காதலின் புது வெள்ளம்
கண்களோ கவிதை பேச
மனமோ மெழுகாய் உருக
விரல் நுனிகளோ மார்பை வருட
நகக்கீறல் தேகத்தில் கோலமிட
உதடுகள் பேசாமல் பேச
உயிரினுள் மின்சாரம் பாய
தேன் துளியாய் வியர்வை பூக்க
இரு மனங்களும்
கரை அடைந்த மீனாய்
oxygen வேண்டுமென போராட
இது போதுமென ஜீவன்
இவ்வுலகை மறந்து
புது அண்டம் சென்றதே