நெஞ்சை உலுக்கியதே

ஆடை களைந்து சோதித்த
அவலம் நெஞ்சை உலுக்கியதே!
மூடத் தனத்திற் களவிலையோ
மூளும் விளைவு புரியலையோ ?
கூடி இளைய சமுதாயம்
கொதித்துச் சீறிப் பொங்கிவிடில்
ஆடித் தானே போவீர்கள்
அனலில் வெந்து சாவீர்கள் !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (27-Mar-20, 1:57 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 40

மேலே