,எண்ணம் போல் வாழ்வு

கனிந்த கத்திரி
காய்களின் நடுவே
நான் சொத்தையா
பயனற்று போனேனா??

யார் சொன்னது
நீ வீழ்ந்தால்
எழுவாய்
உனக்கேது மரணம் !

எண்ணிலடங்கா
தலைமுறைகள்
உன்னில்
உன் எண்ணம் போல்
உன் வாழ்வு !

மனிதன் எண்ணம்
மாசாகி போனதால்
அவன் வாழ்வு
அவன் கையில் இல்லை!!!

எழுதியவர் : உமாபாரதி (18-Feb-20, 7:10 pm)
பார்வை : 231

மேலே