அடுத்த பிறவி எதற்கு

அம்மா !
நீ பாத்திரம் தேய்த்த கைகளுக்கு
நான் மருந்தாகமாட்டேனோ !
நீ செருப்பில்லாமல் நடந்து முட்குத்திய
உன் பாதங்களுக்கு
நான் செருப்பாக மாட்டேனோ !
நீ அடுப்பு புகையில் சிக்கி
ஒளி மங்கிய
உன் கண்களுக்கு
நான் ஒளியாக மாட்டேனோ!
நீ விறகு வெட்டும் நேரத்தில் வழியும்
உன் வியர்வையை துடைக்க
நான் தென்றலாக வந்து சேவை செய்ய மாட்டேனோ !
வெயிலில் வேலை பார்த்து களைத்த
உனக்கு நான் மழையை மாறி தாகம் தீர்க்கமாட்டேனோ !
நீ உடல் வலியால் தரையில் படுக்க
என் மடியை
உனக்கு மெத்தையாக மாட்டேனோ
அடுத்த பிறவி எதற்கு
அம்மா !
இப்பிறவியில்
"உன்னை சுமக்க காத்திருக்கிறேன்"
உன் தாயாக !

எழுதியவர் : Poomani (9-May-20, 2:08 pm)
சேர்த்தது : பூமணி
பார்வை : 1227

மேலே