நவமணிகள்

உன் கழுத்துக்கு
பவளம் கோர்ப்பேன்
அதன் அழகுக்கு
கொஞ்சம் முத்தைச் சேர்ப்பேன்

உன் விரலுக்கு
வைரம் கொடுப்பேன்
அதன் அழகுக்கு
கொஞ்சம் மாணிக்கம் தொடுப்பேன்

உன் மூக்கிற்கு
மரகதம் வடிப்பேன்
அதன் அழகுக்கு
கொஞ்சம் இரத்தினங்களை பதிப்பேன்

உன் நெற்றிக்கு
வைடூரியம் செய்வேன்
அதன் அழகுக்கு
புட்பகாரமும் கோமேதகமும் வைப்பேன்

உன் அழகுக்கு
நவமணிகள் தருவேன்
உன் அன்புக்கு
என் உயிரையும் தருவேன்..

எழுதியவர் : மழலை கவிஞன் (27-Apr-20, 11:15 am)
சேர்த்தது : mazhalai kavi
பார்வை : 111

மேலே