சில பண்டைய விவசாய பழமொழிகள்

சில பயனுள்ள (சரியான பொருளில் கொண்டால் ) வேளாண்மை தொடர்புடைய பழமொழிகளில் இங்கே அறிவோம் .

புற்று கண்டு கிணறு வெட்டு

வெள்ளமே ஆனாலும் பள்ளத்தே பயிர் செய்

காணி தேடினும் கரிசல் மண் தேடு

களர் கெட பிரண்டையைப் புதை

கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி

நன்னிலம் கொழுஞ்சி

நடுநிலை கரந்தை

கடை நிலம் எருக்கு

களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை

புஞ்சைக்கு நாலு உழவு நஞ்சைக்கு ஏழு உழவு

குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை

ஆடு பயிர் காட்டும் ஆவாரை கதிர் கட்டும்

கூளம் பரப்பி கோமியம் சேர்

ஆற்று வண்டல் தேற்றும் பயிரை

காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்

மார்கழி மழை மண்ணுக்கு உதவாது

தை மழை நெய் மழை

கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை

பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு

ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம்

கலக்க விதைத்தால் களஞ்சியம் நிறையும்

அடர விதைத்தால் போர் உயரும்

நன்றி !

எழுதியவர் : வசிகரன் .க (9-Jul-20, 4:14 pm)
பார்வை : 50

சிறந்த கட்டுரைகள்

மேலே