இப்பிறவி போதாது அம்மா உன்னை வர்ணிக்க

இயற்கையின் மறுருவம் இவள் !
எந்த உறவும் அவளுக்கு
இணையாக மாட்டார்கள் இவ்வுலகில் !
அவளின் நெற்றிக்கு இணையாக பிறைசந்திரன் பொருந்தாமல்
பிழையாக்கி போவேனோ !
அவளின் கருகூந்தலுக்கு
கார்மேகம் கூட தயங்கி வரமாட்டானோ !
அவளின் முத்துபற்களுக்கு முன்னால் பவளமுத்துக்கள் ஒளிஇழந்து வாடுமோ !
அவளின் கூரிய விழிகளை கண்டு
மின்னல் ஒளி மங்கி காற்றிலே கலந்துவிடுவானோ !
அவளின் முகத்தின் ஒளியை கண்டு
சந்திரன் ஓடி ஒளிந்து கொள்வானோ!
அவளின் தன்னலமற்ற குணத்தை எண்ணி அனைத்து தெய்வங்களும்
அவளுள்ளே சென்று ஒளிந்துவிட்டார்களோ !
அவளின் உடல்உழைப்பை கண்டு
அறிஞர்கள் வியந்து நிற்பர்களோ !
கருணையே வடிவான
உன்னை கண்டு வியந்தேன் அம்மா!
வார்த்தையால் சொல்லமுடியாத
கவிதை அவள்!
எல்லை கோடே இல்லாத அன்பு அவளிடத்தில் !
"அவளின் அன்பை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை "
என்னிடத்தில்!......
இப்பிறவி போதாது அம்மா
உன்னை வர்ணிக்க !
தன்நலம் கருதாத ஓர் உயிர்
"அம்மா" மட்டுமே இவ்வுலகில் !.....

எழுதியவர் : Poomani (8-May-20, 9:43 pm)
சேர்த்தது : பூமணி
பார்வை : 1219

மேலே