Jegan - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : Jegan |
இடம் | : திருநெல்வேலி |
பிறந்த தேதி | : 13-May-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Sep-2010 |
பார்த்தவர்கள் | : 357 |
புள்ளி | : 76 |
அவளின் மௌனக்குடைகளின் மேல் என் காதல் மழை..................
பேசுவாரில்லாமல் மின்கம்பத்தோடு பொழுது கழிக்கின்றன
காலி டெலிபோன் கம்பங்கள்!
***********
அறை மணிநேரப் பேச்சு
ஐம்பது முறையாவது கடித்திருப்பாள் டாலரை
பாவம் பிள்ளையார்!
***********
அது என்னவோ தெரியவில்லை
வயிற்றுப் பிள்ளைக்காரிகளைப் பார்த்து
ஒருநாளும் சபலப்பட்டதில்லை மனசு!
***********
அடுப்புக்கரியை அவ்வப்போதாவது கொண்டாடுங்கள்,
அடித்த கோழியை அனலில் வெந்து அசைவமாக்கிவிட்டு
அடுத்த ஊருக்கு தூக்குச்சட்டியோடு துணைக்குப் போகிறது பேய்களை விரட்டிக்கொண்டே!
***********
மெத்தை,தலையணை பேசுகையில் ஒட்டுக்கேட்டது,
இலவ மரம் முழுவதும் முட்கள்!
***********
காற்றடிக்கும்போதெல்லாம்
அபிநயத்தோடு அரிதா
"ஆகா அழகான கவிதை"யென்கிற எண்ணவோட்டம்
இப்படியும் எழுதலாமே என மடைமாறும் போது
கருத்தரிக்கிறது புதுக்கவிதை!
*************************************************************************
பசித்து வயிறு காய்ந்தவனின் பக்கத்துவீட்டில்,
மிஞ்சியது காய்ந்து கொண்டிருந்தது வத்தலாக!
*************************************************************************
தலையில் பூ வைத்துப்
பூ விற்கும் பூக்காரிகளை,
பூ வாங்கும்போதெல்லாம்
பார்த்ததாக நினைவில்லை!
*************************************************************************
ஒருவகையில் மழையின் ஒவ்வொரு துளியும் விந்துக்களே!
பூமியில் விழும்போதெல்லாம் பல கவி
ஞாயிறு தூக்கம் பெரும்பாலும் இப்படித்தான் கலைந்துபோகும்.
"எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்துங்கள்,அனைவரிடமும் சமாதானம் நிலவுவதாக".
திடுக்கிட்டு எழுந்து
வழக்கமான வசைகளைக் கேட்டு
கூடைப்பையில் தூங்கும் நூறுடன்
வரிசையில் நிற்பேன்,
அழித்து அழித்து அந்தோணி எழுதுவார்
கறிக்கோழி
உசிறுடன் 120
உரித்தாது 180
"நேத்து நூறுதானே" என சண்டை தொடங்கும்,
எடைக்கு மேல் விழும்
ஈரல்,இதயத்துடன் சமாதானம் ஆகிவிடும்!
மான மறவர் கூட்டம்தனைப் பேரன்பினால் ஆண்டாள் !
ஆம் என் தாய் தாசி தான் !
எரிவது விறகோ இவளோ இருக்கும் வரை கரும்புகையோடு மல்லுக்கட்டியே மாண்டாள் !
ஆம் அவள் தாசி தான் !
கேட்டும் கொடுக்கா தெய்வங்களின் மத்தியில் கேளாமல் தரும் விசித்திர தெய்வம் பாண்டாள் !
ஆம் அவள் தாசி தான் !
வெறும் கைகளும் கறைந்து போகும் வறுமையிலும் வயிறை நிரப்ப எப்படித் தீர்வைக் காண்டாள் ?
ஆம் அவள் தாசி தான் !
பணமிழந்து,மானமிழந்து,மனமிழந்து அழுவதற்கு கண்ணீரும் இழந்து நிற்கயில் தேற்றிக் குடும்பத் தேரிழுக்கும் வித்தையைக் கையாண்டாள் !
ஆம் அவள் தாசி தான் !
தந்தையுடன் பிணக்குறும் நேரங்களில் அடிபட்டோ,மிதிபட்டோ
