அவள்தந்த முத்தம்

அவள் இதழோடு இதழ் சேர்த்து
தந்த முத்தத்தின் ஈரம் காய்ந்துவிட்டது
ஆனால் அது மருவாய் மருவி
இதயத்தில் வாசம் செய்ய
முத்தம் தந்துவிட்டு போனவளோ
இன்னும் வாராது என்னை வதைப்பதேனோ
கண்டு வந்து எனக்கோர் நல்ல
செய்தி சொல்வாயோ வெண்ணிலவே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (22-Nov-19, 6:01 pm)
பார்வை : 306

மேலே