ஏதோ நிகழ்கிறது
தவம் கிடக்கவில்லை
தனிமையை விலக்கிட ...
ஏனோ
அனிச்சை செயலாக
நிகழ்ந்திட்ட
அழகின் பரிமாணம் ...
புயல் ஓய்ந்த
அமைதியின் புரிதல்
புது உணர்வை
வித்திட்டுச் செல்லும்...
இன்னொரு பிறவியில்
இவள் வேண்டுமென
இமைக்காமல் தவிக்கின்றேன்
இரவு முழுவதும்....