விரும்பியே தொலைகிறேன் தனிமையில்

காற்றைப்போல் உன் வருகை
இதய மொட்டுகள் அவிழ...
காதலின் ரீங்காரம் மனதெங்கும்!

போர்வைக்குள் நான் புதைய
விழியீர்ப்பு விசையால் ஈர்க்கிறாய்...
விலகிச்செல்கிறது என்உறக்கம் விழியிலிருந்து
அடம்பிடிக்கிறேன் நான் தலையணையோடு!

தவிக்கும் என்நிலை கண்டு
தென்றலை தூதனுப்பி நகைக்கிறாய்..
உள்ளம் நீயாட்டும் ஊஞ்சலாக இனிதாய் கழிகிறது
உனக்கான என் ஒவ்வொரு நொடியும்!

உன் நினைவுகள் உரச உரச
இரவது கரையக் கரைய...
கன்னத்தை நனைத்துச் செல்கிறது
நினைவுகள் சுமந்து கனமான கண்ணீர்!

இரவின் பிடியில் சிறைவாழ்க்கை என்றாலும்
என்னில் நீ மட்டுமே நிறைவதால்...
விரும்பியே தொலைகிறேன்
இந்தத் தனிமையில்..!

எழுதியவர் : சகாய டர்சியூஸ் பீ (11-Jun-20, 2:35 am)
சேர்த்தது : சகாய டர்சியூஸ் பீ
பார்வை : 2061

மேலே