என்னருகே நீயிருந்தால்
காதல் வார்த்தைகள்
கவிதையாய் மாறும்-
என்னருகே நீயிருந்தால்...
ஒவ்வொரு வண்ணமும்
ஓவியமாய் மாறும்-
என்னருகே நீயிருந்தால்....
வானம் என்னுள்
வசப்பட்டுப் போகும்-
என்னருகே நீயிருந்தால்....
பூக்களின் வாசம்
சுவாசமாய் மாறும்-
என்னருகே நீயிருந்தால்....
நிலவின் குளிர்ச்சி
நீங்காமல் என்னுடனிருக்கும்-
என்னருகே நீயிருந்தால்....
அன்பே...
பூக்கள் மோதியே -
புண்பட்டுப்போகுமென் உள்ளம்...
என்னை நீ பிரிந்தால்....!