.
• 114. வாய்ச்சண்டை: அவர்கள் இருவருக்குமிடையே நடந்த வாய்ச்சண்டை இப்போது கைச்சண்டையாக மாறிவிட்டது.
• 115. மாரிக்காலத்தில்: மாரிக்காலத்தில் வெள்ளம் அதிகமாக வருவதால் விவசாயிகளின் பயிர்கள் சிலவேளைகளில் அழிந்துபோகும்.
• 116. மொய்த்தது: பிரபல நடிகர் ஒருவர் சிங்கப்பூர் விமான நிலையத்தில் வந்திறங்கியதும் ரசிகர்கள் கூட்டம் அவரை மொய்ததது கண்டு காவலர்கள் அவருக்குப் பாதுகாப்பு அளித்தனர்.
• 117. பொதிந்து: திருக்குறளில் பல அரிய கருத்துகள் பொதிந்து இருப்பதை அறிந்த மேல்நாட்டறிஞர்கள் அதை தங்கள் மொழியில் மொழிபெயர்த்துள்ளனர்.
• 118. நல்குகின்றன: சமூக அமைப்புகள் ஏழை மக்களின் நலனிற்காக பல்வேறு திட்டங்களை நல்குகின்றன.
• 119. தன்னிகரில்லாதவர்கள்: கிரிக்கெட் விளையாட்டில் டெண்டுல்கரும் டோணியும் தன்னிகரில்லாதவர்கள் என்று அவர்களின் ரசிகர்கள் கூறுகின்றனர்.
• 120. புகழாரம்: விழாமேடையில் விருது பெற்ற அந்த நடிகரின் திறமையையும் நல்ல குணத்தையும் பாராட்டிப் பலர் புகழாரம் சூட்டினர்.
• 121. முழங்க: சிங்கப்பூர் காற்பந்துக் குழுவினர் முதல் கோல் அடித்தவுடன் ஆதரவாளர்களின் வெற்றி முரசு முழங்கத் தொடங்கியது.
• 122. அடங்காததாய்: கட்டு அடங்காததாய் இருந்த கூட்டத்தைக் கண்டு காவலர்கள் என்ன செய்வது என்று கலங்கினர்.
• 123. துச்சமாக: தன் உயிரைச் துச்சமாக மதிக்காமல் தீ விபத்து நடந்த இடத்திலிருந்து முத்து பலரைக் காப்பாற்றினான்.
• 124. வரவுக்காக: வெளிநாடு சென்றிருந்த தந்தை வருகிறார் என்று அறிந்தவுடன் அவரின் வரவுக்காக விமான நிலையத்தில் காத்திருந்தனர் அவரின் குடும்பத்தினர்.
• 125. வீதிதோறும்: தீபாவளி கொண்டடத்தின்போது வீதிதோறும் அலங்கரிக்கப்பட்டிருந்த விளக்கொளியின் அழகு பார்ப்பவரை மயக்கியது.
• 126. பற்றிக்கொண்டு: மலை உச்சியில் இருந்து விழுந்த அவன் அதிஷ்டவசமாக ஒரு கிளையைப் பற்றிக்கொண்டு தொங்கினான்.
• 127. வாட்டி வதைத்தது: ஆறு நாட்களாகக் கடலில் மரக்கட்டையைப் பிடித்துக்கொண்டிருந்த அவனை பசி வாட்டி வதைத்தது.
• 128. அண்ணாந்தபடி: இரவு நேரத்தில் வானத்தை அண்ணாந்தபடி விண்மீன்களைப் பார்த்து ரசிப்பது எனக்குப் பிடித்தமான ஒன்று.
• 129. மீளவில்லை: ஆழிப்பேரலை அடங்கிவிட்டாலும் அது தந்த அதிர்ச்சி அலையிலிருந்து அந்தப் பகுதி மக்கள் இன்னும் மீளவில்லை.
• 130. ஆவேசங்கொண்டது: அமைதியாக சென்று கொண்டிருந்த கூட்டத்தினர் மீது காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் மக்கள் கூட்டம் ஆவேசங்கொண்டது.
• 131. சின்னாபின்னமாகி: நெடுஞ்சாலையில் நடந்த அந்த விபத்தில் ஒரு வாகனம் சின்னாபினனமாகிக் கிடந்தது.
• 132. சீற்றமும்: புயல் காற்றின் சீற்றமும் மழையும் சேர்ந்து கொண்டு அந்தப் பகுதியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தின.
• 133. வடுக்களை: உலகத்தில் நடைபெறும் சோகமான சில நிகழ்வுகள் மக்கள் மனத்தில் மறையாத வடுக்களை ஏற்படுத்திவிடுகின்றன.
• 134. ஆட்டங்கண்டன: திடீரென்று ஏற்பட்ட அந்த நிலநடுக்கத்தில் பல கட்டடங்கள் ஆட்டங்கண்டன.
• 135. தணிவதற்குள்: சூறாவளியின் வேகம் தணிவதற்குள் அது பல கட்டடங்களை அடியோடு தகர்த்துச் சென்றுவிட்டது.
• 136. ஆழ்ந்தது: தங்களின் அன்புக்குரிய தலைவரை விபத்தில் இழந்துவிட்டதால் அந்நாடே துக்கத்தில் ஆழ்ந்தது.
• 137. வித்திட்டது: சுமத்திரா தீவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கமே ஆசிய நாடுகளில் சுனாமிக்கு வித்திட்டது.
• 138. ஆக்கபூர்வமான: இன்றைய இளையர்களுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கினால் அவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர்.
• 139. தேற்றும்: பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கும்போது துக்கம் குறையாது என்றாலும் அவர்களின் புண்பட்ட இதயங்களை ஓரளவு தேற்றும்.
• 140. தையலை: மயில்போல் நடனமாடிய அந்தத் தையலைக் கண்டு பார்வையாளர்கள் மகிழ்ச்சி கொண்டனர்.
• 141. நயனத்தின்: மேடையில் நடனமாடியவள் நயனத்தின் அழகு பார்வையாளர்கள் அனைவரின் உள்ளத்தையும் கவர்நதிழுத்தது.
• 142. அரவொன்று: எங்கள் வீட்டின் பின்புறம் அரவொன்று ஊர்ந்து சென்றதைக் கண்டு நாங்கள் அனைவரும் பயந்துவிட்டோம்.
• 143. பதிகளில்: தேவாரப் பாடல் பெற்ற பதிகளில் சிதம்பரம் மிக முக்கியமானதொன்றாகும்.
• 144. வார்த்தையினால்: அன்பான வார்த்தையினால் எதையும் சாதிக்க முடியும் என்பதை புத்தர் உலகுக்கு உணர்த்தியுள்ளார்.
• 145. கண்விழியாய்:தமிழ்மொழியைக் கண்விழியாய்ப் போற்றிக் காப்பவர்கள் இவ்வுலகில் இல்லாமல் இல்லை.
• 146. அகற்றலுண்டோ:உலகின் பல நாடுகளில் உள்ள ஏழைகள் படும் துன்பத்தை உலகில் யாராவது அகற்றலுண்டோ?
• 147. ஊமையடி:விபத்தில் அவருக்குக் வெளிக்காயங்கள் இல்லையென்றாலும் ஊமையடி ஏற்பட்டிருந்து.
• 148. ஒப்பாரி: பாடுபட்ட உழைத்தப் பணத்தை திருடர்கள் பறித்துக்கொண்டு ஓடியதும் அஞ்சலையின் ஒப்பாரி ஊரைக் கூட்டிவிட்டது.
• 149. கடைக்குட்டி: என் வீட்டில் என் தங்கைதான் கடைக்குட்டி என்பதற்காக அவளுக்கு அளவுக்கதிகமாகச் செல்லம் கொடுத்தனர்.
• 150. காலாகாலத்தில்: முத்தையா, காலாகலாத்தில் தன் மகளுக்குத் திருமணம் செய்து முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
• 151. தள்ளாடி: அந்தக் குடிகாரன் தன்னை நோக்கித் தள்ளாடி வருதைக் கண்ட ராதாவின் மனத்தை பயம் கௌவிக்கொண்டது.
• 152. மழிக்கப்பட்ட: மழிக்கப்பட்ட தலையோடு காணப்பட்ட அந்த முரடனைக் கண்டது அனைவரும் பயந்து ஓடத் தொடங்கினர்.
• 153. மேடுபள்ளங்கள்:வாழ்க்கையின் மேடுபள்ளங்களைக் கண்டு பல அனுபவங்களைப் பெற்ற அந்தத் தம்பதியினர் தம் பிள்ளைகளுக்கு தகுந்த அறிவுரை கூறினர்.
• 154. தன்னலமற்ற: தன்னலமற்ற தலைவர்கள் இருப்பதாலே நம் நாடு உலகில் பலரின் கவனத்தைக் கவர்ந்துள்ளது.
• 155. நாவன்மையால்: லதா, தன் நாவன்மையால் சொற்களப்போட்டியில் அனைவரையும் வென்று சிறந்த பேச்சாளர் என்ற பட்டத்தைப் பெற்றாள்.
• 156. இக்கட்டிலிருந்து: வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட பல இக்கட்டிலிருந்து என்னைக் காப்பாற்றி எனக்கு உதவியாக இருந்தவர் என் தாயார்.
• 157. பொலிவுடன்: பழைய ரெக்ஸ் திரைப்பட அரங்கம் புதுப்பிப்புப் பணிகளுக்குப் பிறகு பொலிவுடன் காட்சி தருகிறது.
• 158. அரியணையில்: பழங்காலத்தில் பொன்னால் செய்யப்பட்ட அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்த மன்னர்கள் ஏழைகளின் நலனிலும் அக்கறை செலுத்தினர்.
• 159. இசையவில்லை: வெளிநாட்டு சென்று படிக்க வேண்டும் என்று கல்பனா சாவ்லாவின் விருப்பதிற்கு அவரது பெற்றோர்கள் முதலில் இசையவில்லை.
• 160. செழுமை:தமிழ் இலக்கியங்கள் பல செழுமை மிக்கவையாகவும் கற்பனை நயம் மிக்கவையாகவும் திகழ்கின்றன.
• 161. செறிந்து: திருக்குறளில் ஆழமான கருத்துகள் செறிந்து இருப்பதை அந்நூலைக் கற்பவர்கள் நன்குணர்வர்.
• 162. பயப்பதாக: அரசாங்கத்தின் பல திட்டங்கள் நாட்டு மக்களுக்கு நன்மை பயப்பதாக அமைந்துள்ளன.
• 163. பிறழாது: மன்னன் அரிச்சந்திரன் பொய் கூறாது, அறநெறி பிறழாது ஆட்சி செய்தான் என்று இலக்கியம் கூறுகிறது.
• 164. தடாகத்தில்: சொந்தேசா தீவில் உள்ள ஒரு தாமரைத் தடாகத்தில் பூத்திருந்த தாமரை மலர்கள் என் உள்ளத்தைக் கவர்ந்தன.
• 165. திண்மையான: திண்மையான தோள்களைக் கொண்ட அந்த மல்யுத்த வீரன் போட்டில் பலரை வெற்றி கண்டான்.
• 166. ஒப்பாகமாட்டார்கள்: திறமையும் பணிவன்பும் மிக்க எங்கள் பள்ளி மாணவர்களுக்கு இவ்வுலகில் யாரும் ஒப்பாகமாட்டார்கள்.
• 167. களிப்பில்: சிங்கப்பூர் காற்பந்தாட்டக் குழுவினர் ஆசியக் கிண்ணத்தைப் பெற்றதால் களிப்பில் மிதந்தனர்.
• 168. வரையறையின்றி: முத்துவுக்கு அவன் பெற்றோர்கள் அளவுக்கு அதிகமாகப் பணம் கொடுத்ததால் அவன் வரையறையின்றி செலவு செய்தான்.
• 169. ஏறக்குறைய: வட்ட இரயில் பாதை திட்டம் நடப்புக்கு வர ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் ஆகும் என்று நிலபோக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
• 170. முன்னறிவிப்பு: முன்னறிவுப்பு இன்றி வீட்டைக் காலி செய்ய சொன்னதால் அது அங்குள்ள குடியிருப்பாளர்களுக்குச் சிரமத்தை அளித்தது.
• 171. இடையறாத: தமிழ்த்தாத்தா உ வே சாமிநாதையரின் இடையறாத உழைப்பால் பல தமிழ் இலக்கியங்கள் புத்துயிர் பெற்றன.
• 172. நுணுக்கமாக: வழக்கில் கூறப்பட்டுள்ள கருத்துகளை நுணுக்கமாக ஆராய்ந்த பின்னரே ஒரு முடிவுக்கு வரமுடியும்.
• 173. தலையாய: குழலி, தாய்மொழியையும் தாய் நாட்டையும் காப்பதையே தலையாயப் பணியாகக் கருதினாள்.
• 174. இன்றளவும்: இன்றளவும் தமிழ்மொழி போற்றப்படுவதற்குக் காரணம் அதன் இனிமையும் சிறப்புமேயாகும்.
• 175. வாடிக்கை: முத்து வாரத்திற்கு ஒருமுறையாவது சிராங்கூன் சாலைக்குச் சென்று பொருள்கள் வாங்குவது வாடிக்கை.
• 176. கண்ணியமாக: குறைவான வருமானம் வந்தாலும் கண்ணியமாக வாழ்க்கையை நடத்திவந்தார் ராமலிங்கம்.
• 177. வசப்படுத்தி: சில இளம் நடிகர்கள் தம் திறமையால் இன்றைய இளையர்களை வசப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
• 178. அனுசரித்த: தன் அலுவலக சூழ்நிலையை அனுசரித்த பாலன் தன் பணியில் எந்தக் குறையுமில்லாமல் நடந்து கொண்டான்.
• 179. பராமரிப்பு: அந்தக் கட்டடம் கட்டப்பட்டு ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டதால் அதன் நிர்வாகத்தினர் தற்போது பராமரிப்பு வேலைகளைச் செய்து வருகின்றனர்.
• 180. எதிர்மாறாக: என் கொள்கைக்கு ஏதிர்மாறாக நடந்துகொள்பவர்களை என் நண்பர்கள் என்று என்னால் எவ்வாறு சொல்ல முடியும்.
• 181. பேச்சுவார்த்தை: இரு நாடுகளுக்கும் இடையே உள்ள எல்லைப் பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தை இந்த மாதம் தொடங்குவதாக இரு நாட்டின் உயர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
• 182. அணுக்கமாக: நோய்க் கிருமிகள் உலகெங்கும் பரவாத வகையில் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்பதை உலக நாடுகள் அணுக்கமாக ஆராய்ந்து வருகின்றன.
• 183. கைம்மாறு: என் நண்பன் செய்த உதவிக்கு நான் என் கைம்மாறு செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை.
• 184. தணியாத: கவிதையின் மேல் உள்ள தணியாத காதலே பாரதியாரைக் கவிதை பாடத் தூண்டியது.
• 185. இழப்பீடு: அந்த நிறுவனம் தரும் இழப்பீடு எனக்குத் திருப்தி அளிக்க வில்லை என்பதால் நான் நீதி மன்றம் செல்ல முடிவெடுத்தேன்.
• 186. நெகிழ்ச்சி: மருத்துவமனையில் இருந்த தன்னைப் பார்க்க பள்ளி முதல்வரே நேரில் வந்ததைக் கண்டு மலர் நெகிழ்ச்சி அடைந்தாள்.
• 187. திருப்புமுனை: அந்தத் தன்முனைப்புப் பயிலரங்கில் கலந்து கொண்டது என் வாழ்க்கையின் திருப்புமுனை.
• 188. கணிப்பு: ‘இன்று மழை வரும்‘ என்ற வானிலை நிலையத்தார் கூறிய கணிப்பு உண்மையானது.
• 189. பெருந்தன்மை: தன்னிடம் பணம் இல்லையென்றாலும் தன்னை நாடிவந்தவருக்கு உதவும் பெருந்தன்மை கொண்டவன் முத்து.
• 190. மறுமலர்ச்சி: இளையராஜாவின் வருகை தமிழ்த் திரையுலகிற்கு மறுமலர்ச்சி என்றால் அது மிமையன்று.
• 191. கற்றுணர்ந்த : கற்றுணர்ந்த பெரியோர் நிறைந்த அவையில் நாம் தன்னடக்கத்துடன் பேச வேண்டும்.
• 192. சீர்தூக்கி: நன்மை எது? தீமை எது? என்று சீர்தூக்கிப் பார்க்கும் பண்பு இன்றைய இளையர்களிடம் காணப்படுவதில்லை.
• 193. உடன்பாடு: இரண்டு நிறுவனங்களிடையே இருந்த ஒரு பிரச்சினை பேச்சுவார்த்தைக்குப் பிறகு உடன்பாடு காணப்பட்டது.
• 194. அளவுகோல்: ஏழைகளுக்கு உதவும் அன்னை தெரசாவின் உயர்ந்த எண்ணத்தை அளக்கும் அளவுகோல் உண்டோ?
• 195. ஒருமுகப்படுத்த: நம் மனத்தை ஒருமுகப்படுத்தக் கற்றுக்கொண்டால் எந்த வேலையிலும் சிறப்பாகச் செய்ய முடியும்.
• 196. பெரும்பான்மை: சிங்கப்பூரில் பெரும்பான்மை மக்கள் சீனர்களாக இருந்தாலும் எல்லாரும் எல்லாரிடமும் அன்போடு பழகுகின்றனர்.
• 197. அரவணைக்க: ஏழை மக்களை அரவணைக்க சிண்டா பல நலத்திட்டங்களைச் செய்து வருகின்றது.
• 198. கட்டுப்பாடு: தவறு செய்யும் பிள்ளைகளுக்குப் பெற்றோரின் கட்டுப்பாடு அவர்கள் நல்ல வழியில் செல்ல உறுதுணையாக விளங்கும்.
• 199. சகிப்புத்தன்மை: நோயாளிகளுக்கு உதவும் மனப்பான்மையும் அவர்களிடம் சகிப்புத்தன்மை-யோடும் நடந்துகொள்வதும் தாதியர்களின் முக்கியமான கடமையாகும்.
• 200. அடிப்படையாக: சமூக சேவை செய்ய விரும்புபவர்களுக்கு அடிப்படையாக சில பண்புகள் இருக்க வேண்டும்.
• 201. புலப்படுத்தும்: அந்த வழக்கை மேலும் நுணுக்கமாக ஆராய்ந்தால் மறைந்து கிடக்கும் உண்மையை அது புலப்படுத்தும்.
• 202. முறைப்படி: திருமணங்கள் சமயச்சடங்குகளுடன் நடைபெற்றாலும் முறைப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.
• 203. செருக்குடன்: செருக்குடன் நடந்து கொண்ட என் தோழியிடம் நான் அன்போடு நடந்துகொள்வேன்.
• 204. கடைப்பிடித்து: எந்த நாளும் எந்த நேரமும் உண்மையைக் கடைப்பிடித்து வாழவேண்டும் என்ற கொள்கை கொண்டவர் அரிச்சந்திரன்.
• 205. உடந்தையாக: தீவிரவாதிகளுக்கு உடந்தையாக இருந்ததால் அவன் கைது செய்யப்பட்டான்.
• 206. பொருட்படுத்தாமல்: சில இளையர்கள் யாரையும் பொருட்படுத்தாமல் ஆர்ச்சட் சாலையில் நடனமாடத் தொடங்கினர்.
• 207. அகந்தையாக: தேவியிடம் அதிகமான திறமைகள் இருந்தாலும் அகந்தையாக நடந்துகொள்ளும் அவளிடம் யாரும் விருப்பத்தோடு பழகுவதில்லை.
• 208. அச்சுறுத்தல்: தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால் அந்நகருக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படுகின்றது.
• 209. அர்ப்பணம்: இந்த நூல் என் தாய்க்கு அர்ப்பணம் என்று அந்நூலின் ஆசிரியர் குறிப்பிட்டிருந்தார்.
• 210. அணுக்கமாக- பெருவிரைவு ரயில் வண்டிகளின் சேவைத்தரம் அணுக்கமாகக் கண்காணிக்கப்படுகின்றன.
• 211. கைம்மாறு- மழை தரும் கொடைக்குக் கைம்மாறு உண்டோ? தாயின் பாசத்திற்கு விலையோதும் உண்டா?
• 212. தணியாத: அமுதா,தன் குழந்தை மேல் உள்ள தணியாத பாசத்தினால் வேலைக்குச் செல்லாமல் குழந்தையைப் பார்த்துக்கொண்டாள்.
• 213. இழப்பீடு: தீ விபத்தில் அழிந்துபோன் கடை வீடுகள் காப்பீடு செய்யப்பட்டிருந்ததால் அவற்றின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு கிடைத்தது.
• 214. நெகிழ்ச்சி: இறந்துபோன தன் மகனின் உடலுப்புகளைத் தேவைப்படும் நோயாளிகளுக்குத் தானம் செய்த பெற்றோரின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சி அடையச்செய்தது.
• மேலும் எழுதிப் பழக சில பயிற்சிகள்
• 215. இயங்கும்:
• 216. முடக்கப்படுகிறார்கள்:
• 217. நலிந்த:
• 218. நாடலாம்:
• 219. விளைவாக:
• 220. அனுசரித்து:
• 221. பராமரிப்பு:
• 222. எதிர்மாறாக:
• 223. பேச்சுவார்த்தை:
• 224. தலையாய:
• 225. இன்றளவும்:
• 226. வாடிக்கை:
• 227. கண்ணியமாக:
• 228. வசப்படுத்தி:
• 229. வரையறையின்றி:
• 230. ஏறக்குறைய:
• 231. இடையூறாக:
• 232. நுணுக்கமாக:
• 233. நாட்டம்:
• 234. எள்ளளவும்:
• 235. கண்கூடாக:
• 236. தட்டுப்பாடு:
• 237. அடித்தளம்:
• 238. வெகுமதி:
• 239. பகைமை:
• 240. வளப்படுத்திய:
• 241. அகலுவதை
• 242. ஒழுங்குடன்
• 243. தவிப்பார்கள்
• 244. நெறியாகும்
• 245. அடிமையாகி
• 246. கையகப்படுத்த
• 247. பிடிவாத
• 248. மோகம்
• 249. அடித்தள
• 250. உரமாக
• (தொகுப்பு)
• அன்புடன் ஸ்ரீ. விஜயலஷ்மி.

நம் வாழ்வில் அன்றாடம் பயன்படுத்தும் சில பிறமொழிச் சொற்களும்
அதன் தமிழாக்கமும்
Plug (electrical) - மின் அடைப்பு
Cable - கம்பி
Door Latch - தாழ்ப்பாள்
Mat - பாய்
Mattress - மெத்தை
Chair - நாற்காலி
Bucket - வாளி
Shoes - காலணிகள்
Slippers/sandals - செருப்பு/மிதியடிகள்
Watch - கைக்கடிகாரம்
Pen - பேனா
Pencil - கரிக்கோல்
Eraser - அழிப்பான்
File - கோப்பு
Laptop - மடிக்கணினி
Mobile phone - கைப்பேசி
Cupboard - அலமாரி
Cologne (scent) - வாசனைத்திரவியம்
Socks - காலுறை
Pants/Trousers - காற்சட்டை
Sweater - கம்பளிச்சட்டை
Handkerchief - கைக்குட்டை
Bottle - குப்பி
Bag - பை
Fan - மின்விசிறி
Light (Tubelight) - குழல்விளக்கு
Kitchen - சமையலறை
Hall - பொது அறை
Toilet - கழிப்பறை
Bathroom - குளியல் அறை
Bedroom - படுக்கையறை
Bed - படுக்கை
Table - மேசை
Sink - தொட்டி
Pipe - குழாய்
T.V. - தொலைக்காட்சி
Remote (controller) - தொலையியக்கி
Fridge/Refrigerator - குளிர்சாதனப்பெட்டி
Paper - காகிதம்
Newspaper - செய்தித்தாள்
Call - அழை/கூப்பிடு
Share - பகிர்
Bicycle - மிதிவண்டி
Bike - இரு சக்கர வாகனம்
Car - ஊர்தி
Bus - பேருந்து
Train - ரயில்/தொடரி
Aeroplane - விமானம்
Auto rickshaw - மூன்று சக்கர வாகனம்
Plate - தட்டு
Water - தண்ணீர்
I - நான்
Drink - குடி
Food - சாப்பாடு
Fan - காற்றாடி
Hair - முடி
Face - முகம்
Dress - உடை
Weight - எடை
Come - வா
See - பார்
Clock - கடிகாரம்
Don't know - தெரியாது
Technology — தொழில் நுட்பம்
What’s App — புலனம்
YouTube — வலையொளி
Instagram — படவரி
WeChat — அளாவி
Messanger — பற்றியம்
Twitter — கீச்சகம்
Telegram —தொலைவரி
Skype — காயலை
Bluetooth — ஊடலை
WiFi — அருகலை
Hotspot — பகிரலை
Broadband — ஆலலை
Online — இயங்கலை, நேரலை
Offline — முடக்கலை
Thumbdrive — விரலி
Hard Disk — வன்தட்டு
GPS — தடங்காட்டி , புவிநிலை உணரி, புவியிடங்காடி, இடநிலை உணர்வி
Tv — தொலைக்காட்சி
Radio — வானொலி
Computer — கணனி
Laptop — மடிக்கணினி
Watch — கைக்கடிகாரம்
Hand phone — கைபேசி, அழைபேசி
Phone — தொலைபேசி
Smart phone — திறன்பேசி
CCTV — மறைகாணி
LED — ஒளிர்விமுனை
3D — முத்திரட்சி
Selfie — சுயஉரு
Digital — எண்மின்
Broadband — ஆலலை
Charger — மின்னூக்கி
Printer — அச்சுப்பொறி
SIM card — செறிவட்டை
Hardisk — வன்தட்டு
Scanner — வருடி
Projector — ஒளிவீச்சு
Cyber — மின்வெளி
Food — உணவு
Cake — அணிச்சல்
Bread — வெதுப்பி
Biscuit — மாச்சில்லு
ICE Cream — பனிக்கூழ்
Rose — முளரிப்பூ
Zero — சுழியம்
Problem — சிக்கல்
Mistake — தவறு
Window — காலதர், சாளரம்
Door — கதவு, வாயில்
Chair — இருக்கை, நாற்காலி
Plate — தட்டு
Cup — குவளை
Clock — மணிக்கூடு, கடிகாரம்
Bulb — மின்குமிழ்
Kitchen. — சமையலறை, அடுப்பங்கரை, அடுப்படி
Bathroom — குளியலறை, நீராடும் அறை
Toilet — கழிப்பறை, மலக்கூடம்
Bike/Scooter: மிதி வண்டி/ ஈருருளை வண்டி
GrandSon/ GrandDaughter: பெயரன்/பெயர்த்தி
Live/Repeat: நேரலை/மறுஒளிபரப்பு
Chalk /Black Board: சுண்ணக்கட்டி / கரும்பலகை.
etc all: மற்றும் பலர்.
Hello,Hi - வணக்கம்
Tension - பதற்றம்
Thanks - நன்றி
BUS - பேருந்து
Hospital - மருத்துவமனை/ வைத்தியசாலை
Doctor - மருத்துவர்/வைத்தியர்
Medical shop - மருந்து கடை
Traffic jam - போக்குவரத்து நெரிசல்
Bill - ரசிது
Driver - ஓட்டுனர்
Map - நிலவரைபடம் / நாட்டுப்படம்
Left - இடது
Right - வலது
Button - பொத்தானை
Key - சாவி / திறவுகோல்
Start - புறப்படு/ ஆரம்பி
Gym - உடற்பயிற்சிக் கூடம்
Book - புத்தகம்/ நூல்
Accident நேர்ச்சி
Acknowledgement Card ஒப்புகை அட்டை
Admission சேர்க்கை
Agency முகவாண்மை
Agent முகவர்
Allergy ஒவ்வாமை
Assurance காப்பீடு
Attendance Register வருகைப் பதிவேடு
Attestation சான்றொப்பம்
Automobile தானியங்கி
Bench விசிப்பலகை
Binding கட்டமைப்பு
Bona fide certificate ஆளறி சான்றிதழ்
Central Government நடுவண் அரசு
chalk piece சுண்ணக்கட்டி
Champion வாகை சூடி
Company குழுமம்
Compounder மருந்தாளுநர்
Deposit இட்டு வைப்பு
Document ஆவணம்
E-Mail மின்னஞ்சல்
Ever silver நிலைவெள்ளி
Fax தொலை நகலி
Fiction புனைக்கதை
Insurance ஈட்டுறுதி
Interview நேர்காணல்
Irregular ஒழுங்கற்ற
Key திறவுகோல்
Keyboard விசைப்பலகை
Laptop மடிக்கணினி
License உரிமம்
Lift மின்தூக்கி
Lorry சரக்குந்து
Mammal பாலூட்டி
Missile ஏவுகணை
Mortuary பிணக்கிடங்கு
Passport கடவுச்சீட்டு
Password கடவுச் சொல்
Permanent நிரந்தரம்
Photo Graph நிழற்படம்
Photocopy (Xerox) ஒளிப்படி
Planet கோள்
Plastic நெகிழி
Print out அச்சுப் படி
Probationary Period தகுதிகாண் பருவம்
Proposal கருத்துரு
Receiver அலை வாங்கி
Remote Sensing தொலை உணர்தல்
Research Centre ஆராய்ச்சி நிலையம்
Search Engine தேடுபொறி
Tea Stall தேனீர் அங்காடி
Technical தொழில்நுட்பம்
Tele Print தொலை அச்சு
Telex தொலை வரி
Temporary தற்காலிகம்
Traitor துரோகி
Ultra Sound Scanning மீயொலி வரிக் கண்ணோட்டம்
Visa நுழைவு இசைவு
Visiting card காண்புச்சீட்டு

பிற மொழிக்கு இணையான தமிழ்ச்சொல்:
1. அதிகாரி - அலுவலர்
2. செக் - காசோலை
3. சக்சஸ் - வெற்றி
4. பீரோ - இழுப்பறை
5. லீவ்லெட்டர் - விடுமுறை கடிதம்
6. சிட்டி - நகரம்
7. டைப்பிஸ்ட - தட்டச்சர்
8. ப்ரீவ் கேஸ் - குறும்பெட்டி
9. அப்பாயின்ட் மென்ட் - பணிஅமர்த்தல்
10. ரூம் ரெண்ட் - குடிக்கூலி
11. மோட்டல் - பயணவழி உணவகம்
12. காலேஜ் - கல்லூரி
13. ஃபேன் - மின்விசிறி
14. பிரிண்டிங் பிரஸ் - அச்சகம்
15. ஆசீர்வாதம் - வாழ்த்து
16. ரெக்கார்ட் - ஆவணம்
17. ஆபிஸ் - அலுவலகம்
18. சுவிட்சு -பொத்தான்
19. மேஜிக் - செப்பிடுவித்தை
20. இண்டஸ்ட்ரி - தொழிலகம்
21. ஈசன் - இறைவன்
22. கவர் - மறை உறை
23. லாரி - சரக்குந்து
24. உத்தரவு - ஆணை
25. சேலான் - செலுத்துச்சீட்டு
26. எஸ்டிமேட் - மதிப்பீடு
27. கண்ட்ரி - நாடு
28. பர்னிச்சர் - அறைக்கலன்கள்
29. அலங்காரம் - ஒப்பனை
30. மீட்டிங் - கூட்டம்
31. ஏஜென்ட் - முகவர்
32. டிக்ஷ;னரி - அகராதி
33. லாண்டரி - வெளுப்பகம்
34. கேரண்டி - பொறுப்புறுதி
35. டிபன் - சிற்றுண்டி
36. கண்ட்ரோல் - கட்டுப்பாடு
37. குமாரன் - மகன்
38. டிசைன் - வடிவமைப்பு
39. தம்ளர் - குவளை
40. சாம்பியன் - வாகை சூடி
41. கம்பெனி - குழுமம்
42. ஸ்டேடியம் - விளையாட்டரங்கம்
43. வொர்க்ஷhப் - பணிமனை
44. ஆக்ஸிடென்ட் - நேர்ச்சி
45. இம்ப்ரூ - பெருக்கு
46. ஸ்பீக்கர் - பேசுபவர்
47. பஸ் ஸ்டாண்டு - பேருந்து நிலையம்
48. சினிமா - திரைப்படம்
49. டிபார்ட்மெண்டல் ஸ்டோர் - பல்பொருள் அங்காடி
50. ஆடியோகேசட் - ஒலிப்பேழை
51. சட்ஜ்மெண்ட் - தீர்ப்பு
52. வோல்டு - உலகம்
53. ரயில் - தொடர்வண்டி
54. ஆங்கிலச் சொல் தமிழ்ச்சொல்
55. பாக்கி - நிலுவை
56. அசெம்ளி - சட்டசபை
57. ஃபுட் போர்டு - படிக்கட்டு
58. குஃவோடா - பங்கு
59. கலெக்டர் - சேகரிப்பவர்
60. போஸ்ட் ஆபிஸ் - அஞ்சல் நிலையம்
61. அஸ்ட்ரோநோமி - வானநூல்
62. ஆட்டோமொபைல் - தானியங்கி
63. தியேட்டர் - திரை அரங்கு
64. அட்லஸ் - நிலப்படத்தொகுப்பு
65. ஃபேக்நியூஸ் - பொய்ச்செய்தி
66. அட்லஸ் - நிலப்படச்சுவடி
67. ஆபத்து - இடர்
68. ஆயில் ஸ்டோர் - எண்ணெய்ப் பண்டகம்
69. ஃபிளாஷ; நியூஸ் - சிறப்புச் செய்தி
70. ஆயுசு - வாழ்நாள்
71. ப்ரொஜெக்டர் - படவீழ்த்தி
72. ஜனங்கள் - மக்கள்
73. அடாப்டர் - பொருத்தி
74. ஸ்கூல் - பள்ளி
75. டீ - தேநீர்
76. பேங்க் - வங்கி
77. அந்நியர் - அயலார்
78. பாஸ்போர்ட் - கடவுச்சீட்டு
79. கரஸ்பாண்டேன்ட் - தாளாளர்
80. அபூர்வம் - புதுமை
81. லைசன்ஸ் - உரிமம்
82. கேபிள் - கம்பிவடம்
83. ஓட்டல் - உணவகம்
84. டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் - தட்டெழுத்துப் பயிலகம்
85. பேக்கிங் சார்ஜ் - கட்டுமானத்தொகை
86. டெய்லி - அன்றாடம்
87. இன்டர்நெட் - இணையம்
88. ப்ரீப்கேஸ்- குறும்பெட்டி
89. பிளாட்பாரம் - நடைபாதை
90. அட்மிஷன் - சேர்க்கை
91. டிசிப்ளின் - ஒழுக்கம்
92. ஜெராக்ஸ் - ஒளிப்படி
93. இலஞ்சம் - கையூட்டு
94. பாய்லர் - கொதிகலன்
95. டிக்கெட் - பயணச்சீட்டு
96. சயின்ஸ் - அறிவியல்
97. புரபோசல் - கருத்துரு
98. டிவி - தொலைக்காட்சி
99. ஏரோப்ளேன் - வானூர்தி
100. கம்ப்யூட்டர் - கணினி
101. தெர்மா மீட்டர் - வெப்பமானி
102. கம்பெனி - குழுமம்
103. சென்ட்ரல் கவர்ன்மென்ட் - நடுவன் அரசு
104. மதர்லேண்ட் - தாயகம்
105. விஞ்ஞானம் - அறிவியல்
106. சாவி - திறவுகோல்
107. ரேடியோ - வானொலி
108. ரிஜிஸ்டர் போஸ்ட் - பதிவு அஞ்சல்
109. உபயோகம் - பயன்
110. ஆட்டோகிராப் - வாழ்த்தொப்பம்
111. ரிப்பைரர் - பழுதுபார்ப்பவர்
112. ஸ்டேசனரி சாப் - எழுது பொருள் அங்காடி
113. புல்லட்டின் - சிறப்புச் செய்தி இதழ்
114. டைப்ரைட்டர் - தட்டச்சுப்பொறி
115. மெடிக்கல் ஷhப் - மருந்தகம்
116. கிரீடம் - மணிமுடி
117. கிரீன் ப்ரூஃ - திருத்தப்படாத அச்சுப்படி
118. இலாபம் - வருவாய்
119. பெல்ட் - அரைக்கச்சு
120. ஃபோலியோஎண் - இதழ் எண்
121. புரோநோட் - ஒப்புச்சீட்டு
122. ஸ்பெஷல் - தனி
123. ஸ்டேட் கவர்ன்மென்ட் - மாநில அரசு
124. ஐஸ்- கிரீம் - பனிக்குழைவு
125. பால்கனி - முகப்பு மாடம்
126. மெஸ் - உணவகம்
127. கிளாத் ஸ்டோர்ஸ் - துணியங்காடி
128. மார்க்கெட் - அங்காடி
129. கோட்டல் - உணவகம்
130. லே அவுட் - செய்தித்தாள் வடிவமைப்பு
131. டீப் போர் வெல் - ஆழ்துளைக் கிணறு
132. என்வெரான்மென்ட் - சுற்றுச்சூழல்
133. பல்பு - மின்குமிழ்
134. காகிதம் - தாள்
135. பிளைட் - விமானம்
136. பேரண்ட்ஸ் - பெற்றோர்
137. டீ பார்ட்டி - தேநீர் விருந்து
138. டெலஸ்கோப் - தொலைநோக்கி
139. எவர்சில்வர் - நிலைவெள்ளி
140. விசிட்டிங்கார்டு - காண்டிச்சீட்டு
141. ஹேர்கட்டிங் சலூன் - முடித்திருத்தகம்
142. கிரைண்டர் - அரவை இயந்திரம்
143. உஷhர் - விழிப்பு
144. நோட்புக் - குறிப்பேடு
145. பார்லிமென்ட் - நாடாளுமன்றம்
146. காபி பார் - குளம்பியகம்
147. டிமாண்ட் டிராப்ட் - வரைவோலை
148. டீ ஸ்டால் - தேநீர் அங்காடி
149. எடிட்டோரியல் - தலையங்கம்
150. புஷ;பம் - மலர்
151. ஆராதனை - வழிபாடு
152. மைக்ராஸ்கோப் - நுண்ணோக்கி
153. பைக் - விசையுந்து
154. இண்டஸ்ட்ரி - தொழிலகம்
155. ப்ரஷ; - தூரிகை
156. பர்ஸ்ட் கிளாஸ் - முதல் வகுப்பு
157. புனல் - வடிகுழலி
158. யுனிவர்சிட்டி - பல்கலைகழகம்
159. பயாலாஜி - உயிரியல்
160. ஸ்டேஷனரி ஷhப் - எழுதுபொருள் அங்காடி
161. அபிஷேகம் - நீராட்டு
162. கலெக்டர் - ஆட்சியர்
163. அதிபர் - தலைவர்
164. ஹெலிகாப்டர் - சுருள் வானூர்தி
165. சர்ஜரி - அறுவைச் சிகிச்சை
166. போலீஸ் ஸ்டேஷன் - காவல் நிலையம்
167. செக் - காசோலை
168. ஐடென்டிபிகேஷன் சர்டிபிகேட் - ஆளறி சான்றிதழ்
169. நாலெட்ஜ் - அறிவு
170. சாக்பீஸ - சுன்னக்கட்டி
171. ஜட்ஜ் - நீதிபதி
172. கவுன்சில் - மன்றம்
173. நிபுணர் - வல்லுநர்
174. ஐஸ்வாட்டர் - குளிர்நீர்
175. காஸ்ட்யூம் - உடை
176. பஸ் ஸ்டாப் - பேருந்து நிறுத்தம்
177. மைக் - ஒலிவாங்கி
178. ஒன் வே- ஒருவழிப்பாதை
179. கெஸ்ட் கவுஸ் - விருந்தகம்
180. ஏஜென்சி - முகவாண்மை
181. பைண்டிங் - கட்டமைப்பு
182. சைக்கிள் - மிதிவண்டி
183. இண்டர்வ்யூ - நேர்காணல்
184. நஷ;டம் - இழப்பு
185. பிரிசன் - சிறைச்சாலை
186. போனஸ் - மகிழ்வூதியம்
187. அங்கத்தினர் - உறுப்பினர்
188. உத்தியோகம் - பணி
189. பைல் - கோப்பு
190. ஆஸ்பத்திரி - மருத்துவமனை
191. வீடியோகேசட் - ஒளிப்பேழை
192. ரப்பர் - தேய்ப்பம்
193. டைரி - நாட்குறிப்பு
194. லைசென்ஸ் - உரிமம்
195. காம்பாக்ட் டிஸ்க் - வட்டத்தகடு
196. சிலிண்டர் - உருளை
197. உயில் - இறுதிமுறி
198. கிரீன் ரூம் - பாசறை
199. ஆர்டர் ஆஃப் நேச்சர் - இயற்கை ஒழுங்கு
200. ஐதிகம் - உலக வழக்கு
201. அஸ்தெடிக் - இயற்கை வனப்பு
202. ஜெராக்ஸ் - ஒளிப்படி
203. கிளாசிக்கல் லாங்குவேஜ் - உயர்தனிச் செம்மொழி
204. ராக்கெட் - ஏவுகணை
205. கெலிகாப்டர் - உலங்கு வானூர்தி
206. அகாதெமி - கழகம்
207. கூல் டிரிங்ஸ்- குளிர்பருகு நீர்
208. பாஸ்ப்போர்ட் - கடவுச்சீட்டு
209. சூப்பர் - சிறப்பு
210. லிவ்வர் - கல்லீரல்
211. டெலிபோன் - தொலைபேசி
212. கரண்ட் - மின்சாரம்
213. ட்ராவலர்ஸ் பங்களா - பயணியர் மாளிகை
214. பிரிட்ஜ் - குளிர்சாதனப்பெட்டி
215. லேட் - காலம் கடந்து
216. ஜங்ஷன் - கூடல்
217. வாஷிங் மெஷின் - சலவை இயந்திரம்
218. அட்டெண்டன்ஸ் - வருகைப்பதிவு
219. ரோடு - சாலை
220. லைட் - விளக்கு
221. கவுன்சில் - குழு
222. செல்போன் - கைப்பேசி
223. புரோட்டோகால் - மரபுத் தகவு
224. கூல்ட்ரிங்க்ஸ் - குளிர்பானம்
225. ஜீப் - கரட்டுந்து
226. வெரிபிகேஷன் - சரிபார்த்தல்
227. உபசரித்தல் - விருந்தோம்பல்
228. பிளாஸ்டிக் - நெகிழி
229. கார் - மகிழுந்து
230. சேர் - நாற்காலி
231. கோர்ட் - மன்றம்
232. பிக்னிக் - சிற்றுலா
233. பிளே கிரவுண்ட் - விளையாட்டுத்திடல்
234. டெட்லைன் - குறித்தகாலம்
235. பேட்மிட்டன் - பூப்பந்து
236. ஆதவன் - ஞாயிறு
237. ஸ்நாக்ஸ் - சிற்றுணவு
238. குபேரன் - பெருஞ்செல்வன்
239. லெமினேஷன் - மென்தகடு
240. டாக்டர் - மருத்துவர்
241. பேக்கர் - ரொட்டி சுடுபவர்
242. டிஸ்க் - குறுந்தகடு
243. நம்பர் - எண்
244. பேனா - தூவல்
245. ரிவர் - நதி
246. பஸ் - பேருந்து
247. காண்ட்ரக்ட் - ஒப்பந்தம்
248. இருதயம் - நெஞ்சகம்
249. ஸ்டோர் - பண்டகம்⁠⁠⁠⁠


தமிழில்
டீ "தேநீர்',
காபி "குளம்பி'
சப்பாத்தி - கோந்தடை

புரோட்டா - புரியடை
நூடுல்ஸ் - குழைமா
கிச்சடி - காய்சோறு, காய்மா
கேக் - கட்டிகை, கடினி
சமோசா - கறிப்பொதி, முறுகி
பாயசம் - பாற்கன்னல்
சாம்பார் - பருப்பு குழம்பு, மென்குழம்பு
பஜ்ஜி - தோய்ச்சி, மாவேச்சி
பொறை - வறக்கை
கேசரி - செழும்பம், பழும்பம்
குருமா - கூட்டாளம்
ஐஸ்கிரீம் - பனிக்குழைவு
சோடா - காலகம்
ஜாங்கிரி - முறுக்கினி
ரோஸ்மில்க் - முளரிப்பால்
சட்னி - அரைப்பம், துவையல்
கூல்ட்ரிங்க்ஸ் - குளிர் குடிப்பு
பிஸ்கட் - ஈரட்டி, மாச்சில்
போண்டா - உழுந்தை
ஸர்பத் - நறுமட்டு
சோமாஸ் - பிறைமடி
பப்ஸ் - புடைச்சி
பன் - மெதுவன்
ரோஸ்டு - முறுவல்
லட்டு - கோளினி
புரூட் சாலட் - பழக்கூட்டு
கொச்சை சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள்.
அகங்காரம் - செருக்கு
அக்கிரமம் - முறைகேடு
அசலம் - உறுப்பு
அசூயை - பொறாமை
அதிபர் - தலைவர்
அதிருப்தி - மனக்குறை
அதிருஷ்டம்- ஆகூழ், தற்போது
அத்தியாவசியம் --இன்றியமையாதது
அநாவசியம் -வேண்டாதது
அநேகம் - பல
அந்தரங்கம்- மறைபொருள்
அபகரி -பறி, கைப்பற்று
அபாயம் -இடர்
அபிப்ராயம் -கருத்து
அபிஷேகம் -திருமுழுக்கு
அபூர்வம் -புதுமை
அமிசம் -கூறுபாடு
அயோக்கியன் -நேர்மையற்றவன்
அர்த்தநாரி -உமைபாகன்
அர்த்த புஷ்டியுள்ள -பொருள் செறிந்த
அர்த்தம் -பொருள்
அர்த்த ஜாமம் - நள்ளிரவு
அர்ப்பணம் -படையல்
அலங்காரம் -ஒப்பனை
அலட்சியம் - புறக்கணிப்பு
அவசரமாக - உடனடியாக, விரைவாக
அவஸ்தை - நிலை, தொல்லை
அற்பமான - கீழான, சிறிய
அற்புதம் - புதுமை
அனுபவம் - பட்டறிவு
அனுமதி - இசைவு
ஆச்சரியம் - வியப்பு
ஆக்ஞை - ஆணை, கட்டளை
ஆட்சேபணை - தடை, மறுப்பு
ஆதி - முதல்
ஆபத்து - இடர்
ஆமோதித்தல் - வழிமொழிதல்
ஆயுதம் - கருவி
ஆரம்பம் -தொடக்கம்
ஆராதனை -வழிபாடு
ஆரோக்கியம் - உடல்நலம்
ஆலோசனை - அறிவுரை
ஆனந்தம் - மகிழ்ச்சி
இஷ்டம் - விருப்பம்
இங்கிதம் - இனிமை
ஈ[தொகு]
ஈன ஜன்மம் - இழிந்த பிறப்பு
ஈனஸ்வரம் - மெலிந்த ஓசை
உக்கிரமான - கடுமையான
உபசாரம் - முகமன் கூறல்
உபயோகம் - பயன்
உதாசீனம் - பொருட்படுத்தாமை
உத்தரவாதம் - பிணை, பொறுப்பு
உத்தரவு - கட்டளை
உல்லாசம் - களிப்பு
உற்சாகம் - ஊக்கம்
ஐதீகம் - சடங்கு, நம்பிக்கை
கர்ப்பக்கிருகம் - கருவறை
கர்மம் - செயல்
கலாச்சாரம் - பண்பாடு
கலாரசனை - கலைச்சுவை
கல்யாணம் - மணவினை, திருமணம்
கஷ்டம் - தொல்லை, துன்பம்
கீதம் - பாட்டு, இசை
கீர்த்தி - புகழ்
கீர்த்தனை- பாமாலை, பாடல்
கோஷம் - ஒலி
சகலம் - எல்லாம், அனைத்தும்
சகஜம் - வழக்கம்
சகி - தோழி
சகோதரி - உடன் பிறந்தவள்
சங்கடம் - இக்கட்டு, தொல்லை
சங்கதி - செய்தி
சங்கோஜம் - கூச்சம்
சதம் - நூறு
சதா - எப்பொழுதும்
சதி- சூழ்ச்சி
சத்தம் - ஓசை, ஒலி
சந்தானம் - மகப்பேறு
சந்தேகம் - ஐயம்
சந்தோஷம் - மகிழ்ச்சி
சபதம் - சூளுரை
சம்சாரம் - குடும்பம், மனைவி
சம்பந்தம் - தொடர்பு
சம்பவம் - நிகழ்ச்சி
சம்பாதி - ஈட்டு, பொருளீட்டு
சம்பிரதாயம் - மரபு
சம்மதி - ஒப்புக்கொள்
சரணாகதி - அடைக்கலம்
சரித்திரம் - வரலாறு
சரீரம் - உடல்
சருமம் -தோல்
சர்வம் - எல்லாம்
சாதாரணம் - எளிமை, பொதுமை
சாதித்தல் - நிறைவேற்றுதல், விடாது பற்றுதல்
சாதம் - சோறு
சாந்தம் - அமைதி
சாகசம் - துணிவு, பாசாங்கு
சாராமிசம் - பொருட்சுருக்கம்
சாயந்திரம் - மாலை வேளை, அந்திப் பொழுது
சாவகாசம் - விரைவின்மை
சாஸ்திரம் - நூல்
சாசுவதம் - நிலை
சிகிச்சை - மருத்துவம்
சித்தாந்தம் - கொள்கை, முடிவு
சித்திரம் - ஓவியம்
சிநேகிதம் - நட்பு
சிம்மாசனம் - அரியணை
சிரத்தை - அக்கறை, கருத்துடைமை
சிரமம் - தொல்லை
சின்னம் - அடையாளம்
சீக்கிரமாக - விரைவாக
சுதந்திரம் - தன்னுரிமை, விடுதலை
சுத்தமான - தூய்மையான
சுபாவம் - இயல்பு
சுலபம் - எளிது
சுவாரஸ்யமான - சுவையான
சேவை - பணி
சேனாதிபதி - படைத்தலைவன்
சௌகர்யம் - வசதி, நுகர்நலம்
சௌக்கியம் - நலம்
தசம் - பத்து
தத்துவம் - உண்மை
தம்பதியர் - கணவன் மனைவி, இணையர்
தரிசனம் - காட்சி
தர்க்கம் - வழக்கு
தர்க்க வாதம் - வழக்காடல்
தாபம் - வேட்கை
திகில் - அதிர்ச்சி
திருப்தி - நிறைவு
தினசரி - நாள்தோறும்
தினம் - நாள்
தீர்க்கதரிசி _ ஆவதறிவார்
துரதிருஷ்டம் - பேறின்மை
துரிதம் - விரைவு
துரோகம் - வஞ்சனை
துவம்சம் - அழித்தொழித்தல், அழித்துத் தொலைத்தல்
தேகம் - உடல்
தேசம் - நாடு
தைரியம் - துணிவு
நட்சத்திரம் - விண்மீன், நாள்மீன்
நமஸ்காரம் - வணக்கம்
நர்த்தனம் - ஆடல், நடனம்,கூத்து
நவீனம் - புதுமை
நவீன பாணி - புது முறை
நாசம் - அழிவு, வீண்
நாசூக்கு - நயம்
நாயகன் - தலைவன்
நாயகி - தலைவி
நிஜம் - உண்மை, உள்ளது
நிசபதமான - ஒலியற்ற, அமைதியான
நிச்சயம் - உறுதி
நிச்சயதார்த்தம் - மண உறுதி
நிதானம் - பதறாமை
நித்திய பூஜை - நாள் வழிபாடு
நிரூபி - மெய்ப்பி, நிறுவு
நிருவாகம் - மேலாண்மை
நிதி - பொருள்,செல்வம், பணம்
நீதி - அறம், நெறி, அறநெறி, நடுவுநிலை, நேர், நேர்நிறை, நேர்பாடு, முறை
பகிரங்கம் - வெளிப்படை
பஞ்சாட்சரன்- ஐந்தெழுத்து
பரவசம் - மெய்மறத்தல்
பராக்கிரமம் - வீரம்
பராமரி - காப்பாற்று , பேணு
பரிகாசம் - இகழ்ச்சிச் சிரிப்பு
பரிசோதனை - ஆய்வு
பரிட்சை - தேர்வு
பலவந்தமாக - வற்புறுத்தி
பலவீனம் - மெலிவு, வலிமையின்மை
பலாத்காரம் - வன்முறை
பாணம் - அம்பு
பாதம் - அடி
பாரம் - சுமை
பால்யம் - இளமை
பிம்பம் - நிழலுரு
பிரகாசம் - ஒளி, பேரொளி
பிரகாரம் - சுற்று
(அதன்)பிரகாரம் - (அதன்)படி
பிரசங்கம் - சொற்பொழிவு
பிரசுரம் - வெளியீடு
பிரச்சினை - சிக்கல்
பிரதிநிதி - சார்பாளர்
பிரதிபலித்தல் - எதிரியக்கம்
பிரதிபிம்பன் - எதிருரு
பிரத்தியோகம் - தனி
பிரபலம் - புகழ்
பிரமாதமான - பெரிய
பிரமிப்பு - திகைப்பு
பிரயோகி - கையாளு
பிரயோசனம் - பயன்
பிரவாகம் - பெருக்கு
பிரவேசம் - நுழைவு, புகுதல், வருதல்
பிரார்த்தனை - தொழுகை,
பிரியம் - விருப்பம்
பிரேமை - அன்பு
பீடிகை - முன்னுரை
புண்ணியம் - நல்வினை
புத்தி - அறிவு
புத்திரன் - புதல்வன்
புனிதமான - தூய
புஷ்பம் - மலர், பூ
புஜபலம் - தோள்வன்மை
பூஜை - வழிபாடு
பூர்த்தி - நிறைவு
பூஷணம் - அணிகலம்-
போதனை - கற்பித்தல் மகான் - பெரியவர்
மகாயுத்தம் -பெரும்போர்
மத்தியஸ்தர் - உடன்படுத்துபவர்
மத்தியானம் - நண்பகல்
மந்திரி - அமைச்சர்
மனசு - உள்ளம்
மனிதாபிமானம் - மக்கட்பற்று
மானசீகம் - கற்பனை
மல்யுத்தம் - மற்போர்
ய[தொகு]
யந்திரம் - பொறி
யூகம் - உய்த்துணர்தல்
யூகி - உய்த்துணர்
யோக்யதை - தகுதி
ர[தொகு]
ரதம் - தேர்
ரத சாரதி- தேரோட்டி
ராணி - அரசி
ராத்திரி - இரவு
ராச்சியம் - நாடு,மாநிலம்
ராஜா - மன்னன்
ரசம் - சாறு, சுவை
லட்சம் - நூறாயிரம்
லட்சணம் - அழகு
லட்சியம் - குறிக்கோள்
வதம் - அழித்தல்
வதனம் - முகம்
வம்சம் - கால்வழி
வஸ்திரம் - துணி, ஆடை
வாஞ்சை - பற்று
வாயு - காற்று
விக்கிரகம் - வழிபாட்டுருவம்
விசாரம் - கவலை
விசாலமான - அகன்ற
விசித்திரம் - வேடிக்கை
விஷேசம் - சிறப்பு
விஞ்ஞானம் - அறிவியல்
விஷயம் - செய்தி
விதானம் - மேற்கட்டி
விநாடி - நொடி
வித்தியாசம் - வேறுபாடு
விபூதி - திருநீறு , பெருமை
விமோசனம் - விடுபடுதல்
வியாதி - நோய்
விரதம் - நோன்பு
விவாகம் - திருமணம்
விவாதி -வழக்காடு
வேகம் - விரைவு
வேதம் - மறை
வேதவிற்பனன்ர் - மறைவல்லார்
வேதியர் - மறையவர்
ஜ[தொகு]
ஜனநாயகம் - குடியாட்சி
ஜனம் - மக்கள்
ஜனனம் - பிறப்பு
ஜாதகம்- பிறப்புக் குறிப்பு
ஜாலம் - வேடிக்கை
ஜூரம் - காய்ச்சல்
ஜோதி - ஒளி
ஜோடி - இணை
ஜோடித்தல் - அழகு செய்தல்
ஸந்ததி - கால்வழி
ஸமத்துவம் - ஒரு நிகர்
ஸமரசம் - வேறுபாடின்மை
ஸமீபம் - அண்மை
ஸம்ஹாரம் - அழிவு
ஸோபை - பொலிவு
ஸௌந்தர்யம் - பேரழகு
ஸ்தாபனம் _ நிறுவனம்
ஸ்தானம் - இடம்
மெளனம் - பேசாமை
கவிதை-பா
கவிதைகள்-பாக்கள்
வீதி-தெரு
++++++++++++++++++
😇😇👌👌
தமிழுக்கும் ஆங்கலத்திற்கும் உள்ள ஒலி ஒத்த சொற்கள். படித்தவுடன் உங்கள் அனைவருக்கும் பிரமிப்பு ஏற்படுவது உறுதி.
Cash - காசு
Name - நாமம்
Vomit - ஒமட்டு
Ginger - இஞ்சிவேர்
Victory - வெற்றி
Win - வெல்/வென்று
Wagon - வாகனம்
Elachi - ஏலக்காய்
Coir - கயிறு
Knowledge / Know - ஞானம் / காண்
Eve - அவ்வை
Terra - தரை
Metre - மாத்திரை (unit representation in Tamil)
பின்வரும் வார்தையில S எடுத்திட்டு பாத்தா, அப்படியே தமிழ் சாயல்.
Script - குறிப்பு
Speech - பேச்சு
Speed - பீடு
Sponge - பஞ்சு
Snake - நாகம்
Molecule - மூலக்கூறு
Orate - உரையாற்று
Kill - கொல்
One - ஒன்று
Eight - எட்டு
Prize - பரிசு
Other - இதர
Tele - தொலை
Teak - தேக்கு
Rice -அரிசி
Aqua - அக்கம்
Venom - விஷம்
Fade - வாடு
Poly- பல
Culprit - கள்வன்
Mega - மிக
Accept - இசைப்படு
Mature - முதிர்
Goat - கடா
Pain - பிணி
Yarn - ஞாண் (அறிக- yarn=thread,
ஞாண் என்றாலும் கயிறு. அரைஞாண் கயிறு என்று சொல்லுவதை நினைவில் கொள்க)
Torque - திருகி
Level - அளவு
Mad - மடமை
Mind - மதி
Surround - சுற்றம்
Water - ஊற்று
Lemon - இளமஞ்சள்காய் (எலுமிச்சை)
God - கடவுள்
Birth - பிறந்த
Capture - கைப்பற்று
Roll - உருள்
Want - வேண்டி
Plough - உழவு
Sudden - உடன்
Adamant - அடம்
Fault - பழுது
Shrink - சுருங்கு
Round - உருண்டை
Villa - இல்லம்
Path - பாதை
Via/Way - வழியாக
Bottle - புட்டில்
Cot - கட்டில்
Nerve - நரம்பு
Attack - தாக்கு
Betrothal - பெற்றோர் ஒத்தல் (திருமணத்திற்கு பெற்றோர் சம்மதித்தல்)
Right - உரியது
Make - ஆக்கம்
Grain - குருணை
Button - பொத்தான்

வடமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள்

அகங்காரம் - செருக்கு
அக்கிரமம் - முறைகேடு
அசலம் - உறுப்பு
அசூயை - பொறாமை
அதிபர் - தலைவர்
அதிருப்தி - மனக்குறை
அதிருஷ்டம்- ஆகூழ், தற்போது
அத்தியாவசியம் --இன்றியமையாதது
அநாவசியம் -வேண்டாதது
அநேகம் - பல
அந்தரங்கம்- மறைபொருள்
அபகரி -பறி, கைப்பற்று
அபாயம் -இடர்
அபிப்ராயம் -கருத்து
அபிஷேகம் -திருமுழுக்கு
அபூர்வம் -புதுமை
அமிசம் -கூறுபாடு
அயோக்கியன் -நேர்மையற்றவன்
அர்த்தநாரி -உமைபாகன்
அர்த்த புஷ்டியுள்ள -பொருள் செறிந்த
அர்த்தம் -பொருள்
அர்த்த ஜாமம் - நள்ளிரவு
அர்ப்பணம் -படையல்
அலங்காரம் -ஒப்பனை
அலட்சியம் - புறக்கணிப்பு
அவசரமாக - உடனடியாக, விரைவாக
அவஸ்தை - நிலை, தொல்லை
அற்பமான - கீழான, சிறிய
அற்புதம் - புதுமை
அனுபவம் - பட்டறிவு
அனுமதி - இசைவு

ஆச்சரியம் - வியப்பு
ஆக்ஞை - ஆணை, கட்டளை
ஆட்சேபணை - தடை, மறுப்பு
ஆதி - முதல்
ஆபத்து - இடர்
ஆமோதித்தல் - வழிமொழிதல்
ஆயுதம் - கருவி
ஆரம்பம் -தொடக்கம்
ஆராதனை -வழிபாடு
ஆரோக்கியம் - உடல்நலம்
ஆலோசனை - அறிவுரை
ஆனந்தம் - மகிழ்ச்சி

இஷ்டம் - விருப்பம்
இங்கிதம் - இனிமை

ஈன ஜன்மம் - இழிந்த பிறப்பு
ஈனஸ்வரம் - மெலிந்த ஓசை

உக்கிரமான - கடுமையான
உபசாரம் - முகமன் கூறல்
உபயோகம் - பயன்
உதாசீனம் - பொருட்படுத்தாமை
உத்தரவாதம் - பிணை, பொறுப்பு
உத்தரவு - கட்டளை
உல்லாசம் - களிப்பு
உற்சாகம் - ஊக்கம்

ஐதீகம் - சடங்கு, நம்பிக்கை

கர்ப்பக்கிருகம் - கருவறை
கர்மம் - செயல்
கலாச்சாரம் - பண்பாடு
கலாரசனை - கலைச்சுவை
கல்யாணம் - மணவினை, திருமணம்
கஷ்டம் - தொல்லை, துன்பம்
கீதம் - பாட்டு, இசை
கீர்த்தி - புகழ்
கீர்த்தனை- பாமாலை, பாடல்
கோஷம் - ஒலி

சகலம் - எல்லாம், அனைத்தும்
சகஜம் - வழக்கம்
சகி - தோழி
சகோதரி - உடன் பிறந்தவள்
சங்கடம் - இக்கட்டு, தொல்லை
சங்கதி - செய்தி
சங்கோஜம் - கூச்சம்
சதம் - நூறு
சதவீதம், சதமானம் - விழுக்காடு
சதா - எப்பொழுதும்
சதி- சூழ்ச்சி
சத்தம் - ஓசை, ஒலி
சந்தானம் - மகப்பேறு
சந்தேகம் - ஐயம்
சந்தோஷம் - மகிழ்ச்சி
சபதம் - சூளுரை
சம்சாரம் - குடும்பம், மனைவி
சம்பந்தம் - தொடர்பு
சம்பவம் - நிகழ்ச்சி
சம்பாதி - ஈட்டு, பொருளீட்டு
சம்பிரதாயம் - மரபு
சம்மதி - ஒப்புக்கொள்
சரணாகதி - அடைக்கலம்
சரித்திரம் - வரலாறு
சரீரம் - உடல்
சருமம் -தோல்
சர்வம் - எல்லாம்
சாதாரணம் - எளிமை, பொதுமை
சாதித்தல் - நிறைவேற்றுதல், விடாது பற்றுதல்
சாதம் - சோறு
சாந்தம் - அமைதி
சாகசம் - துணிவு, பாசாங்கு
சாராமிசம் - பொருட்சுருக்கம்
சாயந்திரம் - மாலை வேளை, அந்திப் பொழுது
சாவகாசம் - விரைவின்மை
சாஸ்திரம் - நூல்
சாசுவதம் - நிலை
சிகிச்சை - மருத்துவம்
சித்தாந்தம் - கொள்கை, முடிவு
சித்திரம் - ஓவியம்
சிநேகிதம் - நட்பு
சிம்மாசனம் - அரியணை
சிரத்தை - அக்கறை, கருத்துடைமை
சிரமம் - தொல்லை
சின்னம் - அடையாளம்
சீக்கிரமாக - விரைவாக
சுதந்திரம் - தன்னுரிமை, விடுதலை
சுத்தமான - தூய்மையான
சுபாவம் - இயல்பு
சுலபம் - எளிது
சுவாரஸ்யமான - சுவையான
சேவை - பணி
சேனாதிபதி - படைத்தலைவன்
சௌகர்யம் - வசதி, நுகர்நலம்
சௌக்கியம் - நலம்

தசம் - பத்து
தத்துவம் - உண்மை
தம்பதியர் - கணவன் மனைவி, இணையர்
தரிசனம் - காட்சி
தர்க்கம் - வழக்கு
தர்க்க வாதம் - வழக்காடல்
தாபம் - வேட்கை
திகில் - அதிர்ச்சி
திருப்தி - நிறைவு
தினசரி - நாள்தோறும்
தினம் - நாள்
தீர்க்கதரிசி _ ஆவதறிவார்
துரதிருஷ்டம் - பேறின்மை
துரிதம் - விரைவு
துரோகம் - வஞ்சனை
துவம்சம் - அழித்தொழித்தல், அழித்துத் தொலைத்தல்
தேகம் - உடல்
தேசம் - நாடு
தைரியம் - துணிவு

நட்சத்திரம் - விண்மீன், நாள்மீன்
நமஸ்காரம் - வணக்கம்
நர்த்தனம் - ஆடல், நடனம்,கூத்து
நவீனம் - புதுமை
நவீன பாணி - புது முறை
நாசம் - அழிவு, வீண்
நாசூக்கு - நயம்
நாயகன் - தலைவன்
நாயகி - தலைவி
நிஜம் - உண்மை, உள்ளது
நிசபதமான - ஒலியற்ற, அமைதியான
நிச்சயம் - உறுதி
நிச்சயதார்த்தம் - மண உறுதி
நிதானம் - பதறாமை
நித்திய பூஜை - நாள் வழிபாடு
நிரூபி - மெய்ப்பி, நிறுவு
நிருவாகம் - மேலாண்மை
நிதி - பொருள்,செல்வம், பணம்
நீதி - அறம், நெறி, அறநெறி, நடுவுநிலை, நேர், நேர்நிறை, நேர்பாடு, முறை

பகிரங்கம் - வெளிப்படை
பஞ்சாட்சரன்- ஐந்தெழுத்து
பரவசம் - மெய்மறத்தல்
பராக்கிரமம் - மறம்
பராமரி - காப்பாற்று , பேணு
பரிகாசம் - இகழ்ச்சிச் சிரிப்பு
பரிசோதனை - ஆய்வு
பரீட்சை - தேர்வு
பலவந்தமாக - வற்புறுத்தி
பலவீனம் - மெலிவு, வலிமையின்மை
பலாத்காரம் - வன்முறை
பாணம் - அம்பு
பாதம் - அடி
பாரம் - சுமை
பால்யம் - இளமை
பிம்பம் - நிழலுரு
பிரகாசம் - ஒளி, பேரொளி
பிரகாரம் - சுற்று
(அதன்)பிரகாரம் - (அதன்)படி
பிரசங்கம் - சொற்பொழிவு
பிரசுரம் - வெளியீடு
பிரச்சினை - சிக்கல்
பிரதிநிதி - சார்பாளர்
பிரதிபலித்தல் - எதிரியக்கம்
பிரதிபிம்பன் - எதிருரு
பிரத்தியோகம் - தனி
பிரபலம் - புகழ்
பிரமாதமான - பெரிய
பிரமிப்பு - திகைப்பு
பிரயோகி - கையாளு
பிரயோசனம் - பயன்
பிரவாகம் - பெருக்கு
பிரவேசம் - நுழைவு, புகுதல், வருதல்
பிரார்த்தனை - தொழுகை,
பிரியம் - விருப்பம்
பிரேமை - அன்பு
பீடிகை - முன்னுரை
புண்ணியம் - நல்வினை
புத்தி - அறிவு
புத்திரன் - புதல்வன்
புனிதமான - தூய
புஷ்பம் - மலர், பூ
புஜபலம் - தோள்வன்மை
பூஜை - வழிபாடு
பூர்த்தி - நிறைவு
பூஷணம் - அணிகலம்-
போதனை - கற்பித்தல்

மகான் - பெரியவர்
மகாயுத்தம் -பெரும்போர்
மத்தியஸ்தர் - உடன்படுத்துபவர்
மத்தியானம் - நண்பகல்
மந்திரி - அமைச்சர்
மனசு - உள்ளம்
மனிதாபிமானம் - மக்கட்பற்று
மானசீகம் - கற்பனை
மல்யுத்தம் - மற்போர்

யந்திரம் - பொறி
யூகம் - உய்த்துணர்தல்
யூகி - உய்த்துணர்
யோக்யதை - தகுதி

ரதம் - தேர்
ரத சாரதி- தேரோட்டி
ராணி - அரசி
ராத்திரி - இரவு
ராச்சியம் - நாடு,மாநிலம்
ராஜா - மன்னன்
ரசம் - சாறு, சுவை

லட்சம் - நூறாயிரம்
லட்சணம் - அழகு
லட்சியம் - குறிக்கோள்

வதம் - அழித்தல்
வதனம் - முகம்
வம்சம் - கால்வழி
வஸ்திரம் - துணி, ஆடை
வாஞ்சை - பற்று
வாயு - காற்று
விக்கிரகம் - வழிபாட்டுருவம்
விசாரம் - கவலை
விசாலமான - அகன்ற
விசித்திரம் - வேடிக்கை
விஷேசம் - சிறப்பு
விஞ்ஞானம் - அறிவியல்
விஷயம் - செய்தி
விதானம் - மேற்கட்டி
விநாடி - நொடி
வித்தியாசம் - வேறுபாடு
விபூதி - திருநீறு , பெருமை
விமோசனம் - விடுபடுதல்
வியாதி - நோய்
விரதம் - நோன்பு
வீரம் - மறம்
விவாகம் - திருமணம்
விவாதி -வழக்காடு
வேகம் - விரைவு
வேதம் - மறை
வேதவிற்பனன்ர் - மறைவல்லார்
வேதியர் - மறையவர்

ஜனநாயகம் - குடியாட்சி
ஜனம் - மக்கள்
ஜனனம் - பிறப்பு
ஜாதகம்- பிறப்புக் குறிப்பு
ஜாலம் - வேடிக்கை
ஜூரம் - காய்ச்சல்
ஜோதி - ஒளி
ஜோடி - இணை
ஜோடித்தல் - அழகு செய்தல்

ஸந்ததி - கால்வழி
ஸமத்துவம் - ஒரு நிகர்
ஸமரசம் - வேறுபாடின்மை
ஸமீபம் - அண்மை
ஸம்ஹாரம் - அழிவு
ஸோபை - பொலிவு
ஸௌந்தர்யம் - பேரழகு
ஸ்தாபனம் _ நிறுவனம்
ஸ்தானம் - இடம்
தமிழ் சொற்கள்
பிற மொழிக்கு இணையான தமிழ்ச்சொல்:
1. அதிகாரி - அலுவலர்
2. செக் - காசோலை
3. சக்சஸ் - வெற்றி
4. பீரோ - இழுப்பறை
5. லீவ்லெட்டர் - விடுமுறை கடிதம்
6. சிட்டி - நகரம்
7. டைப்பிஸ்ட - தட்டச்சர்
8. ப்ரீவ் கேஸ் - குறும்பெட்டி
9. அப்பாயின்ட் மென்ட் - பணிஅமர்த்தல்
10. ரூம் ரெண்ட் - குடிக்கூலி
11. மோட்டல் - பயணவழி உணவகம்
12. காலேஜ் - கல்லூரி
13. ஃபேன் - மின்விசிறி
14. பிரிண்டிங் பிரஸ் - அச்சகம்
15. ஆசீர்வாதம் - வாழ்த்து
16. ரெக்கார்ட் - ஆவணம்
17. ஆபிஸ் - அலுவலகம்
18. சுவிட்சு -பொத்தான்
19. மேஜிக் - செப்பிடுவித்தை
20. இண்டஸ்ட்ரி - தொழிலகம்
21. ஈசன் - இறைவன்
22. கவர் - மறை உறை
23. லாரி - சரக்குந்து
24. உத்தரவு - ஆணை
25. சேலான் - செலுத்துச்சீட்டு
26. எஸ்டிமேட் - மதிப்பீடு
27. கண்ட்ரி - நாடு
28. பர்னிச்சர் - அறைக்கலன்கள்
29. அலங்காரம் - ஒப்பனை
30. மீட்டிங் - கூட்டம்
31. ஏஜென்ட் - முகவர்
32. டிக்ஷ;னரி - அகராதி
33. லாண்டரி - வெளுப்பகம்
34. கேரண்டி - பொறுப்புறுதி
35. டிபன் - சிற்றுண்டி
36. கண்ட்ரோல் - கட்டுப்பாடு
37. குமாரன் - மகன்
38. டிசைன் - வடிவமைப்பு
39. தம்ளர் - குவளை
40. சாம்பியன் - வாகை சூடி
41. கம்பெனி - குழுமம்
42. ஸ்டேடியம் - விளையாட்டரங்கம்
43. வொர்க்ஷhப் - பணிமனை
44. ஆக்ஸிடென்ட் - நேர்ச்சி
45. இம்ப்ரூ - பெருக்கு
46. ஸ்பீக்கர் - பேசுபவர்
47. பஸ் ஸ்டாண்டு - பேருந்து நிலையம்
48. சினிமா - திரைப்படம்
49. டிபார்ட்மெண்டல் ஸ்டோர் - பல்பொருள் அங்காடி
50. ஆடியோகேசட் - ஒலிப்பேழை
51. சட்ஜ்மெண்ட் - தீர்ப்பு
52. வோல்டு - உலகம்
53. ரயில் - தொடர்வண்டி
54. ஆங்கிலச் சொல் தமிழ்ச்சொல்
55. பாக்கி - நிலுவை
56. அசெம்ளி - சட்டசபை
57. ஃபுட் போர்டு - படிக்கட்டு
58. குஃவோடா - பங்கு
59. கலெக்டர் - சேகரிப்பவர்
60. போஸ்ட் ஆபிஸ் - அஞ்சல் நிலையம்
61. அஸ்ட்ரோநோமி - வானநூல்
62. ஆட்டோமொபைல் - தானியங்கி
63. தியேட்டர் - திரை அரங்கு
64. அட்லஸ் - நிலப்படத்தொகுப்பு
65. ஃபேக்நியூஸ் - பொய்ச்செய்தி
66. அட்லஸ் - நிலப்படச்சுவடி
67. ஆபத்து - இடர்
68. ஆயில் ஸ்டோர் - எண்ணெய்ப் பண்டகம்
69. ஃபிளாஷ; நியூஸ் - சிறப்புச் செய்தி
70. ஆயுசு - வாழ்நாள்
71. ப்ரொஜெக்டர் - படவீழ்த்தி
72. ஜனங்கள் - மக்கள்
73. அடாப்டர் - பொருத்தி
74. ஸ்கூல் - பள்ளி
75. டீ - தேநீர்
76. பேங்க் - வங்கி
77. அந்நியர் - அயலார்
78. பாஸ்போர்ட் - கடவுச்சீட்டு
79. கரஸ்பாண்டேன்ட் - தாளாளர்
80. அபூர்வம் - புதுமை
81. லைசன்ஸ் - உரிமம்
82. கேபிள் - கம்பிவடம்
83. ஓட்டல் - உணவகம்
84. டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் - தட்டெழுத்துப் பயிலகம்
85. பேக்கிங் சார்ஜ் - கட்டுமானத்தொகை
86. டெய்லி - அன்றாடம்
87. இன்டர்நெட் - இணையம்
88. ப்ரீப்கேஸ்- குறும்பெட்டி
89. பிளாட்பாரம் - நடைபாதை
90. அட்மிஷன் - சேர்க்கை
91. டிசிப்ளின் - ஒழுக்கம்
92. ஜெராக்ஸ் - ஒளிப்படி
93. இலஞ்சம் - கையூட்டு
94. பாய்லர் - கொதிகலன்
95. டிக்கெட் - பயணச்சீட்டு
96. சயின்ஸ் - அறிவியல்
97. புரபோசல் - கருத்துரு
98. டிவி - தொலைக்காட்சி
99. ஏரோப்ளேன் - வானூர்தி
100. கம்ப்யூட்டர் - கணினி
101. தெர்மா மீட்டர் - வெப்பமானி
102. கம்பெனி - குழுமம்
103. சென்ட்ரல் கவர்ன்மென்ட் - நடுவன் அரசு
104. மதர்லேண்ட் - தாயகம்
105. விஞ்ஞானம் - அறிவியல்
106. சாவி - திறவுகோல்
107. ரேடியோ - வானொலி
108. ரிஜிஸ்டர் போஸ்ட் - பதிவு அஞ்சல்
109. உபயோகம் - பயன்
110. ஆட்டோகிராப் - வாழ்த்தொப்பம்
111. ரிப்பைரர் - பழுதுபார்ப்பவர்
112. ஸ்டேசனரி சாப் - எழுது பொருள் அங்காடி
113. புல்லட்டின் - சிறப்புச் செய்தி இதழ்
114. டைப்ரைட்டர் - தட்டச்சுப்பொறி
115. மெடிக்கல் ஷhப் - மருந்தகம்
116. கிரீடம் - மணிமுடி
117. கிரீன் ப்ரூஃ - திருத்தப்படாத அச்சுப்படி
118. இலாபம் - வருவாய்
119. பெல்ட் - அரைக்கச்சு
120. ஃபோலியோஎண் - இதழ் எண்
121. புரோநோட் - ஒப்புச்சீட்டு
122. ஸ்பெஷல் - தனி
123. ஸ்டேட் கவர்ன்மென்ட் - மாநில அரசு
124. ஐஸ்- கிரீம் - பனிக்குழைவு
125. பால்கனி - முகப்பு மாடம்
126. மெஸ் - உணவகம்
127. கிளாத் ஸ்டோர்ஸ் - துணியங்காடி
128. மார்க்கெட் - அங்காடி
129. கோட்டல் - உணவகம்
130. லே அவுட் - செய்தித்தாள் வடிவமைப்பு
131. டீப் போர் வெல் - ஆழ்துளைக் கிணறு
132. என்வெரான்மென்ட் - சுற்றுச்சூழல்
133. பல்பு - மின்குமிழ்
134. காகிதம் - தாள்
135. பிளைட் - விமானம்
136. பேரண்ட்ஸ் - பெற்றோர்
137. டீ பார்ட்டி - தேநீர் விருந்து
138. டெலஸ்கோப் - தொலைநோக்கி
139. எவர்சில்வர் - நிலைவெள்ளி
140. விசிட்டிங்கார்டு - காண்டிச்சீட்டு
141. ஹேர்கட்டிங் சலூன் - முடித்திருத்தகம்
142. கிரைண்டர் - அரவை இயந்திரம்
143. உஷhர் - விழிப்பு
144. நோட்புக் - குறிப்பேடு
145. பார்லிமென்ட் - நாடாளுமன்றம்
146. காபி பார் - குளம்பியகம்
147. டிமாண்ட் டிராப்ட் - வரைவோலை
148. டீ ஸ்டால் - தேநீர் அங்காடி
149. எடிட்டோரியல் - தலையங்கம்
150. புஷ;பம் - மலர்
151. ஆராதனை - வழிபாடு
152. மைக்ராஸ்கோப் - நுண்ணோக்கி
153. பைக் - விசையுந்து
154. இண்டஸ்ட்ரி - தொழிலகம்
155. ப்ரஷ; - தூரிகை
156. பர்ஸ்ட் கிளாஸ் - முதல் வகுப்பு
157. புனல் - வடிகுழலி
158. யுனிவர்சிட்டி - பல்கலைகழகம்
159. பயாலாஜி - உயிரியல்
160. ஸ்டேஷனரி ஷhப் - எழுதுபொருள் அங்காடி
161. அபிஷேகம் - நீராட்டு
162. கலெக்டர் - ஆட்சியர்
163. அதிபர் - தலைவர்
164. ஹெலிகாப்டர் - சுருள் வானூர்தி
165. சர்ஜரி - அறுவைச் சிகிச்சை
166. போலீஸ் ஸ்டேஷன் - காவல் நிலையம்
167. செக் - காசோலை
168. ஐடென்டிபிகேஷன் சர்டிபிகேட் - ஆளறி சான்றிதழ்
169. நாலெட்ஜ் - அறிவு
170. சாக்பீஸ - சுன்னக்கட்டி
171. ஜட்ஜ் - நீதிபதி
172. கவுன்சில் - மன்றம்
173. நிபுணர் - வல்லுநர்
174. ஐஸ்வாட்டர் - குளிர்நீர்
175. காஸ்ட்யூம் - உடை
176. பஸ் ஸ்டாப் - பேருந்து நிறுத்தம்
177. மைக் - ஒலிவாங்கி
178. ஒன் வே- ஒருவழிப்பாதை
179. கெஸ்ட் கவுஸ் - விருந்தகம்
180. ஏஜென்சி - முகவாண்மை
181. பைண்டிங் - கட்டமைப்பு
182. சைக்கிள் - மிதிவண்டி
183. இண்டர்வ்யூ - நேர்காணல்
184. நஷ;டம் - இழப்பு
185. பிரிசன் - சிறைச்சாலை
186. போனஸ் - மகிழ்வூதியம்
187. அங்கத்தினர் - உறுப்பினர்
188. உத்தியோகம் - பணி
189. பைல் - கோப்பு
190. ஆஸ்பத்திரி - மருத்துவமனை
191. வீடியோகேசட் - ஒளிப்பேழை
192. ரப்பர் - தேய்ப்பம்
193. டைரி - நாட்குறிப்பு
194. லைசென்ஸ் - உரிமம்
195. காம்பாக்ட் டிஸ்க் - வட்டத்தகடு
196. சிலிண்டர் - உருளை
197. உயில் - இறுதிமுறி
198. கிரீன் ரூம் - பாசறை
199. ஆர்டர் ஆஃப் நேச்சர் - இயற்கை ஒழுங்கு
200. ஐதிகம் - உலக வழக்கு
201. அஸ்தெடிக் - இயற்கை வனப்பு
202. ஜெராக்ஸ் - ஒளிப்படி
203. கிளாசிக்கல் லாங்குவேஜ் - உயர்தனிச் செம்மொழி
204. ராக்கெட் - ஏவுகணை
205. கெலிகாப்டர் - உலங்கு வானூர்தி
206. அகாதெமி - கழகம்
207. கூல் டிரிங்ஸ்- குளிர்பருகு நீர்
208. பாஸ்ப்போர்ட் - கடவுச்சீட்டு
209. சூப்பர் - சிறப்பு
210. லிவ்வர் - கல்லீரல்
211. டெலிபோன் - தொலைபேசி
212. கரண்ட் - மின்சாரம்
213. ட்ராவலர்ஸ் பங்களா - பயணியர் மாளிகை
214. பிரிட்ஜ் - குளிர்சாதனப்பெட்டி
215. லேட் - காலம் கடந்து
216. ஜங்ஷன் - கூடல்
217. வாஷிங் மெஷின் - சலவை இயந்திரம்
218. அட்டெண்டன்ஸ் - வருகைப்பதிவு
219. ரோடு - சாலை
220. லைட் - விளக்கு
221. கவுன்சில் - குழு
222. செல்போன் - கைப்பேசி
223. புரோட்டோகால் - மரபுத் தகவு
224. கூல்ட்ரிங்க்ஸ் - குளிர்பானம்
225. ஜீப் - கரட்டுந்து
226. வெரிபிகேஷன் - சரிபார்த்தல்
227. உபசரித்தல் - விருந்தோம்பல்
228. பிளாஸ்டிக் - நெகிழி
229. கார் - மகிழுந்து
230. சேர் - நாற்காலி
231. கோர்ட் - மன்றம்
232. பிக்னிக் - சிற்றுலா
233. பிளே கிரவுண்ட் - விளையாட்டுத்திடல்
234. டெட்லைன் - குறித்தகாலம்
235. பேட்மிட்டன் - பூப்பந்து
236. ஆதவன் - ஞாயிறு
237. ஸ்நாக்ஸ் - சிற்றுணவு
238. குபேரன் - பெருஞ்செல்வன்
239. லெமினேஷன் - மென்தகடு
240. டாக்டர் - மருத்துவர்
241. பேக்கர் - ரொட்டி சுடுபவர்
242. டிஸ்க் - குறுந்தகடு
243. நம்பர் - எண்
244. பேனா - தூவல்
245. ரிவர் - நதி
246. பஸ் - பேருந்து
247. காண்ட்ரக்ட் - ஒப்பந்தம்
248. இருதயம் - நெஞ்சகம்
249. ஸ்டோர் - பண்டகம்⁠⁠⁠⁠

தமிழில்
டீ "தேநீர்',
காபி "குளம்பி'
சப்பாத்தி - கோந்தடை

புரோட்டா - புரியடை
நூடுல்ஸ் - குழைமா
கிச்சடி - காய்சோறு, காய்மா
கேக் - கட்டிகை, கடினி
சமோசா - கறிப்பொதி, முறுகி
பாயசம் - பாற்கன்னல்
சாம்பார் - பருப்பு குழம்பு, மென்குழம்பு
பஜ்ஜி - தோய்ச்சி, மாவேச்சி
பொறை - வறக்கை
கேசரி - செழும்பம், பழும்பம்
குருமா - கூட்டாளம்
ஐஸ்கிரீம் - பனிக்குழைவு
சோடா - காலகம்
ஜாங்கிரி - முறுக்கினி
ரோஸ்மில்க் - முளரிப்பால்
சட்னி - அரைப்பம், துவையல்
கூல்ட்ரிங்க்ஸ் - குளிர் குடிப்பு
பிஸ்கட் - ஈரட்டி, மாச்சில்
போண்டா - உழுந்தை
ஸர்பத் - நறுமட்டு
சோமாஸ் - பிறைமடி
பப்ஸ் - புடைச்சி
பன் - மெதுவன்
ரோஸ்டு - முறுவல்
லட்டு - கோளினி
புரூட் சாலட் - பழக்கூட்டு

++++++++++++++++++++++++++++++++++++
கொச்சை சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள்.
அகங்காரம் - செருக்கு
அக்கிரமம் - முறைகேடு
அசலம் - உறுப்பு
அசூயை - பொறாமை
அதிபர் - தலைவர்
அதிருப்தி - மனக்குறை
அதிருஷ்டம்- ஆகூழ், தற்போது
அத்தியாவசியம் --இன்றியமையாதது
அநாவசியம் -வேண்டாதது
அநேகம் - பல
அந்தரங்கம்- மறைபொருள்
அபகரி -பறி, கைப்பற்று
அபாயம் -இடர்
அபிப்ராயம் -கருத்து
அபிஷேகம் -திருமுழுக்கு
அபூர்வம் -புதுமை
அமிசம் -கூறுபாடு
அயோக்கியன் -நேர்மையற்றவன்
அர்த்தநாரி -உமைபாகன்
அர்த்த புஷ்டியுள்ள -பொருள் செறிந்த
அர்த்தம் -பொருள்
அர்த்த ஜாமம் - நள்ளிரவு
அர்ப்பணம் -படையல்
அலங்காரம் -ஒப்பனை
அலட்சியம் - புறக்கணிப்பு
அவசரமாக - உடனடியாக, விரைவாக
அவஸ்தை - நிலை, தொல்லை
அற்பமான - கீழான, சிறிய
அற்புதம் - புதுமை
அனுபவம் - பட்டறிவு
அனுமதி - இசைவு
ஆச்சரியம் - வியப்பு
ஆக்ஞை - ஆணை, கட்டளை
ஆட்சேபணை - தடை, மறுப்பு
ஆதி - முதல்
ஆபத்து - இடர்
ஆமோதித்தல் - வழிமொழிதல்
ஆயுதம் - கருவி
ஆரம்பம் -தொடக்கம்
ஆராதனை -வழிபாடு
ஆரோக்கியம் - உடல்நலம்
ஆலோசனை - அறிவுரை
ஆனந்தம் - மகிழ்ச்சி
இஷ்டம் - விருப்பம்
இங்கிதம் - இனிமை
ஈ[தொகு]
ஈன ஜன்மம் - இழிந்த பிறப்பு
ஈனஸ்வரம் - மெலிந்த ஓசை
உக்கிரமான - கடுமையான
உபசாரம் - முகமன் கூறல்
உபயோகம் - பயன்
உதாசீனம் - பொருட்படுத்தாமை
உத்தரவாதம் - பிணை, பொறுப்பு
உத்தரவு - கட்டளை
உல்லாசம் - களிப்பு
உற்சாகம் - ஊக்கம்
ஐதீகம் - சடங்கு, நம்பிக்கை
கர்ப்பக்கிருகம் - கருவறை
கர்மம் - செயல்
கலாச்சாரம் - பண்பாடு
கலாரசனை - கலைச்சுவை
கல்யாணம் - மணவினை, திருமணம்
கஷ்டம் - தொல்லை, துன்பம்
கீதம் - பாட்டு, இசை
கீர்த்தி - புகழ்
கீர்த்தனை- பாமாலை, பாடல்
கோஷம் - ஒலி
சகலம் - எல்லாம், அனைத்தும்
சகஜம் - வழக்கம்
சகி - தோழி
சகோதரி - உடன் பிறந்தவள்
சங்கடம் - இக்கட்டு, தொல்லை
சங்கதி - செய்தி
சங்கோஜம் - கூச்சம்
சதம் - நூறு
சதா - எப்பொழுதும்
சதி- சூழ்ச்சி
சத்தம் - ஓசை, ஒலி
சந்தானம் - மகப்பேறு
சந்தேகம் - ஐயம்
சந்தோஷம் - மகிழ்ச்சி
சபதம் - சூளுரை
சம்சாரம் - குடும்பம், மனைவி
சம்பந்தம் - தொடர்பு
சம்பவம் - நிகழ்ச்சி
சம்பாதி - ஈட்டு, பொருளீட்டு
சம்பிரதாயம் - மரபு
சம்மதி - ஒப்புக்கொள்
சரணாகதி - அடைக்கலம்
சரித்திரம் - வரலாறு
சரீரம் - உடல்
சருமம் -தோல்
சர்வம் - எல்லாம்
சாதாரணம் - எளிமை, பொதுமை
சாதித்தல் - நிறைவேற்றுதல், விடாது பற்றுதல்
சாதம் - சோறு
சாந்தம் - அமைதி
சாகசம் - துணிவு, பாசாங்கு
சாராமிசம் - பொருட்சுருக்கம்
சாயந்திரம் - மாலை வேளை, அந்திப் பொழுது
சாவகாசம் - விரைவின்மை
சாஸ்திரம் - நூல்
சாசுவதம் - நிலை
சிகிச்சை - மருத்துவம்
சித்தாந்தம் - கொள்கை, முடிவு
சித்திரம் - ஓவியம்
சிநேகிதம் - நட்பு
சிம்மாசனம் - அரியணை
சிரத்தை - அக்கறை, கருத்துடைமை
சிரமம் - தொல்லை
சின்னம் - அடையாளம்
சீக்கிரமாக - விரைவாக
சுதந்திரம் - தன்னுரிமை, விடுதலை
சுத்தமான - தூய்மையான
சுபாவம் - இயல்பு
சுலபம் - எளிது
சுவாரஸ்யமான - சுவையான
சேவை - பணி
சேனாதிபதி - படைத்தலைவன்
சௌகர்யம் - வசதி, நுகர்நலம்
சௌக்கியம் - நலம்
தசம் - பத்து
தத்துவம் - உண்மை
தம்பதியர் - கணவன் மனைவி, இணையர்
தரிசனம் - காட்சி
தர்க்கம் - வழக்கு
தர்க்க வாதம் - வழக்காடல்
தாபம் - வேட்கை
திகில் - அதிர்ச்சி
திருப்தி - நிறைவு
தினசரி - நாள்தோறும்
தினம் - நாள்
தீர்க்கதரிசி _ ஆவதறிவார்
துரதிருஷ்டம் - பேறின்மை
துரிதம் - விரைவு
துரோகம் - வஞ்சனை
துவம்சம் - அழித்தொழித்தல், அழித்துத் தொலைத்தல்
தேகம் - உடல்
தேசம் - நாடு
தைரியம் - துணிவு
நட்சத்திரம் - விண்மீன், நாள்மீன்
நமஸ்காரம் - வணக்கம்
நர்த்தனம் - ஆடல், நடனம்,கூத்து
நவீனம் - புதுமை
நவீன பாணி - புது முறை
நாசம் - அழிவு, வீண்
நாசூக்கு - நயம்
நாயகன் - தலைவன்
நாயகி - தலைவி
நிஜம் - உண்மை, உள்ளது
நிசபதமான - ஒலியற்ற, அமைதியான
நிச்சயம் - உறுதி
நிச்சயதார்த்தம் - மண உறுதி
நிதானம் - பதறாமை
நித்திய பூஜை - நாள் வழிபாடு
நிரூபி - மெய்ப்பி, நிறுவு
நிருவாகம் - மேலாண்மை
நிதி - பொருள்,செல்வம், பணம்
நீதி - அறம், நெறி, அறநெறி, நடுவுநிலை, நேர், நேர்நிறை, நேர்பாடு, முறை
பகிரங்கம் - வெளிப்படை
பஞ்சாட்சரன்- ஐந்தெழுத்து
பரவசம் - மெய்மறத்தல்
பராக்கிரமம் - வீரம்
பராமரி - காப்பாற்று , பேணு
பரிகாசம் - இகழ்ச்சிச் சிரிப்பு
பரிசோதனை - ஆய்வு
பரிட்சை - தேர்வு
பலவந்தமாக - வற்புறுத்தி
பலவீனம் - மெலிவு, வலிமையின்மை
பலாத்காரம் - வன்முறை
பாணம் - அம்பு
பாதம் - அடி
பாரம் - சுமை
பால்யம் - இளமை
பிம்பம் - நிழலுரு
பிரகாசம் - ஒளி, பேரொளி
பிரகாரம் - சுற்று
(அதன்)பிரகாரம் - (அதன்)படி
பிரசங்கம் - சொற்பொழிவு
பிரசுரம் - வெளியீடு
பிரச்சினை - சிக்கல்
பிரதிநிதி - சார்பாளர்
பிரதிபலித்தல் - எதிரியக்கம்
பிரதிபிம்பன் - எதிருரு
பிரத்தியோகம் - தனி
பிரபலம் - புகழ்
பிரமாதமான - பெரிய
பிரமிப்பு - திகைப்பு
பிரயோகி - கையாளு
பிரயோசனம் - பயன்
பிரவாகம் - பெருக்கு
பிரவேசம் - நுழைவு, புகுதல், வருதல்
பிரார்த்தனை - தொழுகை,
பிரியம் - விருப்பம்
பிரேமை - அன்பு
பீடிகை - முன்னுரை
புண்ணியம் - நல்வினை
புத்தி - அறிவு
புத்திரன் - புதல்வன்
புனிதமான - தூய
புஷ்பம் - மலர், பூ
புஜபலம் - தோள்வன்மை
பூஜை - வழிபாடு
பூர்த்தி - நிறைவு
பூஷணம் - அணிகலம்-
போதனை - கற்பித்தல் மகான் - பெரியவர்
மகாயுத்தம் -பெரும்போர்
மத்தியஸ்தர் - உடன்படுத்துபவர்
மத்தியானம் - நண்பகல்
மந்திரி - அமைச்சர்
மனசு - உள்ளம்
மனிதாபிமானம் - மக்கட்பற்று
மானசீகம் - கற்பனை
மல்யுத்தம் - மற்போர்
ய[தொகு]
யந்திரம் - பொறி
யூகம் - உய்த்துணர்தல்
யூகி - உய்த்துணர்
யோக்யதை - தகுதி
ர[தொகு]
ரதம் - தேர்
ரத சாரதி- தேரோட்டி
ராணி - அரசி
ராத்திரி - இரவு
ராச்சியம் - நாடு,மாநிலம்
ராஜா - மன்னன்
ரசம் - சாறு, சுவை
லட்சம் - நூறாயிரம்
லட்சணம் - அழகு
லட்சியம் - குறிக்கோள்
வதம் - அழித்தல்
வதனம் - முகம்
வம்சம் - கால்வழி
வஸ்திரம் - துணி, ஆடை
வாஞ்சை - பற்று
வாயு - காற்று
விக்கிரகம் - வழிபாட்டுருவம்
விசாரம் - கவலை
விசாலமான - அகன்ற
விசித்திரம் - வேடிக்கை
விஷேசம் - சிறப்பு
விஞ்ஞானம் - அறிவியல்
விஷயம் - செய்தி
விதானம் - மேற்கட்டி
விநாடி - நொடி
வித்தியாசம் - வேறுபாடு
விபூதி - திருநீறு , பெருமை
விமோசனம் - விடுபடுதல்
வியாதி - நோய்
விரதம் - நோன்பு
விவாகம் - திருமணம்
விவாதி -வழக்காடு
வேகம் - விரைவு
வேதம் - மறை
வேதவிற்பனன்ர் - மறைவல்லார்
வேதியர் - மறையவர்
ஜ[தொகு]
ஜனநாயகம் - குடியாட்சி
ஜனம் - மக்கள்
ஜனனம் - பிறப்பு
ஜாதகம்- பிறப்புக் குறிப்பு
ஜாலம் - வேடிக்கை
ஜூரம் - காய்ச்சல்
ஜோதி - ஒளி
ஜோடி - இணை
ஜோடித்தல் - அழகு செய்தல்
ஸந்ததி - கால்வழி
ஸமத்துவம் - ஒரு நிகர்
ஸமரசம் - வேறுபாடின்மை
ஸமீபம் - அண்மை
ஸம்ஹாரம் - அழிவு
ஸோபை - பொலிவு
ஸௌந்தர்யம் - பேரழகு
ஸ்தாபனம் _ நிறுவனம்
ஸ்தானம் - இடம்
மெளனம் - பேசாமை
கவிதை-பா
கவிதைகள்-பாக்கள்
வீதி-தெரு
++++++++++++++++++
😇😇👌👌
தமிழுக்கும் ஆங்கலத்திற்கும் உள்ள ஒலி ஒத்த சொற்கள். படித்தவுடன் உங்கள் அனைவருக்கும் பிரமிப்பு ஏற்படுவது உறுதி.
Cash - காசு
Name - நாமம்
Vomit - ஒமட்டு
Ginger - இஞ்சிவேர்
Victory - வெற்றி
Win - வெல்/வென்று
Wagon - வாகனம்
Elachi - ஏலக்காய்
Coir - கயிறு
Knowledge / Know - ஞானம் / காண்
Eve - அவ்வை
Terra - தரை
Metre - மாத்திரை (unit representation in Tamil)
பின்வரும் வார்தையில S எடுத்திட்டு பாத்தா, அப்படியே தமிழ் சாயல்.
Script - குறிப்பு
Speech - பேச்சு
Speed - பீடு
Sponge - பஞ்சு
Snake - நாகம்
Molecule - மூலக்கூறு
Orate - உரையாற்று
Kill - கொல்
One - ஒன்று
Eight - எட்டு
Prize - பரிசு
Other - இதர
Tele - தொலை
Teak - தேக்கு
Rice -அரிசி
Aqua - அக்கம்
Venom - விஷம்
Fade - வாடு
Poly- பல
Culprit - கள்வன்
Mega - மிக
Accept - இசைப்படு
Mature - முதிர்
Goat - கடா
Pain - பிணி
Yarn - ஞாண் (அறிக- yarn=thread,
ஞாண் என்றாலும் கயிறு. அரைஞாண் கயிறு என்று சொல்லுவதை நினைவில் கொள்க)
Torque - திருகி
Level - அளவு
Mad - மடமை
Mind - மதி
Surround - சுற்றம்
Water - ஊற்று
Lemon - இளமஞ்சள்காய் (எலுமிச்சை)
God - கடவுள்
Birth - பிறந்த
Capture - கைப்பற்று
Roll - உருள்
Want - வேண்டி
Plough - உழவு
Sudden - உடன்
Adamant - அடம்
Fault - பழுது
Shrink - சுருங்கு
Round - உருண்டை
Villa - இல்லம்
Path - பாதை
Via/Way - வழியாக
Bottle - புட்டில்
Cot - கட்டில்
Nerve - நரம்பு
Attack - தாக்கு
Betrothal - பெற்றோர் ஒத்தல் (திருமணத்திற்கு பெற்றோர் சம்மதித்தல்)
Right - உரியது
Make - ஆக்கம்
Grain - குருணை
Button - பொத்தான்
பிறமொழிச்சொல் - தமிழ்
அக்கணம் - அப்பொழுது
அக்கிரகாரம் - பார்ப்பனச்சேரி, பார்ப்பனர்கள் வசிக்கும் இடம்
அக்கிரமம் - ஒழுங்கின்மை, முறைகேடு
அக்னி,அக்கினி அக்நி - நெருப்பு, தீ, அனல் எரி
அகங்காரம் - செருக்கு, இறுமாப்பு, முனைப்பு, யானெனல்
அகடவிகடம் - வேறுபட்டது, குறும்பு மாற்று
அகதி - அறவை, வறியர், ஏழை, புகலிலார்,யாருமற்றவர், ஆதரவற்றவர்
அகந்தை - இறுமாப்பு, செருக்கு
அகம்பாவம் - தற்பெருமை, செருக்கு
அகராதி - அகரமுதலி, அகரவரிசை, அகரநிரல்
அகிம்சை - இன்னா செய்யாமை, ஊறு செய்யாமை
அங்கம் - உடல்உறுப்பு
அங்கீகாரம் - ஒப்புதல்
அங்கத்தினர் - உறுப்பினர்
அசத்தை - பொய்
அசுத்தம் - அழுக்கு, துப்புரவின்மை, தூய்மையின்மை
அசிரீரி - உருவமற்றது, வானொலி
அசீரணம் - அழிவுபடாமை, பசியின்மை, செரியாமை
அஞ்சலி - கும்பிடல், வணக்கம் செய்தல்
அஞ்சனம் - மை, கறுப்பு, இருள்
அஞ்ஞாதம் - மறைவு அறியப்படாதது
அண்டம் - முட்டை, உலகம், வித்து மூலம்
அதிகாரி - உயர் அலுவலர்
அதீதம் - மிகை
அப்பியாசம் - பயிற்சி, பழக்கம்
அபயம் - அடைக்கலம்
அபகரித்தல் - பறித்தல், கவர்தல்
அபத்தம் - பொய், பொம்மை
அபிவிருத்தி - பெருவளர்ச்சி
அபிஷேகம் - திருமுழுக்கு
அபிப்பிராயம் - உட்கருத்து
அபூர்வம் - அருமை
அனுக்கிரகம் - அருள் செய்தல்
அனுபந்தம் - பிற்சேர்க்கை
அனுபவம் - பட்டறிப்பு, நுகர்வு
அவகாசம் - ஓய்வு
அவசரம் - விரைவு
அவசியம் - தேவை
அவயவம் - உறுப்பு
அலாதி - தனி
அந்தியம் - முடிவு, சாவு
அந்தியக்கிரியை - ஈமவினை, இறுதிக்கடன்
அந்திய காலம் - முடிவுக்காலம், இறுதிக்காலம்
அந்நியர் - பிறர், வேறுபட்டவர், வேற்று நாட்டினர்
அந்தரங்கம் - மறைவடக்கம்
அந்தரம் - பரபரப்பு
அந்தி - மாலை
அந்தஸ்து - நிலைமை
அந்நியம் - வேறுபாடு, வேற்றுமை,
அந்தஸ்து - நிலை
அநர்த்தம் - அழிவு, கேடு
அநந்தம் - முதலில்லாது, அளவில்லாதது, முடிவிலி, அளவற்றது
அநாதி - தொடக்கமிலி, தொடக்கமின்மை
அநாதை - துணையிலி, யாருமிலி
அநியாயம் - முறையின்மை, முறைகேடு
அநீதி - முறையற்றது, நடுவின்மை, முறைகேடு
அநுகூலம் - சார்பு
அநுட்டித்தல் - கைக்கொள்ளல், கடைப்பிடித்தல்
அநுஷ்டித்தல் - கைக்கொள்ளல், கடைப்பிடித்தல்
அநுதாபம் - இரக்கம், அருளல், இரங்கல்
அநுதினம் - நாள் தோறும்

அரசன்,ராஜா - மன்னன்,வேந்தன்,கோன்
________________________________________இகரம்
இஸ்திரிப் பெட்டி - துணி மடிப்புக் கருவி
இனாம் - நன்கொடை
இலக்கம் - எண்
ஆகரம்
ஆகாயம் - வானம்
ஆசை - விருப்பம்
ஆபத்து - துன்பம், இடர்
ஆராதனை - வழிபாடு
ஆன்மா - உயிர்
ஆஜர் - வருகை
________________________________________ஐக்கியம் - ஒற்றுமை________________________________________உகரம்
உபத்திரவம் - வேதனை
உற்சவம் - திருவிழா
கல்யாணம் - திருமணம்
கடிதம் - மடல்
கரம் - கை
கதிரை - நாற்காலி, அணை, இருக்கை
கஷ்டம் - தொல்லை
கட்டில் - மஞ்சம்
கடிகாரம் - கன்னல்,மணிக்கூடு
கறார் விலை - ஒரே விலை
கஜானா - கருவூலம்
கம்மி - குறைவு
காலி - நிரப்பப்படாமல் உள்ள நிலை
காலிப்பயல் - போக்கிரி
காருண்யம் - பரிவு
காரியம் - செயல்
காரியாலயம் - செயலகம்.
காரியதரிசி - செயலர், செயலாளர்
கிஸ்தி - வரி
கிரயம் - விலை
கிராமம் - சிற்றூர்
கீதம், கானம், கானா - பாட்டு,பாடல்
கும்பாபிஷேகம் - குடமுழுக்கு
குதூகலம் - எக்களிப்பு
கைதி - சிறையாளி
கோஷ்டி - குழாம்
கோத்திரம் - குடி
கோப்பை - கிண்ணம்
----------------------------------------
சகஜம் - வழக்கம்
சக்தி - ஆற்றல், வலு
சக்கரவர்த்தி - பேரரசன்
சச்சிதானந்தம் - மெய்யறிவின்பம்
சட்டை - அங்கராத்து,மேலாடை,மெய்ப்பை
சதவீதம் - நூற்றுக்கூறு,விழுக்காடு
சபதம் - சூள்
சர்க்கார் - அரசாங்கம்
சரகம் - எல்லை (சரகம் என்ற வார்த்தை வனச்'சரகம்' என்பதில் வருவதுண்டு)
சரணம் - அடைக்கலம்
சரணாகதி - அடைக்கலம்
சனி (கிழமைகளில்) - காரி
சங்கீதம் - இசை
சத்தியாக்கிரகம் - அறப்போராட்டம்
சந்தா - கட்டணம்
சந்தேகம் - ஐயம்
சந்தோஷம் - மகிழ்ச்சி
சந்ததி - வழித்தோன்றல்
சந்தர்ப்பம் - வாய்ப்பு
சந்தியாவந்தனம் - வேளை வழிபாடு
சம்பளம் - கூலி, ஊழியம்
சம்பிரதாயம் - தொன்மரபு
சமீபம் - அண்மை
சவால் - அறைகூவல்
சாஸ்திரம் - கலை
சாபம் - கெடுமொழி
சாதாரண - எளிதான
சாட்சி - சான்று
சாமான் - பண்டம்
சிகிச்சை - மருத்துவமுறை
சிங்காசனம் - அரியணை
சிப்பந்தி - வேலையாள்
சிபாரிசு - பரிந்துரை
சிரம் - தலை, சென்னி
சிநேகம் - நட்பு
சீதனம் - மணக்கொடை
சீதோஷ்ணம் - தட்பவெப்பம்
சுகம் - இன்பம்
சுத்தம் - தூய்மை
சுதந்திரம் - விடுதலை
சுபாவம் - இயல்பு
சுமார் - ஏறக்குறைய
சுயம் - தன்
சுயதொழில் - தன்தொழில்
சுயராஜ்யம் - தன்னாட்சி
செருப்பு - பாதணி
சேவை - தொண்டு,பணி
சேஷ்டை - குறும்பு
சௌகரியம் - வசதி
-------------------------------
நமஸ்காரம்,சலாம் - வணக்கம்
நஷ்டம் - இழப்பு
நிபுணர் - வல்லுநர்
நிமிஷம் - மணித்துளி
நியாயஸ்தலம் - வழக்கு மன்றம்
நீதி - நடுநிலை நன்னெறி
நேரம் - ஓரை,நாழி
---------------------------------
தசம் - புள்ளி
தற்காலிக வேலை - நிலையிலா வேலை
தஸ்தாவேஜூ - ஆவணம்
தாகம் - வேட்கை
திருப்தி - உள நிறைவு, மன நிறைவு
தினம், நிதம் - நாள்
தேதி - நாள்
தேசம் - நாடு
துவக்கு - சுடுகலன்
---------------------------------------
பக்தன் - அடியான்
பகிரங்கம் - வெளிப்படை
பசங்கள் - பிள்ளைகள்
பத்தினி - கற்பணங்கு
பத்திரிக்கை - இதழ், செய்தித்தாள்
பரஸ்பர ஒத்துழைப்பு - சமதரப்பு ஒத்துழைப்பு
பரிகாசம் - நகையாடல்
பரீட்சை - தேர்வு
பந்துக்கள் - உறவினர்கள்
பந்தோபஸ்து - பாதுகாப்பு
பவுண், பவுன் - பொன், தங்கம்
பஜனை - கூட்டுப்பாடல் வழிபாடு
பாக்கியம் - பேறு
பாரம் - சுமை
பாண் - வெதுப்பி
பாஷை - மொழி
பிரகாரம் - திருச்சுற்று
பிரச்சாரம் - பரப்புவேலை, பரப்புரை
பிரச்சினை - சிக்கல்
பிரசாதம் - திருப்பொருள்
(அங்கப்) பிரதட்சனம் - வலம் வருதல்
பிரார்த்தனை - நேர்த்திக்கடன்
புதன் (கிழமைகளில்) - அறிவன்
புத்தகம் - நூல் (பொத்தகம் தமிழ் என்போரும் உண்டு)
புருஷன் - கணவன்
பூச்சியம்,சைபர் - சுழியம்
பூர்வம் - முந்திய
பூஜை - பூசெய் (பூசை)
போஜனம் - ஊண்,உணவு,சாப்பாடு
---------------------------------------
மந்திரி - அமைச்சன்
மந்திரம் - மறைமொழி
மரணம் - சாவு, இறப்பு
மாமிசம் - இறைச்சி
மார்க்கம் - நெறி, வழி
மிருகம் - விலங்கு
முகூர்த்தம் - நல்வேளை
முக்கியம் - முகன்மை
முகாம் - பாசறை
மோசம் - கேடு
----------------------------------------
யந்திரம் - பொறி
யாகம் - வேள்வி
யுத்தம் - போர்
-------------------------------------
இரகசியம் - மறைபொருள், கமுக்கம்
இரதம் - தேர்
இரத்தம் - குருதி,உதிரம்
இராகம் - பண்
இராத்திரி - இரவு,அல்
இராச்சியம்,தேசம் - நாடு
இராணுவம் - படை
உருசி - சுவை
-------------------------------------
வயது - அகவை
வருடம், வருசம், வருஷம் - ஆண்டு
வாகனம் - ஊர்தி
வாதம் - சொற்போர்
வாத்தியம் - இசைக்கருவி
வார்த்தை - சொல்
வாரம் - கிழமை
வாந்தி பேதி - கக்கல் கழிச்சல்
வாயு - காற்று
வாலிபர் - இளைஞர்
விக்கிரகம் - திருவுருவம்
விசயம், விஷயம் - பொருள், செய்தி
விசேஷம் - சிறப்பு
விபத்து - துன்ப நிகழ்ச்சி
விவாகம் - திருமணம்
விரதம் - நோன்பு
விஷம் - நஞ்சு
விஜயம் - பயணம்
வீரம் - மறம்
வீதி - தெரு, சாலை
வேகம் - விரைவு
வேதம் - மறை
வைத்தியசாலை - மருத்துவமனை
------------------------------------------
ஜகாவாங்குதல் - பின்வாங்குதல்
ஜமீன் - நிலம்
ஜமீன்தார் - நிலக்கிழார்
ஜல்லிக்கட்டு - மஞ்சுவிரட்டு, ஏறு தழுவுதல்
ஜனனம் - பிறப்பு
ஜன்னல் - சாளரம்
ஜனங்கள் - மக்கள்
ஜயம் - வெற்றி
ஜாக்கிரதையாக - விழிப்பாக
ஜாஸ்தி - மிகுதி
ஜீவன் - உயிர்
ஜென்மம் - பிறவி
ஜோடி - இணை
------------------------------------------
யாத்திரை - திருச்செலவு
இலட்சணம் - அழகு
ஸ்தாபனம் - நிறுவனம், நிலையம்
க்ஷேத்திரங்கள் - திருப்பதிகள்
பிறமொழிச் சொற்கள் இணையான தமிழ்ச் சொற்கள்
அகதிகள் - நிலை அற்றவர்கள்
அங்கத்தினர் - உறுப்பினர்
அபிஷேகம் - திருமுழுக்கு
அனுபவம் - பட்டறிவு
அவசரம் - விரைவு
அப்பட்டம் - கலப்பில்லாதது
அமல் - நடைமுறை
ஆக்கிரமிப்பு - வலிந்து கவர்தல்
ஆஸ்தி - செல்வம்
ஆசீர்வதித்தல் - வாழ்த்துதல்
இந்து மகா சமுத்திரம் - இந்து மாக்கடல்
இலட்சணம் - அழகு
உத்தியோகம் - அலுவல்
உற்சவம் - விழா
காரியம் - செயல்
கஜானா - கருவூலம்
கும்பாபிஷேகம் - குட முழுக்கு
குமாஸ்தா - எழுத்தர்
சர்க்கார் - அரசு
கோஷ்டி - கூட்டம்
பஜனை - கூட்டு வழிபாடு
ரகசியம் - கமுக்கம்
ருசி - சுவை
சம்பிரதாயம் - மரபு
வேகம் - விரைவு

10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் கேட்கப் படும் சில பழமொழிக் கதைகள் (பல்வேறு இடத்திலிருந்து தொகுக்கப் பட்டது.)

