காதல் என்பது மாயை

காதலி கல்யாணப் பத்திரிகை கொடுத்தாளாம்,
தன்ஈமக் கிரியைப் பத்திரிகை யாய்த்தெரிந்தது
காதலன் கண்களுக்கு; இளவயதுக் கோளாறு,
இவனைப் பெற்றோர் பெற்றதிதற் காகவா? 1

படித்த படிப்பெங்கே! கற்ற அறிவெங்கே!
பெண்ணென் பதும்மாயை! காதலென் பதும்மாயை!
பெற்றோர்க்குப் பிள்ளையாய், முறையாய் மணந்த
பெண்ணுக்கு நல்ல கணவனாய் இரு,நீ! 2

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Dec-19, 12:37 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 331

மேலே