ரூபியோனா யார்செய்தார் உன்னை

இலைஅசைய தென்றல் வரையும் ஓவியம் மலர்கள்
கலைநினைந்து நினைந்து உருவாக்கிய உயிரோ வியமோநீ ?
அலைபாயும் கூந்தல் காற்றிலாட அழகின் சிவந்த
சிலைவடிவாய் வந்து இளவேனில் மாலையில் உலாவரும்நீ
மலையை சிலையாக்கும் சிற்பியும் செதுக்கா உயிர்சிற்பமோ
விலையிலா மணியே ரூபியோனா யார்செய்தார் உன்னை ?

ரூபி ---சிவப்புக் கல்

எழுதியவர் : கவின் சாரலன் (24-Apr-20, 10:03 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 45

மேலே