அவள்வரும் நேரமிது அழகிய மலர்களே

அவள்வரும் நேரமிது அழகிய மலர்களே
ஆனந்த ராகம் பாடுங்களேன் !
மலர்பறிப்பாள் மெல்லிய அவள் விரல்களை
முத்தமிடுங்கள் அதிர்ஷ்ட சாலிகளே !
புன்னகைத் தேன்சிந்துவாள் வண்டிடம் இழந்த தேனை
மீண்டும் பெற்றுக் கொள்ளுங்களேன் !
விரியாத மொட்டுக்களே வருந்த வேண்டாம்
நாளையும் அவள் வருவாள் !

எழுதியவர் : கவின் சாரலன் (13-Jun-20, 10:22 am)
பார்வை : 124

மேலே