என்வீட்டு விருந்தாளி காகம்

என் வீட்டு அடுக்களை ஜன்னலுக்குப் பின்
என்றும் காலை வேலுமணி, பகல் ஒரு மணிக்கும்
தப்பாமல் வந்து சாப்பாடு கேட்டு சாப்பிடும்
இரு ஜீவன்கள்...... காக்கை இரண்டு
திருக்களிக்குன்றம் கழுகுபோல நேரம் தப்பாது வரும்
இக்காகங்கள்...... விரும்பி உண்பது சப்பாத்தி காலையில்
பகலிலோ தப்பாமல் சூடான தயிர் சாதம்
பழைய சாதம் ஏற்காது இக்காகங்கள்

கொஞ்சம் நாழிகடந்தாள் ஜன்னல் கம்பிகளை அலகால் கொத்தும்
இக்காகங்கள்...... கேட்டு பருகுவது உணவுக்குப்பின் தண்ணீர்!

என்னை சிந்திக்கவைத்தது இக்காகங்கள்
பகல் ஒருமணி உணவுக்குப்பின் அமுதம்
கொடுத்தாலும் வந்து ஏற்காது
என்னை அயரவைத்தது இதன்
நாவடக்கம்.......உணவு கட்டுப்பாடு
மனிதர்கள் நாம் வெட்கி தலை குனிய ...

அறிவு ஜீவிகள் இக்காக்கைகள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Jun-20, 8:00 pm)
பார்வை : 73

மேலே