வெறுப்பாக ஒரு பார்வை மட்டும் போதகுமடி 555
என்னுயிரே...
மார்கழிமாத பனியைபோல
சிலீரென்று ஒற்றும்...
உன் பார்வை இல்லாமல் என்
இதயம் தவிப்பில் துடிக்கிறது...
உன் புன்னகைக்காக
காத்திருந்து காத்திருந்து...
என் இமைகளும் எனக்கு
சுமையாகி விட்டது...
தென்றலில் வரும் தீயை
போல என்னுள் வந்தாய்...
இன்று என்னிடம்
ஏனடி மௌனம்...
வெறுப்பாக எனக்கு விழியசைவை
வீசிவிட்டு செல்லடி..
நீ என்னைவிட்டு விலகுகிறாயென
உணர்ந்துவிடுவேன்...
நானும் உன்
கண்களில் படாமலே.....