முனிவினும் நல்குவர் மூதறிஞர் – நன்னெறி 28

நேரிசை வெண்பா

முனிவினும் நல்குவர் மூதறிஞர்; உள்ளம்
கனிவினும் நல்கார் கயவர் - நனிவிளைவில்
காயினும் ஆகும் கதலிதான் எட்டிபழுத்(து)
ஆயினும் ஆமோ அறை. 28 - நன்னெறி

பொருளுரை:

நன்கு பழுக்காத காயாக இருந்தாலும் வாழை உணவுக்காகும்.

பழுத்திருந்தாலும் எட்டி உணவுக்காகுமோ சொல்.

அது போலவே கற்றோர் தம்மிடம் கோபம் கொண்டோருக்கும் கொடுப்பர்,

ஆனால் மற்றோர் அவரிடம் கனிவாகப் பேசுபவருக்கும் எதையும் கொடுக்க மாட்டார்.

எழுதியவர் : (5-Nov-19, 10:19 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 110

சிறந்த கட்டுரைகள்

மேலே