ஊரடங்கும் - கலைப் பயிற்சியும்

ஊரடங்கு உத்தரவுல சில இளைஞர்கள் ஊர் சுத்தறது நமக்கு ஒருபக்கம் கோபத்தை உண்டாக்குது.

இன்னொரு பக்கம் சில இளைஞர்கள் ஆக்கபூர்வமான பணிகளை செய்யுறாங்க. நாம நல்லதை எடுத்துகிட்டு - நம்ம வாழ்க்கையை நல்ல படியா அமைப்போம்.

எது ஆக்கபூர்வமானது - இந்த தடை உத்தரவு காலத்துல - நாம வீட்டுக்குள்ளியே முடங்கியிருக்கனும். ஆனா நம்முடைய அறிவு முடங்கிவிடக் கூடாது. அது எப்படி சாத்தியமாகும்.

நாம மனசுவச்ச எல்லாமே சாத்தியம்தான் - இந்த விசயத்தை நான் உதாரணத்தோடு சொல்ற :-

என் நண்பர் - அவர் பெயர் திரு. C. சங்கர் - மிகச் சிறந்த ஓவியர். சிறு வயதுல இருந்தே ஓவியம் வரையதுல ஆர்வம். பள்ளி படிப்பை முடிச்சு - முறையா ஓவியக்கல்லூரியில - ஓவியப் பயிற்சி பெற்று - இன்னிக்கு மிகச் சிறந்த உயிரோட்டமான ஓவியங்களை வரைந்து கொண்டு வருகிறார்.

பெரும்பாலும் நமக்கு சினிமா-தொலைக்காட்சி- அரசியல்-கிரிக்கெட் விளையாட்டு இதுல இருக்கிறவங்கலதான் பிரபலமா நினைப்போம். ஆனா - இது முற்றிலும் தவறு. அதற்கு அப்பாற்பட்டும் பல திறமைசாலிகள் இருக்காங்க. அவங்க எல்லாம் - அவங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு பிரபலமானவர்கள்தான். இந்த இடத்துல பல நண்பர்கள காணமுடிகின்றது.

நான் மேல குறிப்பிட்ட என்னுடைய நண்பர் - திரு. C. சங்கர், அவர் ஓவியத்தோடு சிறப்பே - உயிரோட்டம்தான். என் நண்பர் அப்டிங்கிறதுக்காக - இதை நான் பெருமைபடுத்தல - இது ஒரு உண்மைக்கான அங்கீகாரம். பல இடங்களில் நடைப்பெற்ற ஓவியக்கண்காட்சியில - அவருடைய மிக சிறந்த ஓவியங்களும் இடம்பெற்று விற்பனையாயிருக்கு....

அதுல...
அவர் வரைந்த புத்தர் ஓவியமும் விற்பனையாயிருந்தது. அதை எனக்கு போட்டோ எடுத்து அனுப்பியிருந்தார். உண்மையிலேயே எனக்கு எப்பலாம் மனசு கவலையா இருக்குமோ - அப்பலாம் அவர் வரைந்த புத்தர் ஓவியத்தை பார்ப்பேன். அந்த ஓவியத்தை பார்க்கும்போதெல்லாம் எனக்குள் தோன்றும் வரிகள் இவைதான்...

"கவிதைகளிலும்
கதைகளிலும் தொலைத்த - என்
கவலைகளை - புத்தனே
முதன்முறையாக - உன்
முகம்பார்த்து தொலைத்தேன்...."

அப்டின்னு... அந்த அளவுக்கு அந்த ஓவியம் சிறப்பா இருந்தது. அவருடைய
அந்த ஓவியம் மட்டுமில்ல...

அவரும் சிறப்பானவர்தான். இந்த ஊரடங்கு நேரத்துல... பிள்ளைகளை கவனிக்க நாம - படாதபாடு பட்றோம்... - ஆனா அவரு சிறு பிள்ளைகளுக்கு வாட்ஸ்அப் மூலமாகவே ஓவியப்பயிற்சி கொடுக்கிறார். அதுவும் இல்லாம இலவசமாவே கற்று தருகிறார்... ஆரம்பித்து கொஞ்ச நாள் ஆகுது... அதுக்குள்ள நாற்பதுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் அதுல இணைந்து - தங்களோட திறமைய , சரியான முறையில வளர்த்துகிறாங்க... இந்தமாதிரி இளைஞர்கள்தான் இன்னிக்கு சமுதாயத்துக்கு தேவையானவர்கள். இவர்கள் என்றும் பெருமைக்குரியவர்கள். நாளைய தலைமுறையை நல்லவண்ணமாய் உருவாக்குவதில் பெரும்பங்களிப்பவர்கள்....!!! நன்றி...!!!

- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : நளினி விநாயகமூர்த்தி (30-Mar-20, 6:38 pm)
பார்வை : 129

சிறந்த கவிதைகள்

மேலே