புரியுதா பாட்டி

பாட்டி
வெளிய வராதீங்க...
ஏன்டா பேராண்டி...
வெளிய வந்த கொரோனா வந்துடும்...
அதனால வெளிய வராதீங்க

அட போடா
இன்னிக்கு செத்தா நாளைக்கு பாலு...

பாட்டி
அதான் இல்ல
இன்னிக்கு செத்த நாளைக்கு பாலு மட்டுமில்ல..
தண்ணிக்கூட ஊத்தமாட்டாங்க... அப்டியே எடுத்துட்டு போயிட்டு எரிச்சுடுவாங்க
அந்த அளவுக்கு பயங்கரமானது கொரேனா...

அதுவுமில்லாம..
இந்த மாதிரி பேசிகிட்டு வெளிய திரியாதிங்க...
தூக்கிட்டு போயி -
கொரோனா வார்ட்ல போட்ருவாங்க...

ஒரு நாட்டோட பிரதமர் என்ன சொன்னார் தெரியுமா...?

"இதற்குமேல் என் மக்களை
புதைக்க இடமில்லை"

நிலைமை கட்டுக்குள் வரும்வரை
வீட்டுக்குள் மறைந்திருங்கள் - இல்லையேல்
விரைவில் மறைந்துபோவீர்கள் - ☠☠☠

அப்டின்னு...

சொன்னது புரியுதா பாட்டி...

புரியுது... புரியுது...
வாயை மூடிட்டு இருக்கனும்...அதானே..

அதே தான்...🙏🙏🙏

எழுதியவர் : நளினி விநாயகமூர்த்தி (29-Mar-20, 8:34 pm)
பார்வை : 452

மேலே