1. தாய் சொல் தட்டாதே

ஒரு வீட்டின் முன் வாசலில் வேப்ப மரம் ஒன்று இருந்தது. தன்னை செடியாக நட்டு வைத்து நீர் ஊற்றி பாதுகாப்புடன் வளர்த்த அந்த வீட்டுக்காரர்களுக்கு நன்றி காட்டும் வகையில் சுத்தமான வேப்பமரத்துக் காற்றைக் கொடுத்தும் ,நிழல் கொடுத்தும் அந்த வீட்டினரை மகிழவைத்துக் கொண்டு இருந்தது.
வளர்ந்த மரத்தில் காகங்கள் கூடுகட்டி வாழ்ந்து வந்தது.வீட்டுக்கார அம்மா நாள்தோறும் வைக்கும் சாதத்தை சாப்பிடுவதும் , வேப்பமரத்தில் வசிப்பதுமாக சந்தோசமாக வாழ்ந்தன காகங்கள்.
அந்த வீட்டில் வசிக்கும் அம்மா மரங்களிடமும், பறவைகளிடமும் அன்பு செலுத்தியதே சந்தோசத்திற்கு காரணம்.இப்படி நாட்கள் ஓடிக்கொண்டு இருக்கும் போது காக்கா சில முட்டைகளை இட்டது.அதை அடைகாத்து குஞ்சுகள் பொரித்தது.

குஞ்சுகளுக்கு தேவையான உணவை தாய் காகமும், தந்தை காகமும் எடுத்து ஊட்டி வளர்த்தது.குஞ்சுகளும் உணவுகளை உண்டு வளர ஆரம்பித்தது.இறக்கைகள் வளரத் தொடங்கின.அப்போது தாய் பறவை தன் குஞ்சுகளைப் பார்த்துக் கூறியது.
"உங்களுக்கு இறக்கைகள் வளர்ந்து விட்டது, என்று பறக்க முயற்சி செய்யாதீர்கள். இன்னும் வளர்ந்தால் தான் பறப்பதற்கு வேண்டிய ஆற்றல் உங்களுக்கு வரும். இப்போது பறக்க முயற்சி செய்து விழுந்து விட்டால் உங்கள் உயிருக்கு ஆபத்தாக முடிந்து விடும்…….
எனவே , கூட்டை விட்டு வெளியில் வந்தாலும் பறக்க முயற்சிக்க வேண்டாம். கிளைகளில் அமர்ந்து கொள்ளுங்கள்’ என்றது தாய் காகம்." சரி" என குஞ்சுகள் கேட்டுக்கொண்டன.சில நாட்கள் சென்ற பின்………..
ஒரு நாள் ஒரு ஒரு குஞ்சு மட்டும் கூட்டில் இருந்து வெளியில் வந்து கிளைகளில் அமர்ந்து கொண்டு வெளி உலகைப் பார்த்துக் கொண்டு இருந்தது.
வானில் பறக்கும் பறவைகளை எல்லாம் பார்த்த குஞ்சு காகம் தானும் பறக்க முயற்சித்தது .கிளைகளில் தாவித்….தாவி. பறக்க முயற்சி செய்தது.அதை கவனித்த மற்றொரு குஞ்சும் வெளியில் வந்தது.தானும் தாவித்…தாவி…. பறக்க முயற்சி செய்தது.
இறக்கைகள் சரியாக வளராத நிலையில் இருந்த அந்த குஞ்சு காகம் தடுமாறி கீழே விழுந்தது .மேலே பறக்க முடியாமல் தன் தாயை கா..கா… என அழைத்த வண்ணம் இருந்தது.
தன குஞ்சுவின் குரல் கேட்டு பறந்து வந்த தாய் காகமும் தந்தை காகமும் கரைந்து கொண்டே இருந்தன.பக்கத்தில் வசித்த காகங்கள் எல்லாம் கூட்டமாக வந்து விட்டன .குஞ்சு காகத்தால் பறக்க முடியவில்லை.
இதைக் கவனித்த அந்த வீட்டு அம்மா குஞ்சு காகத்தை தூக்கி கிளையில் வைத்தார்கள். தனது கூட்டிற்குள் போய் உட்கார்ந்து கொண்டது குஞ்சு காகம்.
தாய் காகம் மறுபடியும் புத்தி சொன்னது,."இன்னும் உங்களுக்கு பறக்கும் அளவிற்கு இறக்கைகள் வளரவில்லை, பறக்க முயற்சிக்காதீர்கள்."என மீண்டும் எச்சரித்தது காகம்.
"சரி" என கேட்டுக்கொண்ட குஞ்சுகள் மறுநாள் தாய் காகம் வெளியில் போன சமயம் பார்த்து கிளையில் வந்து அமர்ந்து கொண்டன.பறவைகள் பறப்பதை பார்த்த குஞ்சு காகம், நான் இன்று நன்றாக பறந்து விடுவேன்’என்றது.
‘வேண்டாம்’ என்றது மற்ற குஞ்சுகள்.’நேற்று நீ பிழைத்ததே இந்த வீட்டுக்கார அம்மா உன்னை எடுத்து இங்கு விட்டதால்தான் ,நம் அம்மா காகம் நம்மை எச்சரித்ததை மறந்து விட்டாயா?
"தாய் சொல் தட்டவேண்டாம் "அவர்கள் நமது நன்மைக்காகத்தான் சொல்வார்கள் .,என்றது மற்றொரு குஞ்சு.
இதை எல்லாம் கேட்காத குஞ்சு காகம் இறக்கையை அடித்து பறந்தது.அடுத்த நிமிடமே தரையில் வந்து விழுந்தது.மேலே மேலே பறக்க முடியாமல் தாவித்தாவிச் சென்று…கழிவு நீரில் விழுந்து விட்டது.
இறக்கைகள் எல்லாம் நனைந்த நிலையில் தாவிச் செல்லவும் முடியாமல் ,பறக்கவும் முடியாமல் தவித்தது.
தாய் காகமும், மற்ற காகங்களும் கா…கா…என கத்தி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது. சிறிது நேரத்தில் குஞ்சு காகம் கழிவு நீரில் தன் உயிரை விட்டது.

அதைப் பார்த்த மற்ற குஞ்சுகள் கண்ணீர் விட்டன. "தாய் சொல்லைக் கேட்ட" குஞ்சுகள் கூட்டில் பத்திரமாக இருந்தன.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

2.. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

இது ஒரு பழமொழி. வல்லவனுக்குக் கிடைக்கக் கூடிய சிறு துரும்பைக் கூட அவனுடைய வல்லமை காரணமாகச் சிறந்த ஆயுதமாகப் பயன்படுத்த முடியும் என்பது இந்தப் பழமொழியின் நேர் பொருள். இப்பொருளை உணர்த்துவதற்கான சூழல்களில் இந்தப் பழமொழி பயன்படுத்தப்படும். இந்தப் பழமொழிக்குப் பின்னால் உள்ள கதை வருமாறு.
இராமரும் சீதையும் காட்டில் தங்கி இருந்தனர். வனவாசம் முழுவதையும் வனத்தில் தான் கழிக்க வேண்டும். அவர்களுக்கு வேண்டிய உணவினை இலக்குவன் தான் காட்டில் சேகரித்துக் கொடுக்க வேண்டும்.
ஒரு நாள் அவன் போயிருந்தான்-காய் கனிகளைச் சேகரிக்க. ஒரு மரத்தடியில் சீதை இராமனது மடியில் தலை சாய்ந்திருந்தாள். அவர்கள் தம்மை மறந்து இருந்தனர்.
அப்போது அங்க வந்த சயந்தன் சீதையின் அழகைப் பார்த்து மயங்கிப் போனான். அவளை அடைய வேண்டும் என்ற ஆசை தோன்றியது. அவன் காக்கை வடிவம் எடுத்து மரத்தில் அமர்ந்தான். அவளை எப்படியாவது தொட்டால் போதும் என்று துடித்தான்.
அவளது மார்புச் சேலை விலக, சயந்தன் சட்டென்று இறங்கி மார்புப் பக்கம் கொத்தினான். லேசாக அவள் பதறினாள். இராமனுக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. வில் மட்டும் இருக்க அம்பில்லை. உடனே தரையில் உள்ள புல்லைக் கிள்ளி வில்லில் மாட்டி எய்தான். சயந்தனின் ஒரு கண் துளைக்கப்பட்டது. அவன் மறைந்து போனான்.
சீதை அவனிடம் ‘அம்பில்லாமல் எப்படி எய்தீர்கள்’ என்று கேட்டாள். அவனோ ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ என்று சொல்ல அவளுக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று. அதுவே பின்பு பழமொழி ஆயிற்று.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

3 எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை

‘எங்கப்பன் குதுருக்குள்ளே இல்லை யென்றானாம்’ இந்தப் பழமொழியின் நேர் பொருள் தெளிவாக உள்ளது. தேவையில்லாமல் ஏதேனும் பேசி வம்பில் மாட்டிக் கொள்ளும் ஒருவரைச் சுட்டும்போது இப்பழமொழி பயன்படுத்தப்படும். இப்பழமொழிக்குப் பின்னால் உள்ள கதை வருமாறு.
“ஒருவர் நிறைய பேரிடம் கடன் வாங்கியிருந்தார். கடன் தொல்லை தாங்க முடியவில்லை. கடன்காரர்கள் தினமும் வீடு தேடி வர ஆரம்பித்தார்கள். அவர் அவ்வப்போது ஓடி ஒளிந்து கொள்வார்.
ஒரு நாள் அவர் வீட்டு வாசலில் இருக்கும் போது தூரத்தில் கடன்காரர்கள் வருவதைப் பார்த்து விட்டார். அவ்வளவு தான் வீட்டுக்குள்ளே புகுந்து குலுக்கைக்கு (குலுக்கை - நெல் கொட்டப் பயன்படும் அமைப்பு) உள்ளே ஒளிந்து கொண்டார். தன் மகனிடம் கடன்காரன் விசாரித்தால் ‘அப்பா இல்லை எனச் சொல்லி விடு’ என்று எச்சரித்து விட்டார்.
கடன்காரன் கதவைத் தட்டினான் பையன் எட்டிப்பார்த்தான். வந்தவர் ‘தம்பி! அப்பா இருக்காங்களா’ன்னு கேட்டான்.
காட்சி
உடனே மகன் டக்கென்று “எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை” என்று சொல்லிவிட்டான். வந்தவன் யோசித்தான். ‘வீட்டில் இல்லை என்று சொல்லாமல் குதிருக்குள் இல்லை’ என்று சொல்கிறானே! ஏதோ தப்பு இருக்கிறதே என்று குலுக்கைக்குள்ளே பார்த்தால் ஐயா அகப்பட்டுக் கொண்டார்.
சொல்லத் தெரியாமல் உளறுகிறவனுக்கு இதுவே பாடமாயிற்று.
---------------------------------------------------------------------------------------------------------------------------------

4. பேராசை பெரு நஷ்டம்-பழமொழிக் கதை ஆசை
சித்ராபூர் என்ற கிராமத்தில் நான்கு இளைஞர்கள் இருந்தனர்; அவர்கள் வறுமையில் வாடினர்; வழி தெரியாது ஏங்கினர். ஒரு சாமியாரைக் கண்டனர். அவர் ஒரு மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்து காளி தேவியைப் பூஜியுங்கள் என்றார். அவர்களும் அவ்வாறே செய்தனர்.காளி தேவி பிரசன்னமானாள்; அன்பர்களே! உங்கள் பக்தியை மெச்சுகிறேன். என்ன வேண்டும் ? என்று வினவினாள்.
அவர்கள் சொன்னார்கள்: இன்பமும் செல்வமும் வேண்டும் என்று. அவள் உடனே நான்கு தாயத்துகளைக் கொடுத்து இதை ஒவ்வொருவரும் தலையில் வைத்துக்கொள்ளுங்கள். வடக்கு நோக்கிச் செல்லுங்கள். ஒவ்வொருவர் தாயத்து பூமியில் விழும்போதும் அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்து கிடைப்பதை எடுத்துச் செல்லுங்கள் என்றாள்.அவர்களும் அகம் மகிழ்ந்து உளம் குளிர்ந்து வட திசை நோக்கி ஏகினர். சிறிது தொலைவு சென்றவுடன் முதலில் ஒருவன் தாயத்து விழுந்தது. அவன் தோண்டிப் பார்த்தான். அங்கே தாமிர உலோகக் கட்டிகள் நிறைய இருந்தன. முடிந்த மட்டும் மூட்டை கட்டினான். நண்பர்களே! எனக்கு பரம திருப்தி; நான் கிராமத்துக்குத் திரும்பிச் சென்று புது வாழ்வு படைப்பேன் என்றான்; நண்பர்களும் ஆமோதித்தனர்.
இன்னும் கொஞ்சம் நடந்தனர் மற்ற மூன்று பேர்.
இரண்டாமவன் தலையில் இருந்த தாயத்து விழுந்தது. அவன் நிலத்தைத் தோண்டினான்; வெள்ளிக் கட்டிகள் கிடைத்தன. அவனுக்கு பரம சந்தோஷம்; நபண்பர்களிடம் விடை பெற்று சித்ராபூருக்குத் திரும்பி புது வாழ்வு வாழ்ந்தான்
இதற்குள் மற்ற இருவருக்கும் களைப்பு மேலிட்டது; பொழுதும் சாய்ந்து கொண்டிருந்தது; இருந்தும் தலையில் தாயத்து இருந்ததால் முன்னேறினர்
வெகு தொலைவு சென்றபின்னர் மூன்றாமவன் தாயத்து தரையில் விழுந்தது. அங்கே தோண்டினான். நிறைய தங்கக் கட்டிகள் இருந்தன. அவன் சொன்னான்
இதோ பார்! கொஞ்ச நேரத்தில் இருண்டு விடும்; சூரியன் மலை வாயில் விழுந்து கொண்டிருக்கிறான்; நீ முடிந்த மட்டும் உனக்கு வேண்டிய தங்கத்தை எடுத்துக் கொள்; நான் முடிந்தவரை எனக்கு வேண்டியதை எடுத்துக் கொள்கிறேன் என்றான். ஆனால் நான்காமவன் கேட்கவில்லை அவனுக்குப் பேராசை; இனியும் போனால் ஞ் வைரக் கட்டிகள் கிடைக்கும் என்று எண்ணினான்
மூன்றாவது ஆள் வணக்கம் சொல்லி விடை பெறவே நான்காமவன் பயணத்தைத் தொடர்ந்தான். வெகு தொலைவு சென்ற பின் தாயத்தும் தலையில் இருந்து விழுந்தது. ஆசையோடு தோண்டினான்; வெறும் இரும்புக் கட்டிகளே இருந்தன; பொழுதும் சாய்ந்தது. இரும்பைத் தூக்கிக் கொண்டு இனியும் நடக்க முடியாது என்று வெறும் கைகளோடு வழீ தெரியாமல் தட்டுத் தடுமாறி கிராமத்தை நோக்கி நடை போட்டான்.கிராம மக்களுக்கு பேராசை பெரு நஷ்டம் என்பதை விளக்கவும் அரசனை நம்பி புருஷனைக் கைவிடாதே; கிடைத்ததை வைத்து திருப்தியுடன் வாழக் கற்றுக்கொள் என்பதற்காக இக்கதைகயைச் சொல்லுவர்.
----------------------------------------------------------------------------------------------------------------------------
-5. ‘சுழியா வருபுனல் இழியாதொழிவது’

சுழியா= சுழித்துக் கொண்டு
வரு புனல் = ஓடும் வெள்ளத்தில்
இழியாது = இறங்காது
ஒழிவது = நீங்க வேண்டும்.
தென்னாட்டில் கோதாவரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. திம்மப்பனும், ராமப்பனும் அதை வேடிக்கை பார்க்கச் சென்றனர். வெகுவாய் ரசித்துக் கொண்டிருந்தனர். திடீரென்று ஒரு பெரிய கறுப்பு மூட்டை வெள்ளத்தில் போவதைக் கண்டனர்.
ஆசை யாரை விட்டது?
ராமப்பன்: ஏய், ஏய் திம்மப்பா! அதோ பார், அதோ பார்; ஒரு பெரிய கம்பளி மூட்டை;அதில் ஏதேனும் விலை உயர்ந்த பொருள் இருக்கலாம்; நீ போய் எடுத்து வா; பங்கு போட்டுக் கொள்ளலாம்—என்றான்.
திம்மப்பன்:– ஆமாம், அண்ணே! இன்று நாம் நரி முகத்தில் முழித்திருப்போம். நமக்கு இன்று அதிர்ஷ்டம்தான்; இதோ நான் நீந்திப் போய் அதை எடுத்து வருவேன்; 60 சதம் எனக்கு; மூட்டையில் 40 சதம் உனக்கு என்று சொல்லிக் குதித்தான் தண்ணீரில்!
உயிரையும் பொருட்படுத்தாது அந்த கறுப்பு மூட்டையைக் கைப்பற்றினான். ஆனால் அது கம்பளி மூட்டை அல்ல; வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட கரடி! அதுவும் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்ததால் திம்மப்பனை இறுகப் பிடித்துக் கொண்டது. திம்மப்பன் பலத்தை எல்லாம் பிரயோகித்து விடுவிக்க முயன்றான்; இயலவில்லை.
கரையில் இருந்த ராமப்பன் கத்தினான் – திம்மப்பா! மூட்டை ரொம்ப கனமாக இருந்தால் விட்டுவிடு; பரவாயில்லை;நீ ஜாக்கிரதையாக வா! என்றான்.
திம்மப்பன் சொன்னான்: நான் விட்டு விட்டேன்; அதுதான் என்னை விட மாட்டேன் என்கிறது!; இது ஒரு கரடி – என்றான்.
ராமப்பன் கரையில் திருதிருவென முழிக்க கரடியும் திம்மப்பனும் நதி வழிப் பயணத்தைத் தொடந்தனர்.
ஆசைக்கு அளவே இல்லை; மேலும் ஆசை கண்களை மறைக்கும்;
ஆசையை ஒரு முறை நாம் பற்றிக் கொண்டால் அது நம்மை விடாது; அது நம்மைப் பற்றிக் கொண்டு அலைக்கழித்துவிடும்
-----------------------------------------------------------------------------------------------------------------------------


6. ஒருபேய்க் கதை! சொக்கா, சொக்கா சோறுண்டோ? சோழியன் வந்து கெடுத்தாண்டோ

வீட்டில் விளக்கு ஏற்றுவது ஏன்?

ஒரு ஊரில் ஒரு குடியானவன். அவனுக்கு இரண்டு புதல்விகள்; ஒருவருக்கு உள்ளூரிலேயே திருமணம் முடிந்தது. மற்றொரு மகள், அயலூரிலுள்ள ஒரு சோழியனுக்கு வாக்குப்பாட்டாள். காலம் உருண்டோடியது. கிழக் குடியானவன் இறந்தான்; மூத்த மகளின் கணவனும் இறந்தான். அவளது தங்கையோ அடுத்த ஊரில் கணவனுடன் சுகமாக வாழ்ந்து வந்தாள். மூத்த மகளுக்கு சந்ததியும் இல்லை. ஆகையால் வயிற்றுப் பிழைப்புக்காக நிலத்தில் விவசாய கூலி வேலை செய்து வந்தாள்.
தினமும் இரண்டு படி அரிசி சமைத்து உண்பாள்; அப்படியும் பசி தீராது. யாரிடமும் சொல்லவும் வெட்கம். ஆகையால் காரணத்தை அறியவில்லை.
ஒரு நாள் அயலூரிலுள்ள அவளுடைய தங்கை, தன்னுடைய அக்காளைப் பார்க்க சொந்த ஊருக்கு வந்தாள். அக்காளும் வயல் வெளி வேலைகளை முடித்துக் கொண்டு மாலையில் பொழுது சாயும் முன் வீட்டிற்கு வந்தாள். அன்று தனது தங்கையும் பார்க்க வந்திருக்கிறாளே என்று கருதி, இரண்டரைப் படி அரிசியை எடுத்தாள்
தங்கை சொன்னாள்,
“முதலில் விளக்கேற்றிவிட்டு சமை; இருட்டில் சமைக்கக்கூடாது. மேலும் என் வீட்டில் நான் விளக்கு வெளிச்சத்தில்தான் சாப்பிடுவேன்” என்றாள்.
அடுத்ததாக, அவள் பகன்றாள்,
“இது என்ன இரண்டரைப் படி அரிசி; இதில் பத்துப் பன்னிரெண்டு பேர் சாப்பிடலாமே! உனக்கு என்ன பைத்தியாமா?”

இதற்கு அக்காள் மறு மொழி நுவன்றாள்,
“இதோ பார் நான் தினமும் இரண்டு படி அரிசியில் சோறாக்குவேன்; நீ வேறு வந்திருக்கிறாய்; அதற்காக கூடுதல் அரைப்படி சேர்த்தேன் . என்னிடம் விளக்கிற்கு எண்ணெய் வாங்கும் அளவுக்கு காசு பணம் கிடையாது. நான் பாட்டுக்குச் சாப்பிட்டுவிட்டு படுத்து உறங்கி விடுவேன்.”

தங்கை சொன்னாள்,
“எனக்கு சோறு கூட வேண்டாம்; விளக்கு இல்லாமல் ஒரு நிமிடம் கூட இரவுப் பொழுதைக் கழிக்க மாட்டேன். பூச்சி, பொட்டு, பாம்பு வந்தால் என்ன செய்வத? முதலில் கொஞ்சம் அரிசியைக் கொடுத்து யாரிடமாவது எண்ணெய் வாங்கி வா” என்றாள்
அக்காளும் அரை மனதுடன் சென்று எண்ணெயுடன் திரும்பி வந்தால்; சாப்பிடத் துவங்கினர். கால் வாசி பானை சோறு கூடத் தீரவில்லை; இருவருக்கும் வயிறு நிறைந்தது
தங்கை சொன்னாள், “பார்த்தாயா? நான் சொன்னேன்; நீ கேட்கவில்லை; இவ்வளவு சோறு மிச்சம்”
அக்காள் சொன்னாள்,
“இதோ பார், எனக்கே புரியவில்லை; தினமும் இரண்டு படி சோறு வடித்தும் என் வயிறு காயும்; இன்று என்னவோ கொஞ்சம் சாப்பிட்ட உடனே பசி போய்விட்டது; எல்லாம் நீ வந்த முஹூர்த்தம் போலும்” என்றாள்
அப்போது திடீரென்று ஒரு சப்தம்
“சொக்கா சொக்கா சோறுண்டோ?
சோழியன் வந்து கெடுத்தாண்டோ”
வா நாம் போவோம்– என்று.
உடனே அக்காள் கேட்டாள்,
‘ஏய், யார் அங்கே? யார் சொக்கன்?’
அப்போது ஒரு குரல் ஒலித்தது,
“நான் தான் சொக்கன்; நான் ஒரு பேய்; நானூம் எனது நண்பனான பேயும் விளக்கில்லாத வீட்டுக்குப் போய் சாப்பிடுவோம். இதனால் அந்த வீட்டில் அதிகமாக சமைப்பார்கள்; இன்று ஒரு சோழியன் அயலூரில் வந்து கெடுத்துவிட்டாள் என்று என் நட்புப் பேயிடம் செப்பினேன். நாங்கள் இருவரும் வேறு வீட்டுக்குப் போய் விடுகிறோம்”.
இதக் கேட்ட அக்காளுக்கும் தங்கைக்கும் ஒரே ஆச்சர்யம், அதிசயம்
அன்று முதல் அவள் அக்காள், வீட்டில் விளக்கு ஏற்றாமல் சமைப்பது இல்லை; எல்லோரும் சாப்பிடும் அளவு சோறுண்ட பின் அவள் வயிறும் நிறைந்தது; வாழ்வும் சிறந்தது.
இதுதான் “சொக்கா சொக்கா சோறுண்டோ?
சோழியன் வந்து கெடுத்தாண்டோ”
---------------------------------------------------------------------------------------------------------------------------

7. சுவத்துக் கீரையை வழித்துப் போடடி, சுரணை கெட்ட வெள்ளாட்டி –

இதை ‘மூன்று செவிடன் கதை’ என்றும் வழங்குவர்.

ஒரு ஊரில் ஒரு மஹா செவிடன் இருந்தான். அவன் மனைவி, அவனைவிடச் செவிடு; அணுகுண்டு வெடித்தாலும் காதில் விழாது! இவர்கள் வீட்டில் ஒரு வழக்கம் உண்டு; திங்கள் என்றால் கீரை மசியல், செவ்வாய் என்றால் வாழைக்காய் கறி, புதன் என்றால் கத்தரிக்காய் பொடித்துவல், வியாழன் என்றால் பூசணிக்காய் கூட்டு … என்று. இருவருக்கும் அவ்வளவு ஞாபக சக்தி. நாள் தவறாமல் அதற்குரிய கறி, கூட்டு!
ஒரு நாள் நமது செவிட்டுக் கதா நாயகன் சாப்பிட அமர்ந்தான். அன்றும் கீரை மசியல்; அதற்கு முதல் நாளும் கீரை மசியல்! சூரியன் கிழக்கே உதிக்கத் தவறினாலும் சமையல் ‘மெனு’ MENU மாறாத வீட்டில் பூகம்பம்! வந்ததே கோபம்; ஏனடி! இன்றும் கீரை மசியல்? உனக்கு ஸ்மரணை தப்பிவிட்டதா? என்று பல சுடு சொற்களைப் பெய்து வசை மாரி பொழிந்தனன்; அவளும் கணவன் சொற்களைக் குறிப்பாலும், உதட்டசைவாலும் ஊகித்து விளக்கம் கொடுத்தாள்; அடி அசடே! என்னை எதிர்த்துவேறு பேசக் கற்றுக் கொண்டு விட்டாயா என்று மேலும் சீறினான். வீட்டை வீட்டு வெளியேறினன்; அப்படிச் செல்லும் முன், நமது கதாநாயகன் இலையில் பரிமாறப்பட்ட கீரையை எடுத்து சுவரில் எறிந்தனன்.

முதல் காட்சி முடிந்தது;
இரண்டாவது காட்சி எங்கு தெரியுமா? ஊர் மன்றத்தில்! அவன் கோபக் கனலோடு ஒரு ஆல மரத்தடியில் உட்காந்தனன்; அங்கே இவ்விருவரையும் விட மஹா மஹா செவிடு ஒன்று வந்தது; வாலறுந்த ஒர் கன்றுக் குட்டியுடன் வந்த அந்த இடையன், “ஐயா, என் மாடு தொலைந்துவிட்டது;கன்று மட்டும்தான் இருக்கிறது; இதைப் பார்த்துக்கொள்ளுங்கள். மாட்டைப் போய்த் தேடிக் கண்டு பிடிக்கிறேன்” என்று செப்பினன். அவன் நுவன்றது நமது கதாநாயகனுக்கு வேறு எண்ணத்தை உண்டாக்கியது; காதில் விழாததால் வந்த குறை அது. கன்றுக் குட்டியின் வாலை அறுத்து விட்டதாகக் குற்றஞ்சாட்டி, காம்பன்சேஷன் COMPENSATION (நஷ்ட ஈடு) கேட்கிறான் என்று அவன் நினைத்தான். ஆகவே அவன் சொன்னான்:
சீ, சீ; எனக்கும் இந்தக் கன்னுக்குட்டிக்கும் சம்பந்தமே இல்லை; நான் எப்படி வாலை அறுக்க முடியும்? என்று அவன்
அவன் கைகளை ஆட்டி வாதாடியதை இடையன் செவிடன் தவறாகப் புரிந்தனன்; ஓஹோ மாடு இந்தப் பக்கம் போனதாகச் சொல்கிறாயா: நான் மட்டும் மாட்டைக் கண்டுபிடித்தால் உனக்கு இந்தக் கன்றுக் குட்டியையே பரிசாக அளிப்பேன் என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டனன். நமது கதா நாயகனோ பயந்து உளறத் துவங்கினன்; ஐயஹோ! ஊர்ப் பஞ்சாயத்துத் தலவரை அழைத்து பஞ்சயத்துச் செய்யப் போகிறாயா? Please! ப்ளீஸ் வேண்டாம் என்று கெஞ்சினான்.
இதை எல்லாம் ஒரு மஹா போக்கிரி பார்த்துக் கொண்டே இருந்தான். அவனுக்கு விஷயம் புரிந்து விட்டது; இரண்டும் செவிடு; ஒன்று சொல்லுவது மற்றொன்றுக்கு விளங்காமல் பயந்து நடுங்குகிறது. நாம் இதில் நல்ல ஆதாயம் அடையலாம் என்று நினைத்து. இரண்டு பேரிடமும் போய் ஒருவனைத் தனியாக அழித்துச் சென்று உரத்த குரலில் டமாரம் அடித்தான்.
இதோ பார்! நீ கன்றுக் குட்டியின் வாலை அறுத்ததாகக் குற்றஞ்சாட்டி ஊர்ப் பஞ்சாயத்தைக் கூட்ட அந்த மாடு மேய்க்கும் இடையன் முயல்கிறான்; நீ ஓடி விடு; நான் அவனை சமாளிப்பேன் என்றான்.
அடுத்தபடியாக அந்த இடையனிடம் சென்று, நீ கவலைப் படாதே; முதலில் போய் மாட்டைத் தேடிக் கண்டுபிடி; அவன் கன்று போதாது; கூடுதல் பணமும் வேண்டும் என்கிறான். நீ போய்த் திரும்பி வருவதற்குள் நான் அவனை சமாதானம் செய்து வைக்கிறேன் என்று சொல்லி அவனையும் ஒட்டினான்.
இருவரையும் வெவ்வேறு திசையில் ஓட்டிய பின்னர் அந்தக் கன்றுக்குட்டியுடன் கம்பி நீட்டினான்.
காட்சி மூன்று:
அவன் விட்டிற்குத் திரும்பி வருவதற்குள் அவன் மனைவி சுவற்றில் வழிந்த கீரையை எல்லாம் சுத்தப் படுத்திவிட்டு, மிகுந்த உணவைச் சாப்பிட்டு விட்டு, சட்டி முதலிய பாத்திரங்களை அலம்பிவிட்டு, “என் பிராண நாதா! எங்கே போனீர்? நாளை முதல் நாள்தோறும் MENU ‘மெனு’வை மாற்றாமல் சமைப்பேன்; இது ஸத்யம்” என்று புலம்பிக் கொண்டிருந்தாள். பசியுடன் வீடு திரும்பிய கதா நாயகன் சாப்பிடும் பலகையில் அமர்ந்து சாப்பாடு போடு என்றனன்; இவளதைக் குறிப்பால் உணர்ந்து ஜாடையாகச் சொன்னாள் –எல்லாம் காலி என்று; அலம்பிவைத்த பாத்திரங்களையும் கவிழ்த்துக் காட்டினள்;
அவன் சொன்னான்,
அது கிடக்கட்டும் ஒரு புறம்; சுவற்றுக் கீரையை வழித்துப் போடடி என் சுரணை கெட்ட வெளாட்டி என்று.
------------------------------------------------------------------------------------------------------------------------

8. வர வர மாமியார் கழுதை போல ஆனாளாம் — என்ற தமிழ்ப் பழமொழியைப் பலரும் அறிவார்கள்; ஆனால் இதன் பின்னாலுள்ள சுவையான கதையை அறிந்தோர் சிலரே. இதோ கதை:-

அம்மாஞ்சி என்ற பிராஹ்மணன் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவன் மனைவி வல்லாள கண்டி மற்றும் அவனுடைய அம்மா, மற்றும் மாமியார் ஆகியோருடன் கூட்டுக் குடும்பம்.
வல்லாள கண்டியின் பெயரைக் கேட்டாலேயே அவள் எப்படிப்பட்டவள் என்பதைக் கண்டுகொள்ளலாம்; சரியான சிடுமூஞ்சி; அடங்காப்பிடாரி.
வீட்டில் தினமும் ரணகளம்தான்; த்வஜம் கட்டிக் கொண்டு ஒருவருக்கொருவர் மோதல்; சண்டை சச்சரவு அன்றாடக் காட்சிகள்! குறிப்பாகச் சொல்லப் போனால் அதிகம் பாதிக்கப்பட்டது அம்மாஞ்சி பிராஹ்மணனின் அம்மாதான்
அசட்டு அம்மாஞ்சியால் ஒன்றும் சமாளிக்க முடியவில்லை. அவனுடைய அம்மாவும் பார்த்தாள்; இனி வீட்டை விட்டு ஓடுவதே ஒரே வழி என்று சிந்தித்தாள்; செயல் பட்டாள்;
ஆந்தைகள் அலறும், நாய்கள் ஓலமிடும் நள்ளிரவில் வீட்டை விட்டு ஓடினாள்.
‘ஓடினாள், ஓடினாள், கிராமத்தின் எல்லைக்கே ஓடினாள்’
அங்கே ஒரு காளி கோவில். அதில் ஓய்வு எடுத்தாள்.
நள்ளிரவுக்குப் பின்னர் ‘’கிலிங் கிலிங்’’ என்ற சப்தம். கிழட்டு அம்மணி நிமிர் ந்து பார்த்தாள். அங்கே ஸ்வரூப சுந்தரியாக காளி தேவி காட்சி தந்தாள்.
‘அம்மணி! ஏது வெகுதூரம் வந்துவிட்டீர்? என்ன சமாச்சாரம்?’ என்று வினவ, கிழட்டு அம்மணியும் செப்பினாள் தன் துயரக் கதைகளை.
காளி மொழிந்தாள்:
கவலைப் படாதே! ஒரு மாம்பழம் தருகிறேன்; அதைச் சாப்பிடு; ‘’பெரிய மாற்றம்’’ ஏற்படும் என்றாள்.
அவளும் கவலையை மறந்து விடிவு காலத்தை (பொழுது விடியும் காலத்தை) எதிர் பார்த்துக் காத்திருந்தாள்.
இதற்குள் அம்மாஞ்சி வீட்டில் ஒரே களேபரம்;அம்மாவைக் காணாது அம்மாஞ்சி- அசட்டு அம்மாஞ்சி–துடியாய்த் துடித்தான்
இதென்னடா கலிகாலம்! ‘பெத்த மனசு கல்லு, பிள்ளை மனசு பித்து’ என்று பழமொழி மாறிவிட்டதே.
ஓடினான் ஓடினான் ஊரின் எல்லைக்கே ஓடினான். அங்கே பராசக்தி அமர்ந்திருந்தாள்- அதான் அவனுடைய கிழட்டு அம்மா!
‘அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே. அன் புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே’, என்று பாடி அவளை நமஸ்கரித்தான்.
வீட்டிற்குத் திரும்பி வருமாறு இறைஞ்சினான்.
அவளும் ‘நான் பெற்ற செல்வம்; நலமான செல்வம்’ என்று பாடி மாம்பழத்தைக் காட்டி சாப்பிடு என்றாள்.
அம்மா, அது அரிய பெரிய கனி; நீயே உண்ணு என்று சொல்லி அவளைத் தோளின் மீது போட்டுக்கொண்டான். அவளும் மாம்பழத்தைச் சாப்பிட்டாள்.
அம்மாஞ்சிக்கு கொஞ்சம் ஆச்சர்யம்; அம்மாவின் சொர சொர தோல் வழு வழு என்பது போல ஒரு உணர்வு; ஓஹோ! களைப்பின் மிகுதியால் வந்தது என்று எண்ணினான். மேலும் மேலும் குமரிப் பெண்ணின் கைகள் போட்ட உணர்வு தோன்,,,ரவே திரும்பி அம்மாவின் முகத்டைப் பார்த்தான; அவள் சொர்ண சுந்தரியாக மாறி ஸ்வர்ணம் போல ஜொலித்தாள்; வீட்டில் போய் இறக்கும் போது அவனுடைய கிழட்டு அம்மா இளம் குமரி ஆக மாறி இருந்தாள். அவனுக்கும் அவளுக்கும் மகிழ்ச்சி. எல்லாக் கதைகளையும் வல்லாள கண்டி கேட்டாள்; பொறாமைத் தீயில் சதித்திட்டம் தீட்டினாள்.
இரவு நேரத்தில் தனது அம்மாவை- அதாவது அசட்டு அம்மாஞ்சியின் மாமியாரை- வீட்டை வீட்டு ஓடும்படி துர் புத்திமதி சொன்னாள்; அவளும் இசைந்தாள் காளி கோவிலில் தஞ்சம் புகுந்தாள்; காளியும் தோன்றினள்; ஏன் அம்மா இங்கு வந்தாய் என்று கேட்க, அவளும் உரைத்தாள்– வீட்டில் துக்கம் தாளவில்லை என்று.
எதிர்பார்த்தது போலவே காளியும் மாம்பழம் தந்து உரைத்தாள்: இதைச் சாப்பிடு ‘’பெரிய மாற்றம்’’ வரும் என்று.
அந்தக் கள்ளியும் அவசரம் அவசரமாக மாம்பழத்தை உண்டாள். இதற்குள் வல்லாள கண்டி தனது அம்மாவைத் தேடிக் கண்டு பிடிக்கும்படி அம்மாஞ்சியை எஃகினாள். அவனும் விரைந்தான்.
மாமியாரைக் காளி கோவிலில் கண்டான்
கண்டேண் மாமியாரை! என்று ஆனந்தித்தான். தோளின் மீது சவாரியும் கொடுத்தான். அவள் தோல் சொர சொர என்று மாறிக்கொண்டு வந்து எடையும் கூடியது.
திரும்பிப் பார்த்தான்; சிரிப்பை அடக்க முடியவில்லை; மாமியார் அரைக் கழுதையாக மாறி இருந்தாள்; வீட்டிற்குள் ஓடிப் போய் அவளை தொப் என்று போட்டான்; அவள் முழுக் கழுதையாகக் காட்சி தந்தாள்
‘’கண்டேன் கண்டேன் கண்டேன்
கண்ணுக்கினியன கண்டேன்
ஊர் மக்கள் அனைவரும் வாரீர்
அரிய காட்சியைப் பாரீர்’’ —
என்று ‘மனதுக்குள்’ பாடிக்கொண்டான்.
அம்மாஞ்சிக்கு சந்தோஷம்; அவன் அம்மாவுக்கும் சந்தோஷம்! ஆனால் மாமியாருக்கு துக்கம்; வல்லால கண்டிக்கு பெரும் துயரம்.
ஊர் முழுதும்– குறிப்பாக குழாய் அடியில் பெண்களிடையே ஒரே பேச்சு– வர வர மாமியார் கழுதை போல ஆனாளாம்- என்று.
-------------------------------------------------------------------------------------------------------------------------


9. உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?

ஒரு ஊரில் ஒரு கப்பல் வியாபாரி இருந்தான். அவன் மஹா கஞ்சன். எவ்வளவோ பணம் இருந்தும் அவனுக்கு ஊரில் நல்ல பெயர் இல்லை. ஒரு தந்திரம் செய்தான். ஒரு பெரிய மாளிகை கட்டி அதில் பத்து வாசல்கள் வைத்தான். ஒவ்வொரு வாசலுக்கும் எண்ணை (நம்பர்) எழுதி அந்த எண் படி பணம் தரப்படும் என்ற விநோத அறிவிப்பை வெளியிட்டான். ஒரு சந்யாசிக்கு இவனுடைய தந்திரம் புரிந்தது. இவன் உண்மையான கொடையாளி அல்ல. பெயர் எடுப்பதற்காக இப்படிச் செய்கிறான் என்று எண்ணினார். அவனை அம்பலப்படுத்த எண்ணம் கொண்டு ஒரு தந்திரம் செய்தார்.
அவர் முதல் வாசல் வழியாகச் சென்று ஒரு ரூபாய் தானம் பெற்றார். இரண்டாவது வாசல் வழியாகச் சென்று இரண்டு ரூபாய், மூன்றாவது வழியாகச் சென்று மூன்று ரூபாயென்று பத்து வாசல் வழியாவும் சென்று 55 ரூபாய் பெற்றார். கப்பல் வியாபாரிக்கு ஒரே எரிச்சல்.
பின்னர் இரண்டாவது முறை முதல் வாசலில் நுழைந்தார். கப்பல் வியாபாரி கோபத்தில் கத்தினான்: நீ எல்லாம் ஒரு சந்யாசியா? பணத்தின் மீது இவ்வளவு ஆசை ஏன்? சீ! சீ! வெளியே போ – என்றான். உடனே சந்யாசி சிரித்துக் கொண்டே உன் உண்மை ஸ்வரூபத்தைக் கட்டி விட்டாயே. உன்னை அம்பலப்படுத்தவே நான் இப்படி வந்தேன். இந்தா நீ கொடுத்த 55 ரூபாய் என்று அவன் முகத்தில் விட்டெறிந்துவிட்டுப் போனார். இந்தச் செய்தி ஊர் முழுவதும் தெரிந்துவிட்டது.

உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?
ஒரு ரூபாய், ஒரு ரூபாயாக எடுத்துக் கொடுத்தாலும் கஞ்சப் பிரபு, கொடையாளி ஆக முடியுமா? என்று ஊரே சிரித்தது.
வான மயிலாடக் கண்டிருந்த வான் கோழி தானும் அதுவாகப் பாவித்து ஆடிய கதையாக முடிந்தது.
===============================================================================================
10. சீவரத்துப் பார்ப்பான் இருந்தும் கெடுத்தான் செத்தும் கெடுத்தான்
காஞ்சிக்கு அருகில் 300 ஆண்டுகளுக்கு முன் சீவரம் என்னும் ஊரில் ஒரு பிராமணன் வசித்து வந்தார். அவருக்கு திடீரென ஹரிஜனங்களுடன் சேர்ந்து வசிக்க ஆசை வந்தது. வேதம் ஓதுவதை கைவிட்டு அவர்கள் சேரிக்குச் சென்று ஒரு குடிசை போட்டு வசிக்கலானார். பிராமணர்களுக்கு அவர் மேல் கடுங் கோபம். ஆகையால் அவரை ஜாதிப் ப்ரஷ்டம் (விலக்கி வைத்தல்) செய்தனர். சேரியில் உள்ள பள்ளர்கள் பறையர்களோவெனில் இவரை கொஞ்சம் தள்ளியே வைத்தனர். அவர் கதை இரண்டுங் கெட்டான் நிலை ஆனது.
இரு ஜாதியினரும் விலக்கி வைக்கவே அவர் ஆற்றோரமாக ஒரு குடிசை போட்டு வசித்தார். வயதானபோது யாரும் அருகாமையில் இல்லாமல் இறந்தார். இப்பொழுது இவருடைய உடலை அடக்கம் செய்வதா, தகனம் செய்வதா என்று சர்ச்சை எழுந்தது. பிராமணர்களோ, ஹரிஜனங்களோ இறுதிச் சடங்கை முன்னின்று நடத்த விரும்பவில்லை.
ஊர்ச் சபையார் வேறு வழியின்றி அருகாமைக் க்ராமத்தில் இருந்து ஒரு குயவனை அழைத்து வந்தனர். அவன் ஈமக் கிரியைகளை செய்துவிட்டுப் போனான். இதிலிருந்து ஒரு பழமொழி உருவானது: சீவரத்துப் பார்ப்பான் இருந்தும் கெடுத்தான், இறந்தும் கெடுத்தான்!
--------------------------------------------------------------------------------------------------------------------------

11. கதை கேட்ட நாயை ……………. அடி!

ஒரு ஊரில் ஒரு அம்மையார் தனிமையில் வாழ்ந்தார். கணவரும் இல்லை- குழந்தைகளும் கிடையாது. ஆனால் அன்பாக ஒரு நாயை வளர்த்து வந்தார். பல வீடுகளுக்குச் சென்று பிச்சை எடுப்பார். முதலில் நாய்க்கு உணவு படைத்துவிட்டு தானும் சாப்பிடுவார்.
ஒரு நாள், அந்த நாய் மிகவும் அதி காலையில் எழுந்து பசிக்கிறது, அம்மா! சோறு போடுங்கள் என்றது. அவள் வீட்டிலோ அரிசியோ தானியமோ இல்லை. நாய் சொன்னது, அம்மா! அடுத்த வீட்டு அம்மணியிடம் அரிசி கடன் வாங்குங்கள். நான் சாப்பிட்ட உடனே போய் பிச்சை வாங்கி வருகிறேன். அந்த அரிசியை அவரிடம் இன்றே கொடுத்து விடலாம்.
அவளும் அப்படியே செய்தாள். நாயும் சொன்னபடியே சாப்பிட்டு விட்டு வாயில் பிச்சைப் பாத்திரத்தைக் கவ்விக் கொண்டு வீடு வீடாகச் சென்றது. எல்லோருக்கும் ஒரே அதிசயம். வழக்கமாகப் போடும் பிச்சையைவிட இரண்டு மூன்று மடங்கு கூடுதலாகவே பிச்சை இட்டனர். அது எடை தாங்காமல், பக்கத்திலுள்ள செட்டியார் கடையில் கொடுத்தவுடன் அவர் அதற்கான பணம் கொடுத்தார். நாய் மீண்டும் ஒரு ரவுண்டு போனது.
பக்கத்தில் வாரச் சந்தை (மார்க்கெட்) கூடி இருந்தது. ஒரே கூட்டம். நாயும் பிச்சைப் பாத்திரத்துடன் சென்றவுடன் மக்கள் எல்லோரும் அதிசயமாக அதைப் பார்த்துவிட்டு, காசை அள்ளி வீசினார்கள். நாய் அதைத் தூக்க முடியாமல் சுமந்து சென்றது. சந்தையில் ஒரு ஓரத்தில் மக்கள் கூட்டமாக நின்று ராமாயண கதாகாலேட்சபம் ஒன்றை ரசித்துக் கொண்டிருந்தனர். அன்று அவர் சொன்ன கதை — சீதாப் பிராட்டியிடம் அனுமன் மோதிரம் கொடுத்துவிட்டு அவள் கொடுத்த சூளாமணியை வாங்கிச் செல்லும் கட்டம். இது போன்ற தருணத்தில் எல்லோரும் பாகவதருக்கு மோதிர, நகைகள் வாங்கித் தருவர். அது முடியாதவர், அவர் தட்டில் காசு போடுவர்.இதை எல்லாம் வேடிக்கை பார்த்த நாய் , கதை கேட்ட உற்சாகத்தில், தனது பிச்சைப் பாத்திரத்தில் இருந்த பணம், தானியம், எல்லா வற்றையும் ராமாயண பாகவதர் தட்டில் கொட்டியது. எல்லோரும் கைதட்டி ஆரவாரித்து நாயின் பக்தியைப் பாராட்டினர்.
இதற்குள் எஜமானி அம்மா வீட்டில் பலரும் நாயின் புகழைப் பாடிக் கொண்டிருந்தனர். அடீ! இனிமேல் உனக்கு ஒரு குறையும் இராது. உனது நாய் ஒரு வருஷத்துக்கான பத்தைக் கொண்டுவந்து கொண்டிருக்கிறது. அடியே! இனிமேல் உன் நாயையே பிச்சைக்கு அனுப்பு. நீ பணக்காரி ஆகிவிடுவாய்.
இப்படி எல்லாம் அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது நாய் வாலைக் குழைத்துக் கொண்டு ஆவலுடன் வந்தது. அவளும் மிக ஆசையோடு நாயை வரவேற்று உபசார மொழிகள் கூறி என்ன இது? பிச்சைப் பாத்திரம் காலியாக இருக்கிறது? என்று கோபத்தோடு கேட்டாள். நாய், தான் கதை கேட்ட விஷயத்தையும் எல்லோரைப் போலத் தானும் பாகவதருக்கே எல்லாவற்றையும் தானம் கொடுத்ததாகவும் பெருமையாகச் சொன்னது.
அவளுக்கிருந்த கோபம் பெரிதாக வெடித்தது. நாயைக் கண்டபடி திட்டி, கதை கேட்ட நாயைச் செருப்பால அடி – என்று சொல்லி நாலு அடிபோட்டாள். நாய் வெளியே ஓடிப் போய்விட்டது.
இதுதான் தமிழில் “கதை கேட்ட நாயைச் செருப்பால் அடி” – என்ற பழமொழிக்குக் காரணமாம்!
-----------------------------------------------------------------------------------------------------------------------

12. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

காட்டுப் பகுதியில் உள்ள தன் வீட்டில் ஒரு விவசாயி மாடு ஒன்றை வளர்த்து வந்தார். ஒரு நாள் அந்த மாடு காணாமல் போய்விட்டது. மாடு காணாமல் போய்விட்டதே என விவசாயி கவலையில் வருந்தினார். அந்த மாட்டைத் திருடிச் சென்றவனைப் பழிவாங்க வேண்டும் என்று ஆத்திரத்தில் துடித்தார்.
மாடு காணாமல் போனது பற்றிக் கடவுளிடம் முறையிட்டார் விவசாயி. அப்போது கடவுள் அங்கு வந்தார். கடவுள் உனக்கு என்ன உதவி வேண்டும் என்று கேட்டார்.
ஆத்திரத்தில் அந்த விவசாயி கடவுளிடம், “நான் ஆசையாக வளர்த்த மாட்டை யாரோ திருடிச் சென்று விட்டார்கள். அந்த மாட்டைத் திருடியது யாராக இருந்தாலும் அவனை உடனே இங்கே வரவழைக்க வேண்டும்” என்று உதவி கேட்டார்.
அதற்குக் கடவுள், “பக்தனே, அந்த மாடு உனக்கு வேண்டுமா? அதை நான் உனக்குத் திருப்பித் தருகிறேன். ஆனால், மாடு காணாமல் போனதற்குக் காரணமானவர்கள் யார் என்று கேட்காதே” என்றார்.
ஆனால் விவசாயி கேட்கவில்லை. “கடவுளே! நான் ரொம்பவும் கோபத்தில் இருக்கிறேன். மாட்டைத் திருடியவனைப் பழிவாங்கினால்தான் என் மனம் ஆறும். அதனால், திருடியவனை இங்கு வரவழையுங்கள்” என்று மீண்டும் பிடிவாதமாகக் கேட்டார்.
“சரி, நீ கேட்கின்ற வரத்தைத் தருகிறேன். ஆனால், பின்னர் நீ வருத்தப்படக் கூடாது” என்றார். அந்த விவசாயி அதற்கு ஒத்துக்கொண்டார்.
“ இதோ நீ கேட்ட வரத்தைப் பிடி. மாட்டைத் திருடிச் சென்றவன் உன் பின்னால் நிற்கிறான், பார்” என்று விவசாயியிடம் கூறினார் கடவுள்.
உடனே கோபத்தில் விவசாயி திரும்பிப் பார்த்தார். புலி ஒன்று அங்கே நின்று கொண்டிருந்தது. புலியைப் பார்த்தவுடன் பழிவாங்கும் கோபம் மாயமாய் மறைந்தது. உயிர் பயம் கவ்விக்கொண்டது. “அய்யோ கடவுளே காப்பாற்று!” என்று அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார் விவசாயி. புலியும் அவரைத் துரத்தியது.
இந்தக் கதையில் வரும் விவசாயி சரியாக நடந்து கொண்டாரா? இல்லை அல்லவா? தான் ஆசையாய் வளர்த்த மாட்டைத் தாருங்கள் என்றுதானே கடவுளிடம் அவர் கேட்டிருக்க வேண்டும்? ஆனால், அவ்வாறு அவர் கேட்கவில்லை. ஆத்திரம் தான் வேலை செய்தது. அது அவருக்கு அழிவைத் தந்தது.
எனவே, கோபத்தை எப்போதும் தவிர்க்க வேண்டும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------





12 (2) ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு

ஓர் ஊரில் ஒரு சிவன் கோவில் இருந்தது.கணபதிசர்மா என்று ஒரு அந்தணர் அந்தக் கோவிலில் பூஜை செய்து வந்தார். அவருக்குப் பல ஆண்டுகளாகக் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. தினமும் இறைவனை மனமுருகப் பிரார்த்தித்து வந்தார்.அவர் மனைவியும் விரதங்கள் தானங்கள் என்று செய்து வந்தாள்.ஆனாலும் இவர்களுக்குப் பிள்ளையில்லை.
வீட்டில் இருக்கையில் ஒரு மாலைவேளையில் கணபதியின் மனைவி முன் ஒரு சிறிய குட்டி கீரிப்பிள்ளை வீட்டுக்குப் போகத் தெரியாமல் நின்றது. அதைப் பார்த்த அந்தணர் மனைவி அதற்குப் பாலும் சோறும் வைத்தாள் .பசியுடன் இருந்த அந்த கீரி பாலைப் பருகிப் பசியாறியதும் அங்கேயே படுத்துக் கொண்டது.
சிலநாட்களில் அந்தக் கீரிப் பிள்ளை அந்த வீட்டின் செல்லப் பிள்ளையானது.கணபதிசர்மாவும் அவர் மனைவியும் அந்தப்
பிள்ளையைத் தங்கள் சொந்தப் பிள்ளையாகவே நினைத்து வளர்த்து வந்தனர்.
சுமார் இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன.இப்போது கணபதிசர்மாவுக்கு ஒரு அழகிய ஆண்குழந்தை பிறந்திருந்தது.

