இமயம் காலடியில்
முயன்றால்
முடியாதது
என்று ஏதுமில்லை..! !
சிற்றுளி
கொண்டு
செதுக்கினால்
கல்லும்
கற்சிலையாகும்...! !
அது போல்
எந்த சிக்கலும்
சிதைக்க வந்தது
என்று
எண்ணாமல்...!
நம்மை
செதுக்க வந்தது
என்று எண்ணி
செயல் பட்டால்
இமய மலையும்
நம் காலடியில்...! !
--கோவை சுபா

