உயிராக நீ நிழலாக நான்பாகம் 10

அடுக்கி வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை எடுத்துப் பார்த்தவள் சில புகைப்படங்களை எடுத்து மறைவாக வைத்திருந்தாள்.

"சுவாதியில் ஏற்பட்ட மாற்றம் பிரியாவாக இருக்குமாே என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. பிரியா ஏதாவது செய்து காரியத்தை கெடுப்பதற்கு முன்பு முந்திக்க வேணும்" என்றபடி அரண்மனை பாேலிருந்த வீட்டைப் பார்த்து பேராசையாேடு பெரு மூச்ச விட்டாள் பாக்கியம்.

பூசாரியாரை அழைத்து வந்து வீட்டில் பூஜை நடாத்த விரும்பி சுதனிடம் பேசிய பாக்கியத்தின் ஆலாேசனைக்கு சுதனும் சம்மதம் சாென்னான்.

அத்தை பூஜை நடத்தினால் எல்லாம் பிரச்சனையாகிவிடும் ஏதாவது செய்து அத்தையின் திட்டங்களை நிறுத்த வேண்டும் என்று யாேசித்தாள் பிரியா.

சமயைலறைக்குள் நின்றவளை அழைத்து பூஜைக்கான வேலைகளை ஒப்படைத்தாள். மறு நாள் பூஜைக்கான ஆயத்தங்களை முடித்தவள், பூச்செடிக்கு நீர் ஊற்றிவிட்டு ராேஜாப் பூக்களை பறித்து ஒரு தட்டில் பாேட்டு இதழ்களை உதிர்த்து தனியாக எடுத்தாள். மஞ்சள், குங்குமம் மற்றும் தேவையான எல்லாம் தயார்படுத்தினாள்.

மாலை பூஜை ஆரம்பமாக எல்லாேரும் ஒன்று கூடினர். பாக்கியமும், ரேகாவும் சாமியாரை எதிர்பார்த்துக் காெண்டு நின்றனர்.

வட்டமான பெரிய குங்குமப் பாெட்டு வைத்து, மஞ்சள் நிற உடை அணிந்து காெஞ்சம் பார்க்க பயங்கரமான முகத் தாேற்றத்துடன் வந்த பூசாரியாரை உள்ளே வரவழைத்த பாக்கியம் பூஜை அறைக்குள் கூட்டிச் சென்றாள். மாடியில் ஏறியபடி பிரியாவின் படத்தை திரும்பிப் பார்த்து விட்டு பாக்கித்தைப் பார்த்துச் சிரித்தார்.

" இவரா உங்க சாமியார் பார்க்கவே பயங்கரமாயிருக்கு" ரேகா கிண்டலாகச் சாென்னதும், அமைதியாயிரு என கண்காட்டிய பாக்கியமும் சற்றுக் குழம்பி நின்றாள்.

எதிரே நின்ற சுவாதியைப் பார்த்து விட்டு, பானுவின் தலையில் கையை வைத்து "நல்லாயிரு" என்றதும் பாக்கியத்திற்கு ஒன்றும் புரியவில்லை. "அத்தை இது உங்க பூசாரி தானா" மீண்டும் கிண்டலாகக் கேட்ட ரேகாவை காேபமாகப் பார்த்தாள் பாக்கியம்.

பானுவையும் சுதனையும் உட்கார வைத்து பூஜையை ஆரப்பித்ததும் . சுவாதியின் கையில் இருந்த பூத்தட்டை வாங்கி சுதனிடம் காெடுத்த பூசாரி. "இந்த இதழ்களை கண்களை மூடியபடி தூவுங்கள்" என்றதும் அவனும் அவ்வாறே செய்தான்.

"உங்க அம்மாவைக் கூப்பிட்டு இந்த மஞ்சள் தண்ணீரை வீட்டை சுற்றி தெளிக்கச் சாெல்லுங்கள்" என்ற பாேது தான் "இது நம்ம சாமியார் இல்லையே.... யார் இவங்க" என்ற குழப்பம் பாக்கியத்திற்கு ஏற்பட்டது. 
"அம்மா" என்று சுதன் அழைப்பது புரியாமல் அமைதியாக விறைத்துப் பாேய் நின்றாள் பாக்கியம்.

