ஆங்காரம்

வெற்றியொன்றே வெறியாகி
உறவும் நட்பும் துச்சமாகி
புற்றீசலாய் இழப்புகள்
புறப்பட்டே தான் வந்திடினும்
வலிகளையே தன் முகவரிகளாக்கி
வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்
இறுதி நொடியில் தான்
புலப்படுகிறது
ஆங்காரத்தின் கோரமுகம்!

எழுதியவர் : (14-Apr-20, 12:12 am)
சேர்த்தது : Gopinath J
பார்வை : 70

மேலே