புரட்சி வெடிக்கிறது

விலங்கிட்ட கொத்தடிமைகளாக
அன்றைய உழைப்பாளர்கள்....
அடையாள அட்டையை அணிந்த
நவீனக் கொத்தடிமைகளாக
இன்றைய உழைப்பாளர்கள்....
தோள்மீது கைபோட்டு வேலைவாங்கும்
முதலாளி வர்க்கத்தைவிட
தோள்மீது சவாரி செய்து
தொழிலாளர்களையே சாகடிக்கும்
முதலாளிவர்க்கமே இங்கு அதிகம்.....
மரத்தை வெட்ட சொல்பவனின்
கரங்களை விட -
மரத்தை வெட்டுபவனின்
கரங்கள்தான் வலிமையானவை -
இதனை - முதலாளி வர்க்கம்
மறக்கும் நிலையில்தான்
மாபெரும் புரட்சி வெடிக்கிறது........!!!

-கவிஞர் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : கவிஞர் நளினி விநாயகமூர்த (20-Jan-20, 11:59 am)
பார்வை : 179

மேலே