மெல்ல மலர்ந்த மலர்களை மெல்லிய விரல்களால் அவள் பறிக்கையில்

பூக்கள் மலரக் காத்திருந்தது
காலைத் தென்றல்
பூமலர பூக்களின் வாசத்தை
எடுத்துச் சென்றது
பூவாசத்தால் இழுக்கப்பட்ட அவள்
மெல்ல மலர்ந்த மலர்களை
மெல்லிய விரல்களால் அவள் பறிக்கையில்
என்னை முதலில் என்னை முதலில் என்று
போட்டியில் கூக்குரலிட்டன பூக்கள் !

எழுதியவர் : கவின் சாரலன் (6-Jul-20, 7:38 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 42

மேலே