மகள்

சின்னஞ்சிறு நிலவே
என் உயிரில் நிறைந்த அமுதே
கண்ணில் வந்த ஒளியே
என் கவிதை தந்த தமிழே
மௌனமொழி வீசும் உன்
கண்ணிமைகள் மயிலிறகு
கொஞ்சிக்கொஞ்சிப்பேசும் உன்
மழலைதான் தனியழகு..
என்னதவம் நான் செய்தேன்
என்னில் வந்து பிறந்தாயே
இன்னும் என்ன செய்வேனோ
உனதன்பில் கரைத்தாயே..

எழுதியவர் : Rafiq (15-Feb-20, 4:32 pm)
சேர்த்தது : Rafiq
Tanglish : magal
பார்வை : 80

மேலே