முதுமொழிக் காஞ்சி 90
குறள் வெண்செந்துறை
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
நட்பில் வழிச்சேறல் நல்கூர்ந் தன்று. 10
- நல்கூர்ந்த பத்து, முதுமொழிக் காஞ்சி
பொருளுரை:
நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால், ஒருவரோடு நட்பு இல்லாத விடத்து ஒருதவியை வேண்டி அவரை அடைதல் பயனற்றது.
கருத்து:
தன்னோடு நட்பில்லாதார் மாட்டு ஒன்றனை நச்சிய நசை வறுமையுறும்.
சினேகம் இல்லாதவரிடம் தான் விரும்பிய ஒன்றைப் பெறுமாறு செல்வது பயனற்றதாம்.
'நட்பில் வழிச் சொலவு' -பாடபேதம்.