இறையன்பு

இறையன்பு . .

இயற்கையை நேசிப்பவர்
இறையன்பின் இலக்காவார்
தன்னுள் கடந்தவன்
கடவுளை காண்கிறான்
கருணையை பொழிபவன்
கடவுளாய் வாழ்கிறான்
இறை . . ..
உள்ளன்பையும் உண்மையையும்
இறை. . ..
கனிவையும் பணிவையும்
இறை. . .
உன்னறிவையும் புன்சிரிப்பையும்
உன்னை உயர்த்தும் உலகம்
இறையன்பின் அர்த்தம் விளங்கும்
நேசிப்பதற்கு ...
காசு தேவையா ?
சுவாசிக்காமல் இருப்பது
வாழ்க்கையா?
ஓ . . மானிடா
சிந்தித்து பார்
சீர்படும் வாழ்க்கை.

இவன் மு. ஏழுமலை

எழுதியவர் : மு. ஏழுமலை (22-Nov-19, 4:46 pm)
சேர்த்தது : மு ஏழுமலை
பார்வை : 142

மேலே