சிரித்தபடி நகர்ந்துவிட்டேன்

ஏற்றிவைத்த தீபஒளியில் அவனைப்
பார்க்கின்றேன்

அழகாய் சிரிக்கின்றான் என்னைப்
பார்த்து

என்னவேண்டும் உனக்கு என்று
கேட்பதைபோல்

நீ கொடுப்பதை பெற்றுதானே வாழ்வே
நகர்கிறது என்று

சிரித்தபடி நான் நகர்ந்து விட்டேன்

எழுதியவர் : நா.சேகர் (18-Feb-20, 5:45 am)
பார்வை : 155

மேலே