துள்ளி வரும் வேல்

துள்ளிவரும் வேலைக் கண்டு
துடிப்புடனே அலைக ளாடும்!
வள்ளிமண வாள னுக்கு
வாழ்த்துகளைச் சொல்லிப் போகும் !
கள்ளமில்லாப் பக்தர் கூட்டம்
கந்தவேளின் புகழைப் பாடும் !
தெள்ளுதமிழ் முழக்கம் எங்கும்
செந்தூரில் எதிரொ லிக்கும் !!

சிக்கலிலே வாங்கி வந்த
செவ்வேளின் அன்னை தந்த
சொக்கவைக்கும் அழகன் கைவேல்
சூரனவன் உடல்பி ளக்கும்!
குக்குடமும் மயிலு மாகிக்
குகனருகி லவையி ருக்கும்!
திக்கெட்டும் இன்ப வெள்ளம்
தேனிசையாய்ப் பொங்கிப் பாயும் !!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (2-Nov-19, 4:10 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 73

மேலே