கோலாகலமாய் வா புத்தாண்டே
கோலம் இடுதுபார் செவ்வானம் கீழ்வானில்
கோலம் இடுதுகாண் செங்கதிர் பூவிதழில்
கோலப் பனித்துளி யும்ஒளிரும் காலையில்
கோலம் இடுகிறாள்பா வைகோவில் வாசலில்
கோலா கலமாய்நீ யும்எழில் புத்தாண்டே
ஞாலம் தழைத்திட வா !
---ஒரு விகற்ப பஃறொடை வெண்பா
தமிழ்க்கவி நெஞ்சங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .