முதுமொழிக் காஞ்சி 90

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
நட்பில் வழிச்சேறல் நல்கூர்ந் தன்று. 10

- நல்கூர்ந்த பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால், ஒருவரோடு நட்பு இல்லாத விடத்து ஒருதவியை வேண்டி அவரை அடைதல் பயனற்றது.

கருத்து:

தன்னோடு நட்பில்லாதார் மாட்டு ஒன்றனை நச்சிய நசை வறுமையுறும்.

சினேகம் இல்லாதவரிடம் தான் விரும்பிய ஒன்றைப் பெறுமாறு செல்வது பயனற்றதாம்.

'நட்பில் வழிச் சொலவு' -பாடபேதம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Nov-19, 9:11 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 82

மேலே