மாண்புமிகு மதவாதிகளே

மாண்புமிகு மதவாதிகளே
சாதியையும் மதத்தையும்
எப்போதும் தூக்கி சுமப்பது ஏன்?

அது இல்லையென்றால்
உங்களால் வாழமுடியாதா?

அதை மட்டும் வைத்துக்கொண்டு
அப்படி என்ன சாதித்தீர்?

உங்கள் சுயநலத்திற்காக
சாதி மதத்தை
பெரிதாய் வளர்க்கும் உங்களால்
ஆளுக்கொரு மரம் வளர்க்க
இயலவில்லையே ஏன்?

ஓ!
அதை வளர்த்தால்
நம் நாட்டிற்கு நன்மை கிடைத்துவிடும்

மரத்தை வைத்து
அரசியல் செய்து
சம்பாதிக்க முடியாது இல்லையா?

உங்கள் புத்திசாலித்தனம்
மக்களை முட்டாள்களாய்
வைத்திருக்கின்றீர்!

சாதி மதத்தின் பெயரால்
நன்றாக குளிர்காய்கின்றீர்!

இதோ வந்து விட்டதே கொரோனா
அதை எப்படி அடிமைப்படுத்த போகின்றீர்?

அதற்கு உங்கள் மதச்சாயம் பூசமுடியுமா?
முடியாதுதானே!

அது சாதி மதமெல்லாம் பார்க்காது
எவ்வளவு பணம் கொடுத்தாலும்
உங்களுக்கு அடிபணியாது!

இன்று என்ன செய்வதாய் உத்தேசம்?
உங்கள் முகத்தில்
எதற்கு இத்தனை அச்சரேகைகள்?
ஓ...
பயம் பற்றிக்கொண்டதோ!
இருக்கதானே செய்யும்...
வல்லரசு நாட்டையே
கொரோனா கொய்யும் போது
உயர்ந்த உங்கள் சாதி மதத்தை
விட்டுவிட்டாச் செல்லும்....
மாண்புமிகு மதவாதிகளே
இன்றேனும் பொய்வாய் திறந்து
உண்மை சொல்லும்...!

எழுதியவர் : கிச்சாபாரதி (13-Apr-20, 8:17 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
பார்வை : 50

மேலே