மான மறவர் கூட்டம்தனைப் பேரன்பினால் ஆண்டாள் !
ஆம் என் தாய் தாசி தான் !
எரிவது விறகோ இவளோ இருக்கும் வரை கரும்புகையோடு மல்லுக்கட்டியே மாண்டாள் !
ஆம் அவள் தாசி தான் !
கேட்டும் கொடுக்கா தெய்வங்களின் மத்தியில் கேளாமல் தரும் விசித்திர தெய்வம் பாண்டாள் !
ஆம் அவள் தாசி தான் !
வெறும் கைகளும் கறைந்து போகும் வறுமையிலும் வயிறை நிரப்ப எப்படித் தீர்வைக் காண்டாள் ?
ஆம் அவள் தாசி தான் !
பணமிழந்து,மானமிழந்து,மனமிழந்து அழுவதற்கு கண்ணீரும் இழந்து நிற்கயில் தேற்றிக் குடும்பத் தேரிழுக்கும் வித்தையைக் கையாண்டாள் !
ஆம் அவள் தாசி தான் !
தந்தையுடன் பிணக்குறும் நேரங்களில் அடிபட்டோ,மிதிபட்டோ
பொம்மை
பொம்மை
ஒரு பொம்மை
அழகிய பொம்மை
திரும்ப கிடைத்த பொம்மை
ஆனால் தொலைந்து போன பழைய பொம்மை
என்னை பொம்மையாக்கிய பொம்மை
பொம்மை
ஒரு பொம்மை
அழகிய பொம்மை
என்றோ பிடித்த பொம்மை
எதிர்பாராமல் கிடைத்த பொம்மை
நான்கு சுவற்றிற்குள் பேசிய பொம்மை
நால்வர் மத்தியில் பேசாது கொன்ற பொம்மை
நான் தெரிந்தே தொலைக்கும் வரை
உண்மையில் அதுதான் நிஜ பொம்மை
பொம்மை
ஒரு பொம்மை
அழகிய பொம்மை
கெட்டவர் கைகளில் நித்தமும் பொம்மை
கேளார் செவிகளில் பேசிடும் பொம்மை
கேட்பாரற்று கிடக்கும் பொம்மை
கேட்டதால் கெட்ட கெட்ட பொம்மை
மற்றவர் கண்களில் காதல் பொம்மை
என் கண்களில் காலத்தால் பொம்மை
பொம்மை
ஒ
அழகு என்றால் என்ன ?
கால் உடைந்து கிடந்தது
என் சிறு வயது மரக் குதிரை.....
கவர் மாட்டியபடி இருந்தேன் பென்ஸ்
காருக்கு நான்......!
ஏனோ முகத்தில் ஒரு வித இறுக்கம்
எப்படி இது வந்தது ? வசதி வந்ததாலா ?!
குப்பையை ஏன் இன்னும் சரி செய்யல
எரிந்து நான் விழ சட்டென்று
இதோ எசமான் என்று
எடுத்து எறிந்தாள் ரோட்டில்
வேலைக்காரப் பெண்
அந்த மரக் குதிரையை........!
துண்டு துண்டாக சிதறி விழுந்தது
குப்பைத் தொட்டிக்குள் அது......!
தனி அறையில் அமர்ந்து
நினைத்துப் பார்க்கிறேன்......
சிறுவயதில் அந்தக் குதிரையை விட்டு
இறங்கவே மாட்டேன்
அவ்வளவு அன்பு அதன்மீது...
ஆனால்.....ஆனால்.....
இன்று ஏன் எப்படி
விதையிடவில்லை
நீர் மட்டும்தான்
அறுவடைக்கு தயார்
தொப்புள் கொடி!
**************************************************************************
இல்லாத பதவிக்காக
நாற்காலிச் சண்டை
முன்பதிவில்லா ரயில் பிரயாணம்!
**************************************************************************
கடவுளே! சுமை கூலியாவது படியளக்கவும்
வெளியில் கை நீட்டுகின்றன
யானைகள்!
**************************************************************************
6ஐ விட்டாய்
7ஐத் தேடினாய்
நீ இன்னும் 5ஐ தாண்டவில்லை
விரல் நுனியில் நகங்கள்!
*********************************************************************
நண்பர்கள் (89)

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

கிரி பாரதி
தாராபுரம், திருப்பூர்.

செ செல்வமணி செந்தில்
சென்னை

முகம்மது யாசீன்
வடகரை, செங்கோட்டை தாலுகா,
