Jegan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Jegan
இடம்:  திருநெல்வேலி
பிறந்த தேதி :  13-May-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Sep-2010
பார்த்தவர்கள்:  349
புள்ளி:  76

என்னைப் பற்றி...

அவளின் மௌனக்குடைகளின் மேல் என் காதல் மழை..................

என் படைப்புகள்
Jegan செய்திகள்
Jegan - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jun-2020 4:52 pm

பேசுவாரில்லாமல் மின்கம்பத்தோடு பொழுது கழிக்கின்றன

காலி டெலிபோன் கம்பங்கள்!

***********

அறை மணிநேரப் பேச்சு

ஐம்பது முறையாவது கடித்திருப்பாள் டாலரை

பாவம் பிள்ளையார்!

***********

அது என்னவோ தெரியவில்லை

வயிற்றுப் பிள்ளைக்காரிகளைப் பார்த்து

ஒருநாளும் சபலப்பட்டதில்லை மனசு!

***********

அடுப்புக்கரியை அவ்வப்போதாவது கொண்டாடுங்கள்,

அடித்த கோழியை அனலில் வெந்து அசைவமாக்கிவிட்டு

அடுத்த ஊருக்கு தூக்குச்சட்டியோடு துணைக்குப் போகிறது பேய்களை விரட்டிக்கொண்டே!

***********

மெத்தை,தலையணை பேசுகையில் ஒட்டுக்கேட்டது,

இலவ மரம் முழுவதும் முட்கள்!

***********

காற்றடிக்கும்போதெல்லாம்

அபிநயத்தோடு அரிதா

மேலும்

Jegan - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jun-2020 2:29 pm

"ஆகா அழகான கவிதை"யென்கிற எண்ணவோட்டம்

இப்படியும் எழுதலாமே என மடைமாறும் போது

கருத்தரிக்கிறது புதுக்கவிதை!

*************************************************************************

பசித்து வயிறு காய்ந்தவனின் பக்கத்துவீட்டில்,

மிஞ்சியது காய்ந்து கொண்டிருந்தது வத்தலாக!

*************************************************************************

தலையில் பூ வைத்துப்

பூ விற்கும் பூக்காரிகளை,

பூ வாங்கும்போதெல்லாம்

பார்த்ததாக நினைவில்லை!

*************************************************************************

ஒருவகையில் மழையின் ஒவ்வொரு துளியும் விந்துக்களே!

பூமியில் விழும்போதெல்லாம் பல கவி

மேலும்

Jegan - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jun-2020 5:20 am

ஞாயிறு தூக்கம் பெரும்பாலும் இப்படித்தான் கலைந்துபோகும்.

"எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்துங்கள்,அனைவரிடமும் சமாதானம் நிலவுவதாக".

திடுக்கிட்டு எழுந்து
வழக்கமான வசைகளைக் கேட்டு
கூடைப்பையில் தூங்கும் நூறுடன்
வரிசையில் நிற்பேன்,

அழித்து அழித்து அந்தோணி எழுதுவார்
கறிக்கோழி
உசிறுடன் 120
உரித்தாது 180

"நேத்து நூறுதானே" என சண்டை தொடங்கும்,

எடைக்கு மேல் விழும்
ஈரல்,இதயத்துடன் சமாதானம் ஆகிவிடும்!

மேலும்

Jegan - Jegan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jan-2018 6:33 am

மான மறவர் கூட்டம்தனைப் பேரன்பினால் ஆண்டாள் !

ஆம் என் தாய் தாசி தான் !

எரிவது விறகோ இவளோ இருக்கும் வரை கரும்புகையோடு மல்லுக்கட்டியே மாண்டாள் !

ஆம் அவள் தாசி தான் !

கேட்டும் கொடுக்கா தெய்வங்களின் மத்தியில் கேளாமல் தரும் விசித்திர தெய்வம் பாண்டாள் !

ஆம் அவள் தாசி தான் !

வெறும் கைகளும் கறைந்து போகும் வறுமையிலும் வயிறை நிரப்ப எப்படித் தீர்வைக் காண்டாள் ?

