அவள்

அந்த பெண்ணழகி என் முன்னால்.
என் கண்முன்னாள் என்னருகில் வந்து
நின்றாள் , அவள் அழகில் திளைத்த
நான் அதில் மூழ்கிவிட .....பின் மீண்டு வந்து
அவளோடு பேச நினைக்க பேச்சு வரவில்லை ,
கண்மூடி என்ன பேசுவது என்று நினைத்தேன்,
ஒரு வழியாய் கண் திறந்து மீண்டும் பேச நினைக்க v
பெண்ணழகி அங்கில்லை காணாமல் போனால்
மீண்டும் அவளைக் காண்பேனோ ...தெரியாது
வாழ்க்கையில் நம்மைத்தேடி வரும் யோகம்
இப்படித்தான் எப்படியோ கை நழுவி போகுமோ
எது எப்படியோ அவள் என் மனதில் நிற்கின்றாள்
உள் மனது சொல்கிறது மீண்டும் காண்பேன் என்று

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (29-Jan-20, 10:16 am)
Tanglish : aval
பார்வை : 182

மேலே