அந்தக் குழந்தையைக் கண்ணும் கருத்துமாக வளர்த்தனர் கணவனும் மனைவியும்.கீரிப்பிள்ளையும் அக்குழந்தையுடன் சேர்ந்து வளர்ந்து வந்தது.
ஒருநாள் கணபதிசர்மா கோவிலில் பூஜைக்குப் போயிருந்தார்.வீட்டில் சமைப்பதற்குத் தண்ணீர் இல்லை என்று குடத்துடன் ஆற்றுக்குக் கிளம்பினாள் அவர்மனைவி
ஆற்றுக்குப் புறப்படுமுன் கீரியிடம் "குழந்தை தொட்டிலில் தூங்குகிறான்.பத்திரமாகப் பார்த்துக் கொள்.நான் சீக்கிரம் வந்துவிடுகிறேன்."என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்தாள்.

அவள் சென்ற சற்று நேரத்தில் கீரிப் பிள்ளையும் தொட்டிலின் கீழேயே அமர்ந்து கொண்டது.கணபதிசர்மாவும் பூஜையை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார்.அதே நேரம் குடத்தில் நீர் மொண்டு கொண்டு அவர் மனைவியும் வீட்டின் முன் நின்றாள். இருவரும் வீட்டின் முன் நின்ற கீரிப்பிள்ளயைப் பார்த்துத் திடுக்கிட்டனர்.
அவர்கள் செல்லமாக வளர்த்த கீரிப்பிள்ளை வாயில் ரத்தம் ஒழுக நின்றிருந்தது.மிகவும் பரபரப்பாக இங்குமங்கும் அலைந்து கொண்டு இருந்தது.இவர்களைப் பார்த்ததும் அதன் பரபரப்பு அதிகமானது.வாயில் ரத்தம் ஒழுக நின்ற கீரியைப் பார்த்து கணபதியின் மனைவி தன குழந்தையைக் கடித்துக் கொன்றுவிட்டது என்ற முடிவு செய்தாள்."ஐயோ என் குழந்தையைக் கொன்று விட்டதே" என்று அலறினாள்..
இந்த வார்த்தைகளைக் கேட்ட கணபதிசர்மா "என் குழந்தையைக் கொன்று விட்டாயா, நீயும் ஒழிந்து போ"என்ற படியே அருகே நின்றிருந்த மனைவியின் இடுப்பிலிருந்த குடத்தைப் பிடுங்கி கீரியின் மேல் போட்டார்.விசுக்கென்ற சத்தத்துடன் அது நசுங்கித் தன உயிரை விட்டது.

கணவன் மனைவி இருவரும் வீட்டுக்குள் ஓடிப்பார்த்தனர்.குழந்தை தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தது.அப்பாடா என்று இருவரும் மகிழ்ச்சிப் பெருமூச்சு விட்டனர்.உடனே கீரியின் நினைவு வந்தது.அதன்வாயில் எப்படி ரத்தம் வந்தது என்று சுற்றிப் பார்த்தபோது தொட்டிலின் மறுபக்கம் ஒரு பெரிய நாகப் பாம்பு இறந்து கிடந்தது.அது இரண்டு மூன்று துண்டாகக் கிடந்தது.
இப்போதுதான் கணபதிசர்மாவிற்குப் புரிந்தது.
"ஐயோ' என்ன காரியம் செய்துவிட்டேன்.என்குழந்தையைக் கடிக்கவந்த நாகத்தைக் கொன்று விட்டு அதைச் சொல்லத்தானே வாயிலில் வந்து நின்றது அந்தக் கீரிப்பிள்ளை.
ஆத்திரப்பட்டு என் செல்லப் பிள்ளையை நானே கொன்று விட்டேனே "என்று புலம்பி அழுதான்.
"ஐயோ நான் தான் அவசரப்பட்டு குழந்தையைக் கொன்று விட்டாயே என்று அலறினேன்.அதனால்தானே நீங்கள் கீரியைக் கொன்றீர்கள் நான் தான் தவறு செய்தவள் "என்று அழுதாள் அவர் மனைவி.
ஆண்டாண்டு காலம் அழுதாலும் மாண்டார் மீண்டு வருவாரோ.அவர்கள் அவசரப் பட்டதற்கு உரிய தண்டனை அடைந்துவிட்டனர்.
'ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு' என்ற பழமொழியை மெய்ப்பிப்பது போல் இவர்களின் இந்த செயல் அமைந்து விட்டது. எனவே இந்தக் கதை மூலம் எப்போதும் அவசரமோ ஆத்திரமோ படாமல் நிதானமாக ஒரு செயலைச் செய்யவேண்டும் என்னும் அறிவுரையை நாமும் கற்றுக் கொண்டோம் அல்லவா.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
12 (3)ஆத்திரக்காரனுக்கு....குறுங்கதை

திண்டிவனம் திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் கார் விரைந்து கொண்டிருந்தது. எத்தனையோ கனரக வாகனங்களை முந்திக்கொண்டு
,சாமர்த்தியமாக ஓட்டிக்கொண்டிருந்தார் ஓட்டுனர் சடகோபன். வேகத்தை ரசித்தபடியே முன்சீட்டில் தொழிலதிபர் பார்த்தீபன் பயணித்துக்கொண்டிருந்தார்.

கார் தீவனூரை நெருங்கியபோது, திடீரென்று சாலையின் குறுக்கே ஒரு வயதானவர் ஓடினார். சடகோபன் சடாரென பிரேக் பிடித்தும், வண்டி நிலை தடுமாறி, அந்த பெரியவரை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கää பார்த்தீபன் பதறியடித்துக்கொண்டு " யோவ் ! யோவ் ! மோதிடப்போறீயா. . . " என கூக்குரலிட்டார். எப்படியோ சமயோசிதமாக நிலமையை சமாளித்து,பெரியவரை மோதாமல் காரை நிறுத்திவிட்டு, பெருமூச்சிவிட்டார் சடகோபன்.

கண்ணிமைக்கும் நேரத்தில் காரை விட்டு இறங்கி ஓடி" யோவ்! சாவுகிராக்கி. . . இந்நேரம் செத்து பரலோகம் பொயிருப்ப. நீ செத்து ஒழியரதுமில்லாம என்னையுமில்ல கோர்ட்டு கேசுன்னு அலைய வச்சு சாகடிச்சிருப்பே ! " அடிக்குரலில் கத்திக்கொண்டே வந்த கோவத்தை கட்டுப்படுத்த முடியாமல்,அந்த பெரியவரை ஓங்கி ஒரு அரைவிட்டார், பார்த்தீபன். அடுத்த நொடி அந்த பெரியவர் சுருண்டு விழுந்து இறந்தார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
13. பேராசை… பெரு நஷ்டம் – சிறு கதை

ஒரு பிச்சைக்காரன். கோவில் வாசலில் பிச்சையெடுப்பது அவனது வழக்கம். நல்ல குரல் வளத்துடன் பாடுவான்.
ஒரு நாள். பக்திப் பாடல்களை உருக்கமாக பாடிக்கொண்டிருந்தான். மகிழ்ந்துபோன கடவுள் அவன் முன் தோன்றினார். பிச்சைக்காரன் மகிழ்ந்துபோனான். வணங்கினான். கடவுள் பேசினார்.
‘பக்தா! உன் பக்தி என்னை கவர்ந்தது. உனக்கு ஏதாவது வரம் தர விரும்புகிறேன். என்ன வேண்டும் என்று கேள்!’ என்றார் கடவுள்
பிச்சைக்காரனுக்கு மகிழ்ச்சி.
‘கடவுளே மிக்க நன்றி. என்னுடைய வேண்டுதல் இன்றுதான் பலித்திருக்கிறது. நீங்கள் இரண்டு வரங்கள் அளிக்க வேண்டும்’ என்று வேண்டினான் பிச்சைக்காரன்.
‘சரி. தருகிறேன்’ என்றார் கடவுள்
‘எனக்கு இந்த பிச்சைக்கார வாழ்க்கை வெறுத்துப் போய்விட்டது. அதனால், முதலாவது வரத்தினால் என்னை இந்த நாட்டிலேயே பெரிய பணக்காரனாக மாற்றிவிடுங்கள்’ என்று கேட்டான்.
‘அப்படியே ஆகட்டும். இரண்டாவது வரத்தை கேள்’ என்றார் கடவுள்.
‘கடவுளே! இத்தனை காலம் எல்லோரும் பணக்காரர்களாக இருந்தார்கள். நான் ஏழையாக இருந்தேன். அதனால், இரண்டாவது வரத்தினால், இந்த நாட்டு மக்கள் அனைவரையும் ஏழையாக்கிவிடுங்கள்’ என்று கேட்டான்.
கடவுள் சிரித்துக்கொண்டே, ‘அப்படியே ஆகட்டும்’ என்று சொன்னார்.
பிச்சைக்காரனுக்கு மகிழ்ச்சி. கடவுளுக்கு நன்றி தெரிவித்தான்.
‘பக்தா! நீ கேட்ட வரங்களை வழங்கிவிட்டேன். ஆனால் ஒரு நிபந்தனை. இந்த வரங்கள் பத்து நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும். நாளை காலை விடியும்போது நீதான் இந்த நாட்டின் பெரிய பணக்காரன்’ என்று சொல்லிவிட்டு மறைந்தார் கடவுள்.
‘பத்து நாட்களுக்கு மட்டும் வரம் கொடுக்கும் இவரெல்லாம் ஒரு கடவுளா’ என்று வருத்தப்பட்டுக்கொண்டே நகர்ந்தான். இருந்தாலும் அவனுக்கு மகிழ்ச்சி.
அன்று இரவு முழுவதும் தூங்கவேயில்லை. சில்லறைக் காசுகளை சேமித்துவைக்கும் பெட்டியை திறந்து பார்த்தான். பத்து செப்புக்காசுகளே இருந்தது.
‘இன்றோடு நம் பிரச்னைகள் தீர்ந்தது. விடிந்ததும் பெட்டி நிறைய தங்கக் காசுகள் நிரம்பி வழியப்போகிறது. வசதியான வீடு ஒன்று வாங்க வேண்டும். குதிரையும், தேரும் வாங்க வேண்டும்’ என்றெல்லாம் கணக்குப் போட்டான். எப்பொழுது விடியும் என்று காத்திருந்தான்.
பொழுது விடிந்தது.
வேகமாக எழுந்து பெட்டியை திறந்து பார்த்தான். அதிர்ந்துபோனான். பெட்டியில் முதல் நாள் இருந்த அதே பத்து செப்புக்காசுகளே இருந்தது.
‘கடவுள் நம்மை ஏமாற்றிவிட்டாரா?’ என்று யோசித்தவாறு வீட்டுக்கு வெளியே வந்தான். நாடெங்கும் ஒரே பரபரப்பு. காரணம், ஒரே நேரத்தில் நாட்டில் இருந்த அனைவரின் பணம், ஆபரணங்கள் ஆகியவை காணாமல் போயிருந்தன. பிச்சைக்காரனுக்கு விஷயம் புரிந்தது. ‘நாட்டில் இருப்பவர்களிடம் ஒரு பைசாகூட இல்லை. அதனால், பத்து செப்புக்காசுகள் வைத்திருக்கும் தானே பணக்காரன்’.
ஆம், பிச்சைக்காரன் பணக்காரன் ஆனான்.
விடிந்ததும் வீட்டில் பணமழை பெய்யும் என்று நினைத்த பிச்சைகாரனுக்கு வருத்தமே மிஞ்சியது. தற்போது கிடைத்திருக்கும் இந்த பணக்கார பட்டத்தால் அவனுக்கு எந்த உபயோகமும் இல்லை. கோவில் வாசலுக்கு சென்று பிச்சை எடுக்கவும் வழியில்லை. காரணம் மக்களிடம் பணம் இல்லை.
அவன் யோசிக்கத் தொடங்கினான்.
‘நல்ல வேளை பத்து நாட்களில் மக்களிடம் பணம் வந்துவிடும். பிறகு நமக்கு பிச்சை கிடைக்கும். ஒருவேளை இதுவே நிரந்தரமாக இருந்தால் நம் நிலை என்னவாகும்? தப்பித்தேன். கடவுளுக்கு நன்றி’ என்றவாறு பத்து நாட்கள் முடியட்டும் என்று காத்திருந்தான்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------


14. சிறுதுளி...... பெருவெள்ளம்....

சேமிப்பு இது ரொம்ப அவசியமான விஷயம். ஆனா பலரும் அதை எப்படி செய்வதுன்னு தெரியாம குழம்பி போய்டுவதால, சேமிக்க முடியாம போயிடும். சேமிப்பு எதிர்காலத்துக்குத்தானே!! அதற்காக இன்றைய தேவையை குறைச்சுக்கிட்டு, கஞ்சத்தனம் பட நான் ரெடி இல்லைன்னு சொல்றவங்க ஒரு பக்கம், கைல காசு மிஞ்சினாத்தானே சேமிக்க என்பவர் ஒரு பக்கம்னு அவங்க அவங்களுக்கு சூழ்நிலைக்கு ஏற்ப சேமிப்பை பத்தி ஒரு கருத்து வெச்சிருப்பாங்க.

பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் சினிமா கவுண்டமணி மாதிரி இருப்பதும் கூடாது, ஓவரா செலவு செய்வதும் கூடாது. சேமிப்பு என்பதை நம்முடைய முதல் செலவா வெச்சுக்கிட்டா பழக்கம் தானா வரும்.

சேமிப்பை பத்தி தகுந்த வல்லுனர்கள் தான் முறையா சொல்ல முடியும். நான் என்னுடைய அனுபவத்தை, போன பதிவில் சொல்லியிருந்தபடி அக்காவிடம் கற்றதை இங்கே பகிர்கிறேன். தெரியாதவங்க தெரிஞ்சிக்க உதவும். தவறா ஏதும் சொல்லியிருந்தா மன்னிச்சிட வேண்டிக்கறேன்.

நம் வருமானத்தை 3ஆ பிரிச்சுக்கணூம். முதல் பாகம் தற்போதய செலவுகளுக்கு, இரண்டாவது எதிர்கால சேமிப்புக்கு, இன்னொன்று எதிர்பாராத செலவுகள், ஊர்சுற்றுதல் போன்றவைக்கு வெச்சுக்கணும்னு மறைந்த எங்கள் அந்தேரி தாத்தா சொல்வார். இப்படி பிரிச்சு தனியா வெச்சு செலவு செஞ்சா கையிருப்பு குறையாம வரவுக்குள்ள செலவை அடைக்கலாம் என்பது என் அனுபவம்.

எதிர்கால சேமிப்பில் FIXED DEPOSIT, RECURRING DEPOSIT, MUTUAL FUND, PF, PPF, EPF, SHARES இதெல்லாம் அடங்கும். சேமிப்புக்கணக்குல பணத்தை போட்டு வைப்பதற்கும் ஃபிக்ஸட்டில் போட்டு வைப்பதற்கும் வட்டிவிகித வித்தியாசம் இருக்கும்னு பலருக்கும் தெரியும். அதனால சேமிப்பு கணக்கில் வைப்பதை விட, ஃபிக்ஸட்டில் வைப்பதால அந்தப்பணத்திற்கு நமக்கு கிடைக்கும் வட்டி கூடுதல் வருமானம். ஷேர்கள், ம்யூச்சுவல் ஃபண்டுகள் தேர்ந்த வழிகாட்டிகளின் உதவியோட கொஞ்சம் ரிஸ்க் எடுத்து செய்யணும். (எனக்கு பயம். அதனால தள்ளியே இருக்கேன்)

பிஎஃப், இபிஎஃப், வேலை செய்யும் இடத்திலேயே சம்பளத்தில் பிடித்துக்கொண்டுதான் கொடுப்பாங்க. நம்ம கண்ணுக்குத் தெரியாம சேமிப்பு நடக்குது. மேலும் விருப்பம் இருக்கறவங்க வங்கிகளில் தனியா PPF, அக்கவுண்ட் ஆரம்பிச்சு அதுல ஒரு குறிப்பிட்ட தொகையை போட்டுக்கிட்டு வரலாம். 16 வருஷத்துக்கு அதுலேர்ந்து பணம் எடுக்க முடியாது. அதற்கப்புறம் எடுக்கலாம் என்பதால் எதிர்காலத்துல ரொம்ப உதவியா இருக்கும்.

நமக்கா சரியா புரியலைன்னா நாம நாடவேண்டியது நல்லதொரு ஆடிட்டரை அல்லது கன்ஸல்டண்ட்டை நம்ம வருமானவரி கணக்கு வழக்குகளை அவங்களையே பாத்துக்க சொல்லிட்டா அவங்க வரிகட்டுவது எல்லாம் பாத்துப்பாங்க. அவங்க கிட்டயே வருமான வரிவிலக்கு பெற சேமிக்க விருப்பம் இருக்குன்னு சொன்னா அதுக்கு தகுந்த மாதிரி இன்னன்ன இடத்துல பணத்தை சேமியுங்கன்னு சொல்வாங்க.

நாமதான் கேக்கணும். சிலர் சேமிக்க நினைக்க மாட்டாங்க. ஏன்னா, சேமிக்கும் தொகை கூட இருக்கும். வரி கட்டுவது அந்த தொகையோட பாக்கும் போது கொஞ்சமா தெரியும். வரியை மட்டும் கட்டிட்டா கைச்செலவுக்கு பணம் இருக்கும்ல என நினைப்பது ரொம்ப தப்பு. இப்போ பலரும் தனியார் துறையில் தான் வேலை. முன்ன மாதிரி அரசாங்க உத்தியோகத்தில் கூட பென்ஷன்லாம் கிடையாது. ஆக சம்பாதிக்கும் காலத்திலேயே சேமிச்சு வெச்சுக்க வேண்டியது அவசியம்.

வருமான வரி விலக்குக்காக சேமிப்புன்னாலும், அது வருஷத்துக்கு 1 லட்சம் தான். அதுக்கு மேல வரி கட்டித்தான் ஆகணும். ஆனா வருஷத்துக்கு 1 லட்சம் சேமிச்சா நமக்கு எவ்வளவு லாபம்!! இதை கணக்கு செஞ்சு பாத்துக்கிட்டா தெரியும். வருஷத்துக்கு ஒரு லட்சம்னா, மாசம் 8500 ரூவாகிட்ட தனியா ஆர்டி போட்டுக்கிட்டு வந்தாலே போதுமே.

எனக்குத் தெரிந்த வருமான வரி விலக்குக்காக சேமிக்க கூடிய


15. தன் கையே தனக்கு உதவி

மணி சீருடையை தேடினான் காணவில்லை."அம்மா பள்ளி சீருடை எங்கே காணோம்.எடுத்துக் கொடுங்கள் " எனக் கத்தினான் மணி.
அடுப்படியில் பரபரப்பாக சமையல் செய்து கொண்டு இருந்த சீதா, மகன் கூப்பிட்ட சத்தம் கேட்டு சாம்பார் பாத்திரத்தை இறக்க முற்பட்டதால் கைதடுமாறி சாம்பார் சிறிது கையில் கொட்டிவிட்டது.
"அம்மா" என அலறியவள் ,தண்ணீரில் கையைக் கழுவிவிட்டு மகன் இருந்த இடத்திற்கு வலியைப் பொறுத்துக் கொண்டு வந்தவள்….
‘என்ன, மணி ”என்றாள்.
‘அம்மா சீருடையை எடுத்துத் தாருங்கள் ‘ என்றான் மணி.
நான்கு நாட்கள் உடுத்திய துணிகள் அழுக்காக இருந்தது.அழுக்கு கூடையில் போட்டு இருந்த சீருடையில் கொஞ்சம் வெள்ளையாக இருந்ததை எடுத்து கைகளால் அழுத்தி உதறி தன் மகனிடம் நீட்டினாள் சீதா.
”என்னம்மா , அழுக்குத் துணியை எடுத்துக் கொடுக்குறீர்கள் ” என்றான் மணி.
”நாலு நாட்களாய் இந்த வேலைக்காரி கோமதி வராமல் துணி துவைக்கவில்லைடா ,என் செல்லமில்ல… இன்னைக்கு மட்டும் இதை போட்டுக்க ” என்றாள் கெஞ்சலாக சீதா.

”சரி கொடுங்க நீங்களாவது துவைத்து போட்டு இருக்கக் கூடாதா ? நான் ஒழுங்கீனமாக போய் நிற்கவேண்டும். ஆசிரியர் என்னைத் திட்டவேண்டும். அதைப் பார்த்து மற்ற மாணவர்கள் சிரிக்க வேண்டும்.எல்லாம்….. ‘ எனக் கூறியவன் முடிக்காமல் வாங்கிப் போட்டுக் கொண்டான்.
சீதா எப்படியோ சீருடை பிரச்சினை முடிந்தது என்று எண்ணியபடி சமையல் அறைக்கு நழுவினாள்.
சாப்பாடு எடுத்து வைக்கப் பாத்திரத்தைப் பார்த்தாள், கழுவாத பாத்திரங்கள் நிறைந்து கிடந்தது. அதில் தேடி கழுவி எடுத்தவள் ,அரக்கப் பரக்க சாதத்தைக் கொடுத்து மணியை கிளப்பிக் கொண்டு இருக்கும் போதே,,,பள்ளிப் பேருந்து வந்து விட்டது,
மணி எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு ஓடினான்.
அதற்குள் அலுவலகத்துக்கு நேரமாகிவிட்டது என கோபி வந்து விட்டான். அவனுக்கும் தோசை சுட்டு எடுத்து வைத்தவள் வியர்த்து விறுவிறுத்து இருந்தாள்.
தோசை வைக்கும் போது கைகளில் கொப்பளித்து இருப்பதைப் பார்த்த கோபி ‘என்ன காயம்’ என்றான்.
”சாம்பார் கொட்டி விட்டது” என்றாள் சீதா.
‘இன்றைக்கும் வேலைக்காரி வரவில்லையா? சொல்லாமல் கொள்ளாமல் நின்று விடுகிறாள் .நீ கிடந்து அல்லல் படுகிறாய்’ என்ற கோபி…..
…தொட்டதற்கு எல்லாம் வேலைக்காரி உதவியே தேவை என்று பழகிக் கொண்டால் அவள் வரவில்லை என்றால் இப்படித்தான் வீடு தலைகீழாக மாறிவிடும் ‘.
”தன் கையே தனக்கு உதவி” ,பிறர் கையை எதற்கு எடுத்தாலும் எதிர் பார்த்தால் இப்படி
தொல்லைகளும், மனகஷ்டங்களும் வரத்தான் செய்யும் ” என்றவன் அலுவலகம் கிளம்பினான்.
அவர் சொல்வதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.வேலைக்காரி இருக்கிறாள் என்ற எந்த வேலையும் தான் செய்வதில்லை. அதனால் , அவள் வராத நாட்கள் எல்லாமே போராட்டம் தான் என நினைத்தாள் சீதா, தன் கொப்பளித்த கையைப் பார்த்துக் கொண்டு.
16. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
ஓர் ஊரின் ஏரிக்கரையோரத்தில் நிறைய மரங்கள் வளர்ந்திருந்தன. அங்கே குரங்குகள் கூட்டமாக வசித்து வந்தன.
அதில் ஒரு குரங்குக்கு ஓர் ஆசை ஏற்பட்டது. ஒரு சிறிய தோட்டம் அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சின்னச் சின்ன செடிகளாகப் பார்த்து அவற்றையெல்லாம் பிடுங்கி வந்து தனது தோட்டத்தில் நட்டு வைத்தது.
ஒரு மாதம் ஆயிற்று. செடிகள் வளரவே இல்லை! தாய் குரங்கிடம் போய் கேட்டது, ""இவ்ளோ நாளாச்சு... ஒரு செடிகூட வளரவே இல்லையே ஏன்?''
""அதுவா, செடிகளை நட்டால் மட்டும் போதாது. அதற்குத் தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும்!'' என்றது தாய்க்குரங்கு.
அவ்வாறே குட்டிக் குரங்கு நிறையத் தண்ணீர் ஊற்றி வந்தது. அதன் பிறகு ஒரு மாதம் கழிந்தது.
""இப்பவும் செடிகள் முளைக்கவே இல்லையே, அது ஏன்?'' என்று தாய்க்குரங்கிடம் போய்க் கேட்டது குட்டிக் குரங்கு.
தாய் சொன்னது, ""நீ செடிகளுக்கு நிறையத் தண்ணீர் ஊற்றுகிறாய்... அதனால் அதன் வேர்கள் தண்ணீரால் அழுகிப் போயிருக்கும்...''
""அப்படியா, ஒரு வேர்கூட அழுகவில்லையே?'' என்றது குட்டி.
""அது எப்படி உனக்குத் தெரியும்?''
""ம்ம்...ம்... நான்தான் அந்தச் செடிகளைத் தினமும் பிடுங்கிப் பார்க்கிறேனே!''
""அடப்பாவி... தினமும் பிடுங்கிப் பிடுங்கி நட்டால் எப்படிச் செடிகள் முளைக்கும்? குழந்தாய்... எதுவும் அளவோடு கொடுத்தால்தான் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும். செடிக்கு மட்டுமல்ல... நமது வாழ்க்கையிலும்தான்... என்ன புரிகிறதா?''
""புரிகிறது... அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்று மானிடர்கள் சொல்வார்கள்... அதுதான் இதுவா?'' என்று அம்மாவிடம் கொஞ்சும் குரலில் கேட்டது குரங்கு.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
17. ஆழம் தெரியாமல் காலை விடாதே

ஒரு சமயம் தேவலோகத்தில் இருந்த எல்லா தெய்வங்களும் பூவுலகில் ஒரு தலத்திற்கு வந்தார்கள். அவர்கல் வந்த இடத்துக்கு அருகே ஒரு புறா விளையாடிக்கொண்டிருந்தது. எல்லா கடவுள்களும் வருவதை அது வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தது. கடைசியாக எமதர்மன் அங்கே வந்தார். வந்தவர் ஒரு நிமிடம் நின்றார். புறாவை உற்றுப்பார்த்தார். பிறகு புன்னகை ஒன்றை செய்துவிட்டுப் போனார்.
அவ்வளவுதான் இதுவரை மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டிருந்த புறா பதறிப்போனது. கலங்கி அழத்தொடங்கியது. அதன் உற்சாகம் குறைந்துபோனது தற்செயலாக அதனைப் பார்த்தார் பட்சி ராஜன் கருடன். அன்போடு நெருங்கி அதன் கலக்கத்துக்கான காரணத்தைக் கேட்டார். காலதேவன் என்னைப் பார்த்து சிரித்தார் அவரது பார்வையும் சிரிப்பும் எனக்கு மரணம் நெருங்கிவிட்டது என்பதை சொல்லாமல் சொல்வதுபோல் தோன்றுகிறது தழுதழுக்கச் சொன்னது புறா.
சின்னப்பறவையின் கலக்கம் கருடனுக்கு வருத்தத்தைத் தந்தது. அதனால் அந்தப்புறாவுக்கு உதவ முடிவு செய்தார். பயப்படாதே இங்கே இருந்து பல லட்சம் மைல் தொலைவில் இருக்கும் ஒரு தீவில் உள்ள மரம் ஒன்றின் பொந்தினுள் உன்னைக் கொண்டுபோய் விட்டுவிடுகிறேன் எமதர்மனே நினைத்தாலும் உன்னைத் தேடி அங்கே வர பல ஆண்டுகள் ஆகும். அதனால் நீ தைரியமாக இரு சொன்ன கருடன் தன் ஆற்றலால் அந்தப் புறாவை இரண்டே நிமிடத்தில் சொன்ன இடத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டு திரும்பினார்.
சற்று நேரத்தில் கடவுள்கள் எல்லோரும் வந்தவேலை முடிந்து திரும்பினார்கள். அப்போது எமதர்மன் கருடனை அர்த்தம் தொனிக்கப்பார்த்தார். லேசாக சிரித்தார். உடனே கோபம் பற்றிக்கொண்டது கருடனுக்கு என்ன எமதர்மரே என்னை என்ன புறா என்று நினைத்தீர்களோ? நீங்கள் சிரித்தால் பயந்துவிட? என்று ஆவேசமாகக் கேட்டார்.
ஊஹூம் நான் உன்னைப் பார்த்து சிரித்தது பயமுறுத்த அல்ல அந்தப் புறாவுக்கு ஒரு சில நிமிடத்தில் பல லட்சம் மைல் தொலைவில் இருந்த மரத்தின் பொந்து ஒன்றில் மறைந்திருக்கும் பூனையால் மரணம் என்பது விதி. இந்தப் புறா எப்படி அவ்வளவு சீக்கிரம் அத்தனை மைல் தொலைவிற்கு செல்லப்போகிறது என்று நினைத்துத்தான் புறாவை பார்த்து சிரித்துவிட்டுப் போனேன் ஆனால் நீயே அதற்கு வழி செய்துவிட்டதை அறிந்து இப்போது சிரிக்கிறேன்.
நன்மை செய்யப்போய் அது இப்படி ஆகிவிட்டதே ஏன் இதற்கு என்ன காரணம் என்று யோசித்தபடியே திருதிரு என விழித்தபடி இருந்த கருடன் அருகே வந்தார் திருமால். கருடா புறாவுக்கு நீ உதவ நினைத்தது நல்ல விஷயம்தான் ஆனால் அதை எப்படி செய்யவேண்டும் என்று தீர்மானித்ததில்தான் தவறு செய்து விட்டாய் எப்போதும் என் உத்தரவைக் கேட்டு நடக்கும் நீ இப்போது என் உத்தரவுக்காக சில நிமிடம் தாமதித்து இருந்தால்கூட அந்தப் புறா பிழைத்திருக்கும் திருமால் சொல்ல உணர்ந்த கருடன் தலைகுனிந்து நின்றார்.
இப்படித்தான் பலரும் தங்கள் லட்சியத்திற்காகச் செயல்படுவதாக நினைத்துக்கொண்டு அதன் முடிவு என்ன என்று தெரியாமலே செயல்படுவதும் நன்றாகத்தானே செய்தோம் இப்படி ஆகிவிட்டதே என்று புலம்புவதும் நிகழ்கிறது. இப்படி செயலின் ஆழம் தெரியாமல் இறங்கிவிட்டு அதில் சிக்கிக்கொள்ள கூடாது என்பதற்காகத்தான் ஆழம் தெரியாமல் காலைவிடாதே என்று சொல்லி வைத்தார்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------

18. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு

ஒரு கோவில் கோபுரத்தில் சில நீல நிறப் புறாக்களும் சில வெள்ளை நிறப் புறாக்களும் வாழ்ந்து வந்தன. நீலப் புறாக்கள் தாம் வெள்ளைப் புறாக்களைவிட அழகாக இருப்பதாக எண்ணி கர்வர்த்துடன் இருந்தன. சிலநாட்களின் பின் அக் கோபுரத்தில் திருத்த வேலகள் ஆரம்பமானது.
அதனால் எல்லாப் புறாக்களுக்கும் கோபுரத்தை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டது. புறாக்கள் எல்லாம் வேறொரு இடம் தேடி ஒரே திசையில் பறந்து சென்றன. அவைகள் பறந்து செல்லும் போது ஓரிடத்தில் வெய்யிலில் உலர்வதற்காக பரப்பப்பட்ட நெற்களைக் கண்டன. கண்டதும் அனைத்தும் ஒன்றாக அவ்விடத்திற்கு பறந்து சென்று காயப் போடப்பட்ட நெற்களை தின்று தீர்த்து விட்டு அருகே இருந்த ஒரு பெரிய மரம் ஒன்றில் அமர்ந்தன.
தானியத்தை காய்வதற்காக பரப்பி விட்டு சென்ற வேடன் திரும்பி வந்து பார்த்த பொழுது தானிய மணிகள் ஒன்று கூட இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தான். தானியங்கள் காயப்போட்ட இடத்தில் புறாக்களின் எச்சம் கிடப்பதை பார்த்து வேடன் என்ன நடந்தது என்பதை ஊகித்தான்.
நாளைக்கு இந்த புறாக்களை எப்படியும் வலை விரித்து பிடித்து விட வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி மறுநாள் வலை ஒன்றைத் தயார் செய்து அந்த இடத்தில் விரித்து தானியங்களையும் போட்டு புறாக்கள் வரும்வரை காத்திருந்தான்.
அடுத்த நாள் அங்கே வந்த புறாக்கள் தானியத்தைப் பார்த்ததும், அதை உண்ணும் ஆசையில் வேகமாக தரையிறங்கி உண்ணத் தொடங்கின. சில மணித்துளிகளில் அதன் கால்கள் வலைகளில் சிக்கிக் கொண்டன.
சற்று தொலைவில் மறைந்திருந்த வேடன் நிலைமையை நன்கு புரிந்து கொண்டு புறாக்களை பிடிக்க ஓடி வந்தான். வேடன் வருவதைப் பார்த்த புறாக்கள் ஆபத்தை உணர்ந்து கொண்டு, உயிர் மீதுள்ள ஆசையினால் எல்லாப் புறாக்களும் ஒன்றாக இறக்கையை விரித்து பறக்க ஆரம்பித்தது. வலையையும் புறாக்கள் தூக்கி கொண்டு உயரப் பறந்து சென்றன.
இதனைக் கண்ட வேடன், “அய்யய்யோ… புறாக்கள் போனாலும் பரவாயில்லை. நான் கஷ்டப்பட்டு தயாரித்த வலையும் அதோடு போகிறதே…” என்று புலம்பிக் கொண்டே, பறந்து செல்லும் புறாக்களின் பின்னே ஓடினான்.
பறந்து செல்லும் போதே, அதில் இருந்த நீலப் புறாக்கள் கர்வத்தோடு, “எங்களது வலிமையால்தான் நீங்களும் காப்பாற்றப்பட்டு இருக்கிறீர்கள். நாங்கள் சிறகை மிக வேகமாக அடித்து பறக்கவில்லை என்றால்… அவ்வளவுதான்” என்று கூறின. உடனே வெள்ளை நிறப் புறாக்களும் தம் பங்குக்கு, “நாங்கள்தான் வலிமையோடு பறந்தோம். உங்களுக்கு அழகு இருக்கலாம், ஆனால் ஆற்றல் கிடையாது” என்று கூறிக் கொண்டு ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டே பறந்தன. வீ ண் கர்வத்தினால் சண்டையிட்டுக் கொண்டு பறந்ததினால் அவற்றின் பறக்கும் வேகம் குறைய ஆரம்பித்தது, அதனால் அவை ஒரு மரக்கிளையில் வலையுடன் சிக்கிக் கொண்டது.
இதனைப் பார்த்த வேடனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்ற பழமொழிக் கெற்ப இப்புறாக்கள் தப்பி விடுமோ என்று பயந்தேன். நல்லவேளையாக அவற்றின் “ஒற்றுமை நீங்கியதால் அனை வருக்கும் தாழ்வு” என்ற நெறிப்படி பறந்த புறாக்களே நன்றி” என்று புறாக்களைப் பார்த்து கூறிக் கொண்டே அவைகளை பிடித்து தனது கூடைக்குள் போடத் தொடங்கினான்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

19. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது

ஒரு முனிவர் இருந்தாராம் அவருக்கு ஒரு மகன் இருந்தான் அவன் முறைபடி வேதங்களை கத்துக்க ஆசைப்பட்டானாம் தன் அப்பா கிட்ட சொல்றான் நீங்களே எனக்கு குருவா இருந்து எல்லாத்தையும் சொல்லித்தாங்க சொல்றான்.
அந்த முனிவர் அதுக்கு மறுத்து விடுகிறார் ஏன்னா குருவா இருந்தா கத்து கொள்ள வருகிறவனிடம் கண்டிப்பாக இருக்கனும் அப்பத்தான் முறைப்படி கல்வியை போதிக்க முடியும் கத்துக்க வரவனும் அந்த கண்டிப்புக்கு பணிந்து கல்வியை ஒழுங்க கத்துகனும்.
மகனிடம் கண்டிப்பு செய்ய முடியாமல் போகலாம் என்று அவர் வேறு ஒரு முனிவரிடம் அவனை கற்று கொள்ள அனுப்பினார்.

சர்தான் நம் அப்பாக்கு கூறு கொஞ்சம் கம்மி போல இருக்கு அதன் வேற இடத்துக்கு அனுப்பரார்னு நினைச்சிகிட்டான் பிள்ளை சில ஆண்டுகள் பிறகு குருகுல வாசம் முடிந்து அவன் திரும்பிவரான்.

ஆ ஒஊனு உதார் காண்பிக்கிறான் அப்பா அவனிடம் நீ என்ன கற்று கொண்டாய் ?என்னென முறைகளை தெரிந்து கொண்டாய்? இறைவனை பற்றி தெரிந்து கொண்டாயா அவன் இருப்பதை விளக்க முடியுமா ? இப்படியெல்லாம் சரமாரியா கேள்வியை அடுக்குறார்.

ஆரம்பிச்சிட்டார்யா ஆரம்பிச்சிட்டார் நொந்துகிறான் நம் புள்ளைக்கு எதுக்கும் பதில் சொல்ல வரவில்லை ஆனா எல்லாம் தெரிந்தவன் போலவே ஆக்டிங்கு கொடுக்கிறான்
அவருக்கு புரியாத மாதரி எல்லாம் பதில் சொல்லி வைக்கிறான் அப்படியா? சரி நீ சொன்னதை நிருபிக்க முடியுமா? அப்படினு ஒரு புரோஜக்டை கேக்கறாரு நம்ம புள்ளையாண்டான் இப்ப முழிக்க ஆரம்பிச்சிடான்
அப்பா முனிவர் ஒரு பாத்திரத்தை எடுத்து தண்ணீரை நிரப்பினார். மகனிடம் இரண்டு கை நிறைய உப்பு கொண்டு வரசொல்லி அந்த தண்ணியில் அதை போட்டு கலக்க சொல்லறாரு கொஞ்ச நேரம் கழித்து நீ கொண்டு வந்த உப்பு இப்ப எங்கே? என்று கேட்கிறார்.
என் கையில இருந்தது இப்ப பாத்திரத்தில் இருக்கு அப்படின்னு பிள்ளை சொல்றான்.
அதில் கொஞ்சம் எடுத்து கொடுக்க முடியுமா? என்று கேட்கிறார்.
.
லூசாப்பா நீ என்பது போல் லுக்கு விடறான் மகன்
கொஞ்சம் தண்ணியை எடுத்து அவன் வாயில் ஊற்ரி விட்டு இப்ப உப்பு எங்க இருக்கு னு? மறுபடியும் கேக்கறார் .
அது இந்த தண்ணியில் கலந்திருக்கு ஆனா காட்ட முடியாது உணரத்தான் முடியும் மகன் சொல்லறான்.
இப்ப முனிவர் சிரித்து கொண்டே அவரு புரோஜக்டை பத்தி சொல்றாரு, 'தண்ணியில் அது ஒவ்வொரு துளியிலும் சமமா கலந்திருக்கு நீ பார்க்க முடியாததை உணர முடியும் அது போல்தான் கடவுளும் கடவுள் படைப்பில் உள்ள எல்லாவற்றிலும் எல்லா ஜீவராசியிலும் அது கலந்திருக்கிறது நீ உன் கண்களால் பார்க்க முடியாது உணர வேண்டும் என்று விரும்பினால் எல்லாவற்றிலும் அதை நீ காண்பாய்'
இப்ப புள்ளைக்கு உண்மை புரியுது அப்பாவின் திறமையும் புரியுது கற்றது கை அளவு கல்லாதது உலகளவு என்று புரியுது அடக்கமாய் வாழ கற்று கொண்டான்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
20. ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம்

ஒருநாள் வெளியூரில் உள்ள நண்பர் தொலை பேசியில் தொடர்பு கொண்டு தன் மகளுக்கு பார்த்து இருந்த மாப்பிள்ளை நல்லவரா?அவர்கள் குடும்ப விவரங்களை விசாரித்து தெரிந்து சொல்லும்படி கூறினார்.

இனிப்பு, பழம், பூ எல்லாம் வாங்கிக் கொண்டு மாப்பிள்ளை வீட்டிற்குச் நண்பரும் அவரது மனைவியும் சென்றார்கள்.
மாப்பிள்ளை வீட்டினரும் நல்ல விதமாக நடந்து கொண்டார்கள்.மன திருப்தியுடன் அவர்களும் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டு இருந்தனர்.
வரும் வழியில் ஒரு நண்பரை சந்தித்தார். எதிர்பாரதவிதமாக."என்ன இந்தப் பக்கம் " என நண்பர் நலம் விசாரித்தார்.
மாப்பிள்ளை இருக்கும் வீதியில் இருப்பது அப்போது தான் நினைவிற்கு வந்தது. நண்பரின் மகளுக்கு அந்த வீட்டுப் பயனைப் பார்த்து இருக்கிறார்கள்.என வீட்டைக் காட்டியவர்,அங்கு சென்று வந்த விவரத்தையும் கூறினார்.

‘அவர்கள் வீட்டுப் பையனா என்றவர்,’அவன் வெளி மாநிலத்தில் வேலை பார்க்கும் இடத்தில் திருமணம் செய்து குடும்பம் நடத்திக் கொண்டு இருக்கிறான்.அதை மறைத்து பெண் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்"என்றார் நண்பர்.
மேலும் ," அவர்கள் யாருக்கும் எந்த உதவியும் செய்ய மாட்டார்கள்.பணத்தால் எதுவும் சாதிக்கலாம் என நினைப்பவர்கள்"என்றார் நண்பர்.
"கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல் ." என்பார்கள்.அது போல் நல்ல சமயத்தில் நண்பரை பார்த்தது நல்லதாகப் போயிற்று., இல்லை என்றால் நாம் நல்லவர்கள் என்று சொல்லி இருந்தால், அந்தப் பெண்ணின் நிலை என்னவாகி இருக்கும்.
ஒரு புத்தகத்தை படிக்கும் போது சில பக்கங்களைப் புரட்டிப் படித்தாலே தெரிந்து கொள்ளலாம்.அது போல நாம் விசாரிக்க வந்த மாப்பிள்ளை வீட்டாரைப் பற்றி ஒரு நண்பர் கூறியதே போதும்.
"ஒரு பானை சோற்றிற்கு
ஒரு சோறு பதம்’
இனி பலரிடம் விசாரிக்க வேண்டியது இல்லை என முடிவுக்கு வந்த நண்பர் வீட்டிற்குச் சென்றார். தொலை பேசி எண்களை அழுத்தி தொடர்பு கொண்டு பேசினார்.
மறுமுனையில் நண்பர் பேசினார். நடந்த விபரத்தைக் கூறியதும் நன்றி கலந்த குரல் தழுதழுத்தது வார்த்தை.
தக்க சமயத்தில் பதம் பார்க்கப்பட்ட சோறு போல் கிடைத்த தகவலால் ஒரு பெண்ணின் வாழ்க்கை காப்பற்றப்பட்டது.

21.குரைக்கிற நாய் கடிக்காது

சுமதியின் நான்கு வீடு தள்ளி சுபா வீடு இருந்தது. இருவருக்கும் பல வகையில் ஒற்றுமை இருந்தது.
ஒரே மாதத்தில் பிறந்தவர்கள்.ஒரே வீதியில் வசிப்பவர்கள்.ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தவர்கள் என சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், ஒரு வேறுபாடு இருந்தது. சுமதி அதிகம் பேசமாட்டாள். சுபா பேசிக்கொண்டே இருப்பாள்.
இருவரும் நல்ல தோழிகள்.எங்கு சென்றாலும் இருவரையும் பார்க்கலாம். தனியாகப் பார்ப்பது வீட்டில் இருக்கும் போது மட்டும் தான். காலங்கள் கடந்தன…பள்ளிப் படிப்பு முடிந்தது.கல்லூரிக்கு வெளியூர் போக வேண்டும். இருவரும் வேறு….வேறு …கல்லூரியில் சேர்ந்தார்கள்.
பிரிவு என்பது முதல் முறை என்பதால் கல்லூரிக்கு போகாமல் இருந்து விடுவோமா எனக்கூட யோசித்தார்கள். படிப்பு பெண்களுக்கு அவசியம் வேண்டும் என்பதை இருவரும் உணர்ந்து இருந்ததால் பிரிவை தாங்கிக் கொண்டு கல்லூரிக்கு சென்றனர்.
கால மாற்றம் பிரிவுத் துயர் மறைந்தது.வேறு தோழிகளின் நட்பு திசை மாறியது.
சுமதிக்கு கிடைத்த தோழி மாலா .அவள் படிப்பிலும் கெட்டிக்காரி.செயல் திறனிலும் கெட்டி. இப்படி ஒரு தோழி சுமதிக்கு கிடைத்ததால் சுமதி சற்று மாறித்தான் இருந்தாள்.
கல்லூரிப் படிப்பு மட்டும் இல்லாமல் பல போட்டிகளில் கலந்து கொண்டு இருவரும் பரிசுகள் வெல்வது, பொது நல சேவை, பெண்களுக்கு விழிப்புணர்வு முகாம், இரத்த தானம் செய்வது என பல வற்றிலும் கலந்து கொண்டு பிறர் நலனிலும் சேவை செய்தார்கள்.
இரண்டு ஆண்டுகள் முடிந்து மூன்றாம் ஆண்டு தொடங்கிவிட்டது.பெண்கள் விழிப்புணர்வு முகாம் நடத்துவதற்காக வேறு ஊருக்கு அழைத்துச் சென்றார்கள்.
அங்குதான் தோழி சுபா படிக்கும் கல்லூரி இருக்கிறது.சுபா வைப் பார்க்க வேண்டும்,மாலாவிற்கு சுபாவை அறிமுகப்படுத்தனும் என சந்தோச அலைகளில் இருந்தாள் சுமதி. அவர்கள் சென்ற சமயத்தில் ஒரு கல்லூரி மாணவிகள் போதைக்கு அடிமையாகி அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.
இவர்கள் தவறான பழக்கத்திற்கு அடிமையானதால் அவர்கள் பெற்றோருக்கு கூட தெரியாமல் ஆசிரியர்கள் சேர்த்து இருக்கிறார்கள்.
அவர்கள் தவறை உணர்ந்து திருத்த முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். நமது பங்கு அவர்களை திருத்துவதாக இருக்கும்,முயற்சியாக செயல்படுவோம் என ஆசிரியை கூறியதும்…
மாணவிகள் ஒவ்வொருவராக அவர்களை கவனிக்கும் பொறுப்பு, ஆறுதல் சொல்வது, மருத்துகள் கொடுப்பது அவர்களை அன்றாட பணிக்கு உதவி செய்வது என பிரித்துக் கொண்டு செயல்பட்டார்கள்.
சுமதி ஒரு அறைக்குச் சென்றால். படுக்கையில் படுத்திருந்த கல்லூரி மாணவியிடம் சென்றவள் திடுக்கிட்டாள்.
ஆம்…படுத்திருந்தது தனது பள்ளித் தோழி சுபா. அவளைப்பார்த்ததும் சுமதிக்கு அவளையும் அறியாமல் கண்ணீர் பொல பொல எனக்கொட்டியது .
‘சுபா’ என அவள் தலையை கோதியவள் தோள் பட்டையில் தன் கரங்களை பதித்தாள் சுமதி.
சுமதியின் கண்ணீர் துளி சுபாவின் மேல் பட்டதும் தன்னை உரிமையுடன் யார் தொடுவது பரிட்சியமான கரமாக இருப்பதை உணர்ந்த சுபா திரும்பினாள்.
சுமதியைப் பார்த்ததும்சுபா கண் கலங்கினாள்.” நீ எப்படி” என தணிவான குரலில் கேட்டாள்.
‘என்னை விடு ஏன் நீ இப்படி ஆனாய்” எனக்கேட்டாள் சுமதி.
”குரைக்கிற நாய் கடிக்காது” என்பார்கள். அது போல சதா பேசியே படிப்பை கோட்டை விட்டேன் .தீய நட்பு போதைக்கு அடிமையானேன் .
ஆசிரியருக்குத் தெரியவே கல்லூரி பெயர் கெட்டுவிடும் என்பதற்காக எங்களை திருத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள் என விரக்தியான குரலில் கூறினாள் சுபா.
ஆறுதலாக அவள் கரத்தைப் பற்றிய சுமதி, ‘கெட்ட கனவாக எண்ணி மறந்து விடு. இனி நடப்பது நல்லவையாக நடக்கட்டும் எனக்கூறியவள்….
சுபா கூடவே இருந்து கவனித்துக் கொண்டாள்.தனது தோழியின் அருகாமை கிடைத்த சந்தோசத்தில் சுபா போதை பழக்கத்தில் இருந்து விடுபட்டதுடன் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு புதுமைப் பெண்ணாக புத்தொளி பெற்றாள்


22. அழுதபிள்ளை சிரிக்குமாம் ; கழுதைப் பாலைக் குடிக்குமாம்

கயல் விழியை பட்டுப் புடவையில் அலங்காரம் செய்து அழைத்து வந்து நடுக் கூடத்தில் அமரவைத்தனர் .
அங்கு உறவினர்கள், நண்பர்கள் என பலர் கூடி இருந்தார்கள் .
ஒரே ஊர் என்பதால் ஒன்பதாம் மாதத்தில் சீமந்தம் செய்தார்கள்.கயல்விழிக்கு நலுங்கு வைத்து ஆசீர்வாதம் செய்தார்கள் பெரியவர்கள் .
ஆரத்தி நீரில் கற்பூரம் வைத்து திருஷ்டி கழித்த பின் கயல்விழியை அழைத்துச் சென்று ஐந்து வகை சாதங்களைக் கொடுத்து சாப்பிடச் சொன்னார்கள்.
வந்திருந்தவர்கள் எல்லாம் திருப்தியாக உண்டு ஆசீர்வாதம் செய்து புறப்பட்டார்கள்.
கயல்விழியை பக்கத்து வீதியில் இருக்கும் தாயார் வீட்டிற்கு அழைத்துப் போனார்கள்.
மாமா மகனை திருமணம் செய்ததால் ஊர் பயணம் , பாசப்பிரிவுகள் இப்படி எதுவும் கயல்விழி அறியாத ஒன்று .
தாய் வீட்டிற்கு சென்ற பத்தாவது நாள் ஆண் குழந்தை பிறந்தது,கயல் விழிக்கு இரு வீட்டினரும் இனிப்பு கொடுத்து மகிழ்ந்தனர்.
குழந்தை பிறந்த ஒரு வாரத்தில் அழுது கொண்டே இருந்தது குழந்தை .
குழந்தையை தூக்கிய பக்கத்து வீட்டுப்பாட்டி ,குழந்தையின் காது மடல்களை நீவி விட்டுப் பார்த்தாள்.
உரம் விழவில்லை என்பதை தெரிந்து கொண்ட பாட்டி, நான் போய் மருந்து கொண்டு வருகிறேன் எனப் புறப்பட்டார்.
சிறிது நேரத்தில் வந்த பாட்டி குவளையில் ஏதோ கொண்டு வந்து சங்கில் ஊற்றி குழந்தைக்குக் கொடுத்தாள்.
வேண்டா வெறுப்பாக விழுங்கி ஒதுக்கி வைத்திருந்த பாலை துப்பியவனைப் பார்த்த பாட்டி குறும்புக்காரப் பையன் எனச் சிரித்துக்கொண்டவள்….
மடியில் கிடத்தியபடியே காலை மெதுவாக ஆட்டி தூங்க வைத்தாள். அழுது கொண்டு இருந்த குழந்தை கண்ணை மூடி தூங்க ஆரம்பித்தான்.
”கயல்விழி குழந்தை தூங்கி எழுந்தவுடன் உன் பாலைக் கொடுத்தால் போதும் .இனி இப்படி அழுக மாட்டான் என்ற பாட்டி எழுந்தாள்.”
”பாட்டி அது என்ன மருந்து கொடுத்தீர்கள் ”என்று கேட்டார்கள் உறவுப் பெண்கள் .
”அதெல்லாம் மருத்தவ ரகசியம் ”எனச் சொல்ல மறுத்தாள் பாட்டி .
”பாட்டி எனக்குச் சொல்லிக் கொடுங்க பாட்டி ”என ஆவலுடன் கேட்டாள் கயல்விழி .
கயல்விழியின் ஆர்வத்தைப் பார்த்த பாட்டி ”அழுத பிள்ளையும் சிரிக்குமாம் , கழுதைப் பாலைக் குடிக்குமாம் ” என்றாள்.
பழமொழியிலேயே தான் குழந்தைக்கு என்ன மருந்து கொடுத்தேன் என்பதைச் சொன்னவள் ….
”கழுதைப் பாலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் எந்த எதிர்மறை விளைவுகளும் இன்றி தடுப்பு ஊசி போல் குழந்தைகளின் நலனை காக்கிறது.”…
”தொன்று தொட்டு வரும் பழக்கமாக இன்றும் குழந்தைகள் பிறந்த ஒரு மாதத்திற்குள் கொடுக்கப்பட்டு வருகிறது” .
”உன் மகன் தூங்கி எழுந்தவன் சிரித்து விளையாடுவான்.பயப்பட வேண்டாம்” என தைரியம் சொல்லி வீட்டுக்குப் புறப்பட்டாள் பாட்டி .
சிறிது நேரத்தில் சிரித்துக் கொண்டு எழுந்த மகனைப் பார்த்தவள் பாட்டிக்கு எப்படி இத்தனை மருந்துகள் தெரிகிறது என ஆச்சரியப்பட்டாள் கயல்விழி.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
23. காற்று உள்ள போதே தூற்றிக்கொள்

ரகுவரன் வண்ணத் தாள்களில் சின்ன சின்னதாய் குருவி,கிளி, வாத்து,மயில் என்று பொம்மைகள் செய்து கொண்டிருந்தான்.
வீட்டிற்குள் நுழைந்த வரதராசன் மகன் கத்திரியும், தாளுமாக இருந்த கோலத்தைப் பார்த்து மயிர்கால்கள் குத்திட்டு நின்றன. கோபம் தலைக்கு ஏறியது.
”படிடா என்றால் படிக்க மாட்டேன் என்கிறாய்.எப்ப பாரு கிளியும், வாத்துமா செய்து வீடு முழுக்க குப்பை போடுவது தான் மிச்சம். ஒரு பைசாவிற்கு பிரயோசனம் இருக்கிறதா?”
இப்படி இருந்தா எப்படிடா பொளைக்கப் போறே, நாலுபேரைப் போல் நல்லா படிக்கணும் ,நாள்ள வேலைக்குப் போக வேண்டும் என்ற நினைப்பே வராதாடா, ” கோபமாக கத்தியவர்…
ரகுவரன் முதுகில் இரண்டு போடு போட்டார் .செய்து வைத்திருந்த பொம்மைகளை காலால் எட்டி உதைத்தார்.
ரகுவரனுக்கு தன்னை அடிக்கும் பொது கூட வலிக்க வில்லை. ஆனால் பொம்மைகளை உதைத்தது மனதில் வலித்தது.
”கலை நயமாக தான் வடித்த பொம்மைகளைப் பார்த்து பாராட்ட வேண்டாம். இப்படி எட்டி உதைக்காமல் இருந்திருக்கலாமே ”என்று எண்ணி அழுதான் ரகுவரன்.
தோட்டத்தில் துணிகளை துவைத்து காயப் போட்டுவிட்டு வந்த மேகலா,” ஏண்டா ரகு அழுகிறாய்” எனப்பதறியபடி உள்ளே வந்தாள்.
பொம்மைகள் சிதறிக் கிடப்பதையும் தன கணவர் துநிமார்றிக் கொண்டு இருப்பதையும் பார்த்த மேகலா நிலைமையை புரிந்து கொண்டாள்.
ரகுவரனை சமாதானப்படுத்திவிட்டு இறைந்து கிடைந்த பொம்மை ,தாள்களை எடுத்து ஒழுங்கு படுத்தினால் மேகலா .
அந்த சம்பவத்திற்கு பின் ரகுவரன் மனதில் ஒரு வைராக்கியம் வந்து விட்டது.இந்த பொம்மைகளை வைத்து ஏதாவது செய்து சாதிக்க வேண்டும் என்று.
அவனுக்கு பக்க துணையாக இருந்தாள் அன்னை மேகலா.
காலங்கள் கடந்தன.ஆண்டுகள் பல தாண்டியபோது ஒரு நாள் சென்னையில் நீண்ட வரிசையில் மக்கள் கூட்டம்.
புதுமையான ஓவியக்கண்காட்சியை காணத்தான் இவ்வளவு கூட்டம்,பார்த்தவர்கள் எல்லாம் பரவசப் பட்டார்கள்.
பூங்கா,கோவில்,மசூதி ,தேவாலயம்,மலை ,மலர்க்காடு இப்படி எண்ணிலடங்கா கண்ணைக் கவரும் இயற்கையாக அமைந்தற்ற்ஹு போன்ற ஓவியங்கள் கண்ணாடிப் பெட்டுக்குள் அழகாக காட்சி அளித்தது.
நல்ல விலைக்கு விற்பனையும் ஆனது. ரகுவரனை மட்டும் பாராட்டவில்லை.அவன் பெற்றோரையும் பாராட்டினார்கள்.
அவன் தந்தையின் மனமோ, கூனிக் குறுகிப் போனது.தன் தவறை எண்ணி அவர் உணர்வுகளை உணர்ந்து கொண்டான் ரகுவரன்.
அப்பா என்று அழைத்தான் .தன் உணர்வுகளில் இருந்து மீண்டு வந்த வரதராசன் ,என்ன என்பது போல் பார்த்தார்.
பக்கத்தில் வந்த ரகு இந்த அளவிற்கு நான் வளர காரணமே எனது அப்பா, அம்மாவின் ஒத்துழைப்பு தான் என்று பேட்டி கொடுத்தான்.
அந்த வார்த்தைகளைக் கேட்ட வரதராசன் நெகிழ்ந்து போனார். படிப்பு மட்டும உயர்வுக்கு காரணமில்லை.
குழந்தைகள் எதை விரும்புகிறார்களோ அந்த துறையில் ஊக்கப் படுத்தினால் அந்த துறையில் அவர்கள் சாதனையாளர்களே என்றார் வரதராசன்.
”காற்று உள்ள போதே தூற்றிக்கொள்” வாழ்த்துக்கள் என கைகுலுக்கி விடைபெற்றார் பேட்டி எடுத்த நண்பர்.


24.திணை விதைத்தவன் திணை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான்

ஒரு ஊரில் குப்புவும்,சுப்புவும் நல்ல நண்பர்களாக இருந்தார்கள்.குணங்கள் மாறுபட்டு இருந்தாலும் ,நட்புடன் இருந்தார்கள்.
குப்பு பூச்சி, பாம்பு, இவற்றை கண்டால் அடித்துக் கொன்று விடுவான்.அதில் அவனுக்கு அத்தனை சந்தோசம்.
சுப்பு உயிர்களைக் கொல்லக் கூடாது.உயிர்களிடத்தில் அன்பு செலுத்த வேண்டும் என்ற கொள்கை உடையவன் சுப்பு.
குப்புவிடம் எத்தனையோ முறை உயிர்களைக் கொல்லக் கூடாது என்று எடுத்துச் சொல்லியும் அவன் செவிகளில் இவை விழவில்லை.
இருவரையும் சோதிக்கும் நாள் ஒன்று வந்தது.
குளத்தில் இருவரும் குளித்துக் கொண்டு இருந்தார்கள். குளத்தில் தண்ணீர்ப் பாம்பு ஒன்று வருவதை கண்ட சுப்பு கரைக்கு வந்துவிட்டான்.
குப்புவோ..நீந்திப் போய் தண்ணீர்ப் பாம்பின் வாலைப் பிடித்து தலையைச் சுற்றி ..சுற்றி… அடித்தான்.இதை எதிர் பார்க்காத பாம்பு சீறியது.குப்பு விடவில்லை.நீந்தி கரைக்கு வந்து தரையில் சுழற்றி …சுழற்றி …அடித்துக் கொன்று விட்டான்.
இதைப் பார்த்த சுப்பு மிகவும் வருத்தப்பட்டான். மேலும் ஒரு உயிரை தேவையில்லாமல் கொன்று விட்டாயே என வருத்தப்பட்டு தனது வீட்டிற்குச் சென்று விட்டான். குப்புவும் வீட்டுக்கு கிளம்பினான்.
கொன்ற பாம்பின் துணைப் பாம்பு இதைப் பார்த்துக் கொண்டு இருந்ததை இருவருமே கவனிக்க வில்லை.
மறுநாள் குப்பு தூங்கிக் கொண்டு இருந்த போது …புஸ்..புஸ்…. என சத்தம் கேட்டு கண் விழித்துப் பார்த்தான்.
அவன் எதிரில் பாம்பு சீறியபடி நிற்பது கண்டு நிலை குலைந்து போனான்.
உடல் எல்லாம் வேர்த்து தண்ணியாக கொட்டியது. பயத்தில் கத்தக் கூட திறன் இல்லாமல் அம்மா…அம்மா…..என கத்தினான். அந்த சத்தம் அவனுக்கு மட்டுமே கேட்டது.
தனது சக்தியை முழுக்க பயன்படுத்தி அம்மா…என கத்தியவன் தன் நினைவு மறந்து அப்படியே மயக்கமானான்.
தண்ணீர் தெளித்து மயக்கத்தை தெளியவைத்த அவன் அம்மா … என்ன உடம்புக்கு என்ன செய்கிறது ,என அன்புடன் விசாரித்தாள்.
அவனைச் சுற்றி அப்பா, அம்மா,தம்பி,தங்கை அனைவரும் கவலை நிறைந்த முகத்துடன் சூழ்ந்து கொண்டு இருந்தார்கள்.
சுற்றி தன் கண்களை சுழலவிட்ட குப்பு, பாம்பு இல்லாதது கண்டு நிம்மதி மூச்சு விட்டு,தன் முன் நின்ற பாம்பு நினைவா, கனவா என யோசித்தான்.
எதுவாக இருந்தால் என்ன நம் உயிர் எவ்வளவு முக்கியம் என நான் பயந்தேன். இது போல் தானே ஒவ்வொரு உயிரும் நினைக்கும். இதை புரிந்து கொள்ளாமல் எத்தனை உயிரை கொன்றேன்.இனி எந்த உயிரையும் கொல்ல மாட்டேன் என உறுதி எடுத்துக் கொண்டான் மனதிற்குள் குப்பு.
”திணை விதைத்தவன் திணை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்” என்பது எவ்வளவு உண்மை.
சுப்பு நிம்மதியாக தூங்கி எழுந்து தனது பணிகளைச் செய்து கொண்டு இருந்தான்.,
பல்லுப் போனால் சொல்லுப் போச்சு
காலை நேரம் பரபரப்பாக இருந்தது..ரகுவை பல் விளக்க பல்பசையை எடுத்துக் கொடுத்தாள் ரமா.
பல் விளக்க மாட்டேன்.பல் விளக்க மாட்டேன் என தலையை ஆட்டிய ரகு வெளியே ஓடினான்.
அவனைப் பிடித்து இழுத்து வந்த ரமா கட்டாயப்படுத்தி விளக்க ஆரம்பித்தாள்.’’அழுது கொண்டே தூ… தூ… என துப்பிக் கொண்டே அழுது கொண்டு இருந்தான் ரகு.
ஒருவழியாக பல்விளக்கி ஆகி விட்டது. அடுத்தது குளிக்க வைக்க துணியை களைந்தால் ,வேண்டாம்..வேண்டாம் என குதித்தான் ரகு.
‘’நீயே குளி’’ என்ற ரகுவை , நல்ல பையனில்லை என சமாதானம் செய்து கொண்டே ஒரு வழியாக குளியல் வேலை முடித்து வெளியில் வரும்போது மணி 7.30.
இன்னும் அரை மணிநேரத்தில் கிளம்பி ஆகவேண்டும், என்று அவசர…அவசரமாக பள்ளி சீருடை மாற்றி காலை சிற்றுண்டி ஊட்டி புத்தகப் பையை எடுத்துக் கொண்டு வெளியில் வருவதற்கும் பள்ளிக் கூட பேருந்து வருவதற்கும் சரியா இருந்தது.
பேருந்தில் ரகுவை ஏற்றிவிட்டு பேருந்தில் அமர்ந்த பின் கிளம்பும் போது டாட்டா காண்பித்து விட்டு உள்ளே வந்தாள் ரமா .
இது தினமும் காலையில் நடக்கக் கூடிய சம்பவம் தான்,இருந்தாலும் ,பாட்டி கல்யாணிக்கு ஏதோ மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது.
வெற்றிலையை இடித்து பல் இல்லா வாயில் உதப்பிக் கொண்டவள் ,மனதில் தோன்றிய எண்ணத்தையும் உதப்பிக் கொண்டாள்.
மாலை நான்கு மணிக்கு வந்த ரகு, துணி மாற்றி கை,கால் கழுவி பழம் சிறிது சாப்பிட்டுவிட்டு பாட்டியிடம் விளையாட வந்தான் ரகு.
பாட்டி கல்யாணி தூக்கி உச்சி முகர்ந்து மடியில் அமர்த்திக் கொண்டவள், உதப்பி வைத்து இருந்த வெற்றிலையை துப்பி விட்டு தன் மனதில் இருந்த எண்ணத்தை கூறலானாள்.
‘’ரகு, பாட்டிக்கு எத்தனை பல் இருக்கு என்று பார் என்றாள்’’ பாட்டி.
‘’பாட்டி உங்களுக்கு பல்லே இல்லை ‘’ என்றான் ரகு கைகளை ஆட்டிக் கொண்டு .
‘பாட்டிக்கு வயசு ஆகிவிட்டது பல் போச்சு, அத்துடன் சொல் போச்சு.’…
…நீ வளரும் பிள்ளை நன்றாக பல் விளக்கி பல்லைத் தூய்மையாக வைத்துக் கொண்டால் பல் நீண்ட நாட்களுக்கு வரும்.
‘’ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி
நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி “ -என்பார்கள்
நாலடியாரிலும்,திருக்குறளிலும் வாழ்க்கைக்கான நெறி முறைகள் எல்லாம் சொல்லி இருப்பதைப் படித்தால் வாழ்க்கை உறுதிப்படுவது போல் பல்லை ஆலங்குச்சி , வேலங்குச்சியிலும் துலக்கும் போது பல் உறுதியாகும்…
…பல்பசையில் அதைத்தான் சேர்த்து இருக்கிறார்கள்.பல் உறுதிப்பட தினமும் காலை, இரவு பல் துலக்க வேண்டும். அடம் பிடிக்கக் கூடாது’’ என்றாள் பாட்டி..
பாட்டி ஏதோ கதை சொல்கிறாள் என நினைத்துக் கொண்டு ம்…ம்… என கேட்டுக் கொண்டிருந்த ரகு. தினமும் பல் விளக்கி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை மட்டும் புரிந்து கொண்டான்.
மறுநாள் ரமா பல்பசையுன் வந்தாள் ரகுவிடம்.
‘’அம்மா அதைக் கொடுங்கள்.நானே துலக்கிக் கொள்கிறேன் என பல் பசையை வாங்கிய ரகு சமத்தாக பல் துலக்க ஆரம்பித்து விட்டான்.
ராமாவிற்கு ஒரே ஆச்சரியம். பாட்டியும் பேரனும் பேசியது ராமாவிற்குத் தெரியாது.அதனால் ,ரமா வியப்பாக பார்த்தாள் ரகுவை.
நீங்களும் உங்கள் அம்மாவை ஆச்சரியப்பட வையுங்கள்..சமர்த்தாக பல் துலக்கி..
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
26. அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான்

ஒரு ஊரில் செல்வந்தர் செங்கோடன் இருந்தார். அவருக்கு ராமு, சோமு, காமு என்ற மூன்று மகன்கள் இருந்தார்கள்.
ராமுவிற்கு திருமணமாகி அதே ஊரில் வசித்து வந்தான்.சோமு தந்தையின் நிர்வாகத்தைப் பார்த்துக் கொண்டான்.
காமு வெளியூரில் படித்துக் கொண்டு இருந்தான்.
தந்தையின் செல்வத்தை ராமு சிறிது…சிறிதாக கரைப்பதிலே கவனமாக இருந்தான்.வேலைக்கு போகாமல் எத்தனை தீய பழக்கங்கள் இருக்கிறதோ அத்தனைக்கும் அடிமையாகி தன்னையும் கொஞ்சம்…கொஞ்சமாக அழித்துக் கொண்டு இருந்தான்.
காமு படிப்பதில் கெட்டிக்காரனாக இருந்தான்.அதனால், படித்து முடித்த கையுடன் வேலையும் தேடி வந்தது.காமு நகர் புறத்திலேயே வசித்து வந்தான்.
இந்த சூழ்நிலையில் சோமுவிற்கு திருமணம் செய்ய எண்ணிய செங்கோடன் பெண் பார்த்து முடித்தார்.திருமண வேலைகள் எல்லாம் நடந்து கொண்டு இருந்தன.
பக்கத்து கிராமத்தில் தான் பெண் வீடு அங்கு தான் கல்யாணம்.தனியார் பேருந்து பிடித்து மாப்பிள்ளை வீட்டார்,மற்றும் உயரவினர்கள் எல்லாம் கிளம்பினார்கள்.
கேலியும் ,கிண்டலுமாக பயணம் செய்ததில் அலுப்புத் தெரியாமல் ஊர்வந்து சேர்ந்தார்கள்.
மாப்பிள்ளை வீட்டார் வந்தவுடன் திருமண மண்டபம் களைகட்டியது.மாப்பிள்ளை அழைப்பில் ஆரம்பித்து முகூர்த்தம் வரை நல்லபடியாக முடிந்தது.
தனது மகனுக்கு தகுந்த குணவதியாக மருமகள் அமைந்ததில் செங்கோடனுக்கும்,அவர் மனைவிக்கும் மிகுந்த மகிழ்ச்சி.
சின்னவனுக்கும் நல்லபடியாக பெண் அமைந்து விட்டால் கடமை முடிந்துவிடும் என அந்த நேரத்திலும் நினைத்துக் கொண்டனர்.
அவர்கள் எண்ணம் போல் சின்னவன் காமுவிற்கும் திருமணம் முடிந்தது.கடமைகள் எல்லாம் முடிந்தது என நிம்மதிப் பெருமூச்சு விடும் போது அந்த சந்தோசத்தை அனுபவிக்க முடியாமல் நோயில் படுத்து விட்டார் செங்கோடன்.
ராமு,காமு இருவரும் தந்தையின் நிர்வாகத்திற்கும் தங்களுக்கும் சம்மந்தம் இல்லாதது போல் ஒதுங்கிக் கொண்டார்கள். தொழிலில் வேறு பின்னடைவு ஏற்பட்டது.இந்த இக்கட்டான சூழ்நிலையில் என்ன செய்வது எனத் தெரியாமல் சோமு தனி ஆளாக தவித்தான்.
சோமுவின் மனைவி திலகம்தான் தைரிய மூட்டினாள். இறைவனின் பாத அடிகளை பற்றுவோம்.வரும் தூரங்கள் அனைத்தும் போகும் என தைரியம் கொடுக்கும் தன்னம்பிக்கை வார்த்தைகளைச் சொல்லி உற்சாகம் கொடுத்தாள்.
திலகம் கொடுத்த அன்பான நம்பிக்கையினால் இறைவனின் பாதங்களில் பணிந்து தங்கள் கடமைகளை செய்தார்கள்.
ஆச்சரியமான அற்புதம் நடந்தது. படுத்த படுக்கையாக இருந்த தந்தை குணமாகி நிர்வாகத்தை கவனிக்க வந்துவிட்டார்.இரண்டு பேரும்சேர்ந்து கடுமையாக உழைத்ததன் விளைவு நஷ்டத்தை சரி செய்து இலாபம் கிடைக்கும் அளவிற்கு உற்பத்தி பெருகியது.
திலகம் கரங்களை பற்றிக்கொண்ட சோமு,’’ இறைவனடி உதவியது போல் அண்ணன் -தம்பி உதவ வில்லை ‘’ அதற்கு வழிகாட்டிய உனக்கு என வார்த்தைகளை முடிக்க முடியாமல் நா தழுதழுத்தது.

27.அறிவே சிறந்த ஆயுதம்
ஒரு சமயம் விஜயநகரத்திற்கு வித்யாசாகர் என்ற ஒருவர் வந்திருந்தார். அவர் சகல சாஸ்திரங்களையும் அறிந்த புலவர். தம்மை போல யாரும் புலமை பெற்றவர் இருக்கமுடியாது என ஆணவம் கொண்டவர். அதனால் ஒவ்வொரு ஊராக சென்று அங்குள்ள புலவர்களையெல்லாம் வாதத்திற்கு அழைத்து வெற்றி பெற்று, பெருமையாக திரிந்து கொண்டிருந்தார். அவ்வாறே ஒருநாள் விஜயநகரத்திற்கும் வந்தார்.
அவர் இராயரின் அவைக்கு வந்து தன் திறமையை வெளிப்படுத்தினார். அந்த அவையில் பெத்தண்ணா, சூரண்ணா, திம்மண்ணா போன்ற புலவர்கள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் வல்லவர்கள். அவர்கள் கூட வித்யாசாகரை கண்டு அஞ்சி பின்வாங்கினர். தன்னிடம் வாதிட யாரும் முன்வராதது கண்ட வித்யாசாகர் ஆணவமுற்றார். தன் அவையில் சிறந்தவர்கள் இல்லையோ என இராயருக்கோ வருத்தம்.
அந்த சமயத்தில் தெனாலிராமன் அவை முன் வந்து "பண்டிதரே! உம்மிடம் வாதம் புரிய நான் தயார். இன்று போய் நாளை வாருங்கள்" என்றான்.
இதை கேட்டதும் மன்னருக்கும், மற்ற புலவர்களுக்கும் உற்சாகமாக இருந்தது. அவர்கள் இராமனை வெகுவாக பாராட்டினர். இருந்தாலும் மறுநாள் வித்யாசாகரை இராமனால் வெல்ல முடியுமா? என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது.
மறுநாள் இராமனை ஆஸ்தான பண்டிதரை போன்ற விலையுயர்ந்த ஆபரணங்களால் அலங்கரித்து அவைக்கு அழைத்து வந்தனர். இராமன் தன் கையில் பட்டுத்துணியால் சுற்றப்பட்ட ஒரு கட்டை வைத்திருந்தான்.
வாதம் ஆரம்பமாகியது. வித்யாசாகர் இராமனின் கையில் இருந்த கட்டைப்பார்த்தார். அது என்னவாக இருக்கமுடியும்? என்று அவரால் ஊகிக்கமுடியவில்லை. எனவே "ஐயா! கையில் வைத்திருக்கிறீர்களே! அது என்ன? " என்று கேட்டார்.
இராமன் அவரை அலட்சியமாகப் பார்த்து, கம்பீரமாக "இது திலாஷ்ட மகிஷ பந்தனம் என்னும் நூல். இதைக்கொண்டுதான் உம்மிடம் வாதிடப்போகிறேன்!" என்றான்.
வித்யாசாகருக்கு குழப்பம் மேலிட்டது. அவர் இது வரை எத்தனையோ நூல்களை படித்திருக்கிறார். கேட்டிருக்கிறார். ஆனால் இராமன் கூறியது போல் ஒரு நூலைப்பற்றி இதுவரை கேள்விபட்டதில்லை. அந்த நூலில் என்ன கூறியிருக்குமோ? அதற்கு தம்மால் பதில் சொல்ல முடியுமோ? முடியாதோ? என்ற பயம் ஏற்பட்டது. அதனால் நயமாக "வாதத்தை நாளை வைத்துக்கொள்ளலாம்" என்று சொல்லிவிட்டு சென்றார்.
அன்றிரவு வித்யாசாகர் பல்வாறு சிந்தித்து பார்த்தார். இராமன் கூறிய நூல் புரிந்துக்கொள்ள முடியாத நூலாக இருந்தது. இதுவரை தோல்வியே கண்டிராத அவர் இராமனிடம் தோல்வி அடைய விரும்பவில்லை. ஆகவே அந்த இரவே சொல்லிக்கொள்ளாமல் ஊரை விட்டே ஓடிவிட்டார்.
மறுநாள் அனைவரும் வந்து கூடினர். ஆனால் வித்யாசாகர் வரவில்லை. விசாரித்த பொழுது அவர் இரவே ஊரை விட்டு ஓடி விட்டார் என்ற செய்திதான் கிடைத்தது. வெகு சுலபமாக அவரை வென்ற இராமனை அனைவரும் பாராட்டினர்.
மன்னர் இராமனிடம் "இராமா! நீ வைத்திருக்கும் திலகாஷ்ட மகிஷ பந்தனம், என்ற நூலை பற்றி நானும் இதுவரை கேள்விபட்டதேயில்லை. அதை எங்களுக்கு காட்டு!" என்றார்.
இராமன் மூடியிருந்த பட்டுத்துணியை விலக்கினான். ஏடுகள் எதுவும் காணப்படவில்லை. அதற்கு பதிலாக எள், விறகு, எருமையை கட்டும் கயிறு இருந்தது. அதை கண்டதும் எல்லாரும் வியப்புற்றனர்.
இராமன், "அரசே! திலகம் என்றால் எள், காஷ்டம் என்றால் விறகு, மகிஷ பந்தனம் என்றால் எருமை கட்டும் கயிறு. இதன உட்பொருளை வைத்து தான் திலகாஷ்ட மகிஷபந்தனம் என்று சொன்னேன். இதைப்புரிந்து கொள்ளாத புலவர் பயந்து ஓடிவிட்டார்" என்று கூறிச்சிரித்தான். அனைவரும் சிரித்தனர். மன்னர் இராமனை பாராட்டி பரிசளித்தார்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
28. தோல்வியே வெற்றிக்கு ஏணி படி
ஜாண் இவனுக்கு எப்போதும் விளையாடி கொண்டே இருக்கணும் இது அவனுடய பொழுது போக்கு ...டீவி பார்க்கனும் அப்படி ,இப்படி எந்த ஒரு ஆசையும் இவனுக்கு படிக்கும் பருவத்திலே இருந்து கிடையாது இவனுடய லச்சியம் இவனுடன் படித்த மாணவர்களை விளையாட்டில் இருந்து ஜெய்ச்சி அவர்களை போல மடல்கள் ,சர்ட்டிபிக்கட் இது போல வாங்கனும் இப்படி தான் ஒவ்வொருநாளும் அவனுடய லச்சியம் ..

ஒருநாள் ஓட்ட பந்தயம் போட்டிக்கு பெயரு கொடுத்து விட்டு அதில் சாதிக்கனும் என்ற ஒரு வெரியுடன் காத்து இருந்த ஜாண் ஓட்ட பந்தயத்தில் கலந்து கொள்கிறான் ...போட்டியாளர் விசில் எப்போது அடிப்பார் என்று காத்து இருந்தான் போட்டியாளர்,, அவர் வாயில் விசிலை வைக்கும் போதே ஜாண் எழும்பி ஓடிவிடுவான் ...இப்படியாக இரண்டு ,மூன்று முறை ஓடி விட்டான் உடனே ஓட்ட பந்தயத்தில் ஓட இருந்த ஜாணை போட்டியாளர் வெளியே தூக்கி வைத்து விட்டார் ...
மனம் உடைந்த ஜாண் வெற்றியும் ,தோல்வியும் வீரனுக்கு அழகு என்று அதை சொல்லி கொண்டு அடுத்த போட்டியில் கலந்து கொள்ள ஆயத்தமாகிறான் .நீளம் தாண்டுதல் போட்டிக்கு தனது பெயரை கொடுத்து விட்டு காத்து இருக்கிறான் ஓட்ட பந்தயம் முடிந்தது .
அடுத்த போட்டி குண்டு எறிதல் என்று போட்டியாளர் ஒலி,ஒலி மூலம் தெரிவித்தார்.

இதை கேட்ட ஜாண் சாதிக்கணும் என்ற வெரி அவனை விட்டு போய் விட்டது ஏனென்றால் அடுத்த போட்டி நீளம் தாண்டுதல் என்று முன்னரே அவர்கள் அறிவித்திருந்தார்கள் இப்போது போட்டியை மாற்றியவுடன் ஜாணுக்க மன நம்பிக்கை போய் விட்டது இப்படியாக இவன் பெயரு கொடுத்த போட்டி தொடங்கியது ...மகிழ்ச்சியுடன் புறப்பட்ட ஜாண் போட்டியில் ஆயத்தமாய் போட்டியின் உள்ளே நுழைகிறான் போட்டியாளர் அவனிடம் மூன்று முறைதான் வாய்ப்பு அதை நீ பயன் படுத்த வேண்டும் இல்லையென்றால் போட்டியில் இருந்து நீ எடுக்க படுவாய் என்று போட்டியாளர் தெரிவித்தார் .

.உடனே சரி சார் என்று முதல் முறை ஓடுகிறான் .....ஓடிய ஜாண் பவுல் கோட்டில் காலை வைத்து பவுல் ஆகிவிட்டான் ..உடனே போட்டியாளர் இரண்டாவது முறை வாய்ப்பு கொடுக்கிறார் ..இரண்டாவதும் ஓடுகிறான் பவுல் என்று போட்டியாளர் விசில் அடிக்க பயத்துடன் சென்ற ஜாணுவிடம் போட்டியாளர் எச்சரித்து விடுகிறார் இன்னும் இந்த ஒரு முறை தான் இல்லை யென்றால் போட்டியில் இருந்து வெளியே செல்ல வேண்டும் என்றார் பயத்துடன் ஓடிய ஜாண் வெற்றி பெற்று விட்டான் ஆனந்தமடைந்தான் ஜாண் எல்லை கடந்த சந்தோசம் அளவுக்கு மீறிய சிரிப்புகள் இனி அவனுக்கு ஒரு தைரியம் வந்தது எல்ல போட்டிகளிலும் சேர்ந்து ஜெய்க்கனும் என்கிற ஆவல் இவனுக்குள் வந்ததால் இது போல எல்லா போட்டிகளிலும் கலந்து வெற்றி பெருகிறான் ......

நண்பர்களே தோல்விதான் வெற்றிக்கு அடிப்படை
ஒரு முறை தோற்றவுடன் நாம் இனிமேல் நம்மலால் முடியாது என்று விலகி போக கூடாது மீண்டும்,மீண்டும் முயற்சிக்கணும் அப்போது தான் ஜாணை போல வெற்றியடைய முடியும்

29.காலம் பொன் போன்றது
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
30. உயர்வு தரும் ஒழுக்கம்..!

‘ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி’
திருவள்ளுவர், இந்தக் குறளில் ‘ஒழுக்கத்தால் மேன்மை கிடைக்கும் என்றும், ஒழுக்கம் தவறுவதால் பழி ஏற்படும்’ என்றும் ஒழுக்கத்தின் சிறப்பை வலியுறுத்துகிறார். கல்வி கற்கும் மாணவர்களாகிய நாம் ஒழுக்கத்தையும், கல்வியையும் இரு கண்களாக கடைப்பிடித்து வாழ்க்கைக் கல்வியை பயின்று சிறப்புற வேண்டும். ஒழுக்கத்தை காலம்தோறும் பேணிக் காக்க வேண்டும்.
நம்மை நல்வழிகளில் நெறிப்படுத்தி, மேன்மையோடு கூடிய வாழ்வில் தழைக்கச் செய்யும் பண்பே ஒழுக்கம் ஆகும். வாழ்வில் ஒழுங்கைக் கடைப்பிடித்து வாழ்வதே நாம் தலைச்சிறந்து வாழ வழிவகுக்கும். ஒழுங்கு என்பது சாட்சிகள் இல்லாத இடத்திலும் தவறிழைக்காமல் நேர்மையாக நடப்பதாகும். இதை முன்னோர் அறநெறிகள், அனுபவங்கள் மூலம் ஒழுக்கத்தை உணர்த்திச் சென்றுள்ளனர். நீதி நூல்களாக எழுதி வைத்து உள்ளனர்.
மாணவர்களாகிய நாம், நேர்மையுடன், பொறுப்புடன், சமூகப் பொறுப்பு கொண்டோராக வளர வேண்டும். ஆசிரியர்கள், பெரியோர்கள் வழிகாட்டும் பழக்க வழக்கங்களை பின்பற்றி, அறிவினால், திறமையினால் சிறந்த சிந்தனை கொண்டோராக செயல்பட வேண்டும்.
நீதி நூல்கள்:
நீதி நெறிகளை நமக்கு வலியுறுத்தும் நோக்குடன் நம் சான்றோர்கள் இயற்றிய நீதிநூல்கள் பல நீதிக்கருத்துகளை எளிய நடையில் நமக்கு எடுத்துரைப்பதாக உள்ளன. அவைகளில் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், திருக்குறள், நாலடியார், திரிகடுகம், சிறுபஞ்ச மூலம், பழமொழி முதலிய நூல்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்திரை பதித்தவை ஆகும். இவற்றில் திருக்குறள், உலகளவில் தமிழர்களின் ஒழுக்க நெறிகளை பறைசாற்றும் ஒப்பில்லா நூலாக புகழப்படுகிறது. அதனால்தான் அதை ‘உலக பொதுமறை’ என போற்று கிறார்கள். உலக மொழிகள் பலவற்றில் மொழிப்பெயர்க்கப்பட்டு பயிலப்படுகிறது.
‘ஒழுக்கம் விழுப்பம் தரும்’ என்பது குறள் நெறி. விழுப்பம் என்றால் உயர்வு என்று பொருள். ஒழுக்கம் வாழ்வில் உயர்வைத் தருவதால் ஒழுக்கத்தை உயிரினும் பெரியதாய் மதித்துப் போற்ற வேண்டும் என்று வள்ளுவர் குறளின் வழியே வலியுறுத்துகிறார். ஒருவர் தம் வாழ்வில் நன்மை அடைய வேண்டுமென்றால் நல் ஒழுக்கத்தை கடைப்பிடித்து வாழ்தல் அவசியமானது. இக்கருத்தையே வள்ளுவர் “நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்” என்று விளக்குகிறார். நல்லொழுக்கத்தோடு கூடிய உயர்வே நிலைக்கும், தழைக்கும்.
ஒழுக்கக் கல்வி:
பள்ளிப்பருவத்தில் கவனத்துடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ளாவிட்டால், வாழ்க்கைப் பாதையில் வழுக்கி விழ நேரும். நம்மை வழுக்கி விழாமல் தாங்கிப்பிடிக்கும் ஊன்றுகோல் ஒழுக்கமுடையோர் வாய்ச்சொல்லும், நம் தமிழ் நீதி நூல்களும்தான். எந்த நிலையிலும் நமக்கு தீர்க்கமான வழியை அறம் சார்ந்தே போதித்து வழிநடத்தும் வழிகாட்டிகள், நீதிநூல்கள் தான்.
மாணவர்களாகிய நாம், பாடங்களில் கற்கும் நீதிக் கருத்துக்களைத் தேர்வு முடிந்தவுடன் மறந்து விடுதல்கூடாது. மாணவ பருவத்திலேயே ஒழுங்கையும், கட்டுப்பாட்டையும், நாட்டுப்பற்றையும் மேலும் வளர்த்து, எந்த வித பேதங்களும் இன்றி அனைவரையும் மதிக்க வேண்டும். வாழ்க்கை முழுவதும் கற்ற நெறிப்படி நடக்க வேண்டும். இதையே வள்ளுவர், “கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்று அழகாகவும், தெளிவாகவும் உலக மாந்தருக்கு எடுத்துரைக்கிறார்.
மாணவர்களாகிய நாம் திரைப்படம், தொலைக்காட்சி போன்ற புறக் கவர்ச்சிகளில் அடிமையாகி நம் வாழ்வை வீணடிக்காமல் உயிரினும் மேலான ஒழுக்கத்தையும், அறிவூட்டும் கல்வியையும் செம்மையாக்கி கற்று, கற்ற நல்நெறிகளை வாழ்வில் கடைப்பிடித்து வாழ்ந்தால் சிறக்கலாம். நெறி தவறாமல் வாழ்ந்து சிறப்போம்! நாட்டின் பெருமை காப்போம்!
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

32. இக்கரைக்கு அக்கரை பச்சை!

அம்மாவுக்கு கவலை, அப்பாவுக்கு கவலை, பெண்ணுக்கு கவலை, பிள்ளைக்கு கவலை, கோடிவீட்டு கோமளா, மாடி வீட்டு மாலதி, எதிர்வீட்டு எத்திராஜ், அடுத்தவீட்டு அங்கு சாமி, பக்கத்துவீட்டு பங்கஜம்மாள், முதல் வீட்டு முத்து சாமி, கடைசி வீட்டு கந்த சாமி – இப்படி எல்லோரும் கவலைக் கடலில் மூழ்கித் தத்தளித்தனர். அந்த ஊருக்கு ஒரு சாமியார் வந்தார்.
உங்கள் எல்லோருடைய கவலையையும் போக்கவல்ல ஒரே ஆசாமி, இறைவனே. ஆகையால் பலமாகக் கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் என்றார். ஊர் கூடி தேர் இழுத்தது போல, ஊரே கூடி ப்ராரத்தனை செய்தது. இறைவன் பக்தி வலையில் எளிதில் சிக்குவான். ஆகவே பகதர்களின் பிராத்தனையை செவிமடுத்து ஓடிவந்தான்.
இது என்ன? இவ்வளவு பேரும் கூடிப் பிரார்த்திக்கிறீர்களே! என்ன விஷயம் ?என்றான். எல்லோரும் சேர்ந்து ஒப்பாரி வைத்தனர். எனக்கு இந்தக் கவலை, அந்தக் கவலை என்று மூச்சுவிடாமல் அடுக்கினர்.
இறைவன் சொன்னான், “இதோ பாருங்கள். இது உங்கள் பிராரப்த கர்மம். அனுபவித்தே தீர வேண்டும் ஆனால் ஒரு சலுகை தருகிறேன். இதோ இந்த பெரிய சமவெளியில் உங்கள் கவலைகளை எல்லாம் தூக்கி எறியுங்கள் என்றான். உடனே பக்த கோடிகள் எல்லோரும் கவலைகளை விட்டெறிந்தனர். கவலைகள் மலை அளவுக்கு உருப்பெற்று, இமயமலைக்குப் போட்டியாக கவலை மலை உண்டானது.
கடவுள் சொன்னார், “நல்லது; இப்பொழுது இதிலிருந்து ஏதாவது ஒரு கவலையைப் பொறுக்கி எடுங்கள், பின்னர் வீட்டுக்குப் போகலாம் என்றார். உடனே எல்லோரும் கவலை மலை மீது பாய்ந்து, இதுவரை தான் அனுபவித்த பெரிய கவலையை ஒதுக்கிவிட்டு, ஜாக்கிரதையாக மற்றவனின் கவலையை எடுத்தனர்.
கண்தெரியாதவர், கண்களையுடைய முடவனின் கவலையைப் பெற்றார். குழந்தை இல்லாத மலடி தன், கவலையை விட்டு, குழந்தையுள்ளவளின் கவலையை எடுத்தாள். பணக்காரனின் கவலையை ஏழை எடுத்தான். இப்படி ஒவ்வொருவரும் தனது கவலையை விட்டு மற்றவனின் கவலையுடன் மாற்றுப் போட்டுக் கொண்டனர். எல்லோரும் , “அப்பாடா, இனிமேல் எல்லாம் இன்பமயம்தான், நம் வாழ்வு வளம் பெறும் என்று பெரு மூச்சுவிட்டனர். மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.
இரண்டே நாட்களில் ஊர் முழுதும், பெரிய முக்கல், முனகல் சப்தம். கடவுளே என்னால் இந்தப் புதிய கவலையைப் பொறுக்கவே முடியாது. பழைய கவலையே பரவாயில்லை. அதுவாவது பழகிப் போய்விட்டது என்று கதறினர்.
மீண்டும் கூட்டுப் பிராரத்தனை. கடவுள் மனமிரங்கி இரண்டாவது முறை தோன்றி, அன்பர்களே, நண்பர்களே! இப்போது என்ன பிரச்சனை? என்றார். எல்லோரும் இக்கரைக்கு அக்கரை பாசை என்று எண்ணி ஏமாந்துவிட்டோம். தயவுசெய்து எங்களுடைய பழைய கவலைகளைத் திரும்ப எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றனர்.
இறைவனும் “ததாஸ்து” (அப்படியே ஆகட்டும்) என்று ஆசீர்வதித்தார்.
இறைவன் எல்லோருக்கும் சரியாகப் படி அளந்துள்ளான். விரலுக்கேற்ற வீக்கத்தையும், ஏழைக்கேற்ற எள்ளுருண்டையையும் கொடுத்திருக்கிறான். அதை விளங்கிக் கொண்டு, ஏற்றுக் கொண்டால் கவலை என்பதே இராது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
33. தாயிற் சிறந்த கோவிலும் இல்லை/ நேர்மையின் வலிமை

கணேஷ் மிகவும் சந்தோஷமாக இருந்தான். மனத்தில் ஏற்பட்ட நிறைவை அமைதியாக ஏற்று அனுபவித்தான்.
‘தாயிற் சிறந்த கோவிலும் இல்லை. தந்தைசொல் மிக்க மந்திரமுமில்லை’ என்பது மிகவும் உண்மை என்று உணர்ந்தான்.
மனத்தை பக்குவப்படுத்த தாயின் அன்பும், தந்தையின் அறிவுரைகளும் எத்தனை உதவி புரிகின்றன என்றும் சிந்தித்தான்.
அம்மா லட்சுமி தினமும் அவனுக்கு வீட்டுப் பாடங்களில் உறுதுணையாக இருப்பதுடன், நிலா முற்றத்தில் அமர்ந்து சாதத்தைப் பிசைந்து அவனுக்குக் கொடுத்தபடி, நீதிக்கதைகள் சொல்வாள். அவன் உள்ளத்தைப் பண்படுத்தும் பல தத்துவங்களை அப்பா கூறுவார்.
இருவருமே நேர்வழி தவற விடமாட்டார்கள். நேர்மையின் வலிமையை அடிக்கடி நினைவூட்டுவார்கள். அன்று கடினமான கணக்குத் தேர்வு. தெரியாத பல கணக்குகளைக் கணேஷிற்காகத் தன் ஆசிரியத் தோழியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு வந்து பல பயிற்சிகளை அவனுக்கு அளித்தாள் அம்மா. அவன் கணக்கில் சற்றுப் பலவீனமாக இருந்தான். அதுவே அவனை முதல் நிலைக்குப் போகவிடாமல் தடுத்தது. கணக்கில் முழு மதிப்பெண் பெறும் பிரதாப் தான் எப்போதும் முதல் நிலையில் இருந்தான். அதில் அவனுக்குப் பெருமையும் கூட. சில சமயம் மற்றவர்களை மட்டமாக நினைப்பான், ஏன் கேலியாகப் பேசியதும் உண்டு. கணேஷ் கூட அவன் கேலிப்பேச்சிற்கு ஆளாகி இருக்கிறான்.
இந்தத் தடவை எப்படியாவது முயன்று முழு மதிப்பெண்கள் பெற எண்ணினான் கணேஷ். அதற்காக மிகவும் பாடுபட்டான். மற்ற மாணவர்களும் கணேஷை ஊக்குவித்தனர். பிரதாப்பை வீழ்த்த அறிவுரை கூறினார்கள்.
அம்மா அடிக்கடி வலியுறுத்தினாள். "போட்டி இருக்கலாம்; பொறாமை இருக்கக் கூடாது. நம் வழியில் நாம் முன்னேற வேண்டும். பிறரின் தீய குணங்களைக் கண்டால் நமக்கு அக்குணங்கள் வராமல் மட்டுமே காத்துக் கொள்ள வேண்டும். பழி வாங்குதல் என்ற தீய எண்ணத்தை எப்போதும் தவிர்க்க வேண்டும்" என்றாள்.
கணேஷ் தேர்வில் மிக நன்றாக எழுதியிருந்தான். முடிவை எதிர் பார்த்திருந்தான்.
இன்று பரீட்சை முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. பிரதாப் எப்போதும் போல் சற்றுக் கர்வத்துடனேயே அமர்ந்து இருந்தான். கணேஷ் ஆவலுடன் விடைத்தாளை வாங்கினான். நண்பர்கள் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
வகுப்பில் இருவர் முதல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்று ஆசிரியர் அறிவித்தார். பிரதாப்பும், கணேஷும்தான் அவர்கள் என்றும் தெரிவித்தார்.
பிரதாப்பிற்குப் புருவம் சற்றே உயர, அமைதியாகப் புன்னகை செய்தான் கணேஷ். நண்பர்கள் தங்கள் மகிழ்ச்சியை உற்சாகத்துடன் வெளிப்படுத்தினார்கள்.
ஆசிரியர் வேண்டிக் கொண்டதன் பேரில் ஒவ்வொருவராக எழுந்து தங்கள் மதிப்பெண்களைக் கூறிக் கொண்டு வந்தனர். கணேஷ் முறை வந்ததும், அவன் தயங்கி நின்றான்.
"ஏன் கணேஷ், உன் மார்க்கையும் கூற வேண்டியது தானே?"
"சார்….வந்து….." ஏதோ சொல்ல விழைந்தான் அவன்.
"சொல்லுப்பா………" விடைத்தாளை ஆசிரியரிடம் கொண்டு சென்று விளக்கினான்.
எல்லாம் சரியாக இருந்தாலும் ஒரு சிறிய கணக்கின் விடையை மாற்றி எழுதி விட்டான் கவனக் குறைவில். அதற்காக மதிப்பெண்கள் குறைக்கப்பட்டாலும், சிறு கணக்குகள் பிரிவின் கூட்டலில், அவசரத்தில் மொத்த மதிப்பெண்களையும் ஆசிரியர் தந்துவிட, கண்டு கொண்ட கணேஷின் மனம் ஒப்பவில்லை. இதைச் சுட்டிக் காட்டாமல் விட்டுவிட்டால் அவனும் முதல் மதிப்பெண் பெற்ற மாணவனாகத்தான் இருப்பான். அம்மா அடிக்கடி நேர்மையைப் பற்றி கூறுவது நினைவுக்கு வந்தது.
"உன் படிப்பைப் போல் உன் நன்னடத்தையும் மிக மிக முக்கியம் கணேஷ்" என்று அப்பா அறிவுறுத்தும் வார்த்தைகளும் செவியில் ஒலித்தன.
ஆசிரியரிடம் பிழையைச் சுட்டிக் காட்டினான். அவர் திருத்தலைச் செய்து மதிப்பெண்ணைக் குறைத்துவிட்டு அவனைத் தட்டிக் கொடுத்தார். அவனுடைய நண்பர்களுக்கோ அளவற்ற வருத்தம். பிரதாப்பிற்கு மீண்டும் குதூகலம், தனக்கு மட்டுமே முதல் மதிப்பெண்ணிற்கான பரிசு கிடைக்கும் என்று. ஆசிரியர் முதல் மதிப்பெண்ணுக்கு பரிசு உண்டென அறிவித்திருந்தார்.
ஆசிரியர் எழுந்தார். "வழக்கம் போல் கணிதத்தில் முதலாவதாக வந்த பிரதாப்பிற்கு என் பாராட்டுக்கள். நீங்களும் முதலில் வர முயல வேண்டும். இதோ அதற்கான பரிசு. பிரதாப் பெற்றுக்கொள்". அழகிய பேனா ஜோடியை அவனுக்குப் பரிசாக அளித்தார்.
"மாணவர்களே, இதோ மற்றொரு பரிசு, கணேஷிற்கும்" எல்லா மாணவர்களும் ஆச்சிரியத்துடன் பார்த்தனர்.
"ஆமாம்! மிகவும் அக்கறையுடன் முயன்று நன்றாக எழுதி முதலிடம் பெற்றாலும், மிகச் சிறிய தவறினால் அதை இழந்து நின்றான் கணேஷ். அவன் நினைத்திருந்தால் என் கவனக்குறைவைப் பயன்படுத்தி முதல் மதிப்பெண்ணைத் தக்க வைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அவன் அப்படிச் செய்யவில்லை. நேர்மையைப் பெரிதாக எண்ணியுள்ளான். இது மிகவும் போற்றத்தக்கது. இளம் வயதிலேயே சிறு விஷயத்திலும் நேர்மையைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தீர்கள் என்றால், பின்னால் மிக நல்ல மனிதர்களாக உருவாவீர்கள். கணேஷ் மாதிரி நீங்களும் நேர்வழியில் நடக்க முயற்சிக்க வேண்டும். என் நல்வாழ்த்துக்கள் கணேஷ்! வந்து பரிசைப் பெற்றுக்கொள்"
ஆசிரியர் முடித்ததும் பலத்த கைதட்டல்கள். தங்கள் நண்பனை மனமாற வாழ்த்தினார்கள்.
பிரதாப்பிற்கும் மனம் இளகி விட்டது. எத்தனை உயர்ந்தவன் கணேஷ். சிறு விஷயத்திலும், அதுவும் பலத்த போட்டியிலும் நேர்மையே பெரிதாக எண்ணி முதலிடத்தை விட்டுள்ளானே. பலமுறை கணேஷ் செயல் அவனுக்குப் பெரிதாகத் தோன்ற, தான் பெற்ற முதலிடம் அவன் செயலின் முன் சிறிதாகவே தோன்றியது. மனம் மாறிய பிரதாப் கணேஷைப் பாராட்டினான். தன் கேலிச் சொற்களுக்கு மன்னிப்பும் கேட்டான்.
கணேஷை அனைவரும் புகழ்ந்து பேசிக் கொண்டார்கள். சிறிய விஷயம் எனினும் பெருமை பெற்றதாகிவிட்டது அவனின் நற்செய்கை.
வீட்டிற்குச் சென்று பெற்றோர்களிடம் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள நினைத்தான். பெற்றோர்களின் அறிவுரைகள் இல்லாவிட்டால் தான் இப்படி நடந்திருக்க முடியாது என்றும் நம்பினான்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
34. கெடுவான் கேடு நினைப்பான்.
ஆத்தூர் என்ற ஊரில் ஒரு பள்ளி இருந்தது. சிறு

கிராமமாக இருப்பதால் அங்கு உள்ள பள்ளியில் எட்டாவது வரை

மட்டுமே இருந்தது.அந்தப் பள்ளியில்தான் சேதுவும் தமிழும் படித்து

வந்தனர்.தமிழ் மிகவும் பணிவும் நல்ல பண்பும் மிக்கவனாகத்

திகழ்ந்தான்.ஆனால் சேதுவோ அவனுக்கு நேர் எதிர் பண்புகள்

உள்ளவனாக இருந்தான்.
எப்போதும் ஆத்திரம் அவசரம் கொண்டவனாகவும் சுயநலமிக்கவனாகவும் திகழ்ந்தான்.தன சுய நலத்திற்காகயாரையும் அவன் எதிர்க்கத் தயங்கமாட்டான்.அவனைக் கண்டால் தமிழுக்கு மட்டுமல்ல பல மாணவர்களுக்குப் பயம்.ஆனால் தமிழைக் கண்டால் இளக்காரமாக நடத்துவார்கள். அவன் யாரையும் கடிந்து கூடப் பேசமாட்டான். மிகவும் அன்பாகப் பேசுவான்.
ஒருமுறை நாட்டின் குடியரசு தினம் வந்தது.
அந்த விழாவை மிகவும் சிறப்பாகக் கொண்டாடவேண்டும் என்று அவ்வூர் பெரிய மனிதர்கள் முடிவெடுத்தார்கள்.அவ்வூரின் பெரிய தனவந்தர் குடியரசு தினத்தன்று பிள்ளைகளுக்குப் பரிசு கொடுப்பதாய் அறிவித்தார்.எல்லோரும் ஒரே ஆவலாக இருந்தனர்.என்ன பரிசு கொடுப்பார்? இத்தனை பேருக்கும் அவர் என்ன பரிசு கொடுக்க முடியும்?என்ற சந்தேகத்தோடு இதுவாக இருக்குமா,அதுவாக இருக்குமா என்றெல்லாம் பேசிக்கொண்டே ஒரு வாரத்தை ஓட்டினர்.
கடைசியாக அந்தநாளும வந்தது அதிகாலையிலேயே எழுந்து குளித்து முதல்நாள் துவைத்து வைத்த சீருடையைப் போட்டுக் கொண்டு பள்ளிக்கு வந்து முதலாவதாக நின்றுகொண்டான் தமிழ்.அவனுக்குப் பின்னால் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர்.ஒருவர்பின் ஒருவராக நிற்கத் தொடங்கினர்.
தலைவர் வந்து கொடியேற்றியபின் அனைவரையும் வரிசையாக நிற்கச் சொன்னார் தலைமை ஆசிரியர்.
அனைவரும் வரிசையாக நிற்க பணியாள் பெரிய மூட்டையைக் கொண்டுவந்து தலைவர் அருகே வைத்தான்.அப்போது எங்கிருந்தோ உள்ளேபுகுந்த சேது அதிகாரமாக முதலாவதாக நின்று கொண்டிருந்த தமிழை வரிசையை விட்டுத் தள்ளிவிட்டு தான் போய் நின்று கொண்டான்.அடுத்தடுத்து அவனை நிற்க விடாமல் எல்லோரும் அவனைத் தள்ளி விட்டனர்.தமிழுக்கு இப்போது வரிசையின் கடைசியில்தான் இடம் கிடைத்தது.
தலைவர் இதைக் கவனித்துக் கொண்டிருந்தார்.இவர்களுக்குப் புத்தி புகட்ட ஒரு வழியைக் கண்டார்.
அவர் பேசிவிட்டு பரிசு கொடுக்க எண்ணினார்."மாணவ மணிகளே
உங்களுக்கெல்லாம் பரிசு தரவந்துள்ளேன் எப்போதும் எல்லோரும் வரிசையாகத்தான் பரிசு கொடுப்பார்கள் நானும் வரிசையாகத்தான் பரிசளிக்கப் போகிறேன்."என்றவுடன் சேது தனக்குத் தான் முதலில் பரிசு கிடைக்கும் என்று பெருமையாக நின்றான்.தலைவர் தொடர்ந்து பேசினார்."ஆனால் நன் முதலிலிருந்து தரமாட்டேன் கடைசியிலிருந்து பரிசு தரப் போகிறேன்.கடைசிப் பையன் யாரோ வரட்டும்."
தமிழ் எதிர்பாராத அழைப்பால் திகைத்தவன் பின் அவரிடம் சென்று நன்றி ஐயா என்று சொல்லிவிட்டுப் பரிசுடன் சென்றான்.
கடைசியில் கூடை காலியாகிக் கொண்டே வந்தது.சேதுவின் முறை வந்தபோது பெட்டி காலியாகிவிட்டது என்று சொல்லி பரிசு வரும் வரை சற்று நேரம் காத்திரு என்று சொல்லிச் சென்று விட்டார் தலைவர்.தன பரிசுக்காகத் தனிமையில் வெகுநேரம் காத்திருந்தான் சேது. ஒருவழியாக அந்தப் பணியாள் ஒரு பரிசுப் பொட்டனத்தைத் தந்தான். தலைவர் கையால் வாங்காமல் பணியாள் கையால் வாங்குகிறோமே என்று எண்ணி நொந்தபடியே சென்றான் சேது.அப்போது அவன் மனம் இடித்தது. "தமிழுக்கு நீ கெட்டது நினைத்தாய். உனக்கே அந்தக் கேடு வந்தது.இதைத்தான் அந்தக் காலத்தில் "கெடுவான் கேடு நினைப்பான்"என்று சொல்லிவைத்தார்கள் போலும். இனியேனும் யாருக்கும் கெடுதல் செய்யாமல் இருக்கப் பழகு "என்றதை மனவருத்தத்துடன் கேட்டுக் கொண்டான் மனம் திருந்திய சேது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

35. செய்வன திருந்தச் செய்
நீதி: மனசாட்சி
உபநீதி : நேர்மை
பணக்காரர் ஒருவர் சிலை ஒன்றை வாங்க சிற்பியை அணுகினார். அப்போது, சிற்பி கோபுரத்தின் நான்காவது தளத்தில் வைப்பதற்காக அம்மன் சிலை வடித்துக் கொண்டிருந்தார். அந்த சிலையைப் போலவே, மற்றொரு அம்மன் சிலையும் அங்கிருந்ததைப் பணக்காரர் கவனித்தார்.
“ஒரே கோவிலுக்கு இரண்டு அம்மன் சிலைகள் செய்கிறீர்களே…ஏன்?” என்று கேட்டார் பணக்காரர்.
“ஐயா! கவனக்குறைவால் முதலில் செய்த சிலை உடைந்து விட்டது. எனவே இன்னொன்றைச் செய்கிறேன்,” என்றார் சிற்பி.
“இந்தச் சிலையின் மூக்கில் சிறு கீறல் தானே விழுந்திருக்கிறது! நான்காவது கோபுரத்தில் வைக்கப்போகும் இதை யார் கவனிக்கப் போகிறார்கள். இதையே வைத்து விட வேண்டியது தானே!” என்றார் பணக்காரர்.
அதற்கு சிற்பி, “மற்றவர்கள் கண்ணுக்கு தெரியாது என்பது என்னவோ உண்மை தான். ஆனால் நான் இந்த இடத்தைக் கடக்கும் போதெல்லாம், இது கண்ணில் பட்டு என் மனசாட்சி உறுத்துமே,” என்றார் சிற்பி.
நீதி:
எந்தத் தொழிலாயினும் அதை மனசாட்சிக்கு விரோதமின்றி திருப்தியுடன் செய்ய வேண்டும். அது மட்டுமல்ல! ஏமாற்றவும் கூடாது…
-----------------------------------------------------------------------------------------------------------------------------

பறவைகள் விலங்குகள்
ஆந்தை - அலறும் நாய் - குரைக்கும்
கோழி - கொக்கரிக்கும் நரி - ஊளையிடும்
குயில் - கூவும் குதிரை கனைக்கும்
காகம் - கரையும் கழுதை - கத்தும்
கிளி - கொஞ்சும் பன்றி - உறுமும்
மயில் - அகவும் சிங்கம் - முழங்கும்
கோட்டான் - குழலும் பசு - கதறும்
வாத்து - கத்தும் எருது - எக்காளமிடும்
வானம்பாடி - பாடும் எலி - கீச்சிடும்
குருவி - கீச்சிடும் தவளை - கத்தும்
வண்டு - முரலும் குரங்கு - அலம்பும்
சேவல் - கூவும் பாம்பு - சீறிடும்
கூகை - குழலும் யானை - பிளிரும்
புறா - குனுகும் பல்லி - சொல்லும்
------------------------------------------------------------------------------------------------------------
பறவை மற்றும் விலங்குகளின் இளமைப் பருவம்
புலிப்பரள் சிங்கக்குருளை
பூனைக்குட்டி எலிக்குஞ்சு
நாளிணிக்குட்டி கோழிக்குஞ்சு
குதிரைக்குட்டி கீரப்பிள்ளை
கழுதைக்குட்டி மான்கன்று
ஆட்டுக்குட்டி யானைக்கன்று
பன்றிக்குட்டி
----------------------------------------------------------------------------------------------------------
தாவரங்களின் உறுப்புப் பெயர்கள்
சோளத்தட்டு முருங்கைக்கீரை
தாழைமடல் தென்னங்கீற்று
வாழையிலை பனையோலை
வேப்பந்தழை மாவிலை
மூங்கில் இலை நெல்தாள்
-------------------------------------------------------------------------------------------------------------
செடி, கொடி மரங்களின் தொகுப்பு
பூந்தோட்டம் மாந்தோப்பு வாழைத்தோட்டம்
தேயிலைத் தோட்டம் சோளக்கொல்லை சவுக்குத்தோப்பு
தென்னந்தோப்பு பனங்காடு வேலங்காடு
---------------------------------------------------------------------------------------------------------------
பொருட்களின் தொகுப்பு பெயர்கள்
ஆடு - மந்தை மாடு - மந்தை
எறும்பு - சாரை கல் - குவியல்
சாவி - கொத்து திராட்சை - குலை
பசு - நிரை யானை - கூட்டம்
வீரர் - படை வைக்கோல்- போர்
விறகு - கட்டு மக்கள் - தொகுப்பு
---------------------------------------------------------------------------------------------------------------
வழூஉச் சொற்களும் தமிழ்ச்சொற்களும்
வழுஉச்சொல் தமிழ்சொல் வழூஉச்சொல் தமிழ்சொல்
உசிர் - உயிர் ஊரளி - ஊருளி
ஒருத்தன் - ஒருவன் கடகால் - கடைக்கால்
குடக்கூலி - குடிக்கூலி முயற்சித்தார் - முயன்றார்
வண்ணத்திப்பூச்சி - வண்ணத்துப்பூச்சி வென்னீர் - வெந்நீர்
எண்ணை - எணணெய் சிகப்பு - சிவப்பு
தாவாரம் - தாழ்வாரம் புண்ணாக்கு - பிண்ணாக்கு
கோர்வை - கோவை வலது பக்கம் - வலப்பக்கம்
பேரன் - பெயரன் பேத்தி - பெயர்த்தி
தலகாணி - தலையணை வேர்வை - வியர்வை
சீயக்காய் - சிகைக்காய் சுவற்றில் - சுவரில்
இருபல் - இருமல் அருவாமனை- அரிவாள்மனை
அண்ணாக்கவுரு- அரைநாண்கயிறு புஞ்சை - புன்செய்
புண்ணாக்கு - பிண்ணாக்கு நாத்தம் - நாற்றம்
பதனி - பதிநீர் அருகாமை - அருகில்
வெங்கலம் - வெண்கலம் பேட்டி - நேர்காணல்
வெண்ணை - வெண்ணெய் ஒத்தடம் - ஒற்றடம்
தேனீர் - தேநீர் கவுறு - கயிறு
பயிறு - பயறு பாவக்காய் - பாகற்காய்
ரொம்ப - நிரம்ப கோடாலி - கோடாரி
கடப்பாறை - கடப்பாரை ஆம்பளை - ஆண்பிள்ளை
ஈர்கோலி - ஈர்கொல்லி அவரக்கா - அவரைக்காய்
---------------------------------------------------------------------------------------------------------------
வேற்றுமொழிச்சொல்-தமிழ்ச்சொல்
பஜனை - கூட்டுவழிபாடு வைத்தியர் - மருத்துவர்
ஜனம் - மக்கள் கர்வம் - செருக்கு
வாபாஸ் - திரும்பபெறுதல் தபால் - அஞ்சல்
கிஸ்தி - வரி அலமாரி - நெடும்பேழை
முண்டாசு - தலைப்பாகை சிம்மாசனம் - அரியணை
அகங்காரம் - ஆணவம் பஜார் - கடைத்தெரு
சாதம் - சோறு சபை - அவை
நாஷ்டா - சிற்றுண்டி ஆசீர்வாதம் - வாழ்த்து
நமஸ்காரம் - வணக்கம் லாபம் - ஈவு
இஷ்டம் - விருப்பம் வக்கீல் - வழக்குரைஞர்
தராசு - துலாக்கோல் ஹாஸ்டல் - விடுதி
சர்க்கார் - அரசு கேப்பை - கேழ்வரகு
ஐதீகம் - சடங்கு வேதம் - மறை
ஜானவாசம் - மாப்பிளை அழைப்பு அபிஷேகம் - திருமுழுக்கு
யாத்திரை - புனிதப் பயணம் ஆயுள் - வாழ்நாள்
தீர்த்தம் - புனித நீர் ஜனநாயகம் - குடியாட்சி
நதி - ஆறு சந்தா - கட்டணம்
பிரதிநிதி - சார்பாளர் பத்திரம் - ஆவணம்
மத்தியாணம் - நண்பகல் சிபாரிசு - பரிந்துரை
பரீட்சை - தேர்வு பிரார்த்தனை - தொழுகை
சென்ட்ரல் கவர்ன்மெண்ட் - நடுவண் அரசு
தாலுகா ஆபிஸ் - வட்டாட்சியர் அலுவலகம்
A bad work man blames his tools
ஆடத்தெரியாதவள் தெரு கோணல் என்றாளாம்
A bad work man blames these tools
ஆண்மையற்ற வீரன் ஆயுதத்தை குறை சொல்வான்.
A bird in hand is worth two in bush
அரசனை நம்பு புருஷனை கைவிடாதே
A cat may look at a king
யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்
A constant guest is never welcome
விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு
A contended mind is a continual feet
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து
A cracked bell never sound well
உடைந்த சங்கு பரியாது
A drawing man will catch at a straw
நீரில் மூழ்குபவனுக்கு துரும்பும் தெப்பமாகும்
A fog cannot be dispelled with a fan
சூரியனை கையால் மறைக்க முடியுமா?
A friend in need is a friend in deed
ஆபத்தில் உதவும் நண்பனே உண்மையான நண்பன்
A friend in need is a friend indeed
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
A good face needs no paints
அழகிய முகத்திற்கு அரிதாரம் தேவையில்லை
A good reputation is a fair estate
நற்குணமே சிறந்த சொத்து
A guilty conscience needs no Accuser
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
A honey tongue and a heart of gall
அடி நாக்கில் நஞ்சும், நுனி நாக்கில் தேனும்
A hungry man is an angry man
பசி வந்தால் பத்தும் பறந்து போகும்
A journey of a thousand miles begins with a single step
ஆயிரம் கல் தொலைவுப் பயணமும் ஒரே ஒரு எட்டில்தான் தொடங்குகிறது
A liar is not believed when he speaks the truth
பொய்யன் உண்மை பேசும் போது யாரும் நம்புவதில்லை
A lie has no legs
கதைக்கு காலில்லை
A little learning is a dangerous thing
அரை குறை படிப்பு ஆபத்தானது
A little pot is soon hot
சிறிய பானை சீக்கிரம் சூடாகும்
A little stream will run a light mill
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
A little string will tie a little bird
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
A low hedge is easily leaped over
ஏழை என்றால் மொழையும் பாயும்
A man in debt is caught in net
கடன் பட்டவன் தூண்டிலில் அகப்பட்ட மீனாவான்
A pen is mightier than a sword
கத்தி முனையைவிட பேனா முனை வலிமை வாய்ந்தது
A Penny saved is a Penny earned
ஒரு காசு பேணின், இரு காசு தேறும்
A penny saved is a penny gained
சிறு துளி பேரு வெள்ளம்
A rolling stone gathers no moss
அலைபாயும் மனத்தால் எதையும் செய்ய முடியாது
A single swallow can not make a summer
தனி மரம் தோப்பாகாது
A snake could make an army panic
பாம்பென்றால் படையும் நடுங்கும்
A sound mind in a sound body
உடல் வலுவுற்றால், உள்ளம் வலுவுறும்
A sound mind in a sound body
வலுவான உடலில் தெளிவான மனம்
A stitch in time saves nine
ஒரு தையல் போட்டால், ஒன்பது தையலை தவிர்க்கும்
A stitch in time saves nine
வருமுன் காத்தல் சாலவும் நன்று
A teacher is better than two books
ஒரு ஆசிரியர் இரு புத்தகங்களை விட மேலானவர்
A thief knows a theif
பாம்பின் கால் பாம்பறியும்
A thing of beauty is joy for ever
பொலிவான பொருள் பொன்றாத இன்பம் தரும்
A tree is known by its fruit
நல்லார் பொல்லாரை நடக்கையால் அறியலாம்
A wild goose never lay a lame egg
புலிக்கு பிறந்தது பூனையாகுமா?
A word hurts more than a wound
தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு
A young calf knows no fear
இளங்கன்று பயமறியாது
Ability is of little account without opportunity
வாய்ப்பில்லாத திறமைக்கு வருமா பெருமை?
Add fuel to fire
எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றினாற் போல
After a dinner sleep a while
உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு
After a strom cometh a calm
ஒரு புயலுக்கு பிறகு அமைதி உண்டாகும்
After death, the doctor
கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்
All are not saints that go to church
சாம்பல் பூசியவரெல்லாம் சாமியார் அல்ல
All is well that ends well
ஓட்டைச் சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி
All roads lead to Rome
எல்லா மதங்களும் அன்பை போதிக்கின்றன
All that glitters is not gold
மின்னுவதெல்லாம் பொன்னல்ல
All things come to those who wait
பொறுத்தவர் பூமி ஆள்வார்
All this fair in love and war
ஆபத்துக்கு பாவமில்லை
All work and no play makes Jack a dull boy
ஓய்வில்லாத உழைப்பு உப்பில்லாத உணவு
An idle brain is the devils work shop
பயனாகாத மூளை பூதத்தின் பணி மனை
An injury forgiven is better than that revenged
பழியை விட மன்னிப்பு வலிமையானது
Appearance is deceitful
உருவத்தை கண்டு ஏமாறாதே
April showers bring forth May flowers
யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே
Art is long and life is short
கல்வி கரையில் கற்பவர் நாள் சில
As angry as a wasp
குழவிக் கூண்டை கோலால் கலைத்தது போல
As is the king, so are subjects
அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி
As rare as hen's teeth
அத்தி பூத்தார் போல
As rare as hen’s teeth
அத்தி பூத்தார் போல்
As you sow, so you reap
திணை விதைத்தவன் திணை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்
As you Sow, so You Reap
வினை விதைத்தவன் விதை அறுப்பான்
Ass loaded with gold still eats thistles
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை
Bare words buy no bar ley
வெறுங்கை முழம் போடுமா?
Barking dogs seldom bite
குரைக்கின்ற நாய் கடிக்காது
Be first at a feast and the last to slander
பந்திக்கு முந்து, படைக்கு பிந்து
Be friendly but not familiar
அனைவருக்கும் நண்பனாக இரு. ஆனால் நெருங்கி பழகாதே
Be just before you are generous
ஆற்றில் போட்டாலும் அளந்து போடு
Be slow to promise but quick to perform
ஆலோசித்து வாக்கு கொடு விரைந்து நிறைவேற்று
Beauty is but skin deep
புற அழகு அழகல்ல, அக அழகே அழகு
Bend the twig, bend the tree
ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா?
Beter pay the cook than the doctor
வைத்தியனுக்கு கொடுப்பதை விட வானிகனுக்கு கொடு
Better an open enemy than a false friend
போலி நண்பனை விட நேரிடை எதிரி மேல்
Better be alone than in bad company
ஒவ்வாக் கூட்டிலும் தனிமை அழகு
Better bend the neck than bruise the fore head
தாழ்ந்தது நின்றால் வாழ்ந்து நிற்பாய்
Better go to bed sleepless than rise in debt
கடனில்ல சோறு கால் வயிறு போதும்
Better later than never
காலம் தாழ்த்தினாலும் கருமத்தை முடிப்பது நல்லது
Birds of the same feather flock together
இனம் இனத்தோடு, வெள்ளோடு தன்னோடு
Bitter is patience but sweet is its fruit
பொறுமை கசப்பானது அதன் பலன் இனிப்பு
Blessings are not valued till they are gone
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
Blood is thicker than water
தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்
Blue are the hills that are far away
இக்கரைக்கு அக்கரை பச்சை
Blue are the hills that are far away
இக்கரைக்கு அக்கரை பச்சை
Books and friends must be few but god
நல்ல நண்பர்களும், நூல்களும் குறைவாக இருப்பது நலம்
Brevity is the soul of wit
சுருங்க சொல்லுதல் அறிவின் அடையாளம்
Brids of same feather flock together
இனம் இனத்தோடு சேரும்
Call a spade a spade
உள்ளதை உள்ளவாறு சொல்
Calm before storm
புயலுக்கு முன் அமைதி
Can a leopard change its spot
சென்மப் புத்தி செருப்பால் அடித்தாலும் போகாது
Carry not coal to New castle
கொல்லன் தெருவில் ஊசி விற்காதே
Cast no pearls before swine
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை
Caution is the parent of safety
முன் எச்சரிக்கையே பாதுகாப்பிக்கு பிதா
Charity begins at home
தனக்குப் போகத்தான் தானமும் தர்மமும்
Christmas comes but once a year
அமாவாசை சோறு என்றும் அகப்படாது
Civility costs nothing
குற்றங்குறைகளால் எதையும் சாதிக்க முடியாது
Cleanliness is next to godliness
தூய்மை கடவுள் தன்மைக்கு அடுத்த பண்பு
Come uncalled, sit un served
அழையா வீட்டுக்கு நுழையா சம்பந்தி
Coming events cast their shadow before
ஆணை வரும் பின்னே; மணியோசை வரும் முன்னே
Constant dripping wears away the stone
எறும்பு ஊர கல்லும் தேயும்
Contentment is more than a kingdom
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து
Count not your chicken before they are hatched
பிள்ளை பெரும் முன் பெயர் வைக்காதே
Courtesy costs nothing
நாகரிகமாக நடக்க பணம் செலவில்லை
Covert all, lose all
பேராசை பெரு நட்டம்
Covet not, lose not
பேராசை பெருநஷ்டம்
Cowards die many times before their death
வீரனுக்கு ஒரு முறை சாவு; கோழைக்கு தினந்தோறும் சாவு
Cut your coat according to your cloth
வரவுக்குத் தக்க செலவு செய்
Dead men tell no tales
குள்ள நரி தின்ற கோழி கூவுமா?
Death keeps no calendar
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
Debt is the worst poverty
ஏழ்மை கடனினும் மேன்மை
Delay is dangerous
தாமதம் தாழ்வுக்கு ஏதுவாகும்
Delay of justice is injustice
தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்குச் சமமாகும்
Desire according to your limitaions
பாய்க்குத் தக்கபடி காலை நீட்டு
Desire is the root of all evil
ஆசையே எல்லாத் தீங்கிற்கும் காரணம்
Diamond cuts diamond
முள்ளை முள்ளால் எடு
Diligence is the mother of good fortune
முயற்சி திருவினையாக்கும்
Discretion is better than valour
விவேகம் வீரத்தினும் சிறப்பு
Distance lends enchantment to the view
இக்கரைக்கு அக்கரை பச்சை
Do good and have good
நன்மை செய்து நன்மை பெற வேண்டும்
Do i Rome as Romans do
ஊரோடு ஒத்து வாழ்
Do into others as you would be done by
தன்னுயிர் போல் மன்னுயிர் நினை
Do not carry coal to new castle
கொல்லன் பட்டறையில் ஊசி விற்காதே
Do not have too manu irons in the fire
ஒரே நேரத்தில் பல வேலைகளில் ஈடுபடாதே
Do not lock the stable door when the horse is gone
கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்யதே
Do not look at gift horse in the mouth
தானம் கொடுத்த மாட்டை பல் பிடித்துப் பார்க்காதே
Do not make a mountain out of a mole hill
மடுவை மலையாக்காதே
Do not oppose an unequal
ஈடாகாதவனை எதிர்க்காதே
Do not rub peter to pay paul
கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்காதே
Do not throw stones from glass house
கண்ணாடி வீட்டில் இருந்து கால் எறியாதே
Do what you can with what you have where you are
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
Doing nothing is doing ill
சோம்பர் என்பவர் தேம்பித் திரிவார்
Double charge will break even a cannon
அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்
Drawn wells seldom dry
இறைக்கிற ஊற்றே சுரக்கும்
Eagles do not catch flies
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது
East or west, home is best
எலி வளையானாலும் தனி வளை வேண்டும்
Eat to live: do not live to eat
வாழ்வதற்காக சாப்பிடு; சாப்பிடுவதற்காக வாழாதே
Empty vessels make the greatest noise
குறை குடம் கூத்தாடும்
Even homer nods
யானைக்கும் அடி சறுக்கும்
Every ass loves his bray
காக்கைக்கும் தன குஞ்சு பொன் குஞ்சு
Every bird must batch its eggs
அழுதாலும் அவள்தான் பிள்ளை பெற வேண்டும்
Every cock will crow upon its dung hill
தன் ஊரில் யானை; அயலூரில் பூனை
Every heart hearth its own ache
தனக்கு வந்தால் தான் தெரியும் தலைவலி
Every Jack has Jill
ராமனுக்கு ஏற்ற சீதை
Every man is mad on some point
சில விஷயங்களில் எல்லா மனிதர்களும் முட்டாள்களே
Every pleasure has a pain
எல்லா இன்பத்துக்குப் பின் ஒரு துன்பம் உண்டு
Every poor man is counted a fool
ஏழையின் சொல் சபை ஏறாது
Every tide has its ebb
எட்ட்ரம் உண்டானால் இறக்கமும் உண்டு
Example is better than precept
சொல்வதை விட செய்வதே மேல்
Experience is the best teacher
அனுபவமே சிறந்த ஆசான்
Fact is stronger than fiction
கற்பனையை விட உண்மை விசித்திரமானது
Failures are stepping stones to success
தோல்வியே வெற்றிக்கு முதற்படி
Faith is the force of life
நம்பிக்கையே வாழ்க்கையின் உந்து சக்தி
Familiarity breeds contempt
பழக பழக பாலும் புளிக்கும்
Faults are thick when love is thin
வேண்டாத பெண்டாட்டி கைபட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம்
Feed by measure and defy the physician
வைத்தியனுக்குக் கொடுப்பதை விட வணிகனுக்கு கொடு
Forgive and forget
மன்னிப்போம், மறப்போம்
God helps those who help themselves
தனக்கு உதவுவோருக்கு உதவுவான் இறைவன்
God is love
அன்பே கடவுள்
God stays long but strikes at last
அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்
Good and Bad are not due others
நன்றும் தீதும் பிறர் தர வாரா
Good beginning makes a good ending
நல்ல தொடக்கம் நல்ல முடிவைத் தரும்
Good clothes open all door
ஆடை இல்லாதவன் அரை மனிதன்
Good Homer sometimes nods
ஆனைக்கும் அடி சறுக்கும்
Good wine needs no bush
பூக்கடைக்கு விளம்பரம் வேண்டுமா?
Grasp all, lose all
பேராசை பெரு நட்டம்
Great minds think alike
பேரறிஞர்கள் ஒரே மாதிரியாக சிந்திப்பர்
Habit is a second nature
தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்
Habits die hard
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்
Half a loaf is better than no bread
ஒன்றுமில்லாததற்கு ஒரு துண்டு ரொட்டி மேலானது
Hanging and wiving go by destiny
தாரமும், குருவும் தலைவிதிப்படியே
Haste makes waste
பதறிய காரியம் சிதறிப் போகும்
He goes borrowing goes sorrowing
கடனில்லாத கஞ்சி கால் வயிறு கஞ்சி
He swells not in prosperity and shrinks not in adversity
பங்குனி பருக்கிறதுமில்லை, சித்திரை சிறுக்கிறதுமில்லை
He that plants a tree, plats for prosperity
ஒரு மரத்தை நட்டாலே ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதற்க்குச் சமம்
He who bends unnecessarily is dangerous
கூழைக் கும்பிடு போடுபவன் ஆபத்தானவன்
He who hunts two hares loses both
பேராசை பேரு நட்டம்
Health is wealth
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
Heavens will burst when innocents suffer
சாது மிரண்டால் காடு கொள்ளாது
Hitch your wagon to a star
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
Hoist your sail when the wind is fair
கற்றுள்ள போதே தூற்றிக் கொள்
Honesty is the best policy
நேர்மையே சிறந்த கொள்கை
Hope for the best. Prepare for the worst
நல்லதை நினை, இடையூறுகளை சிந்திக்கத் தயாராகு
Humility is the best virtue
அடக்கமுடைமை சிறந்த பண்பாகும்
Humility often gains more than pride
அடக்கம் ஆயிரம் பொன் தரும்
Hunger breaks stone walls
பசி வந்தால் பத்தும் பறந்து போகும்
Hunger is the best source
பசி ருசி அறியாது
If you can not bite,never show your teeth
போகாத ஊருக்கு வழி தேடாதே
If you give an inch he will take all
இடத்தைக் கொடுத்தால் , மடத்தை பிடிப்பான்
Ignorance is bliss
அகவிலை அறியாதவன் துக்கம் அறியான்
It is easier to destroy than to create
அழிப்பது சுலபம், ஆக்குவது கடினம்
It is never too late to mend
திருடனும் திருந்தி வாழ வழியுண்டு
It is no use crying over spilt milk
கறந்த பால் மடியேறாது
It is no use crying over spilt milk
சிந்திய பாலை எண்ணி பயனில்லை
It takes two to make quarrel
இரு கை தட்டினால் தான் ஓசை
Jack of all trade is master of none
பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்
Justice delayed is justice denied
தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்கு சமம் ஆகும்
Knowledge is power
அறிவே ஆற்றல்
Lamp at home and a lion at chase
பார்த்தல் பூனை, பாய்ந்தால் புலி
Laugh away your fears
இடுக் கண் வருங்கால் நகுக
Learn ever from an enemy
மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்
Learn to walk before you run
உட்கார்ந்து அல்லவோ படுக்க வேண்டும்
Least said, sooner mended
யாகாவாராயினும் நாகாக்க
Let by gones be by gones
போனதை நினைக்கிறவன் புத்தி கேட்டவன்
Like father like son
தந்தை எவ்வழி, தமையன் அவ்வழி
Like priest : like people
அன்பர் எப்படியோ , தொண்டரும் அப்படியே
Little drops of water make the mighty ocean
சிறு துளி பெரு வெள்ளம்
Little strokes fell great oaks
அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்
Live and let live
வாழு, வாழ விடு
Live not to eat, but eat to live
உண்ண வாழாதே, வாழ்வதற்காக உண்
Live with in your means
வரவுக் கேற்ற செலவு செய்
Look before you leap
ஆழம் தெரியாமல் காலை விடாதே
Love is blind
ஆசை வெட்கம் அறியாது
Love well, whip well
அடிக்கிற கைதான் அணைக்கும்
Love your neighbour as your self
தன்னைப் போல் பிறரை நேசி
Make hay while the sun shines
காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்
Make the best of bad job
எரிகிற வீட்டில் பிடிங்கின வரை லாபம்
Man proposes ; God disposes
தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்
Man proposes and God disposes
மனிதன் ஒன்று நினைக்க, கடவுள் ஒன்று நினைக்கும்
Man without money is bow with out an arrow
பணமில்லாதவன் நடைப்பிணம்
Manners make the man
ஒழுக்கம் உயர் குலத்தின் சான்று
Many a slip between the cup and the lip
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை
Many drops make a shower
சிறு துளி பெரு வெள்ளம்
Many hands make work light
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
Many strokes fell mighty oaks
சிறு உளி மலையைப் பிளக்கும்
Marriages are made in heaven
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன
Measure thrice before you cut once
ஒரு செயலை செய்யும் முன் பலமுறை சிந்திக்கவும்
Mice will pray when the cat is out
பூனை இல்லாத ஊரில் எலி நாட்டமை
Might is right
தடி எடுத்தவன் தண்டல்காரன்
Might is right
வல்லன் வகுத்ததே சட்டம்
Misfortune makes foes of friends
பொல்லாத காலத்துக்கு புடலையும் பாம்பாகும்
Misfortunes never come single
பட்ட காலிலே படும் , கெட்ட குடியே கெடும்
Money is good servant but a bad master
பணத்திற்கு அடிமையாகாதே
Money makes many things
பணம் பாதளம் வரைக்கும் பாயும்
Money makes the mare go
பணமென்றால் பிணமும் வாயை திறக்கும்
Mother and Motherland are greater than heaven
தாயும், தாய் நாடும் சொர்கத்தை விடச் சிறந்தவை
Necessity has no law
ஆபத்துக்கு பாவமில்லை
Necessity is the mother of invention
தேவையே கண்டுபிடிப்பின் தாய்
Neither a borrower nor a lender be
கடன் வாங்குவதும் கொடுப்பதும் துன்பம் தரும்
Never cast the oar till you are out
கரையை அடையும் முன் துடுப்பை எறியாதே
Never cross a bridge till you come to it
வரும் முன் செலவு செய்யாதே
Never quiet certainly for hope
அரசனை நம்பி புருசனை கைவிடாதே
New brooms sweep clean
புதிய துடைப்பம் நன்கு பெருக்கும்
New brroms sweep well
முதலிலே கெட்டிக்காரன் முடிவிலே சோம்பேறி
Nip the brier in the bud
முளையிலேயே கிள்ளி எறி
No man can serve two masters
ஆற்றிலே ஒருகால் ; சேற்றிலே ஒரு கால் வைக்காதே
No news is good news
செய்தி ஏதும் இல்லை என்பது நல்ல செய்தியே
No Pains ; No Gains
உழைப்பின்றி ஊதியம் இல்லை
No rains ; No grains
மாரியல்லாது காரியமில்லை
No roses with out thorn
முள்ளில்லா ரோஜாக்கள் இல்லை
No smoke with out fire
நெருப்பில்லாமல் புகையாது
Nothing can bring you peace but your self
மனங் கொண்டது மாளிகை
Nothing is impossible to a willing heart
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
Old is gold
பழமையே சிறந்தது
Once bitten twice shy
சூடுபட்ட பூனை அடுப்பண்டை சேராது
One doth the act, another hath the blow
பாவம் ஒரு பக்கம் ; பழி ஒரு பக்கம்
One good turn deserves another
உப்பிட்ட வரை உள்ளளவும் நினை
One lie makes many
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்
One man's meat is another man's poison
ஓர் ஊர்ப் பேச்சு; ஓர் ஊருக்கு ஏச்சு
One step forward : Two steps back
சண் ஏற முழம் சறுக்குகிறது
Out of sight, out of mind
பாராத உடைமை பாழ்
Penny wise,pound foolish
கடுகு போன இடம் ஆராய்வார்; பூசணிக்காய் போன இடம் தெரியாது
Penury pinches all
பசிவந்தால் பத்தும் பறந்து போகும்
People who live in glass houses should not throw stones at others
கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல்லை எறியாதே
Perseverance kills the game
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்
Pluck not where you never planted
பிறர் உடைமைக்கு ஆசைப்படாதே
Poor men's words have little weight
ஏழை சொல் அம்பலம் ஏறாது
Practise makes man perfect
சித்திரமும் கைப்பழக்கம்
Prevention is better than cure
வருமுன் காப்பதே சிறந்ததே
Pride goes before fall
வீழ்ச்சியின் முன் எழுகிறது தற்பெருமை
Procrastination is the thief of time
இன்றைக்கு என்பதும், நாளைக்கு என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம்
Put your own shoulder to the wheel
தன கையே தனக்கு உதவி
Quick believers need broad shoulder
உடனே எதையும் நம்புவோர் மோசம் போவார்
Quit not certainly for hope
அரசனை நம்பி புருஷனை கைவிடாதே
Rats desert a falling house
இடிந்த வீட்டில் எலியும் குடி இருக்காது
Reason rules the world
அறிவே உலகை ஆள்கிறது
Rome was not built in a day
ஒரே நாளில் கோட்டையை பிடிக்க முடியாது
Sadness and gladness succeed eash other
வறுமை ஒரு காலம்; வளமை ஒரு காலம்
Self help is the best help
தன் கையே தனக்கு உதவி
Set a begger on horse back and he will ride to devil
அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடைபிடிப்பான்
Set a thief to catch a thief
முள்ளை முள்ளால் எடு
Silence gives consent
மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி
Silence is half committed
மௌனம் சம்மதத்தின் அடையாளம்
Single tree makes no forest
தனி மரம் தோப்பாகாது
Slow and steady wins the race
நிதானம் பிரதானம்
Small rudders guide great ships
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
Soare the rod and spoil the child
அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டார்
Soare the rod and spoil the child
அடியாத மாடு பணியாது / படியாது
Soon ripe, soon rotten
பிஞ்சிலே பழித்தது, விரைவில் வெம்பி விடும்
Spare the rod; spoil the child
அடியாத மாடு படியாது
Speech is silver, silence is golden
அமைதியே ஆரவாரத்தைக் காட்டிலும் சிறந்தது
Spoken words can never be taken back
தீயில் இட்ட நெய் திரும்ப வருமா?
Still waters run deep
நிறை குடம் தளும்பாது
Stolen fruit is sweet
திருடிய கனி தித்திக்கும்
Stones are thrown only at fruit bearing trees
காய்த்த மரம் தானாக கல்லடி படும்
Strike hard while the iron is hot
அலை மோதும் போதே தலை மூழ்கு
Strike the iron while it is hot
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
Sweet are the uses of adversity
வறுமை வாழும் முறையைக் கற்றுக் கொடுக்கிறது
Take time by the fore lock
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
Tha blind can not lead the blind
குருடனுக்கு குருடன் வழி காட்ட முடியுமா?
The beard does not make philosopher
தாடி வைத்தவரெல்லாம் தத்துவ ஞானி அல்ல
The bough that bear most hang lowest
நிறை குடம் தளும்பாது
The cat loves fish, but she hates to wet her feet
கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை
The child is the father of man
விளையும் பயிர் முளையிலே தெரியும்
The early bird catches the worm
ஐந்தில் அறியாதவன் ஐம்பதில் அறியாவானா?
The face is the index of mind
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
The hand that rocks the cradle rules the world
தொட்டிலை ஆட்டும் கை தொல்லுகை ஆளும் கை
The Kick of the daw hurts not hte colt
கோழி மிதித்து குஞ்சு முடமாகுமா?
The law maker shuld not be law breaker
வேலியே பயிரை மேயலாமா?
The mills of God grind slow but sure
அரசன் அன்று கொல்வான் ; தெய்வம் நின்று கொல்லும்
The old fox is caught at last
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்
The old olrder change giving place to new
பழையன கழிதலும் புதியன புகுதலும் உலகின் இயல்பு
The pen is mightier than the sword
பேனாவின் முனை வாள் முனையிலும் வலிமையானது
The pot call the kettle black
ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை
The proof of the pudding is in the eating
அப்பம் என்றால் பிட்டுக் காட்ட வேண்டும்
The wearer knows where the shoe pinches
பாம்பின் கால் பாம்பறியும்
The wife is the key of the house
மனைவியில்லாத புருஷன் அரை மனிதன்
The worth of the thing is best known by the want
உப்பின் அருமை உப்பில்லாவிட்டால் தெரியும்
There are two sides for every coin
நாணயத்துக்கு இரு பக்கம் உண்டு
There is no short cut for success
அம்மான் மகள் ஆனாலும் சும்மா வரமாட்டாள்
There is no smoke without fire
நெருப்பில்லாமல் புகையாது
They are able because they think they are able
உயர்வாகக் கருதினால் உயர்திட முடியும்
Think before you act
எண்ணித் துணிக கருமம்
Think every body alike
தன்னைப்போல பிறரை நினை
Time and tide wait for no man
ஐயர் வருகிற வரையில் அமாவாசை நிற்குமா?
Tit for tat
பழிக்கு பழி
To err inhuman, to forgive is divine
தவறு செய்வது மனித இயல்பு ; மன்னிப்பது தெய்வத்தின் இயல்பு
To the pure, all things are pure
காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்
Tomorrow never comes
கடந்து போன காலம் கரணம் போட்டாலும் வராது
Too many cooks spoil the broth
பலர் செய்யும் காரியம் பாழாகும்
Too much of anything is good for nothing
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
Too much rest is rust
துலக்காத ஆயுதம் துருப்பிடிக்கும்
True friendship never fails
உணமையான அன்பு என்றும் தோற்பதில்லை
Trust not broken staff
மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே
Truth alone triumphs
வாய்மையே வெல்லும்
Union is strength
ஒற்றுமையே பலம்
United we stand ; divided we fall
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
Variety is the spice of life
மாற்றம் என்பது மானிடத்தத்துவம்
Wake not a sleeping tiger
தூங்கும் புலிகளை இடறாதே
Walls have ears
சுவற்றுக்கும் காது உண்டு
Waste not ; want not
இருப்பதை விட்டு இல்லாததற்கு அலையாதே
We can learn more from others mistakes than from ours
நம் தவறுகளினிலும் விட மற்றவர் தவறுகளிலிருந்து நாம் நிறைய கற்கலாம்
We live in deeds, not in years
எத்தனை நாள் வாழ்ந்தான் என்பதை விட எப்படி வாழ்ந்தான் என்பது மேல்
Wealth and measure take away strike
ஆற்றில் போட்டாலும் அளந்து போடு
Weeds want no sowing
கெட்ட பழக்கங்கள் அழையா விருந்தாளிகள்
Well begun is half done
திறமான தொடக்கம் பாதி வெற்றி
What is bred in the bone will come out in the flesh
குணத்தை மாற்ற குரு இல்லை
When ale is in wit is out
மது உள்ளே போனால் மதி வெளியே போகும்
When God closes one door; he opens another
இந்த இடம் இல்லாவிட்டால் இன்னொரு சந்தை மடம்
When poverty comes in at door, love flies out of the window
இல்லாதவனை இல்லாளும் தெரியும்
When the cat is away, the mice will play
தட்டிக் கேட்க ஆளில்லாவிட்டால், தம்பி சண்டபிரசண்டன்
Where there is a will, there is way
மனம் இருந்தால் மார்க்கமுண்டு
Where there is no knowledge ; there are no doubts
ஒன்றும் தெரியாதவனுக்கு எதிலும் சந்தேகம் இல்லை
Work is worship
செய்யும் தொழிலே தெய்வம்
Work while your work,play while you play
காலத்தை பயிர் செய்
Good Homer sometimes nods
ஆனைக்கும் அடி சறுக்கும்
Too much of anything is good for nothing
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
Stolen fruit is sweet
திருடிய கனி தித்திக்கும்
He who bends unnecessarily is dangerous
கூழைக் கும்பிடு போடுபவன் ஆபத்தானவன்
You cannot eat your cake and have it too
கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை
Prevention is better than cure
வருமுன் காப்பதே சிறந்ததே
A liar is not believed when he speaks the truth
பொய்யன் உண்மை பேசும் போது யாரும் நம்புவதில்லை
Do not oppose an unequal
ஈடாகாதவனை எதிர்க்காதே
Every heart hearth its own ache
தனக்கு வந்தால் தான் தெரியும் தலைவலி
Feed by measure and defy the physician
வைத்தியனுக்குக் கொடுப்பதை விட வணிகனுக்கு கொடு
Blue are the hills that are far away
இக்கரைக்கு அக்கரை பச்சை
Quick believers need broad shoulder
உடனே எதையும் நம்புவோர் மோசம் போவார்
Brevity is the soul of wit
சுருங்க சொல்லுதல் அறிவின் அடையாளம்
Covet not, lose not
பேராசை பெருநஷ்டம்
Think every body alike
தன்னைப்போல பிறரை நினை
The pot call the kettle black
ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை
Practise makes man perfect
சித்திரமும் கைப்பழக்கம்
Habit is a second nature
தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்
All things come to those who wait
பொறுத்தவர் பூமி ஆள்வார்
Desire according to your limitaions
பாய்க்குத் தக்கபடி காலை நீட்டு
A honey tongue and a heart of gall
அடி நாக்கில் நஞ்சும், நுனி நாக்கில் தேனும்
Be slow to promise but quick to perform
ஆலோசித்து வாக்கு கொடு விரைந்து நிறைவேற்று
Bare words buy no bar ley
வெறுங்கை முழம் போடுமா?
Better be alone than in bad company
ஒவ்வாக் கூட்டிலும் தனிமை அழகு
Variety is the spice of life
மாற்றம் என்பது மானிடத்தத்துவம்
You cannot eat your cake and have it too
கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை
You cannot sell the cow and have her milk too
கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை
You may know by a handful the whole
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
Your Actions will nail You
தன் வினை தன்னைச் சுடும்
Youth and age never agree
இளமையும் முதுமையும் என்றும் ஒத்துப் போவதில்லை
Lamp at home and a lion at chase
பார்த்தல் பூனை, பாய்ந்தால் புலி
Out of sight, out of mind
பாராத உடைமை பாழ்
A thief knows a theif
பாம்பின் கால் பாம்பறியும்
Good beginning makes a good ending
நல்ல தொடக்கம் நல்ல முடிவைத் தரும்
Slow and steady wins the race
நிதானம் பிரதானம்
Make hay while the sun shines
காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்
The worth of the thing is best known by the want
உப்பின் அருமை உப்பில்லாவிட்டால் தெரியும்
As you sow, so you reap
திணை விதைத்தவன் திணை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்
Better be alone than in bad company
ஒவ்வாக் கூட்டிலும் தனிமை அழகு
Never cast the oar till you are out
கரையை அடையும் முன் துடுப்பை எறியாதே
Do not throw stones from glass house
கண்ணாடி வீட்டில் இருந்து கால் எறியாதே
As rare as hen's teeth
அத்தி பூத்தார் போல
The hand that rocks the cradle rules the world
தொட்டிலை ஆட்டும் கை தொல்லுகை ஆளும் கை
God is love
அன்பே கடவுள்
Well begun is half done
திறமான தொடக்கம் பாதி வெற்றி
Perseverance kills the game
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்
Distance lends enchantment to the view
இக்கரைக்கு அக்கரை பச்சை
Laugh away your fears
இடுக் கண் வருங்கால் நகுக
Soare the rod and spoil the child
அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டார்
One man's meat is another man's poison
ஓர் ஊர்ப் பேச்சு; ஓர் ஊருக்கு ஏச்சு
The old olrder change giving place to new
பழையன கழிதலும் புதியன புகுதலும் உலகின் இயல்பு
Blessings are not valued till they are gone
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
A journey of a thousand miles begins with a single step
ஆயிரம் கல் தொலைவுப் பயணமும் ஒரே ஒரு எட்டில்தான் தொடங்குகிறது
People who live in glass houses should not throw stones at others
கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல்லை எறியாதே
Debt is the worst poverty
ஏழ்மை கடனினும் மேன்மை
பாகம் - 2
தமிழ் மொழியில் பிழைகளைத் திருத்த மேலும் சில வழிகள்
வழங்குப்பவர் திருமதி ஸ்ரீ விஜயலஷ்மி – தமிழாசிரியை- கோவை 22. அலைப் பேசி எண் 98432 97197.

1. வாக்கியப் பிழைகளைத் திருத்த:
வாக்கியத்தின் உறுப்புகள்: எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் முதலியன.
குறிப்பு:
1. ஒரு வாக்கியத்தில் எழுவாய் முதலிலும். செயப்படுபொருள் இடையிலும் (நடுவிலும்), பயனிலை வாக்கியத்தின் இறுதியிலும் அமையும். (எ.டு) மணிவண்ணன் பந்து விளையாடினான்.) இதில்.
அ. மணிவண்ணன் - எழுவாய்.
ஆ. பந்து – செயப்படுபொருள்.
இ. விளையாடினான் – பயனிலை.
 ஒரு வாக்கியம் எந்த எழுவாயில் தொடங்குகின்றதோ அதே பயனிலையில் தான் நிறைவு பெற வேண்டும்.
 (எ.டு) ஆண்பாலில் எழுவாய் தொடங்கினால் பயனிலையும் ஆண்பாலில் தான் முடிய வேண்டும். (கண்ணன் குழல் ஊதினான்.)
 பெண்பாலில் எழுவாய் தொடங்கினால் பயனிலையும் பெண்பாலில் தான் முடிய வேண்டும். (வாணி வீணை வாசித்தாள்)
 பலர்பாலில் எழுவாய் தொடங்கினால் பயனிலையும் பலர்பாலில் தான் முடிய வேண்டும். ( மாணவர்கள் பாடம் படித்தனர்)
 ஒன்றன்பாலில் எழுவாய் தொடங்கினால் பயனிலையும் ஒன்றன்பாலில் தான் முடிய வேண்டும். (குதிரை வண்டி இழுத்தது)
 பலவின்பாலில் எழுவாய் தொடங்கினால் பயனிலையும் பலவின்பாலில் தான் முடிய வேண்டும். (எலிகள் உணவுப் பொருள்களை வேட்டையாடின.)
மேற்கூறிய வழிகளை எளிதில் அறிந்துகொள்ள நமக்கு திணை. மற்றும் பால் பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும்.
அதாவது,
திணை (ஒழுக்கம்)
திணையின் வகைகள்:
1. உயர்திணை: (உயர்வான ஒழுக்கங்களை உடைய, பகுத்தறியும் ஆற்றல் பெற்ற, மக்கள் , மற்றும் தேவர்களைப் பற்றிப் பேசுவது ஆகும்.
2. அஃறிணை: (பகுத்தறிவற்ற உயிருள்ள உயிரற்ற அனைத்துப் பொருள்களையும் குறிப்பது ஆகும்.)
3. உயர் திணைக்கு உரிய பால்கள்: ஆண்பால், பெண்பால், பலர்பால் ஆகியன் மட்டுமேயாகும்.
4. அஃறிணைக்குரிய பால்கள்: ஒன்றன்பால் மற்றும் பலவின் பால் ஆகியன்.
மேற்குறிப்பிட்டவற்றுள் –
ஒரு பாலுக்கு வரவேண்டிய ஒரு சொல் பிரிதொரு பாலுக்கு வந்தால் அஃது பால்வழு (வழு-குற்றம்/தவறு) எனப்படும்.
சான்றாக: (முருகன் பாடல் பாடினாள்) – இதில் முருகன் என்பது ஆண்பால். ஆனால் பாடினாள் என்பது பெண்பால். எனவே இஃது பால்வழு எனப்படும்.
ஒரு திணைக்கு வரவேண்டிய ஒரு சொல் பிரிதொரு திணைக்கு வந்தால் அஃது திணைவழு (வழு-குற்றம்/தவறு) எனப்படும்.
சான்றாக: (மாணவர்கள் விளையாடின.)
இதில் மாணவர்கள் என்பது உயர் திணை. விளையாடின என்பது அஃறிணை. என்வே இஃது திணைவழு எனப்படும்.
-----------------------------------------

II அடுத்து இடம் எவ்வாறு அமைய வேண்டும், எவ்வாறு அமைதல் கூடாது என்பதனைக் காண்போம்.
இடம்: இடம் என்றால் ஒருவர் தன்னைப் பற்றியோ தனக்கு முன்பிருப்பவரைப் பற்றியோ அன்றி பிரிதொருவரைப் பற்றியோ பேசுவதாகும்.
வகைகள்: இடம் மூன்று வகைப்படும்.
அவை.
1. தன்மை: அதாவது ஒருவர் தன்னைப் பற்றி மட்டும் பேசுவது தன்மையிடமாகும். (எ.டு) நான் படித்தேன். இதில் உள்ள நான் என்பது தன்மையிடமாகும்.
2. முன்னிலை : ஒருவர் தனக்கு முன்பாக இருந்து கேட்பவரைப் பற்றிப் பேசுவது முன்னிலை இடம். (எ.டு) நீ வரைந்தாய். இதில் உள்ள நீ முன்னிலை இடமாகும்.
3. படர்க்கை: ஒருவர் தன்னையும், தனக்கு முன்பிருப்பவரையும் பற்றிப் பேசாமல் பிரிதொருவரைப் பற்றிப் பேசுவது படர்க்கை இடம் ஆகும். (எ.டு) அவன் படிக்கின்றான். இதில் அவன் என்பது படர்க்கை இடம் ஆகும்
மேற் கூறியவற்றில் உள்ளவாறு அமையாமல்.
1. அவன் வந்தாய்,
2. நீ படிக்கிறேன்.
3. நான் விளையாடுகிறான். என்றவாறெல்லாம் முறை மாறி எழுதுவது இடவழு எனப்படும்.
---------------------------------------------
III அடுத்ததாக நாம் காண்பது காலம் பற்றிய செய்திகள்:
காலம்: காலம் என்பது ஒரு செயல் நிகழ்ந்துகொண்டிருக்கும் நேரத்தைப் பற்றிக் குறிப்பிடுவதாகும்.
காலம் மூன்றுவகைப்படும். அவை,
1. இறந்தகாலம்: ஒரு செயல் நடைபெற்று முடிந்ததைக் காட்டுவது. (எ.டு) மணி விளையாடினான்.
2. நிகழ் காலம்: ஒரு செயல் நடைப்பெற்றுக் கொண்டிருப்பதைக் காட்டுவது.
(எ.டு) கண்ணன் படித்துக்கொண்டிருக்கிறான்.

3. எதிர்க் காலம்: ஒரு செயல் நடைபெறப் போவதைக் குறிப்பது.
(எ.டு) மாணவர்கள் நாளை தேர்வு எழுதப்போகிறார்கள். இவ்வாறு எழுதுவதே முறையாகும்.

மேற்குறிப்பிட்டதற்குப் பதிலாக,
ஒரு காலத்தில் வரவேண்டிய சொல்லையோ பொருளையோ பிரிதொரு காலத்தில் மாற்றி எழுதுவது காலவழு என்ப்படும்.
(எ.டு) உமா நேற்று வருவாள். இவ்வாறு எழுதுவது காலவழு எனப்படும்.
-------------------------------
IV அடுத்து நாம் காண இருப்பது எண்:
எண் என்றால் எண்ணுதல்(நினைத்தல்) அல்லது எண்ணிக்கை.
என்பதாகும். இங்கு நாம் பார்க்க இருப்பது எண்ணிக்கை பற்றிய செய்திகள்.
எண் இரண்டுவகைப் படும். அவை ஒருமை, பன்மை என்பனவாகும்.
ஏதேனும் ஒருபொருளைக் குறித்து பேசுவது ஒருமை எனப்படும்.
ஒன்றிற்கு மேற்பட்ட பலவற்றைக் குறித்துப் பேசுவது பன்மை எனப்படும்.
(எ.டு) எங்கள் வீட்டில் ஒரு பூனை வளருகின்றது.
இவ்வாறு எழுவாய் ஒருமையில் துவங்கினால் பயனிலையும் ஒருமையில் தான் முடிய வேண்டும்.
இதில் ஒருபூனை என்று எழுவாயில் ஒருமை வந்துள்ளமையால், பயனிலையில் வளருகின்றது. என்றுதான் எழுத வேண்டும்.

(எ.டு) என்னிடம் மூன்று(3) புத்தகங்கள் உள்ளன.
இதில் மூன்று என்பது பன்மை. எனவே பயனிலையில் உள்ளன என்று எழுதவேண்டும்.
இவ்வாறு எழுவாய் பன்மையில் துவங்கினால் பயனிலையும் பன்மையில் தான் முடிய வேண்டும்.

இவ்வாறின்றி. ஒரு பூனை வளருகின்றன, என்றோ,
மூன்று புத்தகங்கள் உள்ளது என்றோ எழுதினால் அது தவறாகும்.
அப்படி எழுதுவது எண்வழு எனப்படும்.
------------------------------

V அடுத்து நாம் காண்பது மரபு பற்றிய செய்திகள்:
நம் முன்னோர்கள் எச்சொல்லை எவ்வாறு வழங்கினார்களோ அச்சொல்லை அவ்வாறே வழங்குவது மரபு எனப்படும்.
(எ.டு)
1. சிங்கக் குருளை ( சிங்கத்தின் குட்டி).
2. மாம் பிஞ்சு (மாங்காயின் முதல் நிலை) 1st stage.
3. யானைக் கன்று.
4. பூனைக் குட்டி.
இவ்வாறுதான் எழுத வேண்டும். இதற்குப் பதிலாக, சிங்கக் கன்று , பூனைக் குருளை என்றெல்லாம் எழுதுவது தவறாகும். அவ்வாறு எழுதுவது மரபு வழு எனப்படும்.
----------------------------
அன்பு மாணவர்களே இதனைப் படித்தால் மட்டும் போதாது. பலமுறை பயிற்சியும் மேற்கொள்ளவேண்டும். அவ்வாறு செய்தால் நிச்சயம் பிழைகளைத் தவிர்க்கலாம்.
என்ன பயிற்சியைத் துவங்கிவிட்டீர்களா? நல்லது.
மீண்டும் புதிய முயற்சியில் சந்திப்போம்.
அன்புடன் திருமதி ஸ்ரீ.விஜயலஷ்மி.

பாகம் - 3
தமிழ் மொழியில் மாணவர்களின் திறனை சோதிக்க சில திறனறிவு விளையாட்டுகள்.
(விளையாடலாம் வாங்க)
வழங்குபவர் திருமதி ஸ்ரீ.விஜயலக்‌ஷ்மி
தமிழாசிரியை – கோவை
அலைப்பேசி எண் 9843297197
1. இரு திணையும் வருவது போல் சில வாக்கியங்களை எழுதுக.
(எ.டு) மணி பந்து விளையாடினான்.
இதில் மணி என்பது உயர் திணை. பந்து என்பது அஃறிணை.
இதுபோன்று பல வாக்கியங்களை எழுதிப் பழகுக.

2. மூவிடமும் அமைவது போல் சில வாக்கியங்களை எழுதுக.
(எ.டு) நானும் நீயும் அவனுடன் சேர்ந்து படிக்கலாமா?
இதில் நான் தன்மையிடம். நீ முன்னிலை இடம். அவனுடன் படர்க்கையிடம்.

3. எண் (ஒருமை பன்மை) வருமாறு பல வாக்கியங்களை எழுதிப் பழகுக.
(எ.டு) என்னிடம் இருந்த ஒரு பழத்தை ஐந்து பேருக்குப் பங்கிட்டுக் கொடுத்தேன்.
இதில் ஒரு பழம் என்பது ஒருமை. ஐந்துபேர் என்பது பன்மை.

4. ஐம்பாலும் ஒரே தொடரில் வருமாறு சில வாக்கியங்களை எழுதுக
(எ.டு) முருகனும் அவன் தாயும் கடைவீதிக்குச் சென்றபொழுது, அங்கே அவன் நண்பர்கள் சிலவிலங்குகளையும், ஒரு பறவையையும் வைத்துக்கொண்டு வேடிக்கைக் காட்டிக்கொண்டிருந்தனர்.
இதில் முருகன் – ஆண்பால்
அவன் தாய் – பெண்பால்
நண்பர்கள் – பலர்பால்
பறவை – ஒன்றன்பால்
விலங்குகள் – பலவின்பால்
5. முக்காலமும் ஒரே தொடரில் வருமாறு சில வாக்கியங்களை எழுதுக.
(எ.டு) நான் நேற்று படித்தேன்: இன்று படிக்கின்றேன்: நாளையும் படிப்பேன்.
6. அடுத்து குறில், நெடில், லகரம், ளகரம், ழகரம், நகரம், ணகரம், னகரம் ஆகிய அனைத்தும் ஒரே தொடரில் வருவது போல் விளையாடலாமா?
ஜூட்:
மலர்விழி பள்ளிக்குச் சென்று, ஆசிரியர் கூறும் சீரிய அறிவுரைகளைக் கேட்டு, அவற்றைப் பொன்போல் போற்றி, தன் தந்தைத் தாயிடமும் கூறி மகிழ்ந்தபோது, அவள் தந்தை மணி தன் மகளைப் பற்றி மனதில் மவுனமாய் வியந்ததோடு தன் மனைவி உமாவிடமும் கூறி மகிழ்ந்தார்.
மேற்கூறிய வாக்கியத்தில்,
ம- குறில்
ல – நுனிநா லகரம்
ர்- இடையின ரகரம்
ழி – சிறப்பு ழகரம்
ள் – பொது ளகரம்
செ – குறில் எ ஓசை
ன் – றன்னகரம்
று – வல்லின றகரம்
சி – குறில் இகர ஒலி
கூ – நெடில் ஊ ஒலி
சீ – நெடில் ஈ ஒலி
ரை – ஐகார ஒலி
பொ – குறில் ஒ ஒலி
போ – நெடில் ஓ ஒலி
ந் – தந்நகரம்
ன – றன்னகரம்
ண்- டண்ணகரம்
தா – நெடில் ஆ ஒலி
டு- குறில் உ ஒலி
போன்ற பலவும் ஒருங்கிணைந்து வந்திருப்பதைக் கண்டு மகிழலாம்.
நீங்களும் முயன்று பாருங்களேன். தயாராகிவிட்டீர்களா?
வெற்றி பெற என் மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்
இதுபோன்ற அறிவுப்பூர்வமான விளையாட்டுக்களை மாணவர்களுக்கு அளிக்கும் பொழுது, நேரமும் வீணாகாமல். திறனும் பெறுக வாப்பு ஏற்படுமல்லவா? அன்புப் பெற்றோர்களே நீங்களும் தயார் தானே!
அன்புடன்
திருமதி ஸ்ரீ விஜயலக்‌ஷ்மி.
கோயம்புத்தூர்- 22.
----------------------------------
6.1 வல்லினம் மிகும் இடங்கள்
நிலைமொழியின் இறுதியில் உள்ள உயிர்களின் முன்னரும், ய,ர,ழ என்னும் மெய்களின் முன்னரும் வருமொழி முதலில் வருகின்ற க,ச,த,ப என்னும் வல்லின மெய்கள் எந்தெந்த இடங்களில் மிகும் என்பதைச் சான்றுடன் காணலாம்.
6.1.1 சுட்டு, வினா அடியாகத் தோன்றிய சொற்கள் முன் வல்லினம் மிகல்
அ, இ என்பன சுட்டு எழுத்துகள்; எ, யா என்பன வினா எழுத்துகள். இவற்றின் முன்னும், இவற்றின் அடியாகத் தோன்றிய அந்த, இந்த, எந்த; அங்கு, இங்கு, எங்கு; ஆங்கு, ஈங்கு, யாங்கு; அப்படி, இப்படி, எப்படி; ஆண்டு, ஈண்டு, யாண்டு; அவ்வகை, இவ்வகை, எவ்வகை, அத்துணை, இத்துணை, எத்துணை என்னும் சொற்களின் முன்னும் வரும் வல்லினம் மிகும்.
சான்று:
அ + காலம் = அக்காலம்
எ + திசை = எத்திசை
அந்த + பையன் = அந்தப் பையன்
எந்த + பொருள் = எந்தப் பொருள்
அங்கு + கண்டான் = அங்குக் கண்டான்
எங்கு + போனான் = எங்குப் போனான்
யாங்கு + சென்றான் = யாங்குச் சென்றான்
அப்படி + சொல் = அப்படிச் சொல்
எப்படி + சொல்வான் = எப்படிச் சொல்வான்
ஈண்டு + காண்போம் = ஈண்டுக் காண்போம்
யாண்டு + காண்பேன் = யாண்டுக் காண்பேன்
அவ்வகை + செய்யுள் = அவ்வகைச் செய்யுள்
எத்துணை + பெரியது = எத்துணைப் பெரியது
6.1.2 ஓர் எழுத்துச் சொற்களின் முன் வல்லினம் மிகல்
கை, தீ, தை, பூ, மை என்னும் ஓர் எழுத்துச் சொற்களின் முன் வரும் வல்லினம் மிகும்.
சான்று:
கை + குழந்தை = கைக்குழந்தை
கை + பிடி = கைப்பிடி
தீ + பிடித்தது = தீப்பிடித்தது
தீ + பெட்டி = தீப்பெட்டி
தீ + புண் = தீப்புண்
தை + பொங்கல் = தைப்பொங்கல்
தை + திருநாள் = தைத்திருநாள்
பூ + பறித்தாள் = பூப்பறித்தாள்
பூ + பல்லக்கு = பூப்பல்லக்கு
மை + கூடு = மைக்கூடு
மை + பேனா = மைப்பேனா
6.1.3 குற்றியலுகரச் சொற்கள் முன் வல்லினம் மிகல்
வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களின் முன்னும், சில மென்தொடர் மற்றும் உயிர்த்தொடர்க் குற்றியலுகரச் சொற்களின் முன்னும், உயிர்த்தொடர் போன்ற அமைப்பை உடைய சில முற்றியலுகரச் சொற்களின் முன்னும் வரும் வல்லினம் மிகும்.
• வன்தொடர்க் குற்றியலுகரம் முன் வல்லினம் மிகல்
சான்று:
பாக்கு + தோப்பு = பாக்குத்தோப்பு
அச்சு + புத்தகம் = அச்சுப்புத்தகம்
எட்டு + தொகை = எட்டுத்தொகை
பத்து + பாட்டு = பத்துப்பாட்டு
இனிப்பு+ சுவை = இனிப்புச்சுவை
கற்று + கொடுத்தான் = கற்றுக்கொடுத்தான்
• சில மென்தொடர்க் குற்றியலுகரம் முன் வல்லினம் மிகல்
சான்று:
குரங்கு + குட்டி = குரங்குக் குட்டி
பஞ்சு + பொதி = பஞ்சுப்பொதி
துண்டு + கடிதம் = துண்டுக்கடிதம்
மருந்து + சீட்டு = மருந்துச் சீட்டு
பாம்பு + தோல் = பாம்புத்தோல்
கன்று + குட்டி = கன்றுக்குட்டி
இவற்றை வல்லினம் மிகாமல் குரங்கு குட்டி, மருந்து சீட்டு என்று எழுதினால் குரங்கும் குட்டியும், மருந்தும் சீட்டும் என்று பொருள்பட்டு உம்மைத் தொகைகள் ஆகிவிடும்.
• சில உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் முன் வல்லினம் மிகல்
சான்று:
முதுகு + தண்டு = முதுகுத்தண்டு
விறகு + கடை = விறகுக்கடை
படகு + போட்டி = படகுப்போட்டி
பரிசு + புத்தகம் = பரிசுப்புத்தகம்
மரபு + கவிதை = மரபுக்கவிதை
6.1.4 முற்றியலுகரச் சொற்கள் முன் வல்லினம் மிகல்
தனிக்குறிலை அடுத்து வருகின்ற வல்லின மெய்யின் மேலும், பிற மெய்களின் மேலும் ஏறிவருகின்ற உகரம் முற்றியலுகரம் எனப்படும். நடு, புது, பொது, பசு, திரு, தெரு, முழு, விழு என்னும் முற்றியலுகரச் சொற்களின் முன் வரும் வல்லினம் மிகும்.
சான்று:
நடு + கடல் = நடுக்கடல்
புது + புத்தகம் = புதுப்புத்தகம்
பொது + பணி = பொதுப்பணி
பசு + தோல் = பசுத்தோல்
திரு + கோயில் = திருக்கோயில்
தெரு + பக்கம் = தெருப்பக்கம்
முழு + பேச்சு = முழுப்பேச்சு
விழு + பொருள் = விழுப்பொருள்
தனி நெட்டெழுத்தை அடுத்தோ, பல எழுத்துகளைத் தொடர்ந்தோ ஒரு சொல்லின் இறுதியில் வல்லினமெய் அல்லாத பிற மெய்களின் மேல் ஏறி வருகின்ற உகரமும் முற்றியலுகரம் ஆகும். இத்தகைய முற்றியலுகரச் சொற்கள் பெரும்பாலும் ‘வு’ என முடியும். இவற்றின் முன் வரும் வல்லினமும் மிகும்.
சான்று:
சாவு + செய்தி = சாவுச்செய்தி
உணவு + பொருள் = உணவுப்பொருள்
உழவு + தொழில் = உழவுத்தொழில்
நெசவு + தொழிலாளி = நெசவுத்தொழிலாளி
தேர்வு + கட்டணம் = தேர்வுக்கட்டணம்
கூட்டுறவு + சங்கம் = கூட்டுறவுச் சங்கம்
பதிவு + தபால் = பதிவுத்தபால்
இரவு + காட்சி = இரவுக்காட்சி
6.1.5 வேற்றுமைப் புணர்ச்சியில் வரும் வல்லினம் மிகல்
இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை வரையிலான ஆறு வேற்றுமைகள் ஒவ்வொன்றும் புணர்ச்சியில் மூன்று வகையாக வருகின்றன.
1. வேற்றுமை உருபு தொக்கு (மறைந்து) வருவது. இதுவேற்றுமைத்தொகை எனப்படும்.
சான்று:
கனி + தின்றான் = கனிதின்றான்
இத்தொடருக்குக் கனியைத் தின்றான் என்று பொருள். கனி தின்றான் என்பதில் இரண்டாம் வேற்றுமை உருபாகிய ஐ தொக்கு வந்துள்ளது. எனவே இது இரண்டாம் வேற்றுமைத் தொகை.
2. வேற்றுமை உருபும், அதனோடு சேர்ந்து வரும் சில சொற்களும் தொக்கு வருவது. இது வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை எனப்படும்.
சான்று:
தயிர் + குடம் = தயிர்க்குடம்
இத்தொடருக்குத் தயிரை உடைய குடம் என்று பொருள். தயிர்க்குடம் என்பதில் இரண்டாம் வேற்றுமை உருபாகிய ஐ என்பதும், அதனோடு சேர்ந்து வந்துள்ள உடைய என்பதும் தொக்கு வந்துள்ளன. எனவே இது இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை.
3. வேற்றுமை உருபு விரிந்து வருவது. இது வேற்றுமை விரிஎனப்படும்.
சான்று:
கனியை + தின்றான் = கனியைத் தின்றான்
மேலே கூறிய சான்றுகளை நோக்குவோம். வல்லினம் இரண்டாம் வேற்றுமைத் தொகையில் மிகாமலும், மற்ற இரண்டிலும் மிக்கும் வந்துள்ளது புலனாகும். இதுபோல ஒவ்வொரு வேற்றுமையும் மூவகைப் புணர்ச்சியில் வல்லினம் மிக்கும், மிகாமலும் வரும்.
இனி வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லினம் மிகும் இடங்களைப் பார்ப்போம்.
(i) இரண்டாம் வேற்றுமை விரியின் (ஐ உருபின்) முன் வரும் வல்லினம் மிகும்.
சான்று:
ஒலியை + குறை = ஒலியைக் குறை
பாயை + சுருட்டு = பாயைச் சுருட்டு
கதவை + தட்டு = கதவைத் தட்டு
மலரை + பறி = மலரைப் பறி
(ii) நான்காம் வேற்றுமை விரியின் (கு உருபின்) முன்வரும் வல்லினம்மிகும்.
சான்று:
எனக்கு + கொடு = எனக்குக் கொடு
வீட்டுக்கு + தலைவி = வீட்டுக்குத் தலைவி
ஊருக்கு + போனான் = ஊருக்குப் போனான்
(iii) நான்காம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி அஃறிணையாயின் அதன்முன் வரும் வல்லினம் மிகும்.
சான்று:
குறிஞ்சி + தலைவன் = குறிஞ்சித் தலைவன்
(குறிஞ்சிக்குத் தலைவன்)
படை + தளபதி = படைத்தளபதி (படைக்குத் தளபதி)
கூலி + படை = கூலிப்படை (கூலிக்குப் படை)
(iv) இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வரும் வல்லினம் மிகும்.
சான்று:
நகை + கடை = நகைக்கடை (நகையை விற்கும் கடை)
தயிர் + குடம் = தயிர்க்குடம் (தயிரை உடைய குடம்)
எலி + பொறி = எலிப்பொறி (எலியைப் பிடிக்கும் பொறி)
மலர் + கூந்தல் = மலர்க்கூந்தல் (மலரை உடைய கூந்தல்)
நெய் + குடம் = நெய்க்குடம் (நெய்யை உடைய குடம்)
(v) மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வரும் வல்லினம் மிகும்.
சான்று:
வெள்ளி + கிண்ணம் = வெள்ளிக் கிண்ணம்
(வெள்ளியால் ஆகிய கிண்ணம்)
இரும்பு + பெட்டி = இரும்புப் பெட்டி (இரும்பினால் ஆகிய பெட்டி)
தேங்காய் + சட்னி = தேங்காய்ச் சட்னி (தேங்காயால் ஆன சட்னி)
பித்தளை + குடம் = பித்தளைக் குடம் (பித்தளையால் ஆன குடம்)
(vi) நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வரும் வல்லினம் பெரும்பாலும் மிகும்.
சான்று:
கோழி + தீவனம் = கோழித் தீவனம் (கோழிக்கு உரிய தீவனம்)
குழந்தை + பால் = குழந்தைப் பால் (குழந்தைக்கு ஏற்ற பால்)
(vii) ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வரும் வல்லினம் மிகும்.
சான்று:
வாய் + பாட்டு = வாய்ப்பாட்டு (வாயிலிருந்து வரும் பாட்டு)
கனி + சாறு = கனிச்சாறு (கனியிலிருந்து எடுக்கப்படும் சாறு)
(viii) ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வரும் வல்லினம் மிகும்.
சான்று:
தண்ணீர் + பாம்பு = தண்ணீர்ப்பாம்பு (தண்ணீரில் உள்ள பாம்பு)
சென்னை + கல்லூரி = சென்னைக் கல்லூரி (சென்னையில் உள்ள கல்லூரி)
மதுரை + கோயில் = மதுரைக்கோயில் (மதுரையில் உள்ள கோயில்)
மலை + பாம்பு = மலைப்பாம்பு (மலையில் உள்ள பாம்பு)
(ix) ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி அஃறிணையாய் இருப்பின், அதன் முன்னர் வரும் வல்லினம் மிகும்.
சான்று:
கிளி + கூண்டு = கிளிக்கூண்டு
புலி + குட்டி = புலிக்குட்டி
நரி + பல் = நரிப்பல்
வாழை + தண்டு = வாழைத்தண்டு
எருமை + கொம்பு = எருமைக் கொம்பு
தேர் + சக்கரம் = தேர்ச்சக்கரம்
6.1.6 அல்வழிப் புணர்ச்சியில் வரும் வல்லினம் மிகல்
அல்வழிப் புணர்ச்சியில் வரும் தொடர்கள் தொகை நிலைத்தொடர், தொகாநிலைத் தொடர் என இருவகைப்படும். இவ்விரு வகைத் தொடர்களில் வரும் வல்லினம் மிகும் இடங்களைப் பற்றிப் பார்ப்போம்.
• தொகை நிலைத் தொடர்களில் வரும் வல்லினம் மிகல்
அல்வழிப் புணர்ச்சியில் வரும் தொகைநிலைத் தொடர்கள் வினைத்தொகை, பண்புத்தொகை (இருபெயரொட்டுப் பண்புத்தொகையும் இதில் அடங்கும்), உவமைத் தொகை, உம்மைத்தொகை, அன்மொழித் தொகை ஆகிய ஐந்தும் ஆகும். இத்தொகைநிலைத் தொடர்களில் எந்தெந்தத் தொடர்களில் வல்லினம் மிகும் என்பதைப் பார்ப்போம்.
i) பண்புத்தொகையில் வரும் வல்லினம் மிகும்.
சான்று:
சிவப்பு + துணி = சிவப்புத்துணி
புதுமை + பெண் = புதுமைப்பெண்
தீமை + குணம் = தீமைக்குணம்
வெள்ளை + தாள் = வெள்ளைத்தாள்
மெய் + பொருள் = மெய்ப்பொருள்
பொய் + புகழ் = பொய்ப்புகழ்
புது + துணி = புதுத்துணி
பொது + பண்பு = பொதுப்பண்பு
ii) இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வரும் வல்லினம் மிகும்.
நிலைமொழியில் சிறப்புப் பெயரும் வருமொழியில் பொதுப்பெயருமாகச் சேர்ந்து வரும். இடையில் ஆகிய என்ற பண்பு உருபு மறைந்து வரும். இதுவே இருபெயரொட்டுப் பண்புத்தொகை எனப்படும். இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வரும் வல்லினம் மிகும்.
சான்று:
மார்கழி + திங்கள் = மார்கழித் திங்கள்
வெள்ளி + கிழமை = வெள்ளிக் கிழமை
மல்லிகை + பூ = மல்லிகைப்பூ
சாரை + பாம்பு = சாரைப்பாம்பு
உழவு + தொழில் = உழவுத்தொழில்
iii) உவமைத் தொகையில் வரும் வல்லினம் மிகும்.
சான்று:
மலர் + கண் = மலர்க்கண் (மலர் போன்ற கண்)
தாமரை + கை = தாமரைக்கை (தாமரை போன்ற கை)
• தொகாநிலைத் தொடர்களில் வரும் வல்லினம் மிகல்
எழுவாய்த் தொடர், விளித்தொடர், பெயரெச்சத் தொடர், வினையெச்சத் தொடர், தெரிநிலை வினைமுற்றுத் தொடர், குறிப்பு வினைமுற்றுத் தொடர், இடைச்சொல் தொடர், உரிச்சொல் தொடர், அடுக்குத்தொடர் என்னும் ஒன்பதும் அல்வழிப் புணர்ச்சியில் வரும் தொகாநிலைத் தொடர்கள் ஆகும். இவற்றுள் எந்தெந்தத் தொடர்களில் வரும் வல்லினம் மிகும் என்பதைப் பார்ப்போம்.
i) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம்மிகும்
பெயரெச்சத்தில் ஒரு வகை ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஆகும். அறியாத என்பது எதிர்மறைப் பெயரெச்சம். இதன் முன் வரும் வல்லினம் மிகாது. சான்று: அறியாத பிள்ளை. ஆனால் அறியாத என்பதில் உள்ள ‘த’ என்னும் ஈறு கெட்டு (மறைந்து), அறியா என நிலைமொழியில் நிற்கும். இது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஆகும். இதன் முன் வருமொழி முதலில் வரும் வல்லினம் கட்டாயம் மிகும். சான்று: அறியா + பிள்ளை = அறியாப்பிள்ளை.
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன்வரும் வல்லினம் மிகுதலுக்கு மேலும் பல சான்றுகள் காட்டலாம். அவை வருமாறு:
செல்லா + காசு = செல்லாக் காசு (செல்லாத காசு)
ஓடா + குதிரை = ஓடாக் குதிரை (ஓடாத குதிரை)
தீரா + சிக்கல் = தீராச் சிக்கல் (தீராத சிக்கல்)
காணா + பொருள் = காணாப் பொருள் (காணாத பொருள்)
ii) அகர ஈற்று, இகர ஈற்று, யகர மெய் ஈற்று வினையெச்சங்களின் முன்னும், வன்தொடர்க் குற்றியலுகர ஈற்று வினையெச்சங்களின் முன்னும், ஆக, ஆய் என முடியும் வினையெச்சங்களின் முன்னும் வரும் வல்லினம் மிகும்.
• அகர ஈற்று வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் மிகல்
சான்று:
வர + சொன்னான் = வரச் சொன்னான்
உண்ண + போனான் = உண்ணப் போனான்
உட்கார + பார்த்தான் = உட்காரப் பார்த்தான்
• இகர ஈற்று வினையெச்சங்களின் முன்வரும் வல்லினம் மிகல்
சான்று:
ஓடி + போனான் = ஓடிப் போனான்
தேடி + பார்த்தான் = தேடிப் பார்த்தான்
கூறி + சென்றான் = கூறிச் சென்றான்
கூடி + பேசினர் = கூடிப் பேசினர்
• யகர மெய் ஈற்று வினையெச்சங்களின் முன்வரும் வல்லினம் மிகல்
சான்று:
போய் + பார்த்தான் = போய்ப் பார்த்தான்
• வன்தொடர்க் குற்றியலுகர ஈற்று வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் மிகல்
சான்று:
கற்று + கொடுத்தான் = கற்றுக் கொடுத்தான்
வாய்விட்டு + சிரித்தான் = வாய்விட்டுச் சிரித்தான்
படித்து + கொடுத்தான் = படித்துக் கொடுத்தான்
எடுத்து + தந்தான் = எடுத்துத் தந்தான்
கடித்து + குதறியது = கடித்துக் குதறியது
வைத்து + போனான் = வைத்துப் போனான்
• ஆக, ஆய், என என்று முடியும் வினையெச்சங்களின் முன் வல்லினம் மிகல்
சான்று:
தருவதாக + சொன்னான் = தருவதாகச் சொன்னான்
வருவதாய் + கூறினார் = வருவதாய்க் கூறினார்
வா என + கூறினார் = வா எனக் கூறினார்
மேலே காட்டிய சான்றுகள் எல்லாம் தெரிநிலை வினையெச்சங்கள் ஆகும். வினையெச்சத்தில் குறிப்பு வினையெச்சம் என்ற ஒன்றும் உண்டு. ஒரு தொழிலை உணர்த்தும் வினைப்பகுதியிலிருந்து தோன்றுவது தெரிநிலை வினையெச்சம். சான்று: உண்ணப் போனான். உண் என்ற வினைப்பகுதியிலிருந்து தோன்றியதால் உண்ண என்பது தெரிநிலை வினையெச்சம். ஒரு பண்பை உணர்த்தும் பெயர்ப்பகுதியிலிருந்து தோன்றுவது குறிப்பு வினையெச்சம். சான்று: மெல்லப் பேசினாள். மென்மை என்ற குணத்தை உணர்த்தும் பெயர்ப்பகுதியிலிருந்து தோன்றியதால் மெல்ல என்பது குறிப்பு வினையெச்சம். மொழியியலார் இதனை வினையடை (Adverb) என்று குறிப்பிடுவர். மேலே பார்த்த தெரிநிலை வினையெச்சம் போலவே குறிப்புவினையெச்சத்தின் முன்வரும் வல்லினம் மிகும்.
சான்று:
நிறைய + பேசுவான் = நிறையப் பேசுவான்
இனிக்க + பேசுவான் = இனிக்கப் பேசுவான்
நன்றாக + சொன்னான் = நன்றாகச் சொன்னான்
வேகமாக + கூறினான் = வேகமாகக் கூறினான்
விரைவாய் + பேசினார் = விரைவாய்ப் பேசினார்
மெல்லென + சிரித்தாள் = மெல்லெனச் சிரித்தாள்
6.1.7 மகர இறுதி கெட்டு உயிர் ஈறாய் நிற்கும் சொற்கள் முன்வரும் வல்லினம் மிகல்
புணர்ச்சியில் மகர இறுதி கெட்டு, உயிர் ஈறாய் நிற்கும் சொற்கள் முன்வரும் வல்லினம் மிகும்.
சான்று:
மரம் + கிளை > மர + க் + கிளை = மரக்கிளை
குளம் + கரை > குள + க் + கரை = குளக்கரை
ஆரம்பம் + பள்ளி > ஆரம்ப + ப் + பள்ளி = ஆரம்பப் பள்ளி
தொடக்கம் + கல்வி > தொடக்க + க் + கல்வி = தொடக்கக் கல்வி
அறம் + பணி > அற + ப் + பணி = அறப்பணி
கட்டடம் + கலை > கட்டட + க் + கலை = கட்டடக்கலை
வீரம் + திலகம் > வீர + த் + திலகம் = வீரத்திலகம்
மரம் + பெட்டி > மர + ப் + பெட்டி = மரப்பெட்டி
பட்டம் + படிப்பு > பட்ட + ப் + படிப்பு = பட்டப்படிப்பு
மேலே வல்லினம் மிகும் இடங்களைச் சான்றுடன் பார்த்தோம். இதுபோல வல்லினம் இன்னும் சில இடங்களில் மிகும். ஒற்றைக்கை, இரட்டைக் குழந்தைகள், மற்றப் பிள்ளைகள், பயிற்சிப் பள்ளி, பயிற்சிக் கூடம், நகரவைத் தலைவர் என்பன போல வல்லினம் மிகுந்து வரும் தொடர்கள் பல உள்ளன. நமக்குப் பாடத்திட்டத்தில் அமைந்துள்ள பாடங்களையும் (Lessons) பாடநூல்களையும் (Text–Books), பிற நூல்களையும் படிக்கும்போது வாய்விட்டுப் படித்து, எந்த எந்த இடங்களில் வல்லினம் மிக்கு வருகிறது என்பதை அறிந்துகொள்ளலாம்.
தமிழின் 18 மெய்யெழுத்துக்களை வல்லினம் (6), மெல்லினம் (6), இடையினம் (6) என்று மூன்று பிரிவாகப் பிரிப்பர். மெய்யெழுத்துகள் 18இல், க, ச, ட, த, ப, ற ஆகிய 6 எழுத்துகள் மட்டுமே வல்லெழுத்துகள் ஆகும். இவற்றுள் ட, ற ஆகியவை இரண்டும் ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வாரா. வல்லின எழுத்துகளுள் க, ச, த, ப ஆகிய நான்கு மட்டுமே ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வரும்.

தமிழில் சில சொற்களுக்குப் பின்னர் வரும் சொற்களில் ககரம், சகரம், தகரம், பகரம் ஆகிய எழுத்துக்களில் தொடங்கும் சொற்கள் இருந்தால் அவ்விரண்டு சொற்களுக்கும் இடையே வல்லின மெய் எழுத்து மிகும். இவ்வாறு மிகும் இடங்களில் க், ச், த், ப் என்ற வல்லெழுத்துக்கள் தோன்றும். இவை உரிய இடங்களில் வரவில்லையானால், அந்தத் தொடரிலோ, வாக்கியத்திலோ, பொருளின் பொருத்தமும், உரிய அழுத்தமும், ஓசை நயமும், தெளிவும் இரா. சில நேரங்களில் பொருள் வேறுபாடும் ஏற்பட்டு விடும்.
வல்லெழுத்துக்கள் மிகும் இடங்கள்
அ, இ, உ சுட்டெழுத்துக்களின் பின்
• அ + காலம் = அக்காலம்
• இ + சமயம் = இச்சமயம்
• உ + பக்கம் = உப்பக்கம் ('உ' எனும் சுட்டெழுத்து வழக்கில் இல்லை)
எ என்னும் வினா எழுத்தின் பின்
• எ + பொருள் = எப்பொருள்
அந்த, இந்த, எந்த என்னும் அண்மை, சேய்மைச் சுட்டுகள் மற்றும் வினாச் சுட்டுகளின் பின்
• அந்த + காலம் = அந்தக் காலம்
• இந்த + சிறுவன் = இந்தச் சிறுவன்
• எந்த + பையன் = எந்தப் பையன்
அப்படி, எப்படி, இப்படி என்னும் சொற்களின் பின்
• அப்படி + கேள் = அப்படிக் கேள்
• இப்படி + சொல் = இப்படிச் சொல்
• எப்படி + பார்ப்பது = எப்படிப் பார்ப்பது
இரண்டாம் வேற்றுமை உருபுக்குப்பின் (ஐ)
• அவனைக் கண்டேன்
• செய்யுளைச் சொன்னேன்
• அவளைத் தேடினேன்
• குறளைப் படித்தேன்
நான்காம் வேற்றுமை உருபுக்குப்பின் (கு)
• அவனுக்குக் கொடுத்தேன்
• அவளுக்குச் சொன்னேன்
என, ஆக என்ற சொற்களுக்குப்பின்
• எனக் கூறினான்
• அவனாகச் சொன்னான்
வல்லெழுத்து மிகா இடங்கள்
அது, இது, எது என்னும் சொற்களின் பின்
• அது காண்
• எது செய்தாய்
• இது பார்
ஏது, யாது என்னும் சொற்களின் பின்
• ஏது கண்டாய்
• யாது பொருள்
அவை, எவை, இவை, யாவை
• அவை பெரியன
• யாவை போயின
அத்தனை, எத்தனை, இத்தனை
• அத்தனை செடி
• எத்தனை பசு
அவ்வளவு, எவ்வளவு, இவ்வளவு
• அவ்வளவு தந்தாய்
• எவ்வளவு செய்தாய்
• இவ்வளவு துணிவு
அங்கு, எங்கு, இங்கு என்னும் சொற்களின் பின்
• அங்கு செல்
• எங்கு கற்றாய்
• இங்கு பார்
சில மென்றொடர்க் குற்றியலுகரத்திற்குப்பின்
• அன்று சொன்னான்
• என்று தந்தான்
• இன்று கண்டான்
• மென்று தின்றார்
• வந்து சேர்ந்தான்

ண, ன பொருள் வேறுபாடு
• அணல் - தாடி, கழுத்து
• அனல் - நெருப்பு
• அணி - அழகு
• அனி - நெற்பொறி
• அணு - நுண்மை
• அனு - தாடை, அற்பம்
• அணுக்கம் - அண்டை, அண்மை.
• அனுக்கம் - வருத்தம், அச்சம்
• அணை - படுக்கை, அணைத்துக் கொள்ளுதல்
• அனை - அன்னை, மீன்
• அணைய - சேர, அடைய
• அனைய - அத்தகைய
• அண்மை - அருகில்
• அன்மை - தீமை, அல்ல
• அங்கண் - அவ்விடம்
• அங்கன் - மகன்
• அண்ணம் - மேல்வாய்
• அன்னம் - சோறு, அன்னப்பறவை
• அண்ணன் - தமையன்
• அன்னன் - அத்தகையவன்
• அவண் - அவ்வாறு
• அவன் - சேய்மைச் சுட்டு, ஆண்மகன்
• ஆணகம் - சுரை
• ஆனகம் - துந்துபி
• ஆணம் - பற்றுக்கோடு
• ஆனம் - தெப்பம், கள்
• ஆணி - எழுத்தாணி, இரும்பாணி
• ஆனி - தமிழ் மாதங்களுள் ஒன்று
• ஆணேறு -ஆண்மகன்
• ஆனேறு - காளை, எருது
• ஆண் - ஆடவன்
• ஆன் - பசு
• ஆணை - கட்டளை, ஆட்சி
• ஆனை - யானை
• இணை - துணை, இரட்டை
• இனை - இன்ன, வருத்தம்
• இணைத்து - சேர்த்து
• இனைத்து - இத்தன்மையது
• இவண் - இவ்வாறு
• இவன் - ஆடவன், (அண்மைச் சுட்டு)
• ஈணவள் - ஈன்றவள்
• ஈனவள் - இழிந்தவள்
• உண் - உண்பாயாக
• உன் - உன்னுடைய
• உண்ணல் - உண்ணுதல்
• உன்னல் - நினைத்தல்
• உண்ணி - உண்பவன், ஒருவகைப் பூச்சி
• உன்னி - நினைத்து, குதிரை
• ஊண் - உணவு
• ஊன் - மாமிசம்
• எண்ண - நினைக்க
• என்ன - போல, வினாச்சொல்
• எண்ணல் - எண்ணுதல்
• என்னல் - என்று சொல்லுதல்
• எண்கு - கரடி
• என்கு - என்று சொல்லுதல்
• ஏண் - வலிமை
• ஏன் - வலிமை, ஒரு வினைச்சொல்
• ஏணை - தொட்டில்
• ஏனை - மற்றது
• ஐவணம் - ஐந்து வண்ணம்
• ஐவனம் - மலை நெல்
• ஓணம் - ஒரு பண்டிகை
• ஓனம் – எழுத்துச்சாரியை
• கணகம் - ஒரு படைப்பிரிவு
• கனகம் - பொன்
• கணப்பு - குளிர்காயும் தீ
• கனப்பு - பாரம், அழுத்தம்
• கணி - கணித்தல்
• கனி - பழம், சுரங்கம், சாரம்
• கணம் - கூட்டம்
• கனம் -பாரம்
• கண்ணன் - கிருஷ்ணன்
• கன்னன் - கர்ணன்
• கண்ணி - மாலை, கயிறு, தாம்பு
• கன்னி - குமரிப்பெண், உமை, ஒரு ராசி
• கணை - அம்பு
• கனை - ஒலி, கனைத்தல்
• கண் - ஓர் உறுப்பு
• கன் - கல், செம்பு, உறுதி
• கண்று - அம்பு
• கன்று - அற்பம், இளமரம், குட்டி, கைவளை
• கண்ணல் - கருதல்
• கன்னல் - கரும்பு, கற்கண்டு
• காண் - பார்
• கான் - காடு, வனம்
• காணம் - பொன், கொள்
• கானம் - காடு, வனம், தேர், இசை
• காணல் - பார்த்தல்
• கானல் - பாலை
• கிணி - கைத்தாளம்
• கினி - பீடை
• கிண்ணம் - வட்டில், கிண்ணி
• கின்னம் - கிளை, துன்பம்
• குணி - வில், ஊமை
• குனி - குனிதல், வளை
• குணித்தல் - மதித்தல், எண்ணுதல்
• குனித்தல் - வளைதல்
• குணிப்பு - அளவு, ஆராய்ச்சி
• குனிப்பு - வளைப்பு, ஆடல்
• கேணம் - செழிப்பு, மிகுதி
• கேனம் - பைத்தியம், பித்து
• கேணி - கிணறு
• கேனி - பித்துப் பிடித்தவர்
• கோண் - கோணல், மாறுபாடு
• கோன் - அரசன்
• சாணம் - சாணைக்கல், சாணி
• சானம் - அம்மி, பெருங்காயம்
• சுணை - கூர்மை, கரணை
• சுனை - நீரூற்று
• சுண்ணம் - வாசனைப்பொடி
• சுன்னம் - சுண்ணாம்பு, பூஜ்ஜியம்
• சேணம் - மெத்தை
• சேனம் - பருந்து
• சேணை - அறிவு
• சேனை - படை
• சோணம் - பொன், சிவப்பு, தீ, சோணகிரி
• சோனம் - மேகம்
• சோணை - ஒரு நதி, சேரன் மனைவி
• சோனை - மழைச்சாரல், மேகம்
• தண் - குளிர்ச்சி
• தன் - தன்னுடைய
• தணி - தணித்தல்
• தனி - தனிமை
• தாணி - தான்றிமரம்
• தானி - இருப்பிடம், பண்டசாலை,
• தாணு - சிவன், தூண், நிலைப்பேறு
• தானு - காற்று
• திணை - ஒழுக்கம், குலம்
• தினை - தானியம், ஒருவகைப் புன்செய்ப்பயிர்
• திண்மை - உறுதி
• தின்மை - தீமை
• திண் - வலிமை
• தின் - உண்
• துணி - துணிதல், கந்தை
• துனி - அச்சம், ஊடல் நீட்டித்தல்
• தெண் - தெளிவு
• தென் - தெற்கு, அழகு
• நண்பகல் - நடுப்பகல்
• நன்பகல் - நல்லபகல்
• நணி - அணி (அழகு)
• நனி - மிகுதி
• நாண் - வெட்கம், கயிறு
• நான் - தன்மைப் பெயர்
• நாணம் - வெட்கம்
• நானம் - புனுகு, கவரிமான்
• பணி - வேலை, கட்டளையிடு
• பனி - துன்பம், குளிர், சொல், நோய்
• பணை - முரசு, உயரம், பரந்த
• பனை - ஒருவகை மரம்
• பண் - இசை
• பன் - அரிவாள், பல
• பண்ணை - தோட்டம்
• பன்னை - கீரைச்செடி
• பண்ணுதல் - செய்தல்
• பன்னுதல் - நெருங்குதல்
• பண்ணி - செய்து
• பன்னி - சீப்பு, பனிநீர், மனை, சணல்
• பண்மை - தகுதி
• பன்மை - பல
• பணித்தல் - கட்டளையிடுதல்
• பனித்தல் - துளித்தல், தூறல், விரிந்த
• பட்டணம் - நகரம்
• பட்டினம் - கடற்கரை நகர்
• பாணம் - நீருணவு
• பானம் - அம்பு
• புணை - தெப்பம்
• புனை - இட்டுக்கட்டுதல், கற்பனை
• புண் - காயம்
• புன் - கீழான
• பேணம் - பேணுதல்
• பேனம் - நுரை
• பேண் - போற்று, உபசரி
• பேன் - ஓர் உயிரி
• மணம் - வாசனை, திருமணம்
• மனம் - உள்ளம், இந்துப்பு
• மணை - மரப்பலகை, மணவறை
• மனை - இடம், வீடு
• மண் - தரை, மண்வகை
• மன் - மன்னன், பெருமை
• மண்ணை - இளமை, கொடி வகை
• மன்னை - தொண்டை, கோபம்
• மாணி - அழகு, பிரம்மசாரி
• மானி - மானம் உடையவர்
• மாண் - மாட்சிமை
• மான் - ஒரு விலங்கு
• முணை - வெறுப்பு, மிகுதி
• முனை - முன்பகுதி, துணிவு, முதன்மை
• வணம் - ஓசை
• வனம் - காடு, துளசி
• வண்மை - வளப்பம், கொடை
• வன்மை - உறுதி, வலிமை
• வண்ணம் - நிறம், குணம், அழகு
• வன்னம் - எழுத்து, நிறம்
• வாணகம் - அக்கினி, பசுமடி
• வானகம் - மேலுலகம்
• வாணம் - அம்பு, தீ, மத்தாப்பு
• வானம் - ஆகாயம், மழை
• வாணி - கலைமகள், சரஸ்வதி
• வானி - துகிற்கொடி
ல, ழ, ள பொருள் வேறுபாடு
• அலகு - பறவையின் மூக்கு, அளவு, ஆண்பனை
• அழகு - வனப்பு
• அளகு - சேவல், பெண்கூகை
• அலகம் - திப்பிலி
• அளகம் - வெள்ளெருக்கு, நீர்
• அலகை - கற்றாழை, பேய்
• அளகை - அளகாபுரி, பெண்
• அழம் - பிணம்
• அலம் - கலப்பை
• அளம் - உப்பு
• அலத்தல் - அலட்டல், அலைதல்
• அளத்தல் - அளவிடுதல், மதித்தல்
• அலவன் - ஆண்நண்டு
• அளவன் - அளப்பவன், உப்பு எடுப்போன்
• அழி - அழித்துவிடு
• அலி - பேடி, காகம், விருச்சிகராசி
• அளி - கருணை, கள், வண்டு
• அல்லல் - துன்பம்
• அள்ளல் - வாரி எடுத்தல்
• அழை - கூப்பிடு
• அலை - கடல், நீரலை, அலைதல்
• அளை - தயிர், நண்டு, புற்று
• அவல் - பள்ளம், உணவுப் பொருள்
• அவள் - பெண் (சேய்மைச்சுட்டு)
• அல் - இரவு
• அள் - அள்ளி எடு, நெருக்கம்
• உலவு - நட
• உளவு - ஒற்று
• உழவு - கலப்பையால் உழுதல்
• உழி - இடம், பொழுது
• உளி - தச்சுக் கருவிகளுள் ஒன்று
• உலு - தானியப் பதர்
• உழு - நிலத்தை உழு
• உளு - உளுத்துப் போதல்
• உலை - கொல்லன் உலை, நீருலை
• உழை - பாடுபடு, பக்கம், கலைமான்
• உளை - பிடரி மயிர், சேறு, தலை
• உழுவை - புலி
• உளுவை - மீன்வகை
• எல் - கல், மாலை, சூரியன்
• எள் - எண்ணெய்வித்து, நிந்தை
• எலு - கரடி
• எழு - எழுந்திரு, தூண்
• ஒலி - சப்தம், நாதம், காற்று
• ஒழி - அழி, தவிர், கொல், துற
• ஒளி - வெளிச்சம், மறை(த்துவை)
• ஒல் - ஒலிக்குறிப்பு
• ஒள் - அழகு, உண்மை, அறிவு, ஒளி
• கலகம் - போர், அமளி, இரைச்சல்
• கழகம் - சங்கம், கூட்டமைப்பு
• கழங்கம் - கழங்கு, விளையாட்டுக் கருவி
• களங்கம் - குற்றம், அழுக்கு
• கலி - கலியுகம், பாவகை, சனி
• கழி - கோல், மிகுதி, உப்பளம்
• களி - மகிழ்வு, இன்பம்
• கலை - ஆண்மான், சந்திரன், கல்வி
• கழை - மூங்கில், கரும்பு, புனர்பூசம்
• களை - அழகு, புல் பூண்டு, அயர்வு
• கல் - மலை, பாறை, சிறுகல்
• கள் - மது, தேன்
• கலம் - கப்பல், பாத்திரம்
• களம் - இடம், போர்க்களம், இருள்
• காலி - ஒன்றுமில்லாதது, வெற்றிடம்
• காளி - துர்க்கை, மாயை
• காழி - சீர்காழி (ஊர்)
• காலை - பொழுது, விடியற்பொழுது
• காளை - காளைமாடு, இளைஞன்
• காலம் - பொழுது, நேரம்
• காளம் - எட்டிமரம், சூலம்
• கிலி - அச்சம், பயம்
• கிழி - கிழித்துவிடு, முடிப்பு (பொன்)
• கிளி - பறவை, வெட்டுக்கிளி
• கிழவி - முதியவள், மூதாட்டி
• கிளவி - சொல், மொழி
• குலி - மனைவி
• குழி - பள்ளம், பாத்தி, பன்னீரடிச் சதுரம், வயிறு
• குளி -நீராடு
• குலம் -ஜாதியின் உட்பிரிவு, இனம், குடி
• குளம் -நீர்நிலை, கண்மாய், ஏரி
• குலை - கொத்து, மனம் தடுமாறுதல்
• குழை - குண்டலம், குழைந்துபோதல்
• குலவி - மகிழ்ந்திருத்தல்
• குழவி - குழந்தை, இளமை, யானைக் கன்று அம்மிக்கல்
• குளவி - ஒரு வண்டு, காட்டுமல்லி
• குலிகம் -சிவப்பு, இலுப்பை
• குளிகம் -மருந்து, மாத்திரை
• குவலை -துளசி, கஞ்சா
• குவளை - குவளை மலர், சொம்பு, ஒரு பேரெண்
• கூலம் - தானியம், கடைத்தெரு
• கூளம் - குப்பை
• கூலி - ஊதியம்
• கூளி(யார்) - பேய், காளை, வீரர், படைவீரர், வணங்கி நிற்பவர், ஏவலாளர்
• கொலு - அரசசபை, திருவோலக்கம்(தெய்வசபை), உல்லாசமாக வீற்றிருத்தல்
• கொழு - மழு, கலப்பையில் மாட்டும் பெரிய இரும்பு, கொழு கொழுத்து இருத்தல்
• கொளு - புறப்பொருள் வெண்பாமாலைத் துறை, பொருந்துவாய்
• கொலை - கொல்லுதல்
• கொளை - கோட்பாடு, பயன், இசைப்பாட்டு, தாளம்
• கொல்லாமை - கொலை செய்யாமை
• கொள்ளாமை - ஏற்றுக்கொள்ளாமை, அடங்காமை
• கொல்லி - உயிர்க்கொல்லி, ஒரு மலை
• கொள்ளி - கொள்ளிக்கட்டை
• கொல்லை - புழக்கடை, தரிசுநிலம்
• கொள்ளை - திருடுதல், மிகுதி
• கோலம் - அழகு, அலங்காரம்
• கோளம் - உருண்டை, வட்டம்
• கோலை - மிளகு
• கோழை - வீரமற்றவன், கபம்
• கோளை - குவளை, எலி
• கோல் - மரக்கொம்பு, அம்பு, குதிரைச்சம்மட்டி, தண்டு, யாழ்நரம்பு
• கோள் - கிரகம்
• கோலி - இலந்தை, விளையாடும் குண்டு
• கோழி - உறையூர், விட்டில், பறவை
• கோளி - பூவாது காய்க்கும் மரம், ஆத்தி, ஆலம்
• சலம் - நீர், சிறுநீர், குளிர்
• சளம் - பொய், துன்பம், வஞ்சனை
• சாலை - பாடசாலை, பொது மண்டபம், அறக்கூடம்
• சாளை - கடல்மீன்
• சாழை - குடிசை, குச்சு
• சுழித்தல் - சுழலுதல், நீர்ச்சுழல்
• சுளித்தல் - முறித்தல், சினத்தல்
• சூலை - வயிற்று நோய்
• சூளை - செங்கல் சூளை
• சூல் - கர்ப்பம்
• சூழ் - சூழ்ந்துகொள், சுற்று
• சூள் - சபதம்
• சேல் - மீன்
• சேள் - மேலிடம்
• சோலி - ரவிக்கை, காரியம்
• சோழி - பலகரை
• சோளி - கூடைவகை
• தவளை - ஓர் உயிரி
• தவலை - பாத்திரம்
• தலம் - இடம், பூமி
• தழம் - தைலம்
• தளம் - மேடை, மாடி வீட்டின் அடுக்கு
• தழை - தாவர உறுப்பு
• தலை - மண்டை
• தளை - விலங்கு
• தாலம் - உலகம், தேன்
• தாளம் - இசைக்கருவி, ஜதி
• தாலி - மங்கலநாண்
• தாழி - கடல், குடம், பரணி பெரியபாண்டம்
• தாளி - தாளித்தல், பனைதால் - நாக்கு, தாலாட்டு
• தாழ் - தாழ்தல், குனிதல்
• தாள் - முயற்சி, பாதம், ஆதி, படி, காகிதம்.
• துலக்கம் - ஒளி, தெளிவு
• துளக்கம் - அசைவு, வருத்தம், கலக்கம், ஒளி
• துலம் - கோரை, கனம்
• துளம் - மாதுளை, மயிலிறகு
• துலி - பெண் ஆமை
• துழி - பள்ளம்
• துளி - மழைத்துளி, திவலை, சிறிய அளவு
• துலை - ஒப்பு, கனம்
• துளை - துவாரம், வாயில்
• தூலி - எழுதுகோல், எழுத்தாணி
• தூளி - புழுதி, குதிரை
• தெழித்தல் - கோபித்தல், முழங்குதல், அதட்டுதல், நீக்குதல், ஆரவாரித்தல்
• தெளித்தல் - விதைத்தல், சபதம், கூறல், விதைத்தல்
• தெல் - அஞ்சுதல்
• தெள் - தெளிவான
• தோலன் - அற்பன்
• தோழன் - நண்பன்
• தோலி - பிசின், ஒருவகை மீன்
• தோழி - பாங்கி, நட்பால் நெருக்கமானவள்
• தோளி - அவுரி (ஒருவகை குத்துச்செடி), அரக்கு
• தோல் - சருமம், வனப்பு, விதையின் மேல்பகுதி
• தோள் - புயம், வீரம்
• நலன் - நலம், அழகு, புகழ், இன்பம், நன்மை, குணம்,
• நளன் - தமயந்தியின் கணவன், ஓர் அரசன்
• நலி - நோய்
• நளி - குளிர்ச்சி, பெருமை
• நலிதல் - நலிந்துபோதல், தோற்றல்
• நளிதல் - செறிதல், பரத்தல், ஒத்தல்
• நல் - நல்ல
• நள் - இரவு, நடு, நள்ளிரவு
• நாலம் - பூவின் காம்பு
• நாழம் - இழிவுரை, வசவு
• நாளம் - பூந்தண்டு, உட்துளை, ரத்தநாளம்
• நாலி - முத்து, கந்தை ஆடை
• நாழி - உள்தொளையுள்ள பொருள், ஒருபடி, ஏர், அம்பறாத்துணி, நாடா, பூரட்டாதி
• நாளி - கல், நாய்
• நாலிகை - மூங்கில், அடுப்புச்சந்து
• நாழிகை - வட்டம், கடிகாரம்
• நால் - நான்கு
• நாழ் - குற்றம், செருக்கு
• நாள் - காலம், திதி
• நீலம் - ஒரு நிறம், கருங்குவளை, இருள்
• நீளம் - நெடுமை (நீண்ட), தாமதம்
• நீல் - நீலம், காற்று
• நீள் - நீளம், ஒளி
• பலம் - கிழங்கு, வலி, நெற்றி, சக்தி, சேனை, வன்மை, உறுதி, எடை
• பழம் - கனி, முதுமை
• பல்லி - சிற்றூர், இடையர் ஊர், உழுகருவி, ஓர் உயிரி, வண்டியுறுப்பு
• பள்ளி - இடைச்சேரி, புத்தர்கோயில், குறும்பன், மருதநிலத்தூர், படுக்கை, பள்ளிக்கூடம்
• பலி - பலியிடுதல், பலியுயிர்
• பழி - குற்றம்
• பால் - திரவ உணவு, பகுப்பு, இயல்பு
• பாழ் - வீண், வெறுமை
• பீழை - துன்பம்
• பீளை - கண் அழுக்கு
• புலி - காட்டு விலங்கு
• புளி - புளியமரம், புளியங்காய்
• புலை - புலால், ஊன், கீழ்மை
• புழை - துளை, வாயில், நரகம்
• புகல் - அடைக்கலம்
• புகழ் - பெருமை
• புல் - அற்பம், கலவி, புல்பூண்டு
• புள் - பறவை
• பூலம் - புற்கட்டு
• பூளம் - பூவரசு
• பூழை - துவாரம், கோபுரவாயில்
• பூளை - பூளைச்செடி, இலவம் பஞ்சு
• பாலி - தானியக் குவியல், தூற்றாத தானியம்
• பாழி - கொடுத்தல், ஈதல்
• பாளி - வரப்பு, எல்லை
• பாலிவு - அழகு, நிறைவு
• பாழிவு - பொழிதல், மேன்மை
• போலி - பொய், வஞ்சகம், ஒப்பு
• போளி - இனிப்புப் பண்டம்
• பொலிதல் - செழித்தல், மங்கலமாதல்
• பொழிதல் - ஈதல், கொடுத்தல், சொரிதல், பெய்தல், நிறைதல்
• மலம் - அழுக்கு, பாவம்
• மழம் - இளமை, குழந்தை
• மலை - குன்று, பொருப்பு, வெற்பு,சிகரம்
• மழை - மழைநீர், குளிர்ச்சி, மேகம்
• மலைத்தல் - வியத்தல், தடுமாறுதல்
• மழைத்தல் - மழை பெய்திருத்தல், குளிர்ந்திருத்தல்
• மல்லிகை - மாலை, கழுத்தணி, வரிசை
• மாளிகை - அரண்மனை, கோயில்
• மாலை - அந்திப்பொழுது, பூமாலை
• மாழை - மயக்கம், இளமை, அழகு
• மாளை - புளியம்பட்டை
• மால் - திருமால், மயக்கம், அருகன், இந்திரன், பெருமை, மேகம்
• மாள் - இறத்தல், சாதல் (இற,சாவு)
• முலை - உடலிலுள்ள ஓர் உறுப்பு
• முழை - குகை
• முளை - முளைத்தல், தறி, ஆப்பு, அங்குசம், இளமை, தண்டு, மூங்கில்
• முழி - விழி (விழித்தல்)
• முளி - மரக்கணு, விரல்முளி, வாட்டம்
• மூலி - மூலிகை, மரம், வேருள்ளது
• மூழி - அகப்பை, சோறு, நீர்நிலை, கோணம்
• மூலை - இரு கோடுகள் சந்திக்கும் இடம்
• மூளை - மண்டைக்குள் இருக்கும் ஓர் உறுப்பு(முதன்மைப் பகுதி)
• மெல்ல - மென்று தின்பது
• மெள்ள - மெதுவாக
• மாலி - மொளலி கிரீடம்
• மாழி - மேழி, கலப்பை
• மாளி - துணிமூட்டை
• வலம் - சுற்றுதல், வலப்பக்கம், வெற்றி
• வளம் - வளமை, அழகு
• வலவன் - திருமால்
• வளவன் - சோழன், வேளாளன்
• வலன் - ஓர் அரசன், வெற்றி, வல்லவன்
• வளன் - செழுமை, வளப்பன்
• வழப்பம் - வழக்கம், இயல்பு
• வளப்பம் - வளமை, செழிப்பு
• வலி - நோய், வலிமை, துன்பம்
• வழி - நெறி, பாதை, தடம், உபாயம்
• வளி - காற்று
• வலை - மீன் முதலியன பிடிக்கும் ஒரு கருவி
• வழை - சுரபுன்னை, புதுமை, இளமை
• வளை - கை வளையல், எலி வளை
• வல் - வலிமை, விரைவு, திறமை
• வள் - ஒலிக்குறிப்புச் சொல்
• வல்லம் - வாழை, ஓர் ஊர்
• வள்ளம் - மரக்கலம், படகு, அளவு, தொன்னை
• வல்லி - பூமி, பெண், பிரிதல், படர் கொடி
• வள்ளி - வள்ளியம்மை, ஆபரணம், சந்திரன்
• வலு - வலிமை, பலம், பற்று
• வழு - குற்றம், தவறு, பழிப்புரை, கேடு
• வளு - இளமை, இளைய
• வாலி - கிஷ்கிந்தை அரசன் (இராமாயணம்)
• வாழி - வாழ்க (எனவாழ்த்துதல்)
• வாளி - அன்பு, வட்ட வாள், வீரன், ஒரு காதணி
• வாலை - இளம்பெண், திராவகம் வடிக்கும் பாத்திரம், ஒரு சக்தி
• வாழை - வாழைமரம்
• வாளை - வாளை மீன்
• வால் - விலங்குகளின் ஓர் உறுப்பு
• வாழ் - வாழ்வாயாக (என்று வாழ்த்துதல்)
• வாள் - போர்வாள், நீண்டகத்தி
• விலா - விலா எலும்பு
• விழா - திருவிழா, கொண்டாட்டம்
• விளா - இளமை, வெண்மை, நிணம்
• விழி - கண், கருவிழி
• விளி - கூப்பிடு, அழை, ஏழிசையில் ஒன்று
• விலை - மதிப்பு, விலைக்கு விற்றல்
• விழை - விரும்பு, ஆசைப்படு
• விளை - ஒரு மீன்வகை, விளைவி (விளைச்சல்)
• விலக்கு - விலக்கி விடு, தவிர்
• விளக்கு - விளக்கமாகச் சொல், தீபம்
• விலங்கு - பூட்டு, கை, கைகளைப் பிணிக்கும் கருவி, மிருகம்
• விளங்கு - திகழ் (திகழ்தல்), சிற்றரத்தை (மூலிகை வகை)
• வெல்லம் - சக்கரைக்கட்டி, கருப்பட்டி
• வெள்ளம் - மிதமிஞ்சிய நீர்பெருக்கு
• வேலம் - வேலமரம், தோட்டம்
• வேழம் - யானை, கரும்பு, மூங்கில்
• வேல் - வேலாயுதம்
• வேள் - வேளிர் குலத்தவன், மன்மதன், ஆசை
• வேலை - பணி, கடல்
• வேளை - பொழுது, நேரம், ஒருவகைக் கீரை
ர, ற பொருள் வேறுபாடு
• அர - பாம்பு
• அற - தெளிய, முற்றுமாக
• அரவு - பாம்பு
• அறவு - அறுதல், தொலைதல்
• அரம் - ஒரு கருவி
• அறம் - தர்மம், நீதி, கற்பு, புண்ணியம், கடமை, அறநூல், துறவறம்
• அரி - திருமால், அரிசி, அழகு, அரிதல், பன்றி, வண்டு, கடல், தகடு, சிவன்
• அறி - அறிந்துகொள்
• அரிய - கிடைத்தற்கு அரிதான, கஷ்டமான
• அறிய - அறிந்துகொள்ள, தெரிந்துகொள்ள
• அரன் - சிவன்
• அறன் - தர்மம், அறக்கடவுள்
• அரிவை - பெண் (7 பருவத்துள் ஒன்று. 18 வயதுக்கு மேல் 25 வயதுக் குட்பட்ட பெண்)
• அறிவை - அறிவாய்
• அருகு - புல்வகை (அருகம்புல்), அண்மை
• அறுகு - குறைந்து போதல்
• அக்கரை - அந்தக் கரை
• அக்கறை - ஈடுபாடு
• அரை - பாதி, மேகலை, வயிறு, ஒரு மரம்
• அறை - வீட்டின் பகுதி, அடி, பாத்தி, ஒலி, பாசறை, சொல், குகை, வஞ்சனை, மாளிகை
• அரைதல் - தேய்தல்
• அறைதல் - அடித்தல், சொல்லுதல்
• அப்புரம் - அந்தப் பக்கம்
• அப்புறம் - பிறகு
• அர்ப்பணம் - உரித்தாக்குதல்
• அற்பணம் - காணிக்கை செலுத்துதல்
• அரு - உருவமற்றது
• அறு - துண்டித்துவிடு, அறுத்துவிடு
• அருமை - சிறப்பு, அன்பு, இன்மை, சுலபத்தில் கிடைக்காதது
• அறுமை - நிலையின்மை, ஆறு
• ஆரு - குடம், நண்டு
• ஆறு - ஒரு எண், வழி, சமயம், தன்மை, நதி, ஒழுக்கம், பக்கம், நிலை
• ஆர - நிறைய, அனுபவிக்க
• ஆற - சூடு ஆற (குறைய)
• ஆரல் - ஒருவகை மீன்
• ஆறல் - சூடு குறைதல்
• இரத்தல் - யாசித்தல்
• இறத்தல் - இறந்துபோதல், சாதல்
• இரகு - சூரியன்
• இறகு - சிறகு
• இரக்கம் - கருணை
• இறக்கம் - சரிவு, மரணம்
• இரங்கு - கருணைகாட்டு
• இறங்கு - கீழிறங்கி வா
• இரவம் - இரவு
• இறவம் - இறால் மீன்
• இரவி - சூரியன், எருக்கு, மலை, வாணிகத்தொழில்
• இறவி - இறத்தல்
• இரவு - இரவு நேரம், யாசித்தல்
• இறவு - மிகுதி, இறால்மீன், இறுதி, தேன்கூடு, சாவு, முடிவு, நீக்கம்
• இரை -ஒலி, உணவு
• இறை - கடவுள், அணு, அரசன், ரேகை, சந்து, கடமை, தலைமை, விடை, உயரம், மூலை
• இரு - இரண்டு, பெரிய, உட்கார், அமர்ந்துகொள்
• இறு - ஒடி, கெடு, சொல்லு
• இரும்பு - கடிவாளம், கிம்புரி, ஆயுதம், ஓர் உலோகம்
• இறும்பு - வண்டு, சிறுமலை
• இருப்பு - கையிருப்பு, இருப்பிடம், ஆசனம், நிலை, பொருள், முதல்
• இறுப்பு - வடிப்பு
• இருத்தல் - அமர்ந்திருத்தல், காத்திருத்தல்
• இறுத்தல் - வடித்தல், செலுத்தல், எறிதல், கடன் கொடுத்தல், பதில்கூறல், முடித்தல், முறித்தல்
• இருக்கு - மந்திரம், ரிக் வேதம்
• இறுக்கு - அழுத்து, இறுக்கிக்கட்டு
• இரைத்தல் - ஒலித்தல், மூச்சுவாங்குதல்
• இறைத்தல் - சிதறுதல், மிகு செலவு
• உரவு - அறிவு, ஒலி, மிகுதி, வலி, ஞானம், விடம்
• உறவு - நட்பு, சுற்றம், எறும்பு
• உரவோர் - அறிஞர், முனிவர்
• உறவோர் - சுற்றத்தார், அடைந்தோர்
• உரி - தோல், மரப்பட்டை, அரைப்படியளவு, உரிச்சொல்,கொத்துமல்லி
• உறி - உறிவெண்ணெய், தூக்கு
• உரு - வடிவம், அழகு, உடல், மரக்கலம், நிறம், அச்சம், பெருமை, மேன்மை
• உறு - மிகுதி
• உருக்குதல் - இளக்குதல், மெலியச் செய்தல்
• உறுக்குதல் - சினத்தல், அதட்டுதல்
• உரை - புகழ், விளக்கவுரை, நூல், பொன்மாற்று, அறிவுரை, சொல்
• உறை - இடம், பண்டம், பொருள், மருந்து, பாலில் இடும் பிரை, துளி, மழை, ஆடை, துன்பம், பாம்பின் விஷப்பை
• உரைப்பு - தங்குதல், தோய்தல்
• உறைப்பு - காரம், கொடுமை
• உரையல் - சொல்லல்
• உறையல் - மாறுபாடு, பிணக்கு
• உரிய - உரிமையான
• உறிய - உறிஞ்ச
• ஊரல் - ஊர்தல், கிளிஞ்சல், ஒருவகைப் பறவை
• ஊறல் - தினவு, ஊற்று, சாறு, வருவாய், ஊறுதல், களிப்பு
• ஊரு - அச்சம், தொடை
• ஊறு - இடையூறு, துன்பம், காயம் உறுதல், தீண்டல், குற்றம், புண், கொலை
• எரி - தீ, கார்த்திகை, பிரபை, இடபராசி, நெருப்பு, நரகம், வெம்மை, கந்தகம்
• எறி - விடுதல், எறிதல், குறிப்பாகக் கூறுதல்
• ஏர - ஓர் உவமஉருபு
• ஏற - மிகுதி, உயர (ஏறுதல்)
• ஏரி - நீர்நிலை, குளம்
• ஏறி - உயர்ந்த, மேலே ஏறி
• ஒரு - ஒன்று, ஒப்பற்ற, ஆடு
• ஒறு - தண்டி, அழி, இகழ்
• ஒருத்தல் - ஆண் விலங்குகளின் பொதுப்பெயர்
• ஒறுத்தல் - தண்டித்தல், துன்புறுத்தல், வருத்துதல், வெறுத்தல், கடிதல், இகழ்தல், குறைத்தல்
• ஒருவு - நீங்கு
• ஒறுவு - வருத்தம், துன்பம்
• கரடு - மரக்கணு, மணிக்கட்டு, முருடு, வளர்ச்சியற்றது
• கறடு - தரமற்ற முத்து
• கரம் - கிரணம், விஷம், செயல், கை, கழுதை
• கறம் - கொடுமை, வன்செய்கை
• கரவு - பொய், வஞ்சனை, மறைவு
• கறவு - கப்பம் கரவை - கம்மாளர் கருவி கறவை - பாற்பசு கரி - அடுப்புக்கரி, நிலக்கரி, யானை, சாட்சி, பெண்கழுதை, விஷம், கருமை கறி - இறைச்சி, மிளகு கரத்தல் - மறைத்தல் கறத்தல் - கவர்தல், பால் கறத்தல்
• கருத்து - எண்ணம் கறுத்து - கருநிறங்கொண்டு
• கரு - சினை, பிறவி, முட்டை, நடு, கருநிறம், அணு, அடிப்படை கறு - சினம், வைராக்கியம், கோபம், அகங்காரம்
• கருப்பு - பஞ்சம் கறுப்பு - கருநிறம், பேய், கோபம், குற்றம், கறை
• கரை - எல்லை, தடுப்பு, ஓரம் கறை - அழுக்கு, குற்றம், ரத்தம்
• கரையான் - மீனவன் கறையான் - செல் (ஓர் உயிரி)
• கர்ப்பம் - கருவுறுதல், உள், சினை கற்பம் - கஞ்சா, அற்பம், ஊழிக்காலம், தேவலோகம், திருநீறு, ஆயுள், மந்திர சாஸ்திரம், 432 கோடி, மூப்பு நீக்கும் மருந்து
• கர்ப்பூரம் - சூடம், பொன், மருந்து, கூடம் கற்பூரம் - பொன்னாங்கண்ணி
• காரி - கரிக்குருவி. காக்கை, வயிரவன், ஐயனார், ஒரு நதி, சனி, விஷம், ஒரு வள்ளல், வாசுதேவன் காறி - காறிஉமிழும் கழிவு
• காரு - வண்ணான், தேவதச்சன் காறு - காறுதல் (காறி உமிழ்), அளவு
• காரை - ஒரு வகை செடி, ஒரு வகை மீன், சிமெண்ட் மணல் சேர்ந்த கலவை காறை - ஒரு கழுத்தணி
• கீரி - ஓர் உயிரினம் கீறி - பிளந்து, அரிந்து
• குரங்கு - ஒரு விலங்கு குறங்கு - தொடை, கொக்கி
• குரவர் - கடவுள், குரு, பெரியோர், அரசர் குறவர் - ஒரு ஜாதியினர்
• குரவை - கூத்து வகை, ஒலி, கடல், மகளிர் மகிழ்ச்சி குறவை - ஒருவகை மீன்
• குரத்தி - தலைவி, குருவின் மனைவி குறத்தி - குறத்தி ஜாதிப் பெண்
• குருகு - பறவை, குட்டி, கொக்கு, உலைத்துருத்தி, உலைமூக்கு, குருக்கத்தி, நாரை, கோழி, கைவளை குறுகு - அண்மைப்படுத்து
• குருகினம் - பறவை இனம் குறுகினம் - நெருங்கினோம்
• குரை - சத்தம், ஒலி, குதிரை, பெருமை, ஓசை குறை - குற்றம், காரியம், கடன், வேண்டுகோள், வறுமை
• குரு - ஆசிரியர், மேன்மை, கனம், வியாழன், நிறம், தந்தை, இரசம் குறு - குறுகு
• கூரல் - ஒரு மீன், பறவை இறகு கூறல் - சொல்லுதல், விற்றல்
• கூரை - சிறிய ஓலை வீடு, வீட்டின் மேற்கூரை, சிற்றில் கூறை - புது ஆடை, சீலை
• கூரிய - கூர்மையான கூறிய - சொன்ன
• கூர - குளிர்ச்சி மிக கூற - சொல்ல, வேண்டல்
• கோரல் - கூறுதல் கோறல் - கொல்லல்
• கோரை - புல்வகை கோறை - குவளை, பொந்து
• கோரல் - சேர்தல், குளிர் காற்று, மலைப்பக்கம் கோறல் - குளிர் காற்று, மழை
• சிரை - சிரைத்தல், முடிநீக்கல் சிறை - சிறைச்சாலை, மதில், காவல், பக்கம், நீர்க்கரை, இறகு, அடிமை, அறை, அணை
• சீரிய - சினந்த, சிறந்த, சீராய் சீறிய - சினந்த
• சுரா - கள் சுறா - சுறா மீன்
• சூரல் - மூங்கில், பிரம்பு சூறல் - தோண்டல்
• சுருக்கு - வலை, சுருக்கம், கட்டு, பூமாலை, வகை, குறைவு, நெய்த்துடுப்பு சுறுக்கு - விரைவு
• செரு - போர், ஊடல் செறு - வயல், பாத்தி, குளம்
• செருநர் - பகைவர், படைவீரர் செறுநர் - பகைவர்
• சொரி - தினவு, அரிப்பு, பொழி சொறி - சிரங்கு, சொறிதல்
• தரித்தல் - அணிதல், பொறுத்தல், தங்கல், தாமதித்தல், தாங்குதல் தறித்தல் - வெட்டுதல்
• தரி - அணி, அணிந்துகொள் தறி - தூண், ஆப்பு, நெசவு இயந்திரம், முளைக்கோல்
• தருதல் - கொடுத்தல் தறுதல் - இறுகக்கட்டுதல்
• தாரு - மரம், தேவதாரு, பித்தளை தாறு - குலை, அங்குசம், முள், இரும்பு, முள்கோல்
• திரம் - மலை, உறுதி, நிலை, பூமி திறம் - உறுதி, நரம்புள்ள வீணை, கூறுபாடு, சுற்றம், குலம், பக்கம், வல்லமை, ஒழுக்கம், மேன்மை, வரலாறு, காரணம்
• திரை - அலை, கடல், திரைச்சீலை திறை - கப்பம்
• துரவு - கிணறு துறவு - துறத்தல், துறவறம்
• துரை - பெரியோன், தலைவன் துறை - நீர்த்துறை, வழி, இடம், நூல், கடற்கரை, உபாயம், பாவினம்
• துரு - களிம்பு துறு - கூட்டம், நெருக்கம்
• தூரல் - தூருதல், வருத்தம் தூறல் - மழைத்துளி, பழி சொல்லுதல்
• தூரன் - குலத்தின் பெயர் தூறன் - மூர்க்கன்
• துரு - வீதி துதறு - அழி
• தேரார் - கல்லாதவர், கீழ்மக்கள், பகைவர் தேறார் - அறிவிலார், பகைவர்
• தேரி - மணல் திட்டை, மணல் குன்று தேறி - தேர்ச்சி பெற்று, தெளிந்து
• நரை - நரைமுடி, வெண்மயிர், மூப்பு, எருது, கவரிமா, மரச்சொத்தை, பெருமை நறை - தேன், சாதிக்காய், கள், வாசனை, நறும்புகை, பச்சிலைக்கொடி, குற்றம்
• நாரி - பெண், பார்வதி, வாசனை, கள், சேனை, பன்னாடை, தேன், நாறி - கற்றாழை
• நிருத்தம் - கூத்து, நடனம், பதம் பிரித்துப் பொருள் கூறும் நூல், பற்றின்மை நிறுத்தம் - நிறுத்தும் இடம்
• நிரை - பசு, ஒழுங்கு, வரிசை நிறை - கற்பு, அளவு, அழிவின்மை, நீதி, வரையறை, திண்மை, நிரப்பு
• நூரல் - அவிதல், பதங்கெடுதல் நூறல் - அவித்தல்
• நேரி - அமுக்கு, நசுக்கு, அழுத்து நேறி - வழி, கோயில், கற்பு
• பரட்டை - பரட்டைத்தலை பறட்டை - செழிப்பற்றது
• பரதி - கூத்தாடுபவன் பறதி - அவசரம், பறத்தல்
• பரத்தல் - அலமறுதல், மிகுதல் பறத்தல் - பறந்துசெல்லல்
• பரம்பு - வயலை சமப்படுத்தும் பலகை பறம்பு - பாரியின் மலை
• பரல் - விதை, பருக்கைக்கல் பறல் - பறவை
• பரவை - கடல், ஆடல், பரப்பு பறவை - பறப்பவை, ஒரு நோய்
• பரி- குதிரை, பெருமை, விரைவு, செலவு, சுமை, மிகுதி பறி - பறித்தல், கொள்ளை, பொன், வலை, உடம்பு,ஓலைப்பாய்
• பரித்தல் - காத்தல், ஓடுதல், தாங்குதல், சுமத்தல், சூழ்தல், தரித்தல், பறித்தல் - பிடுங்குதல்
• பரிவு - அன்பு, துன்பம், இரக்கம் பறிவு - கழிவு, அதிர்தல்
• பருகு - குடி, அருந்து பறுகு - பறட்டை, அன்பு, பக்குவம்
• பரை - சிவசக்தி பறை - இசைக்கருவி, இறகு, வாத்தியம், பறவை, சொல்
• பாரை - கடப்பாரை பாறை - கற்பாறை
• பிரை - உறைமோர், பயன் பிறை - பிறைச்சந்திரன்
• பீரு - புருவம்,அச்சமுள்ளோன் பீறு - கிழிவு
• புரம் - மாடம், கோயில், இராஜதானி, ஊர், முன், மேல்மாடம், ஒரு நகரம் புறம் - இடம், வரியில்லா நிலம், பக்கம், வெளி,பின்புறம், முதுகு
• புரவு - கொடை, நிலம், செழுமை, காத்தல்,அரசர், கப்பம், ஆற்றுநீர் பாயும் நிலம் புறவு - காடு, புறா,
• பெருக்கல் - நிறைத்தல், மிகுத்தல், நிரப்புதல், அதிகப்படுத்தல்,மிகுவித்தல் பெறுக்கல் - அரிசி, மிகுத்தல்
• பொரி - நெற்பொரி, பொரிதல் பொறி - தீப்பொறி, அறிவு, எழுந்து, வரிவண்டு
• பொரித்தல் - வறுத்தல், குஞ்சு பொரித்தல் பொறித்தல் - எழுதுதல், தீட்டுதல், பதித்தல், அடையாளமாக வைத்தல்
• பொருப்பு - மலை, பக்கமலை பொறுப்பு - பாரம், பொறுமை
• பொரு - போர் பொறு - பொறுத்திரு
• மரத்தல் - விறைத்தல் மறத்தல் - மறதி, நினைவின்மை
• மரம் - தாவர வகை, மூலிகை, மரக்கலம்,பறைவகை மறம் - வீரம், போர், சினம், மாறுபாடு, கொலை, பாவம், வலி, கொடுமை, மயக்கம்.
• மரி - விலங்குகளின் குட்டி மறி - தடை செய்
• மரித்தல் - இறத்தல், சாதல் மறித்தல் - தடுத்தல்,திரும்புதல், அழித்தல்.
• மரை - மான் மறை - வேதம் (எ.கா:- அறம் பொருள், இன்பம் வீடு என்கிற நால் வேதங்கள்)
• மரு - மலை, பாலைநிலம், மணவிருந்து, நீரில்லா இடம், மருக்கொழுந்து. மறு - குற்றம், மச்சம், எதிர், வேறு, அடையாளம்
• மருப்பு - கொம்பு, யானைத் தந்தம், யாழ்த்தண்டு. மறுப்பு - எதிர்ப்பு
• மருகு - வாசனை தாவரம் மறுகு - சிறியதெரு
• மாரன் - மன்மதன், காமன் மாறன் - பாண்டியன், சடகோபாழ்வார்
• முரி - பாலைநிலம், நொய், சிதைவு. முறி - ஒடி, பத்திரம், தளிர், எழுது, துண்டு
• முருக்குதல் - அழித்தல், உருக்குதல். முறுக்குதல் - சுழற்றுதல், திரித்தல்.
• வரம் - இறைவன் கொடுப்பது, வேண்டும் பொருள், தெய்வ ஈகை, மேன்மை, விருப்பம். வறம் - வற்றுதல், வறட்சி, பஞ்சம், நீரின்மை, வறுமை, வெம்மை.
• வரவு - வருமானம், வழி வறவு - கஞ்சி
• வரப்பு - எல்லை, வரம்பு வறப்பு - வறட்சி, வறுமை, வற்றுதல்
• விரகு - விவேகம், உபாயம், உற்சாகம், புத்தி, கபடம். விறகு - எரிகட்டை
• விரலி - மஞ்சள் விறலி - மெய்ப்பாடு தோன்ற ஆடிப்பாடும் பெண், 16 வயதினள்.
• விரல் - மனித உடலில் உள்ள உறுப்பு விறல் - பெருமை, வீரம், வெற்றி, மிகுதி, வலி.
• விராய் - விறகு விறாய் - செருக்கு, இறுமாப்பு
• வெரு - அச்சம் வெறு - வெறுத்துவிடு
• வெரல் - மூங்கில் வெறல் - வெல்லுதல், வெற்றி கொள்ளல்
• விரை - விரைந்துசெல் விறை - மரத்துப்போ(தல்)
------------------------------------------------------------------------------------------------------------------------------------------









பிழையின்றி தமிழ் எழுத... (பாகம் 1)

1. சந்தி இலக்கணம்
வரையறையும் நோக்கமும்

1.1சந்தி என்றால் என்ன??
ஞாயிறு என்ற சொல்லோடு "ஐ" , "ஆல்" முதலாய வேற்றுமை விகுதிகளைச் சேர்க்கும் போது ஞாயிற்றை, ஞாயிற்றால் என்று சொற்கள் அமைகின்றன. ஞாயிறு என்ற சொல்லோடு கிழமை என்ற சொல்லைச் சேர்க்கும்போது ஞாயிற்றுக்கிழமை என்ற தொகை உருவாகிறது. ஞாயிற்றை, ஞாயிற்றால் என்பவற்றில் றகர ஒற்று (ற்) இரட்டியது. ஞாயிற்றுக்கிழமை என்பதில் றகர ஒற்று இரட்டியதோடு ககர (க்) ஒற்றும் மிகுந்தது. இவ்வாறு சொல்லோடு விகுதியும் மற்றொரு சொல்லும் சேரும்போது ஏற்படும் மாற்றங்களைச் 'சந்தி' என்பர். சந்தி பற்றிய விதிகளைச் சந்தி விதிகள் என்றும் சந்தியை விளக்கும் இலக்கணத்தைச் சந்தி இலக்கணம் என்றும் கூறுவர். சந்தி இலக்கணத்தை நமது இலக்கணங்கள் 'புணரியல்' என்றும் 'புணர்ச்சி இலக்கணம்' என்றும் கூறும்.

1.2 சந்தி இலக்கணம் ஏன்?

சந்தி இலக்கணம் இல்லாமல் மொழி இயங்காதா? தொடர்களிலும் சொற்களிலும் சந்தி இலக்கணம் இல்லாமற் போனால் என்ன குறை? இப்படி சில கேள்விகள் எழுந்தால் வியப்பில்லை.

முதலாவதாக, சந்தி இலக்கணம் கைவிடப்பட்டால் பொருளில் தெளிவு குன்றி மயக்கத்துடன் இடம் ஏற்படக்கூடும். மாட்டுக்கன்று என்பதற்குப் பதிலாக மாடுகன்று என்று எழுதினால் பொருள் மாறுபடுகிறது. இவ்வாறே பழக்கூடை என்பதற்குப் பதில் பழங்கூடை என்று எழுதினாலும் பொருள் மாறுபடுகிறது. பொருட் குழப்பத்தை நீக்கித் தெளிவைக் காக்கச் சந்தி இலக்கணம் ஒரு இன்றியமையாத கருவி எனலாம்.

இரண்டாவதாக, சொற்சேர்க்கையில் தோன்றும் மாற்றங்களை எழுத்து வடிவால் காட்டுவதற்குச் சந்தி இலக்கணம் உதவிகிறது. 'மரம்' என்ற சொல்லும் 'கள்' என்ற விகுதியும் சேரும்போது இயல்பாகவே மகர ஒற்று ஙகர ஒற்றாக மாறி மரங்கள் என்று ஒலிக்கக் காண்கிறோம். இத்தகைய மாற்றங்களையெல்லாம் எழுத்து வடிவால் காட்டச் சந்தி இலக்கணம் திட்டவட்டமாக விதி வகுத்துச் செல்கிறது.

மூன்றாவதாக, மொழியில் வழிவழியாகக் காக்கப்பட்ட மரபு காக்கப்படுவதற்குச் சந்தி உதவி புரிகிறது.

1.3 எப்படிப்பட்ட சந்தி வேண்டும்?

கடல்தாவு படலம் என்பது கடறாவு படலம் என்றும், சில்தாழிசைக் கொச்சகம் என்பது சிஃறாழிசைக் கொச்சகம் என்றும் மாறுகின்ற மாற்றங்களை நாம் இலக்கியங்களிலும் இலக்கணங்களிலும் கண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட கடுஞ்சந்திகள் இப்போதைய இலக்கியத் தமிழில் இடம் பெறுவதில்லை. 'உன்னைப் பார்த்தேன்' மற்றும் 'உனக்குக் கொடுத்தேன்' முதலாய தொடர்களில் வேற்றுமை விகுதியைஅடுத்து வரும் ஒற்றுகளை இன்றைய செந்தமிழில் விலக்கி எழுதுவது பிழை என்று கருதுகிறோம். ஆகவே, இன்றைய செந்தமிழில் எல்லோரும் ஏற்றுப் போற்றும் சந்திகளை மட்டுமே பார்ப்போம்.

2. கருவிகள்

சந்தி இலக்கணம் பற்றிப் பேசவும் விதிகளை வகுக்கவும் விளக்கம் கூறவும் சில இன்றியமையாத இலக்கண குறியீடுகளையும், மரபுகளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். சந்தி இலக்கணத்துக்குத் தேவையான கருவிகளை அமைத
்துக் கொள்வதே இந்தப் பகுதியின் நோக்கம்.

2.1 எழுத்துவகை

தமிழில் உள்ள எழுத்துக்கள் உயிர், ஆய்தம், மெய் என மூன்று பெரும் பிரிவாகப் பிரிக்கப்படும்.

2.1.1 உயிர்

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள ஆகிய பன்னிரண்டு எழுத்துக்களையும் உயிர் என்பர். இவை குறில், நெடில் என இரண்டு வகையாகப் பிரிக்கப்படும்.

2.1.2 குறில்

அ, இ, உ, எ, ஒ ஆகிய ஐந்தும் குறில்களாம். இவற்றைக் குற்றெழுத்து என்றும் சுட்டுவர்.

2.1.3 நெடில்

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள ஆகிய ஏழும் நெடில்களாம். இவற்றை நெட்டெழுத்து என்றும் சுட்டுவர். இங்கே கூறப்பட்ட சில உயிர்கள் (ஐ, ஒள) தன் இயல்பான அளவிலிருந்து குறுகி ஒலிப்பதும் உண்டு.

2.1.4 குற்றியலிகரம்

தனக்கு இயல்பான அளவிலிருந்து குறுகி ஒலிக்கும் "இகரத்தை"க் குற்றியலிகரம் என்பர். எடுத்துக்காட்டு காண்க :-

பாம்பியாது (பாம்பு + யாது?)கேண்மியா ( கேள் + மியா)

2.1.5 குற்றியலுகரம்

தனக்கு இயல்பான அளவிலிருந்து குறுகி ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் எனப்படும். க், ச், ட், த், ப், ற் ஆகிய வல்லொற்றுகளின் மேல் ஏறிவரும் உகரம் படு, கெடு எனத் தனிக்குறிலுன் பின்வரும் போது மட்டும் குறுகுவதில்லை. ஏனைய இடங்களிலெல்லாம் அது குறுகியே ஒலிக்கும். குற்றியலுகரத்தை குற்றுகரம் என்றும் குறுகிய உ என்றும் குறிப்பதுண்டு.குற்றுகரம் கீழ்கண்டவாறு ஆறு வகையாகப் பிரிக்கப்படும். (எடுத்துக்காட்டு)

1. வன்றொடர் (கொக்கு)2. மென்றொடர் (குரங்கு)3. இடைத்தொடர் (நல்கு)4. ஆய்தத் தொடர் (எஃது)5. நெடிற்றொடர் (ஆடு)6. உயிர்த்தொடர் (அழகு, மிலாறு)

தனிநெடிலை அடுத்து வரும் குற்றுகரம் மட்டுமே நெடிற்றொடராகும். ஆடு என்பது நெடிற்றொடர் என்றும் மிலாறு என்பது உயிர்த்தொடர் என்றும் கொள்ளப்படுவதற்கான காரணத்தை நன்கு தெளிந்துக் கொள்க. நெடிற்றொடருக்கும் உயிர்த்தொடருக்கும் மேலும் சில எடுத்துக்காட்டுகள் தருகிறேன். அவற்றையும் கண்டு தெளிவு பெறுக.

நெடிற்றொடர் (பாடு, மாடு, கூறு, ஏடு, ஓடு, ஆறு, ஏறு,)

உயிர்த்தொடர் (பழகு, வேசறு, கழுகு, களிறு, பலாசு, விளாசு, உரசு)

நெடிற்றொடர்க் குற்றுகரச் சொற்களில் குற்றுகரத்தின்முன் நெட்டெழுத்து மட்டுமே நிற்பதையும் உயிர்த்தொடர்க் குற்றுகரச் சொற்களில் குற்றுகரத்தின் முன் தனிநெடில் நில்லாமல் குறிலும் நெடிலுமாகவோ குறிலும் குறிலுமாகவோ குரைந்து இரண்டு எழுத்துக்கள் சேர்ந்து நிற்பதையும் நன்கு நோக்கி இவற்றிடையே உள்ள வேறுபாட்டை உணர்ந்து கொள்க.

2.1.6 ஐகாரக் குறுக்கம்

ஐகாரம் நெடில் என்று கொள்ளப்பட்டாலும் இது நெட்டுயிர்க்குரிய மாத்திரையிலிருந்து குறைந்தே ஒலிக்கும். மொழியில் முதல், இடை, கடை ஆகிய மூன்றிடங்களிலும் இது குறுகியே நிற்கும். எடுத்துக்காட்டு:-

முதல் ( பையன், வையம் )

இடை ( தலைவன், நிலையம் )

கடை ( அவரை, கலை )

மொழி முதலில் உள்ள ஐகாரத்தை விட இடையிலும் கடையிலும் உள்ள ஐகாரங்கள் மேலும் குறுகி ஒலிப்பதனை மீண்டும் ஒலித்து உணர்க.

2.1.7 ஒளகாரக்குறுக்கம்

ஒளகாரமும் ஐகாரம் போலவே மொழியில் நெட்டுயிர்க்குரிய மாத்திரையிலிருந்து குறைந்தே ஒலிக்கும். ஒளகார உயிரும் உயிர்மெய்யும் மொழியின் இடையிலும் கடையிலும் வராமையால் ஒளகாரக்குறுக்கம் மொழிமுதலுக்கு மட்டுமே பொருந்தும். எடுத்துக்காட்டு ( ஒளவை, கெளவை, வெளவால், ஒளவியம் )

2.1.8 ஆய்தம்

ஆய்த எழுத்தினைத் தனிநிலை என்றும் கூறுவர். ஆய்தமும் தனக்கு இயல்பான மாத்திரையிலிருந்து குறுகி ஒலித்தல் உண்டு. அவ்வாறு குறுகிய ஆய்தம் குற்றாய்தம் என்றும் குறுகாத ஆய்தம் முற்றாய்தம் என்றும் பெயர் பெறும். குற்றாய்தத்தை ஆய்தக்குறுக்கம் என்றும் குறிப்பர். கஃறீது, முஃடீது எனச் சந்தி விதிகளாற் பிறக்கும் ஆய்தம் குற்றாய்தத்துக்கு எடுத்துக்காட்டுகளாகும். அஃது, இஃது, எஃது முதலாய சொற்களில் காணப்படும் ஆய்தம் முற்றாய்தம்.

2.1.9 மெய்

மெய்யெழுத்துக்களை ஒற்று என்றும், புள்ளி என்றும் கூறுவர். க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் ஆகிய பதினெட்டும் தமிழில் உள்ள மெய்களாம். இவை வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்றாகப் பிரிக்கப்படும்.

2.1.10 வல்லினம்

வல்லினம், வங்கணம், வலி ஆகியன ஒரு பொருட்கிளவிகள். க், ச், ட், த், ப், ற் ஆகிய ஆறும் வல்லின மெய்களாம்.

2.1.11 மெல்லினம்

மெல்லினம், மெங்கணம், மெலி ஆகியன ஒரு பொருட்கிளவிகள். ங், ஞ், ண், ந், ம், ன் ஆகிய ஆறும் மெல்லின மெய்களாம்.

2.1.12 இடையினம்

இடையினம், இடைக்கணம், இடை ஆகியன ஒரு பொருட்கிளவிகள். ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய ஆறும் இடையின மெய்களாம்.

2.1.13 உயிர்மெய்

மெய்யோடு உயிர்கள் சேர்ந்து க, கா, கி, கீ என இவ்வாறு தோன்றும் எழுத்துக்கள் யாவும் உயிர்மெய் எனப் பெயர் பெறும். 18 மெய்களும் 12 உயிர்களும் சேர்ந்து 216 உயிர்மெய்கள் தோன்றுகின்றன.

2.1.14 அளபெடை

உயிர், மெய், ஆய்தம் ஆகிய எழுத்துக்கள் தத்தமக்கு உரிய மாத்திரையினின்று மிக்கு ஒலிப்பதும் உண்டு. அவ்வாறு மிக்கு ஒலிப்பதனை அளபெடை என்பர். இந்த அளபெடை அளபு என்றும் குறிக்கப்படும். இது உயிரளபு, ஒற்றளபு என இரு வகைப்படும்.

2.1.15 உயிரளபு

நெட்டெழுத்துக்கள் ஏழும் அளபெடுக்கும். அளபெடுக்கும் போது ஆகாரத்துக்கு அகரமும் ஈகரத்திற்கு இகரமும் ஊகாரத்திற்கு உகரமும் ஏகாரத்திற்கு எகரமும் ஓகாரத்துக்கு ஓகரமும் அளபெடைக் குறியாக வரும். ஐகாரத்துக்கு இகரமும் ஒளகாரத்துக்கு உகரமும் அளபெடைக் குறியாக வருதல் மரபு.

2.1.16 ஒற்றளபு

உயிரளபெடை போலவே ஒற்றளபெடையும் உண்டு. ங், ஞ், ண், ந், ம், ன், ய், வ், ல், ள் ஆகிய ஒற்றுகள் மட்டுமே அளபெடுக்கும். ஆய்தமும் அளபெடுக்க வல்லது. ஆய்த அளபெடை என்று தனியே ஒரு அளபெடை வகையை அமைக்காமல் நமது மரபிலக்கணங்கள் அதனையும் ஒற்றளபில் அடக்கிக் கொண்டன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

2.1.17 மொழிமுதல் எழுத்துக்கள்

12 உயிர்களும் க், ச், த், ந், ப், ம்,வ், ய், ஞ் ஆகிய மெய்களும் மொழி முதல் எழுத்துக்களாக வரும். மெய்கள் மொழி முதலில் வரும்போது தனிமெய்யாக வராது. உயிர்மெய்யாகவே வரும். ங் என்ற மெய் மொழி முதலாக வரும் என்று இலக்கணங்கள் கொண்டாலும் இக்கால வழக்கிற்கு அது பொருந்தாமையால் நாம் அதை இங்கே மொழி முதலெழுத்தாகக் குறிப்பிடவில்லை.

2.1.17.1 மொழி முதலில் உயிர்கள்

எடுத்துக்காட்டு ==> (அவன், ஆடு, இது, ஈகை, உலகு, ஊசி, எடு, ஏடு, ஐந்து, ஒன்பது, ஓடு, ஒளவை)

2.1.17.2 மொழி முதலில் மெய்கள்

எடுத்துக்காட்டு ==> (கடல், சால்பு, தண்மை, நன்மை, பழகு, மணம், வளம், யார், ஞாயிறு)

2.1.18 மொழியிறுதி எழுத்துக்கள்

12 உயிர்களும் மொழியிறுதி எழுத்துக்களாக வரும். ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய 11 மெய்களும் மொழிக்கு இறுதியில் வரும். நமது மரபிலக்கணங்கள் குற்றியலுகரத்தையும் மேற்கூறிய மொழியிறுதி எழுத்துக்களோடு சேர்ந்து மொழியிறுதி எழுத்துக்கள் 24 என்று கூறும்.

2.1.18.1 மொழி இறுதியில் உயிர்கள்

எடுத்துக்காட்டு ==> (கட, நிலா, கிளி, தீ, கொடு, பூ, எ, தே, கலை, நொ, கோ, கெள)

2.1.18.2 மொழி இறுதியில் மெய்கள்

எடுத்துக்காட்டு ==> (உரிஞ், கண், பொருந், மரம், மான், நாய், தேர், பால், தெவ், யாழ், நாள்)

2.1.18.3 மொழி இறுதியில் குற்றுகரம்

எடுத்துக்காட்டு ==> (பட்டு, வண்டு, உல்கு, எஃது, வரகு, ஆடு)

இக்கால வழக்கில் எகர ஒகர இறுதியும் ஞ், ந், வ் ஆகிய மெய்யிறுதியும் அருகி நிற்றல் காண்க.

2.1.19 அசைகள்

தமிழ்மொழி அமைப்பில் அசைக் கோட்பாட்டுக்கு ஒரு தனி இடம் உண்டு. உயிரும் உயிர்மெய்யும் குறிப்பிட்ட நெறியில் சேர்ந்த சேர்க்கைக்கு அசை என்று பெயர். ஒரு அசையில் இரண்டுக்கு மேற்பட்ட உயிர்கள் அமைவதில்லை. அசைகள் அவற்றின் அமைப்புக்கேற்ப நேரசை, நிரையசை என இரு வகைப்படும்.

2.1.19.1 நேரசை

குறில் தனித்தோ ஒற்றடுத்தோ வரும்போது நெடில் தனித்தோ ஒற்றடுத்தோ வரும்போது நேரசை அமையும்.

எடுத்துக்காட்டு

உல-கு (குறில் தனித்து வந்தது)உல-கம் (குறில் ஒற்றடுத்து வந்தது)பா (நெடில் தனித்து வந்தது)பால் (நெடில் ஒற்றடுத்து வந்தது)

குறிலுக்குப் பின் இன்னொரு குறில் இருந்தால் இரண்டும் இணைந்து நிரையசையாகும். அப்படி இன்னொரு குறில் இல்லாதபோது குறில் தனித்து நின்று நேரசையாகும்.

2.1.19.2 நிரையசை

இருகுறில்கள் இணைந்தோ இணைந்து ஒற்றடுத்தோ வரும்போது ஒரு குறிலும் ஒரு நெடிலும் சேர்ந்தோ சேர்ந்து ஒற்றடுத்தோ வரும்போது நிரையசை அமையும்

எடுத்துக்காட்டு

படி (இரு குறில்கள் இணைந்து வந்தது)படம் (இரு குறில்கள் இணைந்து ஒற்றடுத்து வந்தது)நிலா (ஒரு குறிலும் ஒரு நெடிலும் சேர்ந்து வந்தது)விளாம் (ஒரு குறிலும் ஒரு நெடிலும் சேர்ந்து ஒற்றடுத்து வந்தது)

நெடிலும் குறிலும் சேர்ந்து ஒரு அசை அமைவதில்லை என்பது குறிலோ நெடிலோ ஒற்று இடையிடாமல் பின்தொடரும்போது அதன் முன்னிற்கும் குறில் நேரசையாகாது என்பது இங்கே நன்கு கவனிக்கத் தக்க செய்திகள். அதாவது ஆடு, பாடு என்பன ஓரசையல்ல. அவை இரண்டும் நேரசை சேர்ந்த சொற்கள். உலகு, பழகு என்பனவற்றில் உ, ப என்பன நேரசையாகா. உல, பழ என்பன நிரையசையாகி எஞ்சித் தனித்து நிற்கும் குறில் மட்டும் நேரசையாகும். நிரையசைகளில் நெடிலீற்று நிரையசையும் (நிலா) குறிலீற்று நிரையசையும் (பிடி) உண்டு என்பதை கவனித்து நினைவில் இருத்தத்தக்கது.

2.2 சொல்வகை

நமது மரபிலக்கணங்கள் தமிழ்ச் சொற்களைப் பொதுவாகப் பெயர், விணை, இடை, உரி என நான்காகப் பிரித்துள்ளன. ஓரசைச்சொல், ஈரசைச்சொல் முதலாய பிரிவுகளும் உணரத்தக்கன.

2.2.1 பெயர்ச்சொல்

கால இடைநிலைகளை ஏலாதனவாய் வேற்றுமை உருபுகளை ஏற்க வல்லனவாய்த் திணை, பால், எண், இடம் முதலாய இலக்கணக் கூறுகளை உணர்த்துவனவாய் அமைவன பெயர்ச்சொற்களாம். எழுவாய், பயனிலை இயைபுகளின் அடிப்படையிலும் சுட்டுப் பெயர்களின் அடிப்படையிலும் பெயர்கள் ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு

ஆண்பாற்பெயர் (அவன், மாணவன்)பெண்பாற்பெயர் (அவள், மாணவி)பலர்பாற்பெயர் (அவர்கள், மக்கள்)ஒன்றன்பாற்பெயர் (அது, மரம்)பலவின்பாற்பெயர் (அவை, பழங்கள்)

இக்கால வழக்குக்கேற்ப உயர்பாற்பெயர் என்ற ஒரு பிரிவும் தேவைப்படுகிறது. உதாரணம் அவர், தலைவர். இங்கே கூறிய பிரிவை நம் இலக்கணங்கள் பால் என்று கூறும். பால் என்பது வகை அல்லது பகுப்பு என்று பொருள்படும்.

இங்கே கூறிய பால் பகுப்போடு திணைப்பகுப்பு பற்றியும் தெரிந்துக் கொள்ளவேண்டும். ஆண், பெண், பலர் ஆகிய மூன்று பால்களையும் உயர்திணை என்பர். ஒன்று, பல ஆகிய இருபால்களையும் அஃறிணை என்பர். இப்பாகுபாட்டைக் படத்தில் பார்த்து நன்கு விளங்கிக் கொள்ளுங்கள். இவற்றோடு இக்காலத் தமிழில் உயர்பால் என்று பகுப்பு உருவாகி வளர்ந்துள்ளது.

மேற்கண்ட பாகுபாடு தொடரியல் அடிப்படையில் அமைந்தது. பொருள் அடிப்படையில் பெயர்கள் பொருட்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், குணப்பெயர், தொழிற்பெயர் என அறுவகையாகக் பகுக்கப்படும்.

இவற்றோடு, எண்ணுப்பெயர், இடப்பெயர் முதலாய பிரிவுகளும் உணர்ந்து கொள்ளத்தக்கன.

2.2.1.1 எண்ணுப்பெயர்

ஒன்று, இரண்டு முதலாய எண்களைக் குறிக்கும் பெயர்களை எண்ணுப்பெயர் என்பர்.

2.2.1.2 இடப்பெயர்

தன்மை, முன்னிலை, படர்க்கை என இடம் மூவகைப்படும். பேசுவோரைக் குறிப்பது தன்மை; கேட்போரைக் குறிப்பது முன்னிலை; ஏனைப்பெயர்கள் படர்க்கை.

பொருளடிப்படையில் அமைந்த அறுவகைப் பெயர்களில் காணும் இடப்பெயர் வேறு, இது வேறு என்பதை நினைவில் இருத்துக.

2.2.1.3 சுட்டுப்பெயர்

சுட்டிக் கூறப் பயன்படும் பெயர்கள் சுட்டுப் பெயர்களாம். இது அண்மைச் சுட்டு, சேய்மைச்சுட்டு என இருவகைப்படும். இவன், இவள், இவர், இவர்கள், இது, இவை ஆகியன அண்மைச் சுட்டு. அவன், அவள், அவர், அவர்கள், அது, அவை ஆகியன சேய்மைச்சுட்டு.

2.2.1.4 வினாப்பெயர்

வினாவுதற்குப் பயன்படும் பெயர் வினாப்பெயராம். இது பொதுவினா, சிறப்பு வினா என இரண்டாகப் பிரிக்கப்படும். யார், என்ன என்பவற்றைப் பொதுவினா என்றும், எவன், எவள், எது, எவை என்பனவற்றைச் சிறப்புவினா என்றும் கொள்ளலாம்.

2.2.1.5 பெயர்களின் இருவகை வடிவங்கள்

பெயர்கள் எழுவாயாக நிற்கும்போது உள்ள வடிவத்தை எழுவாய் வடிவம் என்றும் வேற்றுமை ஏற்கும்போது உள்ள வடிவத்தை வேற்றுமை ஏற்கும் வடிவம் என்றும் சுட்டலாம். சில பெயர்கட்கு இவை வேறுவேறாக அமையும்.

அவன் என்ற பெயர்க்கு எழுவாய் வடிவமும் வேற்றுமை ஏற்கும் வடுவமும் ஒன்றாகவே அமைந்துள்ளது. அவன் வந்தான். அவனைக் கண்டேன் முதலாய தொடர்கள் நோக்கி இதனை உணர்க. ஆடு என்ற பெயர்க்கு எழுவாய் வடிவம் வேறு; வேற்றுமை ஏற்கும் வடிவம் வேறு. ஆடு வந்தது எனவும், ஆட்டைக் கண்டேன் எனவும் வரும் தொடர்களில் எழுவாய் வடிவமும் வேற்றுமை ஏற்கும் வடிவமும் வேறு வேறாக, இருப்பதனைக் கொண்டு இதை உணரலாம்.

நான் என்பது எழுவாய் வடிவம். என் என்பது வேற்றுமை ஏற்கும் வடிவம். நீ என்பது எழுவாய் வடிவம். உன் என்பது வேற்றுமை ஏற்கும் வடிவம்.

2.2.2 வினைச்சொல்

கால இடைநிலைகளையும், பாலிட விகுதிகளையும் ஏற்க வல்லன வினைச்சொற்களாம். கால இடைநிலைகளை ஏற்பன தெரிநிலைவினை என்றும், கால இடைநிலைகளை ஏற்க இயலாதன குறிப்புவினை என்றும் பெயர்பெறும். எடுத்துக்காட்டு கீழே :-

படித்தான் (தெரிநிலைவினை)நல்லன் (குறிப்புவினை)

தெரிநிலைவினைகள் முற்றுவினை, எச்சவினை என இரு வகைப்படும். குறிப்பு வினைகளில் சிலவற்றுக்கு எச்சவினை வடிவங்க
ளும் உண்டு.

2.2.2.1 முற்றுவினை

கால இடைநிலைகளையும் பாலிட விகுதிகளையும் ஏற்றுச் செய்தான், செய்தாள் முதலாய வாய்பாட்டில் வருவனவும் எதிர்மறை இடைநிலைகளையும் பாலிட விகுதிகளையும் ஏற்றுச் செய்யான், செய்ய மாட்டான் முதலாய வாய்பாட்டில் வருவனவும் செய், செய்யும், செய்யுங்கள் எனவும், செய்யாதே, செய்யாதீர், செய்யாதீர்கள் எனவும் உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் ஏவல் வாய்பாடுகளில் வருவனவும் செய்யலாம். செய்க முதலாய வாய்பாடுகளில் வருவனவும் இவை முதலாய பிறவும் முற்றுவினைகளாம்.

2.2.2.2 எச்சவினை

பொருள் இயைபு நோக்கில் வேறொரு சொல் எஞ்சி நிற்க அமைவது எச்சவினை. எச்சவினைகள் பெயரெச்சம், வினையெச்சம் என இருவகைப்படும்.

2.2.2.2.1 பெயரெச்சம்

பெயர்களைக் கொண்டு முடியும் வினைச்சொற்கள் பெயரெச்சம் எனப் பெயர் பெற்றன. இப்பெயரெச்சம் இறந்தகாலப் பெயரெச்சம், நிகழ்காலப் பெயரெச்சம், எதிர்காலப் பெயரெச்சம், எதிர்மறைப் பெயரெச்சம் என நான்கு வகைப் படும். எடுத்துக்காட்டு கீழே:-

வந்த (இறந்தகாலப் பெயரெச்சம்)வருகின்ற (நிகழ்காலப் பெயரெச்சம்)வரும் (எதிர்காலப் பெயரெச்சம்)செய்யாத (எதிர்மறைப் பெயரெச்சம்)

எதிர்மறைப் பெயரெச்சங்களில் த என்ற ஈறு இல்லாமல் செய்யா வாய்பாட்டில் வரும் பெயரெச்சங்களை ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்பர்.

2.2.2.2.2 வினையெச்சம்

வினைகளைக் கொண்டு முடியும் எச்சவினைகளை வினையெச்சம் என்பர். வினையெச்சங்கள் கீழ்கண்டவாறு பிரிக்கப்படும்.

வாய்பாடு எடுத்துக்காடுகள்

1. செய்ய (ஓட, படிக்க, நடக்க)2. செய்து (ஓடி, படித்து, நடந்து)3. செய்தால் (ஓடினால், படித்தால், நடந்தால்)4. செய்யாமல் (ஓடாமல், படிக்காமல், நடக்காமல்)5. செய்யாது (ஓடாது, படிக்காது, நடக்காது)

வேறுசில வினையெச்சங்களும் உண்டு. படி, முன், பின், முதலாய வினையெச்ச இடைச்சொற்கள் பெயரெச்சங்களோடு சேர்ந்து வினையெச்சங்கள் அமையும். இவற்றைக் கூட்டு வினையெச்சம் எனலாம். எடுத்துக்காட்டு வந்தபோது, சொன்னபடி, வரும்முன், வந்தபின், சொன்னவாறு ஆகியன.

2.2.2.3 வினைப்பெயர்

வினையடியாகப் பிறக்கும் பெயர்களை வினைத்தன்மை குன்றின, குன்றாதன என இருவகையாகப் பிரிக்கலாம். போக்கு, வரவு முதலாய பெயர்கள் வினைத்தன்மை குன்றியன. இவை பெயர்த்தன்மை மட்டுமே பெற்ற்ப் பெயரடைகளை ஏற்றல், வேற்றுமை ஏற்றல் ஆகிய இயல்புகளுடன் வரும். போதல், வருதல் முதலாய பெயர்கள் வினைத்தன்மை குன்றாதனவாய் நான் போதல், நீ வருதல் என எழுவாய் ஏற்றல் போன்ற வினைத்தன்மையோடும் போதலை, வருதலை என வேற்றுமை ஏற்றல் முதலாய பெயர்த் தன்மையோடும் வருதல் காண்க. வினைத்தன்மைக் குன்றாத பெயர்களை மட்டுமே இங்கு வினைப்பெயர் என்று குறிக்கிறோம். தொழிற்பெயர் என்பதும் இதுவே. எடுத்துக்காட்டு படித்தல், நடத்தல், போதல், சாதல், வருதல், வரல், போவது, வருவது, போனமை, வந்தமை ஆகியன.

2.2.2.4 வினையாலணையும் பெயர்

வினையடியாகப் பிறந்து கால இடைநிலை அல்லது எதிமறை இடைநிலையும் பாலிட விகுதிகளையும் ஏற்று வேற்றுமை ஏற்கும் இயல்போடு வரும் பெயர்களை வினையாலணையும் பெயர்கள் என்பர். இவையும் வினைத்தன்மை குன்றாத பெயர்களே. வந்தவன் என்ற வினையாலணையும் பெயர் இங்கு வேகமாக வந்தவன் என வினையடைகளை ஏற்று வருதல் காண்க. எடுத்துக்காட்டு வந்தவன், வந்தவள், வந்தவர், வந்தவர்கள், வந்தது, வந்தவை ஆகியன.

2.2.2.5 குறிப்புவினை

மேலே தெரிநிலை வினைகட்குக் கூறியவாறே குறிப்பு வினைகளிலும் முற்றுவினை, எச்சவினை என்ற வகைகள் உண்டு. நல்லன், இனியன் முதலான சொற்கள் குறிப்புவினை. நல்ல, இனிய முதலாயவை குறிப்புப் பெயரெச்சம். அன்றி, இன்றி முதலாயவை குறிப்பு வினையெச்சம். நல்லவன், இனியவன் முதலாயவை குறிப்பு வினையாலணையும் பெயர்கள்.

2.2.3 இடைச்சொல்

அடிச்சொல்லாக நில்லாமல் அடிச்சொல்லோடு சேர்ந்து நின்று இலக்கண நோக்கில் செயற்படும் சொற்களும் உணர்ச்சி வெளிப்பாட்டுக் கிளவிகளும் இடைச்சொற்கள் என்று பெயர் பெறும். அன்றியும் ஏய், அடேய் என்பன போன்ற விளிகளும் அன், இன் போன்ற சாரியைகளும் பல்வகை அசைநிலைகளும் அடைச்சொல் என்றே பயர்பெறும்.
2.2.3.1 வேற்றுமை உருபுகள்

ஒரு முற்றுத்தொடரில் நிற்கும் பெயரை எழுவாயாகவும் செயப்படுபொருளாகவும் கருவியாகவும் இடமாகவும் இவ்வாறு பல வகையில் வேற்றுமைப் படுத்தும் உருபுகளை வேற்றுமை உருபுகள் என்பர். தமிழில் உள்ள வேற்றுமைகளை எட்டு வகையாகப் பிரிப்பர். இவற்றுள் முதல் வேற்றுமைக்குத் தனியே ஒரு உருபு இல்லை. எட்டாம் வேற்றுமைக்கு உருபுகள் பல எனலாம்.

வேற்றுமைகளின் பெயர்களும் உருபுகளும் படத்தில் தரப்பட்டுள்ளன. வேற்றுமைகள் உருபாலும் பொருளாலும் எண்ணு முறையாலும் பெயர் பெற்றிருப்பதை நோக்குக.

2.2.3.2 பின்னொட்டுகள் / பின்னுருபுகள்

வேற்றுமை உருபுகளின் இலக்கணப் பணியை முன், பற்றி, இருந்து, உடைய, மீது முதலான சொற்கள் பெயர்களோடும் வேற்றுமை உருபுகளோடும் ஒட்டி நின்று இயற்றுவதுண்டு. இவை பின்னொட்டுகள் அல்லது பின்னுருபுகள் என்று பெயர் பெறும். எடுத்துக்காட்டுகள் ====> எனக்குமுன், என்னைப்பற்றி, ஊரிலிருந்து, என்னுடைய, என்மீது என்பன.

2.2.3.3 அடைகள்

நல்ல, தீய முதலாய சொற்களும் வந்த, சென்ற முதலாய சொற்களும் பெயர்கட்கு அடைகளாக வரும். வந்து, சென்று முதலாய எச்சங்களும் மெல்ல, விரைந்து முதலாய சொற்களும் வினைகட்கு அடைகளாக வரும். இவ்வாறு பெயர்களையும் வினைகளையும் கொண்டு முடியும் சொற்கள் பொதுவாக அடைகள் என்று பெயர் பெறும். பெயர் கொண்டு முடிவன பெயரடைகள் என்றும் வினைகொண்டு முடிவன வினையடைகள் என்றும் குறிக்கப்படும். பெயரடைகளை உருவாக்க ஆன, உள்ள, உடைய, உரிய முதலான கிளவிகள் பெயர்களோடு சேர்க்கப்படுவது உண்டு. பெயரடைகளை உருவாக்கப் பயன்படும் சொற்களைப் பெயரடை இடைச்சொற்கள் எனலாம். இவ்வாறே, வினையடைகளை உருவாக்க ஆக, ஆய் முதலாய கிளவிகள் பெயர்களோடு சேர்க்கப்படுவதும் உண்டு. வினையடைகளை உருவாக்கப் பயன்படும் சொற்களை வினையடை இடைச்சொற்கள் எனலாம். எடுத்துக்காட்டு====> அழகான மலர், அன்புள்ள அன்னை, கோபமாக வந்தான், கோபமாய் வந்தான்.

2.2.4 அசைமுறை வகைப்பாடு

சொற்களை ஓரசைச்சொல், ஈரசைச்சொல் என்றும், நேரசைச்சொல், நிரையசைச்சொல் என்றும் நெடிலீற்று நிரையசைச்சொல், குறிலீற்று நிரையசைச்சொல் என்றும் சந்தி இலக்கணத்தில் சுட்டிக் கூறவேண்டிய தேவை ஏற்படக்கூடும்.

ஓரசைச்சொல் (பூ, மலர்)ஈரசைச்சொல் (நாடு, பாட்டு, பழகு)நேரசைச்சொல் (பூ, பால்)நிரையசைச்சொல் (மலர், பல, பலா)நெடிலீற்று நிரையசைச்சொல் (பலா, நிலா)குறிலீற்று நிரையசைச்சொல் (பல, தெரு)

2.2.5 மேலும் சில சொல்வகை

மேலே கண்ட வகைபாடுகளோடு தனிச்சொல், கூட்டுச்சொல், வேர்ச்சொல், அடிச்சொல், செம்மொழிச்சொல், பிறமொழிச்சொல், தற்சுட்டு கிளவிகள் முதலாய வகைப்பாட்டுக் குறியீடுகளையும் இங்கே நாம் விளங்கிக் கொள்ளவேண்டும்.

2.2.5.1 தனிச்சொல்

நீ, நான் எனவும் போ, வா எனவும் நல்ல, தீய எனவும் வரும் சொற்களைத் தனிச்சொற்கள் எனலாம். ஒரு வேர்ச்சொல் தனித்தோ அல்லது ஒன்றும் பலவுமாய் விகுதிகள் அல்லது ஒட்டுகளுடனோ வருவது தனிச்சொல்.

2.2.5.2 சுட்டுச்சொல்

இயல்பாகவோ திரிந்தோ ஒன்றுக்கு மேற்பட்ட வேர்ச்சொற்கள் சேர்ந்து அமையும் சொல் ஒரு சொல் போல வரும்போது அதைக் கூட்டுச்சொல் எனலாம்.

எடுத்துக்காட்டு ====> கண்டுபிடி, பகுத்தறிவு

2.2.5.3 வேர்ச்சொல்

பகுப்பாய்வு முறையில் பிரிக்கமுடியாத நிலையில் உள்ள மூலச்சொல் வேர்ச்சொல் எனப்படும்.

எடுத்துக்காட்டு ====> கல், நெல், செல், நில்

2.2.5.4 அடிச்சொல்

விகுதிகள் சேர இடங்கொடுத்து நிற்பனவெல்லாம் அடிச்சொற்கள் எனலாம். வேர்ச்சொற்களெல்லாம் அடிச்சொற்களாக வரும். அடிச்சொற்களெல்லாம் வேர்ச்சொற்களாகாது.

நிலையம் என்பதில் அம் என்ற விகுதி நிலை என்ற அடிச்சொல்லோடு சேர்க்கப்பட்டுள்ளது. கொலை என்பதில் ஐ என்ற விகுதி கொல் என்ற அடிச்சொல்லோடு சேர்க்கப்பட்டது. கொல் என்ற வேர்ச்சொல் இங்கு அடிச்சொல்லாகவும் அமைந்துள்ளது. கொல் என்பது மேலும் பிரிக்க இடந்தராமையால் வேர்ச்சொல்லாகும்.

2.2.5.5 செம்மொழிச்சொல்

பிறமொழிகளிலிருந்து கடன்பெறாமல் ஒரு மொழி தானே உருவாக்கிய சொல்லைச் செம்மொழிச்சொல் என்று குறிப்போம். பிறமொழிகளிலிருந்து வந்து செம்மொழி நிலையை எய்திய சொற்களைச் செம்மொழிமயமான சொற்கள் என்று குறிப்போம்.

நிலம், தலை, கை, கால் முதலானவை செம்மொழிச் சொற்கள், கன்னம், தனம், தானம் முதலானவை செம்மொழிமயமான சொற்கள் எனலாம்.

2.2.5.6 பிறமொழிச்சொல்

பிறமொழிகளிலிருந்து தேவையை முன்னிட்டுக் கடன் கொண்ட சொற்கள் பிறமொழிச் சொற்கள் என்ற வகையில் அடங்கும். டாக்டர், ரயில், லாரி முதலானவை பிறமொழிச் சொற்கட்குச் சில காட்டுகள்.

2.2.6 பகுபத உறுப்புகள்

சொற்களைப் பொதுவாகப் பகுபதம், பகாப்பதம் என்று பிரிப்பர். பிரிக்க இடம் தராத பதம் பகாப்பதம் என்றும், பிரிக்க இடம் தரும் பதம் பகுபதம் என்றும் பெயர் பெறும். பகுபதங்களில் பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் முதலான உறுப்புகள் அமைந்திருக்கும்.

2.2.6.1 பகுதி

ஒரு சொல்லிலுள்ள பகாப்பதமே பகுதி என்று பெயர் பெறும். நடந்தான் என்பதில் நட என்பது பகுதி.

2.2.6.2 விகுதி

பகுதியோடு சேர்ந்து வலப்பக்கம் நிற்கவல்ல கிளவிகளை விகுதி என்பர்.

சொல் (பகுதி + விகுதி)

நல்ல (நல் + அ)ஓடி (ஓடு + இ)ஊரன் (ஊர் + அன்)

2.2.6.3 இடைநிலை

காலங் காட்டவும் எதிர்மறை உணர்த்தவும் இடையில் நிற்கும் கிளவிகள் இடைநிலைகளாம். எடுத்துக்காட்டு கீழே

நடக்கிறான் : கிறுசெய்தாள் : த்போகாது : ஆ

2.2.6.4 சாரியை

தனக்கெனத் தனிப்பொருளின்றிச் சொற்களை உருவாக்கத்தக்க வகையில் சார்ந்து இயைந்து நிற்பது சாரியையாம். எடுத்துக்காட்டு கீழே

நடந்தனன் : அன்ஊரினன் : இன்

2.2.6.5 சந்தி

பகுதியும் கால இடைநிலையும் சந்திக்கும் வகையில் அமைந்தது சந்தி. எடுத்துக்காட்டுகள் கீழே

கொடுத்தான் (கொடு + த் + த் + ஆன்)தடுத்தான் (தடு + த் + த் + ஆன்)

இங்கே பகுதியை அடுத்துள்ள தகர ஒற்றைச் சந்தி என்பர்.

2.2.6.6 விகாரம்

சந்தி எழுத்துகள் சில சொற்களில் விகாரப்படுவதும் உண்டு. இதை விகாரம் என்பர்.

நட - த் - த் ஆன் என்பது நடந்தான் என்று ஆகும் போது த் என்பது ந் ஆகி விகாரமானது. த் என்ற சந்தி ந் ஆகி விகாரப்பட்டது.

2.2.7 தற்சுட்டு கிளவிகள்

ஐ, ஔ என்பன ஐ, ஔ என்ற எழுத்துகள் என்ற பொருளிலும், புளி என்பது புளி என்ற சொல் என்ற பொருளிலும் வரும்போது அவை ஒவ்வொன்றும் தன்னையே சுட்டி நிற்பதால் தற்சுட்டு கிளவிகள் எனப்பெயர் பெறும்
----------------------------------

எழுதியவர் : ஸ்ரீ.விஜயலஷ்மி (17-Oct-19, 8:46 pm)
பார்வை : 11108

சிறந்த கட்டுரைகள்

மேலே