கோலாகலமாய் வா புத்தாண்டே

கோலம் இடுதுபார் செவ்வானம் கீழ்வானில்
கோலம் இடுதுகாண் செங்கதிர் பூவிதழில்
கோலப் பனித்துளி யும்ஒளிரும் காலையில்
கோலம் இடுகிறாள்பா வைகோவில் வாசலில்
கோலா கலமாய்நீ யும்எழில் புத்தாண்டே
ஞாலம் தழைத்திட வா !

---ஒரு விகற்ப பஃறொடை வெண்பா

தமிழ்க்கவி நெஞ்சங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .

எழுதியவர் : கவின் சாரலன் (1-Jan-20, 10:32 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 66

மேலே