மெய்சென்று தாக்கும் வியன்கோல் அடிதன்மேல் கைசென்று தாங்கும் – நன்னெறி 31

நேரிசை வெண்பா

பேரறிஞர் தாக்கும் பிறர்துயரம் தாங்கியே
வீரமொடு காக்க விரைகுவார் – நேரிழாய்!
மெய்சென்று தாக்கும் வியன்கோல் அடிதன்மேல்
கைசென்று தாங்கும் கடிது. 31 - நன்னெறி

பொருள்:

பொருந்திய அணிகளை உடையவளே!

உடலின் மேல் பெரிய குச்சியின் அடி விழுவதற்கு முன் கையானது விரைந்து சென்று தன் மேல் வாங்கிக் கொள்ளும்.

அது போல பேரறிஞர்களும் பிறர் துன்பங்களைத் தாங்க வீரத்தோடு விரைவார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Nov-19, 10:34 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 89

சிறந்த கட்டுரைகள்

மேலே