மரக் குதிரையும் நானும்

கால் உடைந்து கிடந்தது
என் சிறு வயது மரக் குதிரை.....
கவர் மாட்டியபடி இருந்தேன் பென்ஸ்
காருக்கு நான்......!
ஏனோ முகத்தில் ஒரு வித இறுக்கம்
எப்படி இது வந்தது ? வசதி வந்ததாலா ?!
குப்பையை ஏன் இன்னும் சரி செய்யல
எரிந்து நான் விழ சட்டென்று
இதோ எசமான் என்று
எடுத்து எறிந்தாள் ரோட்டில்
வேலைக்காரப் பெண்
அந்த மரக் குதிரையை........!
துண்டு துண்டாக சிதறி விழுந்தது
குப்பைத் தொட்டிக்குள் அது......!
தனி அறையில் அமர்ந்து
நினைத்துப் பார்க்கிறேன்......
சிறுவயதில் அந்தக் குதிரையை விட்டு
இறங்கவே மாட்டேன்
அவ்வளவு அன்பு அதன்மீது...
ஆனால்.....ஆனால்.....
இன்று ஏன் எப்படி மாறினேன்......?
அந்த சந்தோசங்கள் எல்லாம் இப்போது
அற்பமாக போய்விட்டதன் காரணம் என்ன ?
எனது அறிவு விருத்தியா ?
இல்லை அகம்பாவமா ?
சிந்தித்தபடியே தூங்கி விட்டேன்......
மறு நாள் ஆபீசுக்கு
காரில் கிளம்பும்போது கவனித்தேன்.....
அந்த உடைக்கப் பட்ட மரக் குதிரையை
அழகாக சேர்த்து ஆணி அடித்து செப்பனிட்டு
ஆனந்தமாக விளையாடக் கொடுத்திருந்தான்
ரோட்டோரப் பிச்சைக்காரன் தன் குழந்தைக்கு...
உண்மை சந்தோசமும்
என் கண்களுக்கு எரிச்சலைத் தர......
வண்டியின் வேகத்தை அதிகப் படுத்தி
முன்னேறினேன்.......
சந்தோசத்தில் நான் பின்னேருவதை
புரிந்து கொண்டும்
புரியாதவனைப் போல்.........