திண்டிவனம் ராஜாங்குளம்
குளத்தின் அவலம்!
******************
மனம் வலிக்குதய்யா
மலம் குவியுதய்யா
வரலாறு ஒன்னு
உருமாறி சிதையுதய்யா
சித்திரங்கள் சிதைந்து போக
நித்திரையில் உறக்கமில்லை.....
குளம் சிரிக்குதய்யா
உடல் கருக்குதய்யா........
குடிநீரு இன்று கழிவு நீரா
மனம் வலிக்குதய்யா....
ஓடை நீருக்குள்ள
ஓடும் மீனு எங்க?
ஓட பாதையில்ல
ஓடாத நீருமில்ல
ஆண்ட குளம் அழுகையில
ஆமை வாழ வழியுமில்ல
நீர் சுமந்த இடமெல்லாம்
நெகிழி சுமந்து கனக்குதய்யா....
வணங்கி நின்ற பனைமரமோ
வழி தெரியாமல் போனதெங்கோ
வாழ தெரியாமல் போனதெங்கோ
சாலையெங்கும் புளியமரம்
ஒழிந்து போன நூற்றாண்டு இது
புளியங்காடு வரலாறு மாறி
திண்டிவனம் இப்ப குப்பை மேடு.ர~ஸ்ரீராம் ரவிக்குமார்