மலர்கள்🌺

மலர்களே மலர்களே
மண்ணின் புஷ்பங்களே
தேனருந்தவந்த வண்டுகள்
உங்களை வணங்கினவே

சங்ககாலத்து மலர்கள்
வண்டுக்கு திலகமிட்டனுப்பினவாமே
ஈழத்து மலர்களோ வண்டுடன்
சங்கமித்து நின்றன களத்திலே

மலர்களுக்கு வரம்பு வேண்டுமாமே
நீங்கள் வரம்பு காத்த மலர்களல்லவா
இடையில் எடை தாங்கிய மலர்களல்லவா
இதழில் தளிர் கொண்ட மலர்களல்லவா

தேசத்துக்காய் உதிர்ந்த
காவிய மலர்களே
மீட்ட வந்ததவனை
மிரட்டிய மலர்கள் நீங்கள்

அச்சத்தை கவசமாய்
சூடிக்கொண்ட மலர்கள்
நாணத்தை காக்கிச்சட்டைக்குள்
புதைத்துக்கொண்ட மலர்கள்

மானிடம் கண்ட
மணி மலர்கள் நீங்கள்
உதிரவில்லை உறங்குகிறீர்கள்-ஏனெனில்
மீண்டும் மலர்ந்து மணம்வீச

ஈழத்து மலர்கள் பெற்றெடுத்த
வாகை மலர்கள் நீங்கள்
தன்னுயிர் தந்து
எம்முயிர் காத்த செல்வ மலர்கள்(2)
..........
27.தை.2012
யோகராணி கணேசன்

எழுதியவர் : யோகராணி கணேசன் (16-Nov-19, 9:41 pm)
பார்வை : 1232

மேலே