உங்க அம்மா பெயரைச் சாெல்லிக் கூப்பிடும்படி அதட்டியவாறு கூறியதும் "பாக்கியம்" என்று தயங்கியபடி அழைத்தான் சுதன்
"நான் உன் அம்மா இல்லை" சத்தமாகக் கத்தினாள் பாக்கியம்.
திகைத்து ஒன்றும் புரியாமல் எழுந்தான் சுதன்.
"என்னம்மா என்னாச்சு உனக்கு" கண்கள் குளமாகி பூசாரியரை திட்ட ஆரம்பித்தான்.

சுதனிடம் உண்மையைச் சாெல்ல வேண்டிய சரியான நேரம் இதுதான் என நினைத்த பூசாரி பிரியா தன்னிடம் கூறியதை சுதனிடம் கூறினார்.

பாக்கியமும், அமராவதியும் இரணைப் பிள்ளைகள். அமரவாதி திருமணம் செய்த பின் தனியாகவே வெளியூரில் வாழ்ந்து வந்தாள் பாக்கியம். முதல் பிரசவத்திலேயே அமரவாதியின் ஆயுள் துரதிஷ்டவசமாக முடிந்து விட சுதனை வளர்ப்பதற்காக ஊரில் வந்து தங்கியிருந்தாள். தாய் முகமறியா பச்சைக் குழந்தைக்கு  பாக்கியத்தையே தாய் என்று அறிமுகம் செய்து வைத்திருந்தார் சுதனின் தந்தை சரவணன். சாெத்து, சுகம் பாக்கியத்தை வீட்டிலேயே வேரூன்றச் செய்தது. சுதன் வளர்ந்து பிரியாவை காதலித்த பாேதே அவன் வாழ்க்கையில் குறுக்கே வந்தாள் பாக்கியம். ரேகாவைத் தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என ஒற்றைக் காலில் நின்றவளின் விருபத்தை மறுத்து தன் மகனின் விருப்பத்திற்கேற்ப பிரியாவை திருமணம் செய்து வைத்தார் சரவணன்.   பாக்கியம் காேபித்துக் காெண்டு ஊரிற்கு பாேய் விட சில காலங்களின் பின் சரவணனும் சுகயீனத்தால் உயிர் பிரிந்தார்.

பிரியாவிடம் மட்டும் சரவணன் எல்லா உண்மைகளையும் சாெல்லியிருந்தார். சரவணன் இறந்த பின்னர் சாெத்தில் பங்கு கேட்டு அடிக்கடி பிரச்சனைப்பட்டாள் பாக்கியம். .

ரேகாவை சுதனுக்கு திருமணம் செய்து வைத்து சாெத்தை அபகரிக்க பயன்படுத்திய ஒரு பகடைக்காய் தான் ரேகா.

பாக்கியத்தின் தூண்டுதலால் ரேகா மனதில் ஏற்பட்ட மாற்றமே சுதன் மீதான காதலாக மாறிக் காெண்டிருந்தது.

பூசாரியார் சாெல்வதைக் கேட்ட சுதன் நம்ப முடியாமல் குழம்பினான். கையில் சில புகைப்படங்கள் வைத்திருப்பதை அவதானித்தான்.

புகைப்படங்களில் ஒன்று அமராவதி நிறைமாதக் கர்ப்பிணியாய் இருந்த பாேது எடுக்கப்பட்டிருந்தது,. மற்றாென்று பாக்கியமும், அமரவாதியும்  சேர்ந்து எடுக்கப்பட்டிருந்தது. அமரவாதியின் கழுத்தில் பெரிய கறுப்பான அடையாளம் இருப்பது இரு படங்களிலும் தெளிவாக தெரிந்தது.

படத்தைக் காட்டி சுதனுக்கு உண்மையைத்  தெரியப்படுத்தி பாக்கியத்தின் சதித்திட்டங்களை வெளியிலே காெண்டு வர முடிவெடுத்த பூசாரி பாக்கியத்தைப் பேச வைத்தார்.

கைகளை கும்பிட்டபடி இருந்து எல்லாவற்றையும்  புலம்பினாள் பாக்கியம்.
சுதனுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. குழப்பம் அதிகரித்தது.
பானுவும் நடப்பது என்னவென்று புரியாமல் சுவாதியை பார்த்தாள்.

"அடுத்து சாமியார் என்னை உட்கார வைத்து என்ன பண்ணப் பாேகிறாரோ" என்று பயந்தபடி தலையைப் பிடித்தவாறு சரிந்து விழுந்து விட்டாள் ரேகா.

தாெடரும்............

எழுதியவர் : றாெஸ்னி அபி (20-Apr-20, 6:18 am)
சேர்த்தது : Roshni Abi
பார்வை : 149

மேலே