முனிவினும் நல்குவர் மூதறிஞர் – நன்னெறி 28
நேரிசை வெண்பா
முனிவினும் நல்குவர் மூதறிஞர்; உள்ளம்
கனிவினும் நல்கார் கயவர் - நனிவிளைவில்
காயினும் ஆகும் கதலிதான் எட்டிபழுத்(து)
ஆயினும் ஆமோ அறை. 28 - நன்னெறி
பொருளுரை:
நன்கு பழுக்காத காயாக இருந்தாலும் வாழை உணவுக்காகும்.
பழுத்திருந்தாலும் எட்டி உணவுக்காகுமோ சொல்.
அது போலவே கற்றோர் தம்மிடம் கோபம் கொண்டோருக்கும் கொடுப்பர்,
ஆனால் மற்றோர் அவரிடம் கனிவாகப் பேசுபவருக்கும் எதையும் கொடுக்க மாட்டார்.