கொரானோ

எங்கோ ஒருவன் தன் அருகில் இருப்பவனுக்கு தொற்று இருக்கக்கூடாது
என வேண்டிக் கொண்டிருந்த வேளையில்..
எங்கோ ஓரிடத்தில் திருமண நிகழ்வு
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேளையில்..
எங்கோ ஒரே குடும்பத்தைச் சார்ந்த
மூவருக்கு தொற்று
உறுதி செய்யப்பட்ட வேளையில்..
எங்கோ ஒரு‌ செவிலியர் மாதவிடாய்
காலத்திலும் மருத்துவமனைக்கு
புறப்பட்டுக் கொண்டிருந்த வேளையில்..

இங்கு ஒருவன்
கிருமிநாசினிகளின் காலாவதி தேதியை மாற்றிக் கொண்டிருந்தான்

$வினோ..

எழுதியவர் : பெருமாள்வினோத் (23-Mar-20, 9:34 am)
சேர்த்தது : பெருமாள் வினோத்
பார்வை : 113

மேலே