தர்ப்பை புல்

தர்ப்பை புல் என்றவுடன் ஏதோ சாங்கியதிற்க்கான புல் என்று எண்ண வேண்டாம் . ஏனென்றால் இதுவரை நாம் அப்படி தான் அதை பார்த்துள்ளோம் .இந்த புல்லுக்கு இன்னோரு பக்கம் இருக்கிறது . அது என்னவென்று கீழே பார்ப்போம் .

தர்ப்பை புல் நாடு மருந்து கடைகளிலும் கிரகணத்தின் பொது கோவில்களிலும் பயன்படுத்தப்படுவதை நான் பார்த்திருக்கிறோம் .ஆனால் இதன் பயன்கள் மற்றும் எங்கு வளர்கிறது என்று பார்ப்போம்.

தர்ப்பை புல் புண்ணிய பூமி தவிர வேறு எங்கும் முளைக்காது .

இது வளர நிறைய தண்ணீர் தேவை இல்லை

தேநீர் இல்லாமலும் பல நாட்களுக்கு தாக்கு பிடிக்க கூடியது ,

பல நாட்களுக்கு தண்ணீரிலேயே இருந்தாலும் அழுகாத தன்மை கொண்டது ,

சூரிய கிரகண களங்களில் இதற்க்கு வலிமை அதிகம் .கதிர் வீச்சு காலை உட்கிரகித்து தீங்கு விளைவிக்க கூடிய கதிர் வீச்சுகளை நீக்கி எஞ்சிய நாள் வேதி போர்டுகளை மட்டும் வெயிலில் அனுப்பும் தன்மை கொண்டது . தர்ப்பை புல் இருக்கும் இடங்களில் தொற்று கிருமிகள் அண்டாது . அதனால் தான் கிரகண காலங்களில் இந்த புல்லை நாம் பயன் படுத்தும் உணவுப் பொருட்கள் ,மாளிகைப் பொருட்கள் ,குடி நீரில் போட்டுவைக்கிறோம் .

இந்து புல்லில் காரமும் புளிப்பும் இருப்பதால் செப்பு மட்டும் ஐம்பொன் உலோக படிமங்களை இந்த புல் மற்றும் சாம்பலோடு தேய்க்கும் பொது அந்த உலோகம் பளபளக்கிறது .மற்றும் அவ்வாறு செய்யம் பொதுகான் ஓசை மற்றும் உண்மைத்தன்மை மாறாமல் இருக்கும் .இந்த புல்லில் இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . குளிர்ச்சியான வீரியமுடைய ஒரு தாவரம் ஆகும் .சீரணத்தை இறுதியில் இனிப்புச் சுவையாக நிற்க்க கூடியது .

மூவகை தோஷங்களாகிய வாத ,பித்த ,கோபங்களை அவற்றின் சீற்றத்தில் இருந்து கீழிறக்கி சாமநிலைப் படுத்துவதனால் தர்ப்பை ஒரு அருமருந்தும் கூட .சில நீரிழிவு நொய்யாளிகளுக்கு உடலில் எரிச்சலுடன் மஞ்சள் நிறம் கலந்த சிறுநீர் வரும் .மேலும் சிலருக்கு கெட்ட நாற்றமுடையதாகவும் மஞ்சள் கலக்கிய நீர் போன்றும் வெளியேறும் நிலையில் அதற்க்கு மாஞ்சிஷ்ட்ட மேகம் என்றும் துர்நாற்றம் ,சூடு ,உதிரம் போன்றும் சிறுநீர் வெளியேறுவதும் ஒரு வித சிறுநீரக நோய் ஆகும் .இவை அனைத்தும் பித்தம் மிகுதியால் வருவது .அது போன்ற சூழ்நிலைகளில் இந்த புல்லை குடிநீர்களில் போட்டு ஊற வைத்து பின்னர் குறித்த நீரை அப்படியே குடிப்பது சிறந்த மருந்தாகும் பித்தம் மட்டுப்படும் கொஞ்சம் கொஞ்சமாக .

சுமார் பதினைந்து கிராம் புல்லை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க விட்டு அரை லிட்டராக ஆகும்வரை குறுக்கி காய்ச்சி வடிகட்டி குளிர்ந்த பிறகு அந்த தண்ணீரை ஒரு நாளில் பல தடவை குடிக்கும்போது மேற்குறிப்பிட்ட நோய் தொந்தரவுகள் நீங்கும் .இந்த புல்லை நன்றாக இடித்து இரவு முழுதும் பானை தண்ணீரில் ஊரவைத்து மறுநாள் காலையில் அதை பருகுவதன் மூலம் அந்த நீருக்கான மருத்துவகுணங்கள் முழுவதும் நமக்கு கிடைக்கும் .இதற்க்கு "ஹிமகஷாயம் " என்று ஆயுர்வேதம் பெயரிட்டுள்ளது .

இந்த புல் உடலுக்கு குளுமையை கொடுப்பதால் குடிநீரில் சேர்த்து வெயில் காலத்தில் அருந்தலாம் .இந்த புல்லின் நோய் எதிர்ப்பு ,இனிப்பு மற்றும் குளிர்ச்சி தன்மை காரணமாக தாய்ப்பாலையும் சிறுநீரையும் அதிக அளவில் சுரக்கச்செய்கிறது . இரத்தத்தில் தேங்கும் யூரியா க்ரியாடினேநின் கழிவுப் பொருட்களை அகற்றுகிறது .சிறுநீரக கற்களை உடைத்தது வெளியேற்றும் தன்மை இதற்க்கு உண்டு .இந்த தண்ணீர் தாகத்தை நீண்ட நேரம் காக்கும் தன்மை கொண்டது .அதிகமான மாதவிடாய் தொல்லைகள் , சிறு நீரகத்தில் ஏற்படும் வலி போன்ற தொல்லைகளுக்கு இந்த புல்லின் நீர் சிறந்த மருந்தாகவும் என்று "பாவப்ரகாசர் "எனும் ஆயுர்வேத முனிவர் குறிப்பிடுகிறார் .மஞ்சள் காமாலை தொலையில் கல்லிரலில் உள்ள கிருமித்தொற்று மற்றும் அதிகமான பித்த ஊறல் ஆகியவற்றை குறைக்கக்கூடியது .

இரத்தத்தில் ஏற்படும் காந்தல், அதன்மூலம் ஏற்படும் இரத்தமூலம் , இரத்தக்கசிவு ,வாய்ப்புண் , சிறுநீரக எரிச்சல் போன்றவற்றை குணப்படுத்திடும் .ஹெர்பெஸ் ஸ்வ்ஸ்டர் எனப்படும் நரம்பு தொடர்தோல் எழுச்சிக்கு இந்த புல்லின் தண்ணீரை வெளிபுறம மற்றும்உட்புறம் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் .இது போன்ற பல பயன் உள்ள தகவல்கள் நிகண்டு மற்றும் நிகண்டுரத்நாகரம் எனும் ஆயுர்வேத நூல்களில் கூறப்பட்டுள்ளன .காஞ்சி பெரியவர் இந்த புல் பற்றி கூறுகையில் தர்ப்பை ,துளசி ,வில்வம் ,போன்றவற்றை நம் சாஸ்திர காரியம் ,பூஜை காரியங்கைளை பயன்படுத்துவதற்கு பின்னால் வைத்திய ரீதியில் அடிப்படை இருக்கிறது என்று குறிப்பிடுகிறார் .

இதனை சிறப்பு கொண்ட தர்ப்பை புல்லை கடன் நீரை கோடைகாலத்தில் பயன் படுத்தி கடன் நிறைவான பயனை அனைவரு பெற முயற்சிப்பது உடல் நலத்தை பேணும் ஒரு நல்ல முயற்சியாக கோடையை எதிர்கொள்ள உதவும் என்பதில் ஐயமில்லை .

நன்றி மருத்துவர் பக்தவச்சலம் ASTRO அவர்கள் ...

எழுதியவர் : வசிகரன்.க (1-Jan-20, 1:41 pm)
பார்வை : 69

மேலே