மெய்சென்று தாக்கும் வியன்கோல் அடிதன்மேல் கைசென்று தாங்கும் – நன்னெறி 31
நேரிசை வெண்பா
பேரறிஞர் தாக்கும் பிறர்துயரம் தாங்கியே
வீரமொடு காக்க விரைகுவார் – நேரிழாய்!
மெய்சென்று தாக்கும் வியன்கோல் அடிதன்மேல்
கைசென்று தாங்கும் கடிது. 31 - நன்னெறி
பொருள்:
பொருந்திய அணிகளை உடையவளே!
உடலின் மேல் பெரிய குச்சியின் அடி விழுவதற்கு முன் கையானது விரைந்து சென்று தன் மேல் வாங்கிக் கொள்ளும்.
அது போல பேரறிஞர்களும் பிறர் துன்பங்களைத் தாங்க வீரத்தோடு விரைவார்.