துகளதிகாரம்

பேசுவாரில்லாமல் மின்கம்பத்தோடு பொழுது கழிக்கின்றன

காலி டெலிபோன் கம்பங்கள்!

***********

அறை மணிநேரப் பேச்சு

ஐம்பது முறையாவது கடித்திருப்பாள் டாலரை

பாவம் பிள்ளையார்!

***********

அது என்னவோ தெரியவில்லை

வயிற்றுப் பிள்ளைக்காரிகளைப் பார்த்து

ஒருநாளும் சபலப்பட்டதில்லை மனசு!

***********

அடுப்புக்கரியை அவ்வப்போதாவது கொண்டாடுங்கள்,

அடித்த கோழியை அனலில் வெந்து அசைவமாக்கிவிட்டு

அடுத்த ஊருக்கு தூக்குச்சட்டியோடு துணைக்குப் போகிறது பேய்களை விரட்டிக்கொண்டே!

***********

மெத்தை,தலையணை பேசுகையில் ஒட்டுக்கேட்டது,

இலவ மரம் முழுவதும் முட்கள்!

***********

காற்றடிக்கும்போதெல்லாம்

அபிநயத்தோடு அரிதாரம் பூசி ஆடுகிறது

அடுக்கலையில் சிலந்திவலை!

***********

எப்போது பெய்தாலும்

புதுக்கவிதைகளைத் தூவிச் செல்கிறது

மழை!

***********

இருக்கின்றவரை எண்ணையையும்,

இல்லாதா நேரத்தில் தன்னையும்

எரித்து ஒளிருகிறது விளக்குத்திரி!

***********

வாழ்நாள் முழுவதும் வீடுவீடாய்
விளக்கையும் தேய்த்த வேலைக்காரிக்கு,

ஒருநாளும் வெளிப்படவில்லை பூதம்!

***********
இறையச்சம் வர வர
காக்கா எச்சம் போல் ஆகிவிட்டது
எப்போதாவதுதான் வந்துவிழுகிறது மனதுள்!

எழுதியவர் : ஜெகன்.த (16-Jun-20, 4:52 pm)
சேர்த்தது : Jegan
பார்வை : 71

மேலே