தகப்பன்

ஏழை தெய்வம்
================
வெட்டுகின்ற மின்னலுக்கு விழியை மூடி
-வீட்டுக்குள் முடங்குகின்ற விதியைச் சொல்லி
எட்டுதிக்கும் முழங்குகின்ற இடியைக் கேட்கா
=திருக்கும்படி அறிவுரைகள் எல்லாம் கூறிக்
கொட்டுகின்ற பெருமழைக்குக் குடையு மற்றுக்
-குழந்தைகள் பசிபோக்கிக் கொள்ள வென்று
இட்டமொடு தொழிலாலே இன்னல் போக்க
எதிர்நீச்ச லிடுந்தகப்பன் ஏழை தெய்வம்
**
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (14-May-20, 11:11 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 57

மேலே