கோவிட் 19

உயிர் கொல்லி கொரோனா
உன்னால் மக்கள் தவிக்குதே வீனா

வேலை வெட்டி இல்லையே - ஒரு
வேளை சோறுகூட இல்லையே

பச்சிளங்குழந்தை பாலுக்காக அழுகுது
பால் வாங்க கூட பணமில்லையே

கொரோனாவே நீ வந்ததால்
கூலி வேலைக்கு போகமுடியலையே

படிச்சவனும் சாகிறான்
படிக்காத பாமரனும் சாகிறான்

எங்களை சாகடிக்க வந்த கொரானாவே - நீ
எப்போது சாகப்போகிறாய்

முகக்கவசம் போடவைத்தாய்
மூச்சு முட்டி திணற வைத்தாய்

கைகளை அடிக்கடி கழுவ விட்டு
கண்ணாமூச்சி ஆட வைத்தாய்

மனிதனின் கடைசி பயணத்தில் கூட
கைகளால் தொட மறுக்க வைத்தாய்

தொட்டால் தொற்றி கொள்வாய்
தொடாமலே எட்டி நில் என்பாய் .

அன்புடன்
ராமன் மகேந்திரன்

எழுதியவர் : ராமன் MAHENDIRAN (15-Jul-20, 12:10 pm)
சேர்த்தது : இரா மகேந்திரன்
பார்வை : 108

மேலே