ஆம் அவள் தாசி தான் !

பணமிழந்து,மானமிழந்து,மனமிழந்து அழுவதற்கு கண்ணீரும் இழந்து நிற்கயில் தேற்றிக் குடும்பத் தேரிழுக்கும் வித்தையைக் கையாண்டாள் !

ஆம் அவள் தாசி தான் !

தந்தையுடன் பிணக்குறும் நேரங்களில் அடிபட்டோ,மிதிபட்டோ

மேலும்

நன்றி 29-Jan-2018 8:08 am
மிக அருமை- ..... 28-Jan-2018 5:22 pm
அவரின் கவிதைகளின் கைபிடித்தே நடை போடுகிறேன்...இந்த கவிதையைப் பதிவிட துளியும் யோசிக்கவில்லை சகோ...ஆனால் ஒட்டுமொத்த கவிஞர்கள் உலகும் அவரைக் கைவிட்டது வருத்தம் தருகிறது...உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்..உங்கள் எழுத்து தானே உங்கள் அடையாளம்...தனியொரு அடையாளம் நான் விரும்பவில்லை சகோ...மகிழ்ச்சி உங்கள் பகிர்வை வரவேற்கிறேன்...மிக ஊக்கம் தருகிறது 27-Jan-2018 12:47 am
நான் கருத்துக் சொல்ல விரும்பவில்லை. வைரமுத்துவின் நேர்மையான உருக்கத்தைக் கூட புரிந்து கொள்ள மறுத்து விட்டார்கள். இந்த அடையாளம் இல்லாதவனின் கருத்தை யாரும் தூற்றக் கூடாது என்பதற்காக தவிர்த்து கொள்கிறேன் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Jan-2018 7:12 pm
Jegan - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jan-2018 6:33 am

மான மறவர் கூட்டம்தனைப் பேரன்பினால் ஆண்டாள் !

ஆம் என் தாய் தாசி தான் !

எரிவது விறகோ இவளோ இருக்கும் வரை கரும்புகையோடு மல்லுக்கட்டியே மாண்டாள் !

ஆம் அவள் தாசி தான் !

கேட்டும் கொடுக்கா தெய்வங்களின் மத்தியில் கேளாமல் தரும் விசித்திர தெய்வம் பாண்டாள் !

ஆம் அவள் தாசி தான் !

வெறும் கைகளும் கறைந்து போகும் வறுமையிலும் வயிறை நிரப்ப எப்படித் தீர்வைக் காண்டாள் ?

ஆம் அவள் தாசி தான் !

பணமிழந்து,மானமிழந்து,மனமிழந்து அழுவதற்கு கண்ணீரும் இழந்து நிற்கயில் தேற்றிக் குடும்பத் தேரிழுக்கும் வித்தையைக் கையாண்டாள் !

ஆம் அவள் தாசி தான் !

தந்தையுடன் பிணக்குறும் நேரங்களில் அடிபட்டோ,மிதிபட்டோ

மேலும்

நன்றி 29-Jan-2018 8:08 am
மிக அருமை- ..... 28-Jan-2018 5:22 pm
அவரின் கவிதைகளின் கைபிடித்தே நடை போடுகிறேன்...இந்த கவிதையைப் பதிவிட துளியும் யோசிக்கவில்லை சகோ...ஆனால் ஒட்டுமொத்த கவிஞர்கள் உலகும் அவரைக் கைவிட்டது வருத்தம் தருகிறது...உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்..உங்கள் எழுத்து தானே உங்கள் அடையாளம்...தனியொரு அடையாளம் நான் விரும்பவில்லை சகோ...மகிழ்ச்சி உங்கள் பகிர்வை வரவேற்கிறேன்...மிக ஊக்கம் தருகிறது 27-Jan-2018 12:47 am
நான் கருத்துக் சொல்ல விரும்பவில்லை. வைரமுத்துவின் நேர்மையான உருக்கத்தைக் கூட புரிந்து கொள்ள மறுத்து விட்டார்கள். இந்த அடையாளம் இல்லாதவனின் கருத்தை யாரும் தூற்றக் கூடாது என்பதற்காக தவிர்த்து கொள்கிறேன் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Jan-2018 7:12 pm
Jegan - Jegan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jun-2016 8:53 pm

