கோவிட் சிறை

வீட்டில் இட்டுப் பூட்டியது கோவிட்.
காட்டில் இட்டதோ என இருந்தாள்.
காகிதச் சரசரப்பு காதில் நாராசம்.
முனை ஒடிந்த பென்சில் ஒன்று
முன்னால் இருந்தது உறுத்தல்.
ஆன்லைனில் குடி கொண்டால்
கோவிடாசுரன் கொட்டங்கள்தாம்.
திடீரெனச் சரசரப்பில் ஒரு சங்கீதம்.
பென்சில் கூர் அடையும் நேரம்.
அவள் மனக் கல்லறையில் அங்கு
ஓவியம் ஒன்று உயிர்த்தெழும்
இனிமையான ஒரு ரீங்காரம்.
காகிதம் பென்சிலோடு இணைந்து
அழகாய்ச் செய்தது ஓர் ஓவியம்.
அவள் மனக் கல்லறையும் இன்று
மகப் பேறு அறையாக மறுபிறவி!

எழுதியவர் : திருத்தக்கன் (21-Mar-20, 3:14 pm)
சேர்த்தது : திருத்தக்கன்
பார்வை : 78

மேலே