விரிந்த இதழ்களில் ஒரு காதல் கவிதையை

காலைக் கதிரவன் கரம் தொட
நாணத்தில் சிவந்த தாமரை
மெல்ல மடல் விரித்தது
தவழ்ந்து வந்த காலைத் தென்றல்
விரிந்த இதழ்களில் ஒரு காதல் கவிதையை
எழுத்திச் சென்றது
புன்னகை பூத்தது பொழில்
அலை வட்டங்களின் அழகினில் !

எழுதியவர் : கவின் சாரலன் (4-Jul-20, 10:20 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 46

மேலே