காதல்🌹
காதல் 🌹
"வரல"
" கொஞ்சம் வேலை"
"அப்ப ஏண்டா நேத்து கமிட் பண்ண"
" சாரி"
" அதெல்லாம் முடியாது, நீ இப்ப இன்னும் அரைமணி நேரத்தில இங்க வந்தே ஆகனும்"
" ஏய், பிளீஸ் ,இன்னிக்கு சான்சே இல்ல, பிளீஸ் புரிஞ்சிக்கோ"
" அப்போ எதுக்குடா என்ன லவ் பண்ர, நீ மட்டும் தான் வேலைக்கு போரியா, நாங்க வேலை வெட்டி இல்லாம சும்மாவ இருக்கோம். கடைசியா கேக்கிறேன், வரியா, இல்லையா"
" நீ ரொம்ப கோவ படர, இன்னிக்கு பார்த்து டீம் லீடர் வரல"
" இந்த சாக்கு போக்கு எனக்கும் சொல்ல தெரியும், எனக்கு கூட தான் ஒரு ராட்சசசி டீம் லீடர், நாங்க டபாச்சுட்டு வரல, நீ வராதே, உனக்கு உன் வேலை தான் முக்கியம் , நீ ஒரு செல்பிஷ்"
" ஏய், கோவிச்சிக்காதே, சரி வரேன்"
" வருவியா, இல்ல சமாளிக்கிரியா"
" கண்டிப்பா வரேன்"
" நீ மட்டும் வராம இரேன், அப்பறம் இருக்கு"
" ஐ லவ் யூ மை டியர், வெயிட் பண்ணு, "
பேசமாட்டியா, அதான் வந்துட்டேனே.
"........."
இன்று நீ மரபு கவிதை.
காரணம் புடவை உடுத்தியதால்.
பளிங்கு சிலையே
வண்ண ஓவியமே
வானவில்லின் நிறத்தை கண்களில் வைத்து காந்த பார்வையால் என்னை மயக்கிய மாய மோகினியே
நிலவே உன் அனுமதியுடன் இந்த மழை மேகம் வாரி அனைக்க காத்திருக்கிறது.
பெண்னே, உன் ஆப்பிள் கண்ணங்களில் ஏற்படும் அந்த அழகிய குழியில் வழிக்கி விழுந்த என் இதயத்தை
உன் முக்கணி சுவை கொண்ட இதழ்களால் ஒத்தடம் தருவாயா
கவிஞரின் வர்ணனையில் மறந்து உன் இடை
காரணம் அது எங்கே உள்ளது.
என் இதய ராணியே
என் மனம் என்னும் மேடையில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருக்கும் என் அழகு ராணியே
காதல் எனும் தீபத்தை என் உள்ளத்தில் ஏற்றிய
என் இதயதுடிப்பே...
பேசு, என்னுடன் பேசு...
" இத மாதிரி ஏதாவது பேசி என்னை கவுத்திடு"
" உண்மையிலேயே நீ ரொம்ப அழகா இருக்க"
" நிஜம்மா"
" பிராமிஸ்"
" தேங்ஸ்"
" தேங்ஸ், மட்டும் தானா"
" ஒரு, முத்தம்"
" நோ, .. நோ.."
" உலக அழகி போட்டியில் நீ கலந்து கொண்டால், நீயே முதலிடம்"
" இது, ரொம்ப ஓவர்"
" அழகே, அற்புதமே, அசைந்தாடும் வண்ண மலரே"
" உனக்கு என்ன வேனும் "
" உன் இதழின் வரிகளில் கவிதை எழுத நீ அனுமதி தர வேண்டும் "
மெளனம் அவளிடம் இருந்து.
மெளனம் சம்மதாக எடுத்து கொள்ளலாமா?
"முதல்ல, இன்னைக்கு எதுக்கு இங்க வர சொன்ன"
" கண்ணை மூடு, சர்பரைஸ்"
அவள் விரல்களில் தங்க மோதிரம் அணிவித்தான்.
"நல்லா இருக்கா "
" சூப்பர், ஏண்டா இவ்வளவு காஸ்டிலி"
" தோனுச்சு"
" தேங்ஸ் "
" உன் தேன் குழல் விரல்கள் நடுவில் மின்னும் இந்த மோதிரம் நம் காதலின் அடையாள சின்னம்"
" ஆமா, ஹார்ட் மோதிரம் நடுவுல இருக்கு"
" என் இதயம், நீ எப்போதுமே பார்க்க இந்த ஏற்பாடு "
" ஐ லவ் யூ டா"
" வண்ண மயிலே, என் விண்ணப்பம் "
" சாரி உன்னை நிறைய திட்டிட்டேன், சாரி"
" காதலில், மோதல் சர்வசாதாரணம்"
" நீ இன்னைக்கு ரொம்ப ஸ்மார்டா இருக்க டா"
" நன்றி, என் எதிர் கால மனைவியே"
" சரி நம்ம கிளம்பலாமா"
" தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக்கவில்லையே"
" மண்டு, இங்கே எப்படி சாத்தியம் "
அந்த பூங்காவில் ....
அவன் கரங்கள் அவள் இடை பற்ற
அவள் தொட்டா சினுங்கியன சுருங்கினாள்
அப்படியே அவன் மீது கொடியன படர்ந்தாள்.
கண்களில் காதல் விடைபெற்று காமம் குடிகொள்ள
தீ என காமம் கொழுந்து விட்டு எரியும் முன் இருவரும் பிரித்தனர்.
தன்னிலை மறக்க முயன்ற இருவர் கலாச்சாரம் கருதி விலகினர்.
மனம் ஆசையில் தத்தளித்தது.
மோகம் முந்தியது
காமம் தலைகேறியது
ஆனால் அவர்கள் உண்மை காதல் அத்துனை எண்ணங்களையும் முந்தி அவர்களை ஜெயித்தது.
" யூ ஆர் எ ஜெண்டில் மேண்"
" நீ....நான் விரும்பும் தமிழ் பெண்"
" கல்யாணதுக்கு அப்புறம் "
" கல்யாணதுக்கு அப்புறம் "
" இந்த மலர் உனக்கே சொந்தம். என்னுள் உள்ள தேன் உனக்கே சொந்தம்.
உன் மனம் எப்போதுமே எனக்கே சொந்தம்.
என் உயிர் உனக்கே சொந்தம்.
- பாலு.