முதுமொழிக் காஞ்சி 88

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
அகம்வறி யோனண்ண னல்கூர்ந் தன்று. 8

- நல்கூர்ந்த பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால், மனத்தில் நன்மையில்லாத வறியோனொருவனைச் சென்று அணுகுதல் வறுமையுறும்.

வறியவன் வள்ளல் போல் வழங்கவில்லையே என அவனை எவரும் பழித்துரையார்.

பதவுரை:

அகம் வறியோன் - மனத்தில் நன்மையாதொன்றும் இல்லாதவனை,
நண்ணல் - சென்றடைதல், நல்கூர்ந்தன்று - வறுமையுடையதாம்.

அகம் வறியோன் - மனத்தில் ஒன்றுமில்லாதவன் – அன்பு, அருள் முதலிய நன்மை யாதொன்று மின்றிச் சூனியமான மனத்தையுடையவன் - அறிவில்லாதவன்.

நண்ணல் - அணுகுதல்.

'அகமறியோன்' என்ற பாடத்துக்கு, தன்மனத்தின் இயல்பை அறியாதவன் என்பது பொருள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Oct-19, 9:03 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 93

சிறந்த கட்டுரைகள்

மேலே