பொம்மை

பொம்மை
ஒரு பொம்மை
அழகிய பொம்மை
திரும்ப கிடைத்த பொம்மை
ஆனால் தொலைந்து போன பழைய பொம்மை
என்னை பொம்மையாக்கிய பொம்மை

பொம்மை
ஒரு பொம்மை
அழகிய பொம்மை
என்றோ பிடித்த பொம்மை
எதிர்பாராமல் கிடைத்த பொம்மை
நான்கு சுவற்றிற்குள் பேசிய பொம்மை
நால்வர் மத்தியில் பேசாது கொன்ற பொம்மை
நான் தெரிந்தே தொலைக்கும் வரை
உண்மையில் அதுதான் நிஜ பொம்மை

பொம்மை
ஒரு பொம்மை
அழகிய பொம்மை
கெட்டவர் கைகளில் நித்தமும் பொம்மை
கேளார் செவிகளில் பேசிடும் பொம்மை
கேட்பாரற்று கிடக்கும் பொம்மை
கேட்டதால் கெட்ட கெட்ட பொம்மை
மற்றவர் கண்களில் காதல் பொம்மை
என் கண்களில் காலத்தால் பொம்மை

பொம்மை

மேலும்

நாமும் பொம்மைகளே ஒவ்வொரு செயல்களில் வாழ்த்துக்கள் ..... 20-Jun-2016 11:31 am
விழுகின்ற முடிவில் தான் மனிதனின் வாழ்க்கை ஒவ்வொரு மனிதனும் பொம்மை தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Jun-2016 5:34 am
கௌதம் அளித்த கேள்வியில் (public) nilamagal மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-Jan-2014 7:29 pm

அழகு என்றால் என்ன ?

மேலும்

புற அழகு காணும் கண்களில் ! அகஅழகு மனங்களை பொறுத்தது ! 11-Jan-2014 12:30 pm
நம் எண்ணம் விரும்புவதை கண்கள் கானுபோது அழகு என்னும் உணர்வு மனதிற்க்கு தோறுகிறது 11-Jan-2014 12:26 pm
நிரந்தர உண்மைகள் எல்லாமே அழகுதான்! 11-Jan-2014 12:15 pm
விழி தாண்டி சென்ற pinnum ullam thanil niraiyum kalai athuve azhagu athulaam illa paas namma karpalai naalla iruntha ellame azhagu than 10-Jan-2014 3:49 pm
Jegan - ஹரி ஹர நாராயணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jan-2014 4:56 am

கால் உடைந்து கிடந்தது
என் சிறு வயது மரக் குதிரை.....

கவர் மாட்டியபடி இருந்தேன் பென்ஸ்
காருக்கு நான்......!

ஏனோ முகத்தில் ஒரு வித இறுக்கம்
எப்படி இது வந்தது ? வசதி வந்ததாலா ?!

குப்பையை ஏன் இன்னும் சரி செய்யல
எரிந்து நான் விழ சட்டென்று
இதோ எசமான் என்று
எடுத்து எறிந்தாள் ரோட்டில்
வேலைக்காரப் பெண்
அந்த மரக் குதிரையை........!

துண்டு துண்டாக சிதறி விழுந்தது
குப்பைத் தொட்டிக்குள் அது......!

தனி அறையில் அமர்ந்து
நினைத்துப் பார்க்கிறேன்......

சிறுவயதில் அந்தக் குதிரையை விட்டு
இறங்கவே மாட்டேன்
அவ்வளவு அன்பு அதன்மீது...

ஆனால்.....ஆனால்.....

இன்று ஏன் எப்படி

மேலும்

மிகவும் அருமை தோழமையே! 08-Jan-2014 10:36 am
அருமை ஹரி ! 08-Jan-2014 9:46 am
உண்மை மன நிலையை அப்படியே வடித்தற்கு மிக நன்றி ஹரி. என்ன பாடுபாட்டிருக்கும் இந்த பாழாய்ப்போன உள்ளம்.. உண்மைதான் ... 08-Jan-2014 6:11 am
உங்கள் படைப்பில் எனக்கு பிடித்த சில வரிகள் கிழே! கால் உடைந்து கிடந்தது என் சிறு வயது மரக் குதிரை..... கவர் மாட்டியபடி இருந்தேன் பென்ஸ் காருக்கு நான்......! ஏனோ முகத்தில் ஒரு வித இறுக்கம் எப்படி இது வந்தது ? வசதி வந்ததாலா ?! குப்பையை ஏன் இன்னும் சரி செய்யல எரிந்து நான் விழ சட்டென்று இதோ எசமான் என்று எடுத்து எறிந்தாள் ரோட்டில் வேலைக்காரப் பெண் அந்த மரக் குதிரையை........! துண்டு துண்டாக சிதறி விழுந்தது குப்பைத் தொட்டிக்குள் அது......! தனி அறையில் அமர்ந்து நினைத்துப் பார்க்கிறேன்...... சிறுவயதில் அந்தக் குதிரையை விட்டு இறங்கவே மாட்டேன் அவ்வளவு அன்பு அதன்மீது... ஆனால்.....ஆனால்..... இன்று ஏன் எப்படி மாறினேன்......? அந்த சந்தோசங்கள் எல்லாம் இப்போது அற்பமாக போய்விட்டதன் காரணம் என்ன ? எனது அறிவு விருத்தியா ? இல்லை அகம்பாவமா ? சிந்தித்தபடியே தூங்கி விட்டேன்...... மறு நாள் ஆபீசுக்கு காரில் கிளம்பும்போது கவனித்தேன்..... அந்த உடைக்கப் பட்ட மரக் குதிரையை அழகாக சேர்த்து ஆணி அடித்து செப்பனிட்டு ஆனந்தமாக விளையாடக் கொடுத்திருந்தான் ரோட்டோரப் பிச்சைக்காரன் தன் குழந்தைக்கு... உண்மை சந்தோசமும் என் கண்களுக்கு எரிச்சலைத் தர...... வண்டியின் வேகத்தை அதிகப் படுத்தி முன்னேறினேன்....... சந்தோசத்தில் நான் பின்னேருவதை புரிந்து கொண்டும் புரியாதவனைப் போல்......... 08-Jan-2014 5:35 am
Jegan அளித்த படைப்பில் (public) அஹமது அலி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
07-Jan-2014 7:40 pm

விதையிடவில்லை
நீர் மட்டும்தான்
அறுவடைக்கு தயார்
தொப்புள் கொடி!

**************************************************************************

இல்லாத பதவிக்காக
நாற்காலிச் சண்டை
முன்பதிவில்லா ரயில் பிரயாணம்!

**************************************************************************

கடவுளே! சுமை கூலியாவது படியளக்கவும்
வெளியில் கை நீட்டுகின்றன
யானைகள்!

**************************************************************************

6ஐ விட்டாய்
7ஐத் தேடினாய்
நீ இன்னும் 5ஐ தாண்டவில்லை
விரல் நுனியில் நகங்கள்!

*********************************************************************

மேலும்

நன்றிகள்! 08-Jan-2014 5:25 am
நன்றி தோழரே! 08-Jan-2014 5:24 am
நல்ல முயற்சி தோழரே 08-Jan-2014 12:55 am
நன்று! 07-Jan-2014 11:04 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (89)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
முகம்மது யாசீன்

முகம்மது யாசீன்

வடகரை, செங்கோட்டை தாலுகா,
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (89)

krishnan hari

krishnan hari

chennai
பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை
Muras

Muras

வடவன்பட்டி, தமிழ்நாடு,

இவரை பின்தொடர்பவர்கள் (89)

Israth Ali

Israth Ali

Puttalam, Sri Lanka
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
myimamdeen

myimamdeen

இலங்கை

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே