பார்த்தாலே பரவசம்

வண்ணம் திறந்தால் வானவில் இருக்கும்
என்
எண்ணம் திறந்தால் நீ இருப்பாய்
சகியே

கனியை திறந்தால் விதை இருக்கும்
என்
கவிதை திறந்தால் நீ இருப்பாய்
தோழியே

மழையும் மண்ணும் உரசி சேர்கையில்
வீசும் வாசம்
உயிரே
நீயும் நானும் அன்பில் உருகுகையில்
நட்பின் சுவாசம்

எழுதியவர் : கல்பனா (18-Jan-20, 1:15 pm)
சேர்த்தது : Kalpana
பார்வை : 290

மேலே