பேசும் அவள் கண்கள்

எனக்கு உன்னை கொஞ்சமும் பிடிக்கலையே
என்றாய் நீ , நான் உன்னை முதல் முதலாய் நான் சந்தித்தபோது
உன்னையே பார்த்திருந்த நான் அதில்
நீ சொல்லும்போதே ஓர் பதற்றம் கண்டேன்
' கள்ளனே என் உள்ளதை அல்லவோ
நீ கவர்ந்துவிட்டாய்' என்று சொல்வதுபோல்
ஓர் பாவனை உன் கண்களின் ஓரத்தில் தெரிய
இன்று என் மடி மீது நீ
உன் கண்கள் என்னைப் பார்க்க
அதில் பதற்றம் ஏதுமில்லை ஆனால்
உன் கண்கள் பேசியது 'எப்படியோ
என்னை அடைந்துவிட்டாயே
இனி எப்போதும் உனக்கு மட்டுமே நான்'
என்று சொல்லி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (23-Jan-20, 3:47 pm)
Tanglish : pesum aval kangal
பார்வை : 